தேவையான பொருட்கள்கடலை மாவு- 2 கப்.பிரட்-3 சதுர துண்டுகள்சமையல்சோடா- 1 பின்ச்உப்பு -தேவைக்குமிளகாய்தூள் - 1ஸ்பூன்பச்சைமிளகாய் 1சின்னவெங்காயம்- 10சமையல் எண்ணெய் தேவைக்குகருவேப்பிலை - 1 கொத்துபெருங்காயம்- கால்ஸ்பூன்தண்ணீர்- தேவைக்குசெய்முறை முதலில் கடலை மாவை சல்லடையில் அலசி வைத்துக்கொள்ளவும். தேவையான பொருட்களை எடுத்துவைத்துக் கொள்ளவும்.கடலைமாவு,உப்பு, மிளகாய் தூள்,சோடாஉப்பு 1பின்ச்,பெருங்காயம், கட் பண்ணியவெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை,தண்ணீர் சேர்த்துவடை பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.பிரட் துண்டுகளை சிறிதுசிறிதாக பிய்த்து கைகளால் உதிர்த்துவிடவும்.பின் மாவை பிரட் உடன் சேர்த்து கலந்து விடவும்.வடை கரண்டியில் எண்ணெயில் ஊற்றும் அளவு மாவுபதம் இருக்க வேண்டும்.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் சுடனாதும் மாவை கரண்டியால் எடுத்து ஊற்றவும்.இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுத்துவிடவும்.பிரட்கார வடை ரெடி.
தேவையான பொருட்கள்4 துண்டுகள்பிரட், 2 வாழைப்பழம், தேவைக்குசர்க்கரை,1 கப் காய்ச்சியபால்செய்முறை முதலில்வாழைப்பழத்தைவட்டமாககட்பண்ணிஎடுத்துவைத்துக்கொள்ளவும்.பிரட் எடுத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியைஅடுப்பில் வைத்து கொஞ்சம்நெய்விட்டு சர்க்கரையைச் சேர்க்கவும்.சர்க்கரைலேசாக கரைந்துவரும்போது வாழைப்பழத் துண்டுகளைச் சேர்க்கவும்.வாழைப்பழத் துண்டுகள் கோல்டன் பிரெளன் கலர் வந்ததும் திருப்பிப்போடவும். வாழைப்பழத்துண்டுகளைத்தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.அதே வாணலியில் இன்னும் கொஞ்சம்நெய்விட்டு பிரட்டை டோஸ்ட் பண்ணவும்.பிரட்டைத்திருப்பிப் போடவும்.அதில் காய்ச்சிய பாலை கொஞ்சம்விடவும்.உடனேபிரட் மேலே டோஸ்ட்வாழை பழத்தைவைக்கவும்.1 நிமிடத்தில் பாலைபிரட் எடுத்துக் கொள்ளும். உடனே மெதுவாக எடுக்கவும்.பால் சேர்த்ததால்பிரட் ரொம்ப சாப்டாக இருக்கும்.அதனால்மெதுவாக எடுத்து தட்டில்அப்படியே வைத்து குழந்தைகள், பெரியவர்கள் சாப்பிடவும்.குழந்தைகளுக்கு மேலே nuts தூவிக்கொடுக்கலாம்.காலை Breakfast,மாலைடிபனுக்கு ஏற்றது.
தேவையான பொருட்கள் 5பிரட் துண்டுகள் -1பெரிய வெங்காயம்2 தக்காளி , 2 பச்சை மிளகாய் , 1ஸ்பூன்சீரகம்1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்1ஸ்பூன்மிளகாய் தூள் ,1ஸ்பூன்தனியா தூள்,1 ஸ்பூன்கரம் மசாலா ,1ஸ்பூன்பட்டர்,தேவைக்கேற்பதண்ணீர்,தேவையான அளவுஎண்ணெய்,தேவையான அளவுஉப்பு செய்முறைமுதலில் பிரட் துண்டுகளை நான்கு தூண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் பட்டர் சேர்த்து பட்டர் இளகியவுடன் அதில் வெட்டிய பிரட் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்பின் மற்றொரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம் சேர்க்க வேண்டும்.பின் அதில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.பின் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து ஒரு தம்ளர் தண்ணீர் சேர்த்து மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.இதனுடன் தேவைக்கேர்ப்ப உப்பு சேர்க்க வேண்டும்.மசாலா வெந்தவுடன் வதக்கிய பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.இறுதியாக ஒரு கை அளவு கொத்த மல்லி இலைகளை தூவி இறக்கவும்.இப்போது சுவையான பிரட் சில்லி தயார்.
