25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Mar 06, 2024

இல்லை இல்லை 2

பூடானில் திரை அரங்குகள் இல்லை.நேபாளத்தில் பகலில் மழை பெய்வதில்லை.காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததில்லை. பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை. மலை பாம்புகளுக்கு விஷம் இல்லை.

Mar 05, 2024

மாருதி சுஸுகி நிறுவனம் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 1,99,364 கார்களை விற்பனை செய்து சாதனை

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுஸுகி (Maruti Suzuki). இதன் நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 1,99,364 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.இதுதான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை ஆகும். இதற்கு முன்பாக வேறு எந்தவொரு மாதத்திலும் மாருதி சுஸுகி நிறுவனம் இவ்வளவு அதிகமான கார்களை விற்பனை செய்தது கிடையாது. 2024ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 23,921 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதுதவிர டொயோட்டா நிறுவனத்திற்கு 5,229 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஆல்டோ, ஆல்டோ கே10, எஸ்-பிரெஸ்ஸோ, செலிரியோ, வேகன்-ஆர், ஸ்விஃப்ட் ஆகிய ஹேட்ச்பேக் ரக கார்களை விற்பனை செய்து வருகிறதுஇதுதவிர டிசையர் செடான் ரக காரையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. மேலும் எர்டிகா எம்பிவி ரக காரையும், பிரெஸ்ஸா எஸ்யூவி ரக காரையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அத்துடன் ஈகோ வேனையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. இவை அனைத்தும் மாருதி சுஸுகி நிறுவனம் அரேனா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யும் கார்கள் ஆகும். இதுதவிர நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக இன்விக்டோ, க்ராண்ட் விட்டாரா, ஜிம்னி, ஃப்ரான்க்ஸ், எக்ஸ்எல்6, சியாஸ், பலேனோ, இக்னிஸ் ஆகிய கார்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது.  இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்பதை மாருதி சுஸுகி மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளது. இதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் சரியான விலையில் அதிக மைலேஜ் தரக்கூடிய மற்றும் நிறைய வசதிகள் நிரம்பிய கார்களை விற்பனை செய்து வருவதுதான் காரணம். கூடவே இந்தியா முழுக்க சர்வீஸ் சென்டர்கள் இருப்பதும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. 

Mar 05, 2024

முகேஷ் அம்பானியின் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் வர்த்தகத்தில் 14.5% வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி

முகேஷ்அம்பானியின்ஜியோஃபைனான்சியல்சர்வீசஸ்பங்குகள்வர்த்தகத்தில்14.5%வரைஉயர்ந்துமுதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்த உயர்வு மூலம் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் முதல் முறையாக ரூ.2 லட்சம் கோடி சந்தை மூலதனத்தைக் கடந்துள்ளது.மும்பை பங்குச்சந்தையில் இன்று ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் 347 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்தப் பங்கு கடந்த ஒரு வாரத்தில் 22% மற்றும் கடந்த மூன்று மாதங்களில் 50% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.நவம்பர் மாதம் முதல் Paytm நிறுவனத்தின் வேலெட் வர்த்தகத்தை வாங்க அம்பானி டீம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்ற தகவலும், ஜனவரி மாதம் ஆர்பிஐ பேடிஎம் வேலெட் சேவை மீதான கட்டுப்பாடுகளும் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான கவனத்தை ஈர்த்தது. விஜய் சேகர் சர்மா தலைமையிலான பேடிஎம், ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் இத்தகைய பேச்சுவார்த்தை நடந்ததை மறுத்துள்ளது. ஆயினும் இன்று ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 14.5% வரை உயர்ந்து 347 ரூபாய் என்ற என்ற வரலாற்று உச்சத்தைத் தொட வைத்துள்ளது.NBFC நிறுவனமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் ஏற்கனவே ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி என்ற பேமெண்ட் வங்கியை சொந்தமாக வைத்துள்ளது, இது 2,400 முகவர்கள் உடன் சேமிப்புக் கணக்குகள் மற்றும் பில் பேமெண்ட் சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி, டெபிட் கார்டுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. பேடிஎம் போலவே ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனமும் QR பேமெண்ட் சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால் பேடிஎம், போன்பே போன்ற முன்னணிநிறுவனங்களுக்குஇணையாகவளர்ச்சிஅடையமுடியவில்லை.ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் தனது வர்த்தக மாடலை தொடர்ந்து மாற்றி வரும் காரணத்தால் சில தடுமாற்றத்தை எதிர்கொண்டு வந்த வேளையில் தான் பேடிஎம் வேலெட் வர்த்தகக் கைப்பற்றல் செய்தி வெளியானது. இந்த ஒரு செய்தி காரணமாக இந்நிறுவன பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் 22 சதவீதமும், கடந்த மூன்று மாதங்களில் 50 சதவீதமும் உயர்ந்துள்ளது.

