25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முக்கிய அறிவிப்பு

Feb 01, 2024

ஸ்ரீ N.R. கிருஷ்ணமராஜா அவர்களின் 108-வது பிறந்த நாள் விழா

ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா அவர்களின் 108-வது பிறந்த நாள் விழா 02-02-2024 & 03-02-2024 (வெள்ளிக்கிழமை & சனிக்கிழமை )திருமிகு. P.R.வெங்கட்ராம ராஜா அவர்கள் (ராம்கோ குரூப் சேர்மன்) முன்னிலையில்"பிரவசன திலகம்" திருக்குடந்தை டாக்டர் ஸ்ரீ உ.வே . வேங்கடேஷ் அவர்கள் ஆன்மீகச் சொற்பொழிவு 02-02-2024 & 03-02-2024 தினமும் மாலை 6-30 மணிக்கு நடைபெறும்.இடம் :ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா மண்டபம், பழையபாளையம், இராஜபாளையம்.தலைப்பு - ''ருக்மணி கல்யாணம்" (02.02.2024, வெள்ளிக்கிழமை ) ,''ஆண்டாள் கல்யாணம்" (03.02.2024,சனிக்கிழமை )அனைவரும் கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவை கேட்டு மகிழுமாறு கேட்டுக்கொள்கிறோம்.பிறந்தநாள் விழாக் குழுவினர் இராஜபாளையம்.

Jan 31, 2024

Entrepreneurial Workshop "FOCUS GIVES SUCCESS"

ROTARY CLUB OF RAJAPALAYAM , District 3212 , Entrepreneurial Workshop "FOCUS GIVES SUCCESS"Keynote Speaker Dr. A. Velumani , Creator, ThyrocareGuest of HonorsRtn. IPDG. IDHAYAM V.R. MUTHURTN. A2B K.T. SRINIVASA RAJARTN. A2B K.S. ANANTHIDate: 01.02.2024 Time: 06.30 Pm, PRR ROTARY HALL, COTTON MARKET , RAJAPALAYAM , Rtn M.Parthasarathi President , Rtn K.R.Anandhi Secreatary Contact:Rtn. Lakshmi Narayanan - 98421 80181Rtn. Dr. N.Karthikeyan - 91590 64761Registration Fee: Rs. 299/- G Pay No: 91590 64761

Jan 27, 2024

திருமதி P.B.ராஜேஸ்வரி அம்மாள் நினைவாக மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

LIONS L INTERNATIONAL SRG/V 197/2023(திருமதி P.B.ராஜேஸ்வரி அம்மாள் நினைவாக லயன்ஸ் கிளப் ஆப் இராஜபாளையம்,சக்கராஜாகோட்டை ராஜூக்கள் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை,விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதியுதவியுடன்மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்நாள்:28.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை :9.00 முதல் மதியம் 1.00 மணி வரைஇடம்:லயன்ஸ் கிளப் ஆப் இராஜபாளையம்ஹால்,சங்கரன் கோவில் ரோடு, INTUC. நகர் அருகில், இராஜபாளையம்.அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுவர்கள் உடனடியாக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் படுவார்கள், அறுவை சிகிச்சைசெய்து கொள்பவர்களுக்கு விழிலென்ஸ் (IOL) பொருத்துதல், உணவு, தங்குமிடம்,மருந்துகள் மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தும் இலவசம். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நாளில் மறு கண் பரிசோதனை செய்யப்படும்.இம்முகாமிற்கு வரும் போது ஆதார் அடையாள அட்டை அல்லது ரேசன் கார்டு நகல் ) அவசியம் கொண்டு வந்து கொடுக்கவும்.சக்கராஜாகோட்டை ராஜுக்கள் சங்கம்சக்கராஜகோட்டை, இராஜபாளையம்.

Jan 20, 2024

ஸ்ரீமதி P.S.K.ருக்மணியம்மாள் அரங்கத்தில் (காந்தி கலைமன்றம் வளாகம் ) 22.01.2024 MONDAY 10.30 A.M TO 12.30 P.M ''ஸ்ரீ ராம தாரக நாம ஜபம்"

ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம்.ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதிஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள், ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள்ஆகியோர்களின் பரமானுக்ரஹத்துடன் அயோத்தியில் ஸ்ரீ ராம ஜன்ம பூமியில் ஸ்ரீ ராம விக்ரஹ பிரதிஷ்டை செய்யும் நன்னாளான 22.01.2024  MONDAY  10.30 A.M TO 12.30  P.M''ஸ்ரீ ராம தாரக நாம ஜபம்"நடைபெற உள்ளது. ஆஸ்திக மஹா ஜனங்கள் அனைவரும் இணைந்து ஜபித்து ஸ்ரீ ராமபிரான் அருள் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்.இடம்: ஸ்ரீமதி P.S.K.ருக்மணியம்மாள் அரங்கத்தில் (காந்தி கலைமன்றம் வளாகம் ) இப்படிக்குபி.ஆர்.வெங்கட்ராம ராஜாகுறிப்பு: அயோத்தியில் நடைபெறும் ஸ்ரீ ராம விக்ரஹ பிரதிஷ்டை பூஜையானது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

Jan 18, 2024

நீர் நிலைகளில் பயமின்றி குதிக்கும் சிறுவர்கள்

இராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் கண்மாய்கள், நீரோடைகள், ஆறுகளில் நீர்வரத்து அதிகம் காணப்படுகிறது. பொங்கலை ஒட்டி பள்ளி தொடர் விடுமுறையால் மாணவர்கள் சிறுவர்கள்ஆர்வம் மிகுதியால் உரிய பாதுகாப்பும், கண்காணிப்பும் இன்றி நீச்சல் உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியவர்கள் கண்காணிப்பின்றி சிறுவர்கள் இத்தகைய விளையாட்டில் ஈடுபட்டு நீர் நிலைகளில் சிக்கி  உயிரிழக்கும் செய்திகள்  வருகின்றது