தேவையான பொருட்கள்12 ரொட்டித் துண்டுகள்2 உருளைக்கிழங்குசிறிதளவுகேரட் பீன்ஸ் பட்டாணிஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதுகால் ஸ்பூன் மஞ்சள் தூள்அரை ஸ்பூன் கரம் மசாலாகால் ஸ்பூன் சீரகத்தூள்2 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்கால் ஸ்பூன் ஓமம்சிறிதளவுநறுக்கிய கொத்தமல்லி புதினா இலைகள்பொறிக்க தேவையான அளவு எண்ணெய்செய்முறை காய்கறிகளை கழுவி சுத்தப்படுத்தி வேகவைத்து கொள்ளவும். பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு தயார் படுத்திக் கொள்ளவும்.ரொட்டித் துண்டுகளின் ஓரங்களை வெட்டி லேசாக தண்ணீரில் நணைக்கவும்.ரொட்டி துகள்களை ரெடி பண்ணிக் கொள்ளவும்வேக வைத்த காய்கறிகளை மசித்து கொள்ளவும் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா ஓமம் இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி புதினா இலைகளை சேர்த்து செய்யவும்.நனைத்த ரொட்டித் துண்டுகளின் நடுவில் வேகவைத்த காய்கறி கலவைகளை உருட்டி வைத்து, அதனை ரொட்டி துண்டால் மூடி ரொட்டித் துகள்களில் பிரட்டி உருண்டை பிடிக்கவும். இந்த உருண்டைகளை காய்ந்த எண்ணெயில் மிதமான சூட்டில் இருபுறமும் சிவக்க பொரித்து எடுத்தால் அருமையான சுவையான ஆரோக்கியமான வெஜ் மசாலா பிரட் உருண்டை தயார் .
தேவையான பொருட்கள்12 ஸ்லைஸ்வீட் பிரெட்1சின்ன எலுமிச்சம் பழம்1பெரிய வெங்காயம்1மீடியம் சைஸ் தக்காளி1 சின்ன குடமிளகாய்2 பச்சை மிளகாய்சிறு துண்டுஇஞ்சி1ஸ்பூன்தனி மிளகாய் தூள்1டீ ஸ்பூன்மஞ்சள் தூள்உப்பு ருசிக்குதாளிக்க:-1 டீ ஸ்பூன்கடுகு, 1ஸ்பூன் க.பருப்பு,1ஸ்பூன்உ.பருப்பு,2 சி.மிளகாய்,2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்,1 கொத்து கறிவேப்பிலை,தேவைக்கு கொத்தமல்லி இலைஅலங்கரிக்க:-நறுக்கின வெங்காயம், குடமிளகாய் கொத்தமல்லி தழைசெய்முறை தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், இஞ்சி, குடமிளகாயை பொடியாக நறுக்கவும். எலுமிச்சையை பிழிந்து சாறு எடுக்கவும்.பிரெட்டின் நான்கு ஓரங்களையும் வெட்டி, சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, க.பருப்பு, உ.பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். தாளித்ததும், வெங்காயம், ம.தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு, வதக்கவும்.வதங்கியதும், தக்காளி, குடமிளகாய்,இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.பிறகு சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.அடுத்து பிரெட் துண்டுகளை போடவும்.பின் பிரெட் உடையாமல் கிளறி, எலுமிச்சை சாறை ஊற்றி, அடுப்பை நிறுத்தி விடவும்.மேலே கொத்தமல்லி தழையை போட்டு ஒன்று சேர மெதுவாக கிளறி இறக்கவும்.இறக்கினதும், பிளேட்டிற்கு மாற்றவும். இப்போது, சுவையான, சுலபமான, வித்தியாசமான,*வீட் பிரெட் வெஜ் உப்புமா*தயார்.
தேவையான பொருட்கள் - பிரெட் - 4 ஸ்லைஸ், கடலைமாவு ஒரு கப்.அரிசிமாவு ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன். பெருங்காயம் - அரை டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, ஆப்ப சோடா ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் - 2. மல்லித்தழை - சிறிது. எண்ணெய் - தேவையான அளவு.பச்சை சட்னிக்கு : புதினா - அரை கப், மல்லி - அரை கப். பச்சை மிளகாய் 1, எலுமிச்சம்பழச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப.கார (சிவப்பு) சட்னிக்கு : காய்ந்த மிளகாய் - 6, பூண்டு - 3 பல்,வெல்லம் ஒரு டீஸ்பூன், புளி சிறிய துண்டு, உப்பு - சுவைக்கேற்ப.செய்முறை:சட்னிகள் இரண்டையும் தனிதனியே நைஸாக அரையுங்கள். வெங்காயம், மல்லித்தழையை பொடியாக நறுக்குங்கள். பிரெட்டின் ஓரங்களை வெட்டுங்கள். குறுக்காக வெட்டி முக்கோண துண்டுகளாக்குங்கள். ஒரு துண்டின் மேல் பச்சை சட்னி, மற்றொன்றின் மேல் கார சட்னி தடவுங்கள். கடலை மாவு முதல் ஆப்ப சோடா வரை ஒன்றாக கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். சட்னி (பச்சை) தடவிய பிரெட் ஸ்லைஸின் மேல் சிறிது வெங்காயம், மல்லித்தழை தூவி கார சட்னி ஸ்லைஸால் மூடுங்கள். எண்ணெயை காய வைத்து பிரெட் ஸ்லைஸ்களை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் பொரித்து எடுங்கள்.
