25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முக்கிய அறிவிப்பு

Aug 08, 2025

தரம் டெக்ஸ்டைல்ஸ் ( taramtextiles )

தரம் சேல்  , தரமான சேல்  !  50% தள்ளுபடி விலையில் உலக தரம் வாய்ந்தபெட் ஷீட்கள் ,  இதர படுக்கை விரிப்புகள், தலையணை, தலையணை உறைகள்Bed Sheets, Comforters, Quilts , Pillows , Pillowcoversபுதுவித டிசைன்கள் அட்டகாசமான வண்ணங்கள்இடம் - காந்தி கலை மன்றம்,  இராஜபாளையம்.நாள் - 08.08.2025 முதல் 10.08.2025 வரைநேரம் - காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைமேலும் தொடர்புக்கு +91 99444 41608.

Aug 02, 2025

இராஜபாளையம் ஆனந்தாஸ் M.B.ராதாகிருஷ்ணன் அவர்கள் நினைவாக நகைச்சுவை மன்றம் நடத்தும் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி

இராஜபாளையம் ஆனந்தாஸ் M.B.ராதாகிருஷ்ணன் அவர்கள் நினைவாகநகைச்சுவை மன்றம் நடத்தும் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சிநாள் : 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை, நேரம் : மாலை 5.00 மணிஇடம் : ஆனந்தா கார்டன், தென்காசி ரோடு, இராஜபாளையம்.சிறப்புரைமுனைவர் சிவ. சதீஸ்குமார்,சொற்பொழிவாளர். சென்னை.அவர்கள்அனைவரும் வருக! வருகவென்றுஆனந்தாஸ் குடும்பத்தார்அன்புடன் அழைக்கின்றோம்.

Jul 23, 2025

திருவில்லிப்புத்தூர் ஸ்ரீ அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவில் தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, 28.07.2025 அன்று விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம் மற்றும் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவில்  108 வைணவத் திருத்தலங்களில் பிரச்சித்தி பெற்ற பிரார்த்தனை திருத்தலமாகும். இத்திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இத்திருவிழா 20.07.2025 முதல் 28.07.2025 வரை நடைபெறுகிறது. 28.07.2025 (திங்கள் கிழமை) அன்று திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது.அதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் 28.07.2025 (திங்கள் கிழமை) அன்று விருதுநகர் மாவட்டம் முழுவதும்  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் மாதத்தின் 2 வது சனிக்கிழமை  09.08.2025 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 23, 2025

ஜூலை 24ம் தேதி ஆடி அமாவாசை 2025.

ஜூலை 24ம் தேதி வியாழக்கிழமை ஆடி அமாவாசை. ராகு காலம், எமகண்டம் நேரத்தில் முன்னோர் வழிபாடு செய்வதை தவிர்ப்பது நல்லது அன்று அதிகாலை 03.06 மணிக்கு துவங்கி, ஜூலை 25ம் தேதி அதிகாலை 01.48 வரை அமாவாசை திதி உள்ளது. அன்று வியாழக்கிழமை என்பதால் காலை 6 முதல் 07.30 வரை எமகண்டமும், பகல் 01.30 முதல் 3 வரை ராகு காலமும் உள்ளது. இதனால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள், காலை 07.30 மணிக்கு பிறகு கொடுப்பது சிறப்பு. அதே போல் பகலில் படையலிட்டு முன்னோர்களுக்கு படைத்து வழிபடுபவர்கள் பகல் 01.20 மணிக்கு முன்பாக படைத்து விட வேண்டும்.

Jul 23, 2025

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட்டில் துவங்க உள்ளதாக விருதுநகர் மாவட்டகலெக்டர் அறிவிப்பு.

விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட்டில் முதல்வர் கோப்பை போட்டிகள் துவங்க உள்ளதாக கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்தார்.முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் பள்ளி, கல்லுாரி பிரிவுகளில் தடகளம், இறகுபந்து, கூடைபந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, சிலம்பம், நீச்சல், மேஜைப்பந்து, வாலிபால், கைப்பந்து, கேரம்,சது ரங்கம், கோ கோ போட்டிகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தடகளம், இறகுபந்து, எறிபந்து, கபடி, பொது பிரிவில் தடகளம், கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, கேரம், சிலம்பம், அரசு ஊழியர்கள் பிரிவில் தடகளம், சதுரங்கம், கபடி, வாலிபால் போட்டிகளும், மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லுாரி பிரிவுகளில் கடற்கரை வாலிபால், டென்னிஸ், பளுதூக்குதல், வாள் விளையாட்டு, ஜூடோ, குத்துச்சண்டை, சைக்கிளிங் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. ஆக.22 முதல் செப்.12 வரை நடக்கும் இந்தமாவட்ட, மண்டல அளவில் தனி நபர், குழு போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம்,2ம் பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரம் வழங்கப்படும்.போட்டிகளில் பங்கேற்கவிரும்பும் மாணவர்கள் https://cmtrophy.sdat.in, மூலம் முன்பதிவு செய்து பங்கேற்கலாம். ஆக.16க்குள் விண்ணப்பிக்க வேண்டும், என்றார். 

Jul 22, 2025

சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, 23.07.2025 மற்றும் 24.07.2025 ஆகிய இரண்டு தினங்களுக்கு மட்டும் 7 மதுபான கடைகளை தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் உத்தரவு.

விருதுநகர் மாவட்டத்தில், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (F.L-1), F.L-2   ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி  (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில், ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, 23.07.2025 மற்றும் 24.07.2025 ஆகிய இரண்டு தினங்களில் வத்திராயிருப்பில் உள்ள மதுபானக் கடை எண் 11872, மகாராஜாபுரம் கடை எண் 12022, இலந்தைகுளம் கடை எண் 12020, வத்திராயிருப்பு ஹர்சினி ரெக்ரேசன் கிளப் மற்றும் ஜெயம் ரெக்ரேசன் கிளப், மகாராஜாபுரம் குயின் ரெக்ரேசன் கிளப் மற்றும் கூமாபட்டியில் உள்ள அயோத்தி ரெக்ரேசன் கிளப் ஆகிய 7 அரசு மதுபான கடைகள் மற்றும் ரெக்ரேசன் கிளப் ஆகிய கடைகளை தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் உத்தவிட்டுள்ளார்.