Mar 04, 2024

நாட்டின் நெடுஞ்சாலை நெட்வொர்க் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் சாலை நெட்வொர்க்கிற்கு சமமாக இருக்கும்

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் சாலை நெட்வொர்க்கிற்கு சமமாக இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவுக்கு மூலதன முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சி தேவை என்றால், நாட்டில் நல்ல உள்கட்டமைப்பு இருக்க வேண்டும். மத்திய அரசு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாடு முழுவதும் இந்த வருடம் பல புதிய எக்ஸ்பிரஸ் வேக்கள் திறக்கப்பட உள்ளன.இந்த புதிய எக்ஸ்பிரஸ் வேக்கள் திறக்கப்பட்ட பின் நாட்டின் பொருளாதாரம் மொத்தமாக மாறும். முக்கியமாக நாட்டின் நெடுஞ்சாலை நெட்வொர்க் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் சாலை நெட்வொர்க்கிற்கு சமமாக மாறும்.துவாரகா விரைவுச் சாலையின் 18.7 கிமீ பகுதி இன்னும் இரண்டு வாரங்களில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். எக்ஸ்பிரஸ்வேயின் குர்கான் பகுதி முதல் கட்டமாக திறக்கப்பட உள்ளது. எட்டு வழிகள் கொண்ட விரைவு சாலையானது , புதிய செக்டார் பகுதியில் இருந்து NH-8 சாலையை இணைக்கும் வகையிலும், குர்கான் நகரின் பிற பகுதிகளுக்கு பயணத்தை எளிதாக்கும் வகையிலும் திறக்கப்பட உள்ளது. டெல்லியில் மீதமுள்ள 10 கிலோமீட்டர் எக்ஸ்பிரஸ்வே முடிக்க இன்னும் ஐந்து முதல் ஆறு மாதங்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது 1 மணி நேரமாக உள்ள 18.7 கிமீ தூரம் இந்த சாலை திறக்கப்பட்ட பின் 20 - 25 நிமிடம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எட்டு வழிகள் கொண்ட விரைவு சாலையாக இது கட்டப்பட்டு உள்ளது.விரைவு சாலைகள் : விரைவு சாலைகள் இந்தியாவின் மிக உயர்ந்த சாலைகள் ஆகும். ஜூலை 2023 நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 5,173 கிமீ (3,214 மைல்) அதிவேக நெடுஞ்சாலைகள் அதாவது எக்ஸ்பிரஸ் வே உள்ளன. இவை பெரும்பாலும் 6, வழி அல்லது 8 வழி சாலைகள் ஆகும். இங்கே அதிகபட்சம் 120 கிமீ வேகத்தில் கூட செல்ல முடியும். கட்டுமானத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலை இந்தியாவின் மிக நீளமான விரைவுச்சாலையாக இருக்கும். இது 2026 இறுதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே இந்தியாவில் 2002 இல் தொடங்கப்பட்ட முதல் 6-வழி செயல்பாட்டு விரைவுச்சாலை ஆகும். தற்போது,​​இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ்வே, மும்பை-நாக்பூர் எக்ஸ்பிரஸ்வே (கட்டம்-II) 600 கிமீ (370 மைல்), 2022 இல் திறக்கப்பட்டது மற்றும் (கட்டம்-II) மே 2023 இல் திறக்கப்பட்டது. மற்றும் 2021 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட 14 பாதைகள் கொண்ட டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ்வேயின் டெல்லி - தஸ்னா (யுபி எல்லை) பிரிவில் அகலமான விரைவுச்சாலையாக உள்ளது. ஜூலை 2023 நிலவரப்படி, 5,173 கிமீ (3,214.4 மைல்) நீளம் கொண்ட 48 எக்ஸ்பிரஸ்வேக்கள் இந்தியாவில் செயல்படுகின்றன, மேலும் 8,772 கிமீ கட்டுமானத்தில் உள்ளன. 2014 ஆம் ஆண்டில், நாட்டில் சுமார் 1,021 கிமீ அதிவேக நெடுஞ்சாலைகள் மட்டுமே இருந்தன.உத்தரப்பிரதேசம் 1,396 கிமீ (867 மைல்) 8 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன. மகாராஷ்டிரா 793.4 கிமீ (493.0 மைல்) 6 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன. ராஜஸ்தான் 757 கிமீ (470 மைல்) 3 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன. ஹரியானா 609 கிமீ (378 மைல்) 7 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன. மத்தியப் பிரதேசம் 244 கிமீ (152 மைல்) எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன. சத்தீஸ்கர் 191 கிமீ (119 மைல்) 2 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன. கர்நாடகா 171 கிமீ (106 மைல்) 5 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன. வடஇந்தியா: தமிழ்நாட்டில் வெறும் 94.8 கிமீ தூரத்திற்கு சென்னை - குமரி இடையே சில ஸ்ட்ரெட்ச் 6 வழி சாலையாக அமைக்கப்பட்டு உள்ளன. வடஇந்தியாவில் இருப்பது போல நீண்ட எக்ஸ்பிரஸ் வே சாலைகள் தமிழ்நாட்டில் கட்டப்படவில்லை. தமிழ்நாட்டில் போதிய அளவில் எக்ஸ்பிரஸ் வே கட்டுமானங்கள் தொடங்கப்படாமல் இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில் அதிக அளவில் எக்ஸ்பிரஸ் வே. கட்டப்படுவதால் தமிழ்நாடு பின்தங்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