Jan 12, 2024

விருதுநகர் - சிவகாசி , அழகாபுரி மற்றும் மீசலூர் ரெயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள்

விருதுநகர் - சிவகாசி, அழகாபுரி மற்றும் செவல்பட்டி வழியாக மீசலூர் செல்லும் ரெயில்வே இருப்புப்பாதை - விருதுநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் எல்.சி எண்:410 Rly KM:  544/400-500  என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.12.01.2024 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து,  மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Jan 11, 2024

விருதுநகர் - சிவகாசி ரெயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள்

விருதுநகர் - சிவகாசி ரெயில்வே இருப்பு பாதையில் (சாத்தூர்-விருதுநகர் சாலை அமைந்துள்ள) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், 11.01.2024 ஒரு நாள் மட்டும் வழித்தடம் மூடப்படுவதாக - இரயில்வே நிர்வாகம் அறிவிப்புவிருதுநகர்- சாத்தூர் விருதுநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் எல்.சி எண்:407  Rly KM:  541/200-300 (விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சாத்தூர் லெவல் கிராஸிங் கேட் ) என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் 11.01.2024 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Jan 10, 2024

மாவட்ட சமூகநல அலுவலத்தின் சார்பில் 2023-2024-ஆம் ஆண்டிற்கான, திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெற விண்ணபிக்கலாம்

 2023-2024-ஆம் ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதானது, திருநங்கையர் தினமான ஏப்ரல் 15ம் தேதி தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் கீழ்கண்ட தகுதிகளையுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விருதின் பெயர்: திருநங்கையருக்கான முன் மாதிரி விருதுதகுதிகள்:1. திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்.2. குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும்.3. திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.4. இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் (https://awards.tn.gov.in) இணையதளம்  மற்றும்  நேரில்  சமர்ப்பிக்க  வேண்டும்.விண்ணப்பதாரரின் கையேட்டில் இணைக்கப்பட வேண்டியவை:1. பொருளடக்கம் மற்றும் பக்க எண்.2. உயிர் தரவு (Bio Data) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -23. சுயசரிதை4. தனியரை பற்றிய விவரம் (ஒரு பக்க அளவில்).5. தனியர் பெற்ற விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம்/விருதின் பெயர்/ யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்).6. சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்).7. சேவையை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு.8. சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை9. சமூக சேவையாளரின்/சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விபரம்.10. சமூக பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று.11. கையேடு இரண்டு நகல்கள் தமிழில்.திருநங்கையை அங்கீகரிக்கும் பொருட்டு இவ்விருது வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க இறுதி நாள்: 31.01.2024 ஆகும். இறுதி நாளிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்க ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 31.01.2024-க்குள் கருத்துருக்கள் சமர்ப்பிக்க  வேண்டிய முகவரிமாவட்ட சமூகநல அலுவலர்,மாவட்ட சமூகநல அலுவலகம்,மாவட்ட ஆட்சியர் வளாகம்,விருதுநகர் மாவட்டம்.

Jan 09, 2024

ஜனவரி-2024 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் ஜனவரி-2024 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.01.2024 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Jan 05, 2024

பள்ளி ,கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்

  2023-24 ஆம் ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 09.01.2024  அன்று விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளயிலும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 10.01.2024 அன்று சிவகாசி தி.ஸாண்டர்டு /பயர்ஓர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கலை (ம) அறிவியல் கல்லூரியிலும் நடத்தப்பெற உள்ளன.  பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் அனைத்து அரசு/ தனியார்/ அரசு உதவி பெறும்/ பதின்ம மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் அனைத்து  அரசு/ தனியார் / அரசு உதவி பெறும்  கலைக் கல்லூரிகள் / பொறியியல்/  மருத்துவக் கல்லூரிகள்/  பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்  பங்கேற்கலாம்.ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு பள்ளி ,கல்லூரியிலிருந்து மொத்தம் 3 மாணவர்கள் பங்கேற்கலாம். பள்ளி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர்  ஒப்பத்துடனும் , கல்லூரி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தாங்கள் பயிலும் கல்லூரியின் முதல்வர் ஒப்பத்துடன் விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ,  அஞ்சல்  முலமாகவோ,  மின்னஞ்சல் - (tamilvalar.vnr@tn.gov.in)   முலமாகவோ 08.01.2024   க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.போட்டிக்கான தலைப்புகள் முன்னதாக அறிவிக்கப்பட மாட்டா. போட்டி தொடங்கப்படும் நேரத்திற்குச் சற்று முன்னர் தான் தலைப்பு தெரிவிக்கப்படும்.போட்டிகளின் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  பரிசுகள் வழங்கவுள்ளார்.பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில்  மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10000/-, இரண்டாம்பரிசு ரூ.7000/-, மூன்றாம் பரிசு ரூ.5000/-  என்ற வீதத்தில் பரிசுத்தொகைகள்  வழங்கப்பட உள்ளன.  மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளப் பரிந்துரை செய்யப்பெறுவர்.மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு தொடர் வண்டிக் கட்டணம் பயணப்படியாக வழங்கப்பெறும். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.15,000/- இரண்டாம் பரிசாகரூ.12,000/- மூன்றாம் பரிசாகரூ.10,000/- வழங்கப்பெறும்.

1 2 ... 8 9 10 11 12 13 14 ... 19 20

AD's



More News