Jul 18, 2025

இராஜபாளையம் மணிமேகலை மன்றம் 68ஆம் ஆண்டு விழா

இராஜபாளையம் மணிமேகலை மன்றம் 68ஆம் ஆண்டு விழா 19-07-2025 சனிக்கிழமை மாலை 5.30 மணிபங்கேற்றுச் சிறப்புச் செய்வோர்தலைமை : திருமிகு பி.ஆர். வெங்கட்ராம ராஜா அவர்கள் (ராம்கோ சேர்மன்)மணிமேகலையில் அறம்வள்ளுவரும், சாத்தனாரும் திருமிகு டாக்டர். டி.எஸ்.சரவணன் M.V.Sc., Ph.D. அவர்கள் முதல்வர், அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையம்திருமிகு முனைவர் .வீ.ப.ஜெயசீலன் அவர்கள் சென்னை மாநகர இணை இயக்குநர்இடம் : காந்தி கலைமன்றம் பி.எஸ்.கே. ருக்மணிஅம்மாள் அரங்கம் இராஜபாளையம். வரவேற்பு : கொ.மா.கோ.இளங்கோநன்றி : V.K. பாரதி பீமாஅறிமுகம் : கோ.குறளமுதன்மன்றத்தலைவர் : குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் மணிமேகலை மன்றத்தார்,  வாழ்த்துரைதிரு கவிஞர் கிருஷ்ணபிரசாத் ,அவர்கள் சென்னைதிரு மருத்துவர் கு. கணேசன் அவர்கள்திரு எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்கள்திரு மருத்துவர் த.அறம் அவர்கள்திரு M.R.அழகராஜா அவர்கள் ,தென்காசிதிரு வள்ளிநாயகம் அவர்கள் ,கோதை எண்டர்பிரைசஸ் சிறந்த நூல்களுக்குப் பரிசளித்தல்சிறுகதைகள் : "மந்தைப்பிஞ்சை"ஆசிரியர் : கா. சி. தமிழ்க்குமரன் - ராம்கோ பி.ஆர்.ஆர். இலக்கிய விருதுநாவல் : "ஊத்தம்பல்லா"ஆசிரியர் : செஞ்சி தமிழினியன் - நல்லி இலக்கிய விருதுகவிதை : "விரிகதிர் விதைகள்"ஆசிரியர் : கதிர்மதியன்  - அடையாறு ஆனந்த பவன் இலக்கிய விருதுகட்டுரை :"மேகங்களின் பாதை"ஆசிரியர் : எழிலரசு - கோவை அம்பையராஜா இலக்கிய விருது சிறுவர் இலக்கியம்''கொடைக்கானல் குல்லா"ஆசிரியர் : ப.சதீஷ்முத்துகோபால் - கவிஞர் கிருஷ்ணபிரசாத் இலக்கிய விருதுஇவர்கள் 5 ஆயிரம் பரிசும்,பாராட்டுச் சான்றும் பெறுபவர்கள்.  பாராட்டுப் பெறுவோர்: திரு அக்ரி சுப்பிரமணிய ராஜா,திரு செல்வம் ,அருப்புக்கோட்டைதிரு மாரியப்பன், சமூகநல ஆர்வலர்திரு கோதையூர் மணியன் ,தமிழ் இலக்கிய மன்றம் சிறப்புப் பாராட்டுச் சான்றுகள்மணிமேகலை மன்றம் இதுவரை 110 படைப்பாளர்களுக்கும்,35 தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களுக்கும்.25 பொது நலச் சேவையாளர்களுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன.தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்இவ்விரு இலக்கிய அமைப்புகளும் ஆண்டுதோறும் மணிமேகலை மன்றம் பெயரில் படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கின்றன.இனி ஆண்டுதோறும் இராஜபாளையம் மணிமேகலை மன்றம் சார்பிலும் விருதுகள் வழங்க உள்ளன. இரண்டு அமைப்புகளுக்கும் மன்றம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.மணிமேகலை மன்றத்தைப் பாராட்டி இதுவரை ஆறு இலக்கிய அமைப்புகள் விருதுகள் தந்துள்ளன.2021ஆம் ஆண்டு S.R.M. பல்கலை தமிழ்ப் பேராயம் வழங்கும் தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது ரூ.50,000/-ம் தமிழகத்தில் சிறந்த இலக்கிய மன்றம் என்ற விருது வழங்கிச் சிறப்பித்தது. 

Jul 07, 2025

முன்னாள் சென்னை மாகாணப் பிரதமரும், ஒரிஸா மாநில ஆளுநரும், காந்தி கலை மன்ற நிறுவனருமான தியாகச் செம்மல் பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின் 127 ஆவது பிறந்தநாள் விழா