தேவையானவை: கண்டந்திப்பிலி - 100 கிராம், துவரம் பருப்பு, மிளகு, நெய் மற்றும் கடுகு - தலா ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய்-இரண்டு, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு.செய்முறை: வாணலியில்நெய் விட்டு, மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு மற்றும் ஒடித்த கண்டந்திப்பிலியைச் சேர்த்து வறுக்கவும். பின், மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து அடுப்பில் வைத்து, அரைத்த விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர், கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.குறிப்பு: காய்ச்சல், உடல் வலி இருக்கும் சமயங்களில் இந்த ரசம் வைத்து, சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வறுத்த மணத்தக்காளி வற்றல் அல்லது பருப்புத் துவையல் இதற்கு பொருத்தமாக இருக்கும்.
தேவையானவை: காய்கறி கலவை மற்றும்பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா கால் கப், பூண்டு பல்- இரண்டு (பொடியாக நறுக்கி கொள்ளவும்), வெண்ணெய், கார்ன் ப்ளார் மற்றும் எலுமிச்சை சாறு - தலா ஒரு தேக்கரண்டி, சர்க்கரை - கால் தேக்கரண்டி, மிளகுத்தூள் மற்றும் உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடாயில் வெண்ணெயைப் போட்டு, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிக் கலவையைச் சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.காய்கறிகள் நன்றாக வெந்ததும், கார்ன் ப்ளாரை சிறிதளவு நீரில் கரைத்து சேர்க்கவும். பின்னர், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, அடுப்பை அணைத்து இறக்கவும். மேலாக மிளகுத்துகளைத் துாவி, பிரெட் ஸ்டிக்ஸுடன் பரிமாறவும்.
தேவையானவை: பொடியாக நறுக்கிய காய்கறி கலவை, வெங்காயம் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு இரண்டு பல், எண்ணெய் மற்றும் கார்ன் ப்ளார் - தலா ஒரு தேக்கரண்டி, சில்லி சாஸ் அரை தேக்கரண்டி,சோயா சாஸ்- ஒரு தேக்கரண்டி, காய்கறிகள் வேகவைத்த தண்ணீர் - ஒரு கப், மிளகுத்தூள், நூடுல்ஸ் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.வேகவைத்த நுாடுல்ஸுடன், சிறிதளவு கார்ன் ப்ளார் சேர்த்து புரட்டி, எண்ணெயில் போட்டு வறுத்துக் கொள்ளவும்.செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி,பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர், வேக வைத்த காய்கறிக் கலவையை சேர்த்து நன்றாக கிளறி, காய்கறிகள் வேகவைத்த தண்ணீர் ஊற்றி, உப்பு போடவும்.அதன் பின், சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் இரண்டையும் ஊற்றி, கார்ன் ப்ளாரை சிறிதளவு நீரில் கரைத்துச் சேர்க்கவும். சூப் சேர்ந்து வரும்போது, அடுப்பை அணைத்து இறக்கவும். மிளகுத்தூளை தூவி, வறுத்த நுாடுல்ஸை சூப்பின் மீது போட்டு பரிமாறவும்.
தேவையான பொருட்கள் : 1 கப் - பாலக் கீரை ,1 - வெங்காயம் , 1/2 கப் - காரட் ( துருவியது), 1/2 டீஸ்பூன் - இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன் - சோயா சாஸ் , சிறிதளவு - மல்லி தழை- 2 டீஸ்பூன் - வெண்ணெய் தேவையான அளவ-மிளகுதூள்காய்கறி வேகவைத்த தண்ணீர், தேவையான அளவு - உப்பு செய்முறை: வாணலியில் வெண்ணெயை சேர்த்து சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் துருவிய காரட் , இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து இதில் காய்கறி வேகவைத்த தண்ணீரை தேவையான அளவு சேர்க்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய பாலக் சேர்த்து வேக வைக்கவும். நன்கு கொதி வரும்போது உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.