25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சட்டமன்றத்தில் 3 முக்கிய அறிவிப்புகள் – முதல்வர் விஜய்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சட்டமன்றத்தில் 3 முக்கிய அறிவிப்புகள் – முதல்வர் விஜய்.

சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

 அன்னபூர்ணி சூப்பர் சிக்ஸ் திட்டம்.

அன்னபூர்ணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக பொங்கல் முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ள குடும்பங்கள் மற்றும் நலிந்த குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள்.

 பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுகிறது.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விமான நிலையம் அமைப்பதற்காக சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மீனம்பாக்கம் விமான நிலையம் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 'வெற்றிப் பயணம்' – பெண்களுக்கு விரிவுபடுத்தப்படும் இலவசப் பேருந்துப் பயணம்

மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில் அக்.2, காந்தி ஜெயந்தி முதல் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் Express, LSS, Deluxe அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்.

மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யும் வகையில் புறநகர் (Mofussil) மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டண அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில்:

  • வருமான உச்சவரம்பு கிடையாது.
  • பயணங்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு இல்லை.
  • திருநங்கைகளும் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
  • இதற்காக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ₹6,000 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News