முன்னாள் சென்னை மாகாணப் பிரதமரும், ஒரிஸா மாநில ஆளுநரும், காந்தி கலை மன்ற நிறுவனருமான தியாகச் செம்மல்பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின் 127 ஆவது பிறந்தநாள் விழா ஸ்ரீமதி .பி .எஸ்.கே .ருக்மணி அம்மாள் அரங்கத்தில் 8-7-2025 செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது.   8-7-2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு அமரர் பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்கள் நினைவாலயத்தில்ஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமி ராஜா இசைப்பள்ளி குழுவினரின் கீர்த்தனாஞ்சலியுடன் புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது. விழாத்தலைவர் - ராம்கோ குரூப் சேர்மன் திரு. P.R.வெங்கட்ராம ராஜா அவர்கள் (மேனேஜிங் டிரஸ்டி, காந்தி கலை மன்றம்)வரவேற்புரை : திரு. P.J. ராம்குமார் ராஜா அவர்கள் (டிரஸ்டி, காந்தி கலை மன்றம்)"வீடும்- நாடும்" என்ற தலைபில் சொற்பொழிவு நிகழ்த்துபவர்'சொற்கொண்டல்'திரு. சண்முக. ஞானசம்பந்தன் அவர்கள் மதுரை வானொலி (பணி நிறைவு)விருந்தினர்களை கௌரவித்தல்திரு. N.K.ஸ்ரீகண்டன் ராஜா அவர்கள்திரு. P.R.குமாரசாமி ராஜா அவர்கள் (டிரஸ்டிகள், காந்தி கலை மன்றம்) 

Jul 03, 2025

ஸ்ரீ ராவ்பகதூர் எ.கா.த.தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி இராஜபாளையம் முன்னாள் மாணவியர் சந்திப்பு - அழைப்பு

முன்னாள்  மாணவியர் சந்திப்பு:சேர்க்கை:பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பசுமை நிறைந்த நினைவுகளிலே மலர்ந்திட, மகிழ்ச்சியிலே திளைத்திட வருமாறு தங்கள் அனைவரையும் உளமார அழைக்கிறோம்.நாள்: 05 ஜூலை 2025, சனிக்கிழமைநேரம்: (4.00 - 8.00)இடம் : ஸ்ரீ ராவ்பகதூர் எ.கா.த.தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இராஜபாளையம்.1942- 2020 ஆம் ஆண்டில் நம் பள்ளியில் படிப்பை முடித்த முன்னாள் மாணவியர் சந்திப்பிற்கு முன்பதிவு செய்து உங்களது வருகையை உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.தங்கள் மேலான வருகையை உறுதிசெய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 95975 20845பதிசெய்ய வேண்டிய நேரம்:(கீழ்க்கண்ட நேரத்தில் மட்டும் தொடர்பு கொள்ளவும்)காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை .   

Jul 02, 2025

"குருபக்தமணி" ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா ராம்கோ குரூப் அவர்களின் 90-வது பிறந்தநாள் விழா அழைப்பிதழ்.

04-07-2025 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு அன்னாரின் நினைவாலயத்தில் ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமி ராஜா நினைவு இசைப்பள்ளி ஆசிரியர், மாணவ, மாணவியர்களின் கீர்த்தனாஞ்சலியும் தொடர்ந்து புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.அன்று காலை 7.35 மணிக்கு ஸ்ரீஸ்ரீ அபிநவவித்யாதீர்த்த பாரதீ வேதபாடசாலையில் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களின் திரு உருவ படத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு ராம்கோ டெக்ஸ்டைல்ஸ் பிரிவின் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொடர் ஜோதி ஏந்தி புறப்பட்டு அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவிலில் பூஜைகள் செய்யப்பெற்று நகரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்து காலை 11 மணியளவில் ராஜபாளையம் மில்ஸ் வந்தடைய உள்ளது.முன்னதாக காலை 8.30 மணியளவில் ராமமந்திரத்திற்கு ஜோதி வருகின்ற சமயம் அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப் பெற்று அனைவருக்கும் காலை 9 மணியளவில் காந்தி கலைமன்ற வளாகத்தில் பிரசாதம் வழங்கப்பட உள்ளது.  04.07.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குஇராஜபாளையம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபம் A/C ஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமி ராஜா அரங்கத்தில்"கலா ரத்ன", "இசைச் சுடர்"ஸ்ரீமதி கிருதி பட்அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.அனைவரும் கேட்டு மகிழ வருக ! 

1 2 ... 8 9 10 11 12 13 14 ... 26 27

AD's



More News