தேவையான பொருட்கள் - பெரிய கத்திரிக்காய் - 1, கடலைமாவு - ஒரு கப், மைதாமாவு ஒரு டீஸ்பூன், அரிசிமாவு 2 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு. ஆப்ப சோடா - அரை சிட்டிகை.அரைக்க : இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 3 பல், சோம்பு ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்.செய்முறை: கத்திரிக்காயைக் கழுவித் துடைத்து மெல்லிய வட்டங்களாக நறுக்குங்கள். அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்து, பாதியை வைத்து விட்டு மீதமுள்ளதில் சிறிது உப்பு சேர்த்து கலக்குங்கள். இந்த விழுதை ஒவ்வொரு கத்தரிக்காய் துண்டின் மீதும் சிறிது தடவுங்கள். கடலைமாவுடன் உப்பு, அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, ஒவ்வொரு துண்டையும் மாவில் அமிழ்த்தி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்கள்.
தேவையான பொருட்கள் பேபிகார்ன் - 12.கடலை மாவு ஒரு கப், அரிசிமாவு - ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் -ஒரு டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கு, ஆப்ப சோடா -சிட்டிகைஅரைக்க : பச்சை மிளகாய் -3. இஞ்சி -ஒரு துண்டு,பூண்டு - 3 பல்.செய்முறை: பேபிகார்னை மேல் பட்டை நீக்கி, கொதிக்கும் நீரில் 8 நிமிடம் போட்டு எடுங்கள். மாவு, அரைத்த விழுது, உப்பு, தண்ணீர், ஆப்ப சோடா சேர்த்து ,இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொரு கார்னையும் மாவில் நனைத்து எடுத்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்கள்.
தேவையான பொருட்கள் - பனீர் 200 கிராம். கடலைமாவு -ஒரு கப்.மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, ஆப்ப சோடா ஒரு சிட்டிகை. எண்ணெய் - தேவையான அளவு.பொடிக்க : சீரகம் -அரை டீஸ்பூன், மிளகு - கால் டீஸ்பூன், கருப்பு உப்பு - கால் டீஸ்பூன்.செய்முறை: பனீரை சிறு சதுரத் துண்டுகளாக்குங்கள். மாவுடன்எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி இட்லிமாவு பதத்தில் கரையுங்கள். எண்ணெயை காய வைத்து, பனீர் துண்டுகள் ஒவ்வொன்றையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு பொடித்து சூடான பஜ்ஜியின் மேல் தூவி பரிமாறுங்கள். ருசி அபாரமாக இருக்கும்..
தேவையான பொருட்கள் - புடலங்காய் (சிறியதாக)2.கடலைமாவு ஒன்றரை கப், இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், ஆப்ப சோடா -ஒரு சிட்டிகை, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.பச்சை மிளகாய் 2. இஞ்சி ஒரு துண்டு. மஞ்சள்தூள்ஸ்டஃப் செய்ய: உருளைக்கிழங்கு 2. பெரிய வெங்காயம் - 1, கால் டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து மசியுங்கள்.வெங்காயம், மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து கடுகு. உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய், இஞ்சி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி. உருளைக்கிழங்கை சேருங்கள். நன்கு கிளறி இறக்குங்கள். புடலங்காயை கழுவி, வட்டமாக சிறு துண்டுகளாக நறுக்கி விதையை நீக்குங்கள். உப்பு கலந்த கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டெடுங்கள். அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவை அடையுங்கள். கடலை மாவுடன் மற்ற பொருட்களை ஒன்றாக சேர்த்து கரையுங்கள். மிதமான தீயில் எண்ணையைக் காயவைத்து. புடலங்காய் துண்டுகளை மாவில் போட்டு எடுத்து, எண்ணெயில் பொரித்து எடுங்கள்.
நெல் பொரி அல்லது அரிசிப் பொரியை நெய்யில் வறுத்து, முறுவலான வெல்லப்பாகில் ஏலக்காய் தூள் கலந்து, பொரியினை கொட்டி, கிளறி உருண்டையாக பிடித்தால் சுவையான கார்த்திகை தீபப் பொரி தயார்.
