25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


சிறுபான்மையின மக்களுக்கு தொழில்  கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது ..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிறுபான்மையின மக்களுக்கு தொழில் கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது ..

தமிழ்நாட்டில் வாழும் மதவழி சிறுபான்மையினர்களான கிறித்துவர், இசுலாமியர், பௌத்தர், சமணர், பார்சி மற்றும் சீக்கிய மதத்தைச் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் புதிதாக தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலை விரிவுபடுத்தி தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ளவதற்கும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் குறைந்த வட்டியில் தனிநபர் கடன், விராசாத் - (கைவினை கலைஞர் கடன் திட்டம்), சுய உதவி குழுக்களுக்கான  சிறுகடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இக்கடன் திட்டங்கள் தொடர்பான விவரங்களையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ளவதற்காகவும், கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்காகவும் கடன் வழங்கும் முகாம் (லோன் மேளா) வட்டார அளவில் கீழ்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது. அதன்படி (04.08.2026) அன்று விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், (05.08.2026) அன்று அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், (06.08.2026) அன்று சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் மற்றும் (07.08.2026) அன்று சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது.

இம்முகாமில் கடன் தேவைப்படும் சிறுபான்மையின மக்கள் கடன் தொகை பெற கீழ்கண்ட ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.கடன் விண்ணப்பப் படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (தொ.எண்: 04562-2425709), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் /நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய அலுவலகங்களிலிருந்து விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.

சிறுபான்மையினர் மதத்திற்கான சான்று /சாதிச் சான்றிதழ் /பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல்,இருப்பிட சான்றிதழ்/ குடும்ப அட்டை நகல், திட்ட தொழில் அறிக்கை, பாஸ்போர்ட் புகைப்படம்-2, கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை கொண்டு செல்லவும். கல்விக் கடன் கோருவோர்கள் மேற்கண்ட ஆவணங்களுடன் உண்மைச் சான்றிதழ் அசல் (Bonafide Certificate), கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் நகல் ஆகியவற்றை கொண்டு செல்லவும்.
மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட அலுவலகங்களையும், வங்கிகளையும் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News