'தேக்கடி தேவி' கோயில்.
காவல் தெய்வமான காளியை 'தேக்கடி தேவி' என பக்தர்கள் அழைக்கின்றனர். மனக்குறை தீர வெள்ளியன்று குருதி பூஜையை நடத்துகின்றனர்.
200 ஆண்டுக்கு முன்பு கேரள, தமிழக பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு தங்கியிருந்தனர். வனவிலங்குகள் அதிகம் இருந்ததால் வனதெய்வமான காளியம்மனை வழிபட்டனர். அதன் அடையாளமாக குலமாவு என்ற இருளி மரத்தின் அடியில் திரிசூலம் வைத்து வழிபட்டனர். அதன் அருகில் இருந்த கல்லில் சுயம்பு மூர்த்தியாக காளியம்மனும் காட்சியளித்தாள். பின்னர் அம்மனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.
கொடிமரம் பிரதிஷ்டை செய்த போது துர்கை அம்மனுக்கும் சன்னதி கட்டப்பட்டது.
விநாயகர், நாகேஸ்வரர், கருப்ப சுவாமி,சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. தினமும் இரண்டு கால பூஜை நடக்கிறது. ஆயில்யம் நட்சத்திரத்தன்று நாகருக்கு பாலாபிஷேகம் செய்தால் நாகதோஷம், விஷபயம் விலகும். நிலம், பூமி தொடர்பான வழக்குகள், பிரச்னை தீர வேண்டி அம்மனின் பாதத்தில் நிலத்தின் மண்ணை வைத்து வழிபடுகின்றனர். இளநீர் வைத்து வழிபட்டால் பயம் மறையும். இதை நடைகுருதி பூஜை என்கின்றனர்.
திருவிழாவின் போது தேவி புறநாதஸ் காவல் தெய்வமான காளியை 'தேக்கடி தேவி' என பக்தர்கள் அழைக்கின்றனர். மனக்குறை தீர வெள்ளியன்று குருதி பூஜையை நடத்துகின்றனர்.
200 ஆண்டுக்கு முன்பு கேரள, தமிழக பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு தங்கியிருந்தனர். வனவிலங்குகள் அதிகம் இருந்ததால் வனதெய்வமான காளியம்மனை வழிபட்டனர். அதன் அடையாளமாக குலமாவு என்ற இருளி மரத்தின் அடியில் திரிசூலம் வைத்து வழிபட்டனர். அதன் அருகில் இருந்த கல்லில் சுயம்பு மூர்த்தியாக காளியம்மனும் காட்சியளித்தாள். பின்னர் அம்மனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.
கொடிமரம் பிரதிஷ்டை செய்த போது துர்கை அம்மனுக்கும் சன்னதி கட்டப்பட்டது.
விநாயகர், நாகேஸ்வரர், கருப்ப சுவாமி,சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. தினமும் இரண்டு கால பூஜை நடக்கிறது. ஆயில்யம் நட்சத்திரத்தன்று நாகருக்கு பாலாபிஷேகம் செய்தால் நாகதோஷம், விஷபயம் விலகும். நிலம், பூமி தொடர்பான வழக்குகள், பிரச்னை தீர வேண்டி அம்மனின் பாதத்தில் நிலத்தின் மண்ணை வைத்து வழிபடுகின்றனர். இளநீர் வைத்து வழிபட்டால் பயம் மறையும். இதை நடைகுருதி பூஜை என்கின்றனர்.
திருவிழாவின் போது தேவி புராணத்தை ஏழு நாள் பாராயணம் செய்வர். இதனை 'சப்தாஹம் 'என்கின்றனர்.
0
Leave a Reply