தேவையான பொருட்கள் - அரிசிப்பொரி 3 கப், ஜீனி அரை கப், ஏலக்காய் 4, நெய் கால் கப், பால் கால் கப், பால்பவுடர் கால் கப், முந்திரி 4 எண்ணம், பாதாம் 4 எண்ணம்செய்முறை-அரிசிப்பொரி 3 கப், (CRISP ஆக இருக்க வேண்டும்) மிக்ஸியில் பொடிசெய்து வைத்துக் கொள்ளவும், ஜீனி, ஏலக்காய் இரண்டையும் மிக்ஸியில் நைஸாச அரைக்கவும், அலங்கரிக்க முந்திரி பாதாம் வறுத்து வைத்துக் கொள்ளவும். பொடித்த பொரி, ஜீனி, பால், நெய், பால்பவுடர் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாக சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து (தண்ணீர் சேர்க்கக் கூடாது ) ஒரு தட்டில் தட்டி அரை மணி நேரம் கழித்து சிலைஸ் செய்யவும், பொரி பர்பி ரெடி.
முதலில் பாலை காயவைத்து, காய்ந்த பால் மீது எலுமிச்சை சாறு சேர்த்து தயிர் போல் வரும் வரை கிளறவும். நீரை வடித்து, சணல் துணியில் கட்டிவைக்கவும், பன்னீரை உதிரி அளவாக செய்து 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். பன்னீரை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு காயவைத்து, பன்னீர் உருண்டைகளை அதில் சேர்க்கவும். 15-20 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பின் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக குளிரவிடவும். இப்போது ருசியான ரசகுல்லா ரெடி !
தேவையான பொருட்கள்ரவை -ஒரு கப்வறுத்த தேங்காய் துருவல் - அரை கப்சர்க்கரை - ஒருகப் வறுத்த முந்திரி, திராட்சை- தேவைக்குநெய்- 50 கிராம்ஏலக்காய்த்தூள்-சிறிதளவுசெய்முறை-கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் ரவையை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும் வறுத்த ரவையை ஒரு அகலமான தட்டில் கொட்டி அவற்றுடன் முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள் தேங்காய் துருல்ல சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்வாணலியை அருப்பில் வைத்து சரக்கரை, சிறிதளவு நீர் சேர்த்து, நுரைக்குபோது சிறிது பால் விட்டு அழுக்கு நீக்கி கொதிக்கவிட்டு ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்காய்ச்சிய சர்க்கரை பாகை ரவை கலவையில் சேர்த்து சற்று சூடாக இருக்கும் போதே உருண்டைகள் பிடிக்கவும்சூடான ரவை தேங்காய் உருண்டை ரெடி
50 கிராம் இஞ்சியை தோல் சீவி மிக்ஸியில் அரைத்து வைக்கவும் .பிறகு கடாயில் சிறிதளவு சர்க்கரை தண்ணீர் சேர்த்து பாவு ரெடி செய்யவும். அதில் இந்த கலவையை சேர்த்து நன்றாக கிண்டவும். பிறகு அரிசி மாவு 1 ஸ்பூன் சேர்க்கவும். சிறிது நேரத்தில் நல்ல பதத்திற்கு வரும்.அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி 30 நிமிடம் கழித்து பார்த்தால் இஞ்சி மரப்பா ரெடியாகும்.கட் செய்து பரிமாறவும், தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிற்று வலி வந்தால், இஞ்சி மரப்பா செய்து சாப்பிடுங்கள்.
மழை காலங்களில் சிலருக்கு செரிக்காது. ஆனால் பலருக்கு நன்றாக பசிக்கும் .எனவே ஒரு கடாயில் 3 கப் தண்ணீர் சேர்த்து, அதனுடன் பொடியாக நறுக்கிய சிறிதளவு சின்ன வெங்காயம் ,பச்சை மிளகாய் ,இஞ்சி ,கொத்தமல்லி ,கருவேப்பிலை மற்றும் மிளகு இடித்து சேர்க்கவும்.1 நிமிடம் கழித்து,1,1/2 கப் ரவா சேர்த்து உப்புமா பதத்தில் இறக்கி நன்றாக பிசைந்து வடையாக தட்டி பொரித்து எடுக்கவும். ரவை உப்புமா வடை ரெடி.
