தேவையானவை: சிறு கிழங்கு - கால் கிலோ, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா தேவையான அளவு,மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். மசாலாவிற்கு: வரமிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய்துருவல் - கால் மூடி, சின்ன வெங்காயம் - ஐந்தாறு, பூண்டு - 2 பல்,செய்முறை: சிறு கிழங்கை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் தோல் நீக்கிகீற்றாக அதாவது சின்னச் சின்னத் துண்டுகளாக அரிந்து வேக விடவும். காய் வெந்ததும் உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கித் தண்ணீரை வடித்து விடவும். வாணலியில்கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய காயை வதக்கவும். மசாலாவிற்கானபொருட்களை அரைக்கவும். காய் வதங்கியதும் அரைத்த மசாலா சேர்த்துப் பிரட்டிக் கொஞ்ச நேரம்சிறு தீயில் வைத்திருந்து இறக்கவும். சிறு கிழங்கு பொரியல்
தேவையானவை: கோவைக்காய் - கால் கிலோ, மிளகாய்தூள் - முக்கால் டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு, சீரகம் - அரை டீஸ்பூன், கடலைமாவு - ஒன்றரை டீஸ்பூன், கறிவேப்பிலை,மல்லி இலை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.செய்முறை: கோவைக்காயைக் கழுவிப் பொடியாக நறுக்கவும். எண்ணெயைச் சூடு செய்துசீரகத்தைப் போட்டு, அது சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு, கோவைக்காயை சேர்த்து வதக்கவும்.அடுப்பை நிழலாக எரியவிட்டு, வாணலியை மூடி வைக்கவும். நடுநடுவில் அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும். காய் வெந்து பொன் நிறமாக வதங்கியதும், உப்பு, மிளகாய்தூள் சேர்த்து வதக்கி இறக்கும்முன் கடலைமாவு தூவிக் கிளறி இறக்கி, மல்லி இலை தூவவும்.
தேவையானவை: சேப்பங்கிழங்கு - கால் கிலோ, உப்பு - தேவையான அளவு. மசாலாவிற்கு:வரமிளகாய் - 4, சின்ன வெங்காயம் - ஏழெட்டு, சீரகம் - அரை டீஸ்பூன், புளி - 1 சுளை.தாளிக்க: எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்.செய்முறை: சேப்பங்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.தோல் உரிக்க வருகிற அளவு வெந்தால் போதும். மசாலாவிற்கு உள்ள சாமான்களை அரைத்துக்கொள்ளவும். கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து நறுக்கிய கிழங்கை வதக்கவும். அரைத்த மசாலாசேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.எப்பொழுதுமே கிழங்கு வகைகளை தோல் உரிக்க வருகிற அளவிற்குத் தான் வேகவைக்கவேண்டும். நன்றாக வெந்தால் பொரியல் கொழகொழவென்று மசியல் போல் ஆகிவிடும்.
தேவையானவை: உரித்த பச்சை பட்டாணி - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 2, வரமிளகாய் - 2,சீரகம் - அரை டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை,மல்லி இலை - தலா சிறிதளவு, எண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.செய்முறை: பட்டாணியை வேக விட்டு உப்புப் போட்டு இறக்கி, தண்ணீரை வடிக்கவும்.வரமிளகாயுடன் சீரகத்தையும், ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து அரைக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து மீதமிருக்கும்இன்னொரு வெங்காயத்தையும் நறுக்கிச் சேர்த்து வதக்கவும். பட்டாணியையும், உப்பையும், அரைத்தமசாலாவையும் பிரட்டி இறக்கி, மல்லி இலை சேர்க்கவும். பட்டர்பீன்ஸிலும் இதே முறையில்பொரியல் செய்யலாம். நன்றாக இருக்கும்
தேவையான பொருட்கள்: பலாக்காய் – 1,பூண்டு பல் - 3 உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மஞ்சள் துாள், சீரகம் - சிறிதளவு தேங்காய் எண்ணெய், தேங்காய் துருவல், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு செய்முறை - பலாக்காயை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கி, உப்பு, மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அதனுடன், துருவிய தேங்காய், பூண்டு பல், சீரகத்தை அரைத்து கலக்கவும். தேங்காய் எண்ணெயில், உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து அதில் கொட்டவும். சுவைமிக்க, 'பலாக்காய் பொரியல்!' தயார். சாதத்துடன் பக்க உணவாக பயன்படுத்தலாம்..
தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 1, பழுத்த தக்காளி - 2,பச்சைப் பட்டாணி - 50 கிராம், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்பொடி - கால் டீஸ்பூன், கறிமசாலாத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லி இலை -சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்துத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.பச்சைப் பட்டாணியையும் உரித்து வேகவைக்கவும். வெங்காயத்தை நீளநீளமாகவும், ஒருதக்காளியை எட்டு துண்டுகளாகவும் நறுக்கவும். வாணலியில் தாளித்து போட்டு வெங்காயம்,தக்காளிப்பழத்தை வதக்கி உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்க்கவும். உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணியைச் சேர்த்து பிரட்டவும். வதங்கியதும் கறி மசாலாத்தூள் சேர்த்து பிரட்டவும். பிறகு கரம்மசாலாத்தூள் சேர்த்து இறக்கி மல்லி இலை சேர்க்கவும். இதுவும் ஒரு ‘மல்ட்டி பர்பஸ்’ சைட்-டிஷ்தான். பிரியப்பட்டால் கறி மசாலாத்தூளுடன் ஒரு கை கடலைமாவும் சேர்த்துத் தூவலாம்.
தேவையான பொருட்கள் :- பாசிப்பருப்பு 50 கிராம், பச்சரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன்,இட்லி மாவு ஒரு பெரிய கப், மிளகாய் பொடி ஒரு எஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, வெங்காயம் 50 கிராம், மிளகாய் 5 பொடியாக நறுக்கியது. தேங்காய் கால் மூடி,செய்முறை பாசிப்பருப்பை சிறிது ஊற வைக்கவும், பின்னர் இட்லி மாவுடன் மேல கூறிய அனைத்தையும் கலந்து எண்ணையில் பொரித்தெடுக்க சுவையான கரகர, மொறுமொறு பாசிப்பருப்பு வடை ரெடி.
தேவையான பொருட்கள் : பாசிப்பயறு 100 கிராம், தட்டாம் பயறு 100 கிராம்,வத்தல் 2, சீரகம் கால் ஸ்பூன், பெரிய வெங்காயம் 1, கறிவேப்பிலை சிறிதளவு.செய்முறை பாசிப்பயறு, தட்டாம் பயறு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் கரகரப்பாக அரைத்து எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து, வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
தேவையான பொருட்கள்: வாழைக்காய் சிறியது 2, ஏதாவது ஒரு கீரை சிறியகட்டு, மிளகாய் 6, இஞ்சி ஒரு துண்டு, கொத்தமல்லி கருவேப்பிலை வெட்டியது, வெங்காயம் 1 பெரியது, உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவுசெய்முறை - வாழைக்காய் வேக வைத்துக் கொண்டு, பொடிமாசிற்குத் துருவுவது போல் துருவிக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி கருவேப்பிலை, இஞ்சி, வெங்காயம், கீரை முதலியவைகளைப் பொடியாக நறுக்கிப் போட்டு, உப்பையும் போட்டு கெட்டியாகப் பிசைந்து வடை தட்டி எண்ணையில் போட்டு எடுக்க வேண்டும். தயிரில் போட்டுத் தயிர் வடையாகவும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் - வாழைப்பழம் நாட்டுப்பழம் 2, சீனி 400 கிராம், பால் 200 கிராம்,ரவை 400 கிராம், தேங்காய் ஒரு கப், ஏலக்காய் சிறிதளவு, ரீபைன்ட் ஆயில், பொரிப்பதற்குசெய்முறை - பாலில் சீனியையும் ரவையையும் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தேங்காய் பூ, வாழைப்பழம், ஆகியவற்றை ரவையுடன் ஏலக்காயும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு பிசைந்த மாவை சிறிது சிறிதாகப் போடவும், சிவக்க வெந்ததும் எடுத்து விடவும். மிகவும் சுவையாக இருக்கும். வாழைப்பழம் போட்டு பிசைந்தவுடன் எண்ணையில் பொரித்து எடுத்து விட வேண்டும். இல்லையெனில் மாவு நீர்த்து விடும்.