தேவையான பொருட்கள் : காய்கறி கலவை - 2 கப் (பொடியாக நறுக்கியது). பெரிய வெங்காயம் -1, தயிர் (சற்று புளிப்புள்ளது)- அரை கப், உப்பு -தேவைக்கு. அரைக்க: இஞ்சி ஒரு துண்டு,பூண்டு 5 பல், பச்சைமிளகாய் - 5, முந்திரி -6, கசகசா - 2 டேபிள்ஸ்பூன். தேங்காய் துருவல் - கால் கப். தாளிக்க: பட்டை- ஒரு துண்டு, லவங்கம் -1. ஏலக்காய்-2 எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.செய்முறை: நறுக்கிய காய்கறிகளை சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து ஒரு குக்கரில் போட்டு மூடி அடுப்பில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்குங்கள். ஒரு நிமிடம் கழித்து திறந்தால் நிறம் மாறாமல் காய் வெந்திருக்கும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக நன்கு அரைத்தெடுங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயத்தை சேருங்கள்.வெங்காயம் வதங்கியதும் அரைத்த மசாலாவை சேர்த்து சிறு தீயில் வைத்து வாசனை போக வதக்கி காய்கறிகளையும், உப்பையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடுங்கள். தயிரைக் கடைந்து சேர்த்து கிளறி இறக்குங்கள்.
தேவையான பொருட்கள் : சாதம் - ஒரு கப், கேரட் - 1, பீன்ஸ் - 6, சோயா சாஸ் - 2 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு, மல்லித்தழை சிறிது, எண்ணெய் - தேவைக்கு.க்ரேவி: வெங்காயம் - 2, சோயா சாஸ் -2 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன், ஆரஞ்சு கலர் - சிறிது, எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன், உப்பு -தேவைக்கு, மல்லித்தழை - தேவைக்கு. நசுக்க: இஞ்சி ஒரு துண்டு,பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் -6.செய்முறை: சாதத்தை நன்கு குழைவாக பிசைந்துகொள்ளுங்கள். காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்குங்கள். நசுக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு நசுக்குங்கள். சாதத்துடன் காய்கறி, மல்லித்தழை, சோயாசாஸ், உப்பு, நசுக்கிய விழுதில் சிறிது, கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். இக்கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்தெடுங்கள்.பிறகு வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து நசுக்கிய விழுது, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சோயாசாஸ், உப்பு சேர்க்கவும். 2 கப் தண்ணீரில் கார்ன்ஃப்ளாரையும் ஆரஞ்சு கலரையும் கரைத்து வெங்காயக் கலவையில் ஊற்றி 5 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். பரிமாறும் போது உருண்டைகளை சேர்த்து பரிமாறுங்கள்.நூடுல்ஸுக்கும் ஃப்ரைட் ரைஸுக்கும் இந்த கிரேவி பிரமாதமான ஜோடி.
தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு - ஒரு கப், சற்று மெல்லிய, சிறிய புடலை -1, தேங்காய்பால் - ஒரு கப், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்), ஸ்டஃப்பிங் செய்ய: உருளைக்கிழங்கு - 2, கேரட் - 1, பீன்ஸ் - 5, பச்சை மிளகாய் 2,இஞ்சி ஒரு துண்டு, எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு தேவைக்கு, எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: பெரிய வெங்காயம் -1, காய்ந்த மிளகாய் -2, கறிவேப்பிலை -சிறிது,நெய் ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை.செய்முறை: பாசிப்பருப்பை வெறும் கடாயில் வாசனை வரும்வரைவறுத்தெடுங்கள். பின்பு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளுங்கள். மிளகு, சீரகத்தை நன்கு அரைத்து அதில் சேருங்கள். அதோடு உப்பையும் சேர்த்து பச்சை வாசனை போகக் கொதித்தபின் இறக்கி, தேங்காய் பாலை ஊற்றுங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, மிளகாயை இரண்டாக கிள்ளுங்கள். நெய், எண்ணெயைக் காயவைத்து, மிளகாய் சேர்த்து வறுத்து. வெங்காயம். கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி பருப்பில் சேருங்கள்.இதுதான் தால்.புடலையை 2 அங்குல நீளத்துக்கு முழுதாக வெட்டிக்கொள்ளுங்கள். அதனுள்ளிருக்கும் விதையை நீக்கிவிடுங்கள். உப்பு கலந்த நீரில் வேகவைத்து எடுங்கள். (உடையாதபடி கவனமாக கையாள வேண்டும்). உருளை, கேரட்டை, தோல் சீவி, பீன்ஸுடன் சற்று பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து கையால் மசித்துவிடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியை கரகரப்பாக அரைத்து எண்ணெயில் தாளித்து, காய்கறியில் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய மல்லித்தழை, எலுமிச்சம்பழச் சாறு. உப்பு சேர்த்து பிசைந்து புடலையினுள் அடைத்துவிடுங்கள். பரிமாறும் பாத்திரத்தில் இதனை அடுக்கி அதன்மேல் தாலை ஊற்றி, மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள்.