தேவையான பொருட்கள் : சேனைக் கிழங்கு - அரை கிலோ, பெரிய வெங்காயம் - 2, பூண்டு - 8 பல், இஞ்சி - ஒரு துண்டு, மிளகாய்தூள் 2 டீஸ்பூன், தக்காளி சாஸ் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், புளி ஒரு துண்டு, எண்ணெய் தேவைக்கு.செய்முறை: சேனைக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி. உப்பு. மஞ்சள்தூள், புளி சேர்த்து வேகவிட்டு தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து சேனைக்கிழங்கை (வெந்ததை) பொரித்தெடுங்கள்.மீண்டும் சிறிது எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து, வதங்கியதும் மிளகாய்தூள், சாஸ், சேனை, உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கிளறி இறக்குங்கள்.
தேவையான பொருட்கள் : பசலை கீரை - 2 கட்டு, சோயா தூள் - அரை கப், பெரிய வெங்காயம் - 1. தக்காளி - 1, பூண்டு - 5 பல், இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 3, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு.செய்முறை: கீரையை ஆய்ந்து, கழுவி, வேக வைத்து மசித்துக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பொடியாக நறுக்கி, எண்ணெயைக் காயவைத்து வதக்குங்கள்.நன்கு வதங்கியதும் கீரை, உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள். சோயாவை தண்ணீரில் அலசி பிழிந்து சேர்த்து கிளறுங்கள்.வித்தியாசமான ருசியை விரும்புபவர்களுக்கு, விருந்து படைக்கும் இந்த சைட் டிஷ்,
தேவையான பொருட்கள் : பச்சை வேர்க்கடலை ஒரு கப், பட்டாணி - அரை கப், பெரிய வெங்காயம் 2 தக்காளி - 4 மிளகாய்தூள் -2 டீஸ்பூன். இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு -தேவைக்கு. தாளிக்க: பட்டை -ஒரு துண்டு, சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,செய்முறை: வேர்க்கடலை, பட்டாணியை சிறிது உப்பு சேர்த்து வேக வையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து பட்டை, சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர் மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, தக்காளி சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி வேர்க்கடலை, பட்டாணி சேர்த்து கிளறி இறக்குங்கள்.சூடாகப் பரிமாறுங்கள். எந்த வகை டிபன் என்றாலும் எடுப்பான சைட் டிஷ் இது.
தேவையான பொருட்கள் : வாழைக்காய் -2. பெரிய வெங்காயம் - 2, தக்காளி3. இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, மல்லித்தழை சிறிது. உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் -2. சோம்பு - அரை டீஸ்பூன், பட்டை - 1, எண்ணெய் - 3-4 டேபிள்ஸ்பூன்.செய்முறை: வாழைக்காயை நன்கு கழுவி தோல் நீக்காமல் சிறுதுண்டுகளாக நறுக்குங்கள். உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, அரை வேக்காடு வேக வைத்து இறக்கி வடிகட்டுங்கள். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்குங்கள்.எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து பொன்னிறமாகப் பொரிந்ததும் வெங்காயத்தைச் சேருங்கள். அத்துடன் மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போகக் கிளறுங்கள். அதில் தக்காளி. மிளகாய்தூள், வாழைக்காய், தேவையான உப்பு சேர்த்து, நன்கு வேகும்வரை வதக்கி, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்குங்கள்.குழம்பு சாதம், தயிர் சாதம் போன்றவற்றுக்கு அருமையான சைட்டிஷ்.
தேவையான பொருட்கள் : குடமிளகாய் - 2, பனீர் 200 கிராம், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 2, சாட் மசாலா - 2 டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு 2 டீஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு. செய்முறை: குடமிளகாய், பனீர், வெங்காயம், தக்காளி ஆகியவற்றைசதுர துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து வெங்காயம், மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி பனீர், தக்காளி, உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்கி சாட் மசாலா, எலுமிச்சம்பழச் சாறு சிறிது உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.சாலட் வகைகள், புலாவ், சப்பாத்தி, பரோட்டாவுடன் சாப்பிட ஏற்ற மசாலா இது.