25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


குடியரசு தினம் – 2027 முன்னிட்டு பத்ம விருதுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குடியரசு தினம் – 2027 முன்னிட்டு பத்ம விருதுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

குடியரசு தினம் -2027 ஆம் ஆண்டு முன்னிட்டு, 'சிறப்புமிக்கப் பணிகளை' அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணிகள், வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்துத் துறைகளிலும் ,பிரிவுகளிலும் சிறந்த மற்றும் விதிவிலக்கான சாதனைகள் , சேவைக்காக பத்ம விருதுகள் – 2027 வழங்கப்படுகின்றன.

இனம், தொழில், பதவி அல்லது பாலினம் என்ற வேறுபாடின்றி அனைவரும் இந்த விருதுகளுக்குத் தகுதியானவர்கள். இதனடிப்படையிலான விளையாட்டுத்துறை சார்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்ம விருது நாட்டின் இரண்டாவது உயரிய குடிமக்கள் விருது என்பதால், விண்ணப்பிக்கக்கூடிய நபர் தத்தமது துறையில் இதற்கு முன்னர் ஏதேனும் தேசிய விருதோ அல்லது மாநில விருதோ பெற்றிருத்தல் வேண்டும்.மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளைத் தவிர, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உட்பட மற்ற அரசு ஊழியர்கள் பத்ம விருதுக்குத் தகுதி பெறமாட்டார்கள்.

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் ராஷ்ட்ரிய புரஸ்கார் இணையதளமான https://awards.gov.in வழியாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  பத்ம விருதுகளுக்கு இணையவழி விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31.07.2026  என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா ,I A S ., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News