25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும், கோடைகால பயிற்சி வகுப்பு முகாம்களில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும், கோடைகால பயிற்சி வகுப்பு முகாம்களில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும், பள்ளி மாணவர்களுக்கான, ஒன்றிய அளவிலான கோடைகால பயிற்சி முகாம் அந்தந்த வட்டார வள மையத்தில் வைத்து, நடைபெற உள்ளது.
அதன்படி, 01.05.2024 அன்று ஓவியக் கலைகள் பயில்வோம் என்ற தலைப்பிலும், 02.05.2024 அன்று தனித்தமிழ் அறிவோம் என்ற தலைப்பிலும், 03.05.2024 அன்று விருதுநகர் மாவட்டம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பிலும், 04.05.2024 போஸ்டர் தயாரித்தல் இணைய வழி பயிற்சியும், 06.05.2024 அன்று கதை சொல்லி என்ற தலைப்பிலும், 07.05.2024 அன்று புத்தகம் பேசுதல் என்ற தலைப்பிலும், 08.05.2024 அன்று நாட்டுப்புற கலைகள் பயிற்சியும், 09.05.2024 அன்று உணவே மருந்து என்ற தலைப்பிலும், 10.05.2024 அன்று உபயோகமற்ற பொருட்களில் இருந்து கலை பொருட்கள் தயாரித்தல்(Art from Waste) என்ற தலைப்பிலும், 11.05.2024 அன்று மெகந்தி வரைதல் மற்றும் களிமண் பொருட்கள் தயாரித்தல்(Mehendi and clay Modelling) என்ற தலைப்பிலும் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்யும் 50 மாணவர்கள் மட்டுமே பயிற்சியில் கலந்து கொள்ள இயலும். ஒரு மாணவர் இரண்டு பயிற்சிகளில் மட்டுமே பங்கேற்க பதிவு செய்யலாம்.இந்த கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்ற விரும்பும் மாணவர்கள் 30.4.2024- க்கு முன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த பயிற்சி முகாம் முற்றிலும் கட்டணமில்லா பயிற்சியாகும். மதிய உணவு வழங்கப்படும்.
 மேலும் விவரங்களுக்கு 98437- 21133 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News