தேவையான பொருட்கள் : முழு உளுந்து - அரை கப், தக்காளி - 2, பச்சை மிளகாய் - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சம்பழச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு. கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிது. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், நெய் -அரை டேபிள்ஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.செய்முறை: உளுந்தை மஞ்சள்தூள் சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவையுங்கள். குக்கர் என்றால் 2 விசில் போதும். குழைந்துவிடக்கூடாது. தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். நெய், எண்ணெயை ஒன்றாகக் காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து, பச்சை மிளகாய் சேருங்கள். பின்னர் தக்காளி சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, வெந்த உளுந்து, உப்பு, கறிவேப்பிலை. மல்லித்தழை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, எலுமிச்சம்பழச் சாறு சேருங்கள். அசத்தலான சைட் டிஷ் இது.
தேவையான பொருட்கள் : (கோஃப்தாவுக்கு)உருளைக்கிழங்கு 2.கேரட் - 1, பட்டாணி - ஒரு கைப்பிடி, பீன்ஸ் 2 ,மைதா 3 டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் அரை டீஸ்பூன், கரம்மசாலா அரை டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு ருசிக்கு. எண்ணெய் - தேவைக்கு. பிரெட் ஸ்லைஸ் - 2. அரைக்க: தேங்காய் ஒரு மூடி, முந்திரி 5 (இரண்டையும் ஒன்றாக அரைக்க வேண்டும்). புதினா அரை கட்டு, மல்லித்தழை - ஒரு கைப்பிடி, இஞ்சி -ஒரு துண்டு, பூண்டு - 5 பல், பச்சை மிளகாய் - 6 (இவை அனைத்தையும் ஒன்றாக அரைக்க வேண்டும்). தாளிக்க: பட்டை ஒரு துண்டு, லவங்கம் -2, பெரிய வெங்காயம்- 2, எலுமிச்சம்பழச்சாறுஒருடேபிள்ஸ்பூன், எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்.செய்முறை:கிழங்கைவேகவைத்துதோலுரித்துமசித்துக்கொள்ளுங்கள்.காய்கறிகளைபொடியாகநறுக்கிவேகவைத்து, தண்ணீரில்லாமல் வடித்து மசியுங்கள். அத்துடன் எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்களை ஒன்றாக சேர்த்துப் பிசையுங்கள். சிறுசிறு உருண்டைகளாக உருட்டுங்கள். எண்ணெயைக் காயவைத்து உருண்டைகளைப் பொரித்தெடுங்கள். கோஃப்தா ரெடி.அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்தெடுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். அத்துடன் புதினா மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடுங்கள். பின்னர் தேங்காய், முந்திரி, விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். பரிமாறும் பொழுது உருளைக்கிழங்கு கோஃப்தாக்களை அதில் போட்டு 5 நிமிடம் ஊறவிட்டு பரிமாறுங்கள்.விருந்துக்களுக்கு ஏற்ற வித்தியாசமான சைட் டிஷ்.