Mar 04, 2024

'எ வாக் ஆன் தி வைல்ட்சைடு' என்ற தீமீல் நடைபெற்ற அனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்துக்கு முந்தைய விழாக்கள் 1stday

குஜராத் ஜாம்நகரே கொண்டாட்டத்தில் களைகட்டியது. பிரபலங்களின் அணிவகுப்புடன் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமண முன்னோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது.அதில் இஷா அம்பானி அணிந்திருந்த 3D எம்பராய்டரி கவுன் டிசைன் நேர்த்தியின் உச்சம் என்றே சொல்லலாம்.இஷா அம்பானி அணிந்திருந்த 3D செர்ரி பூக்களின் தொகுப்பு மற்றும் மக்னோலியா பூக்கள் அப்படியே படந்திருக்க , பூந்தோட்டத்தின் நடுவே தோகையை விரித்தாடும் மயில் நிற்பது போல் 3D பூக்கள் டிசைன்களுக்கு நடுவே மயில் எம்பராய்டரி வைத்து அதை ஹைலைட் செய்யும் விதமாக ஸ்வரோஸ்கி க்ரிஸ்டல் கற்களை பதித்திருந்தது அந்த ஆடை கோடை வசந்தத்தை வரவேற்கும் விதமாக வடிமைக்கப்பட்டிருந்தது. அதற்கு அழகு சேர்க்கும் விதமாக ஷால் இருந்தது . மொத்தத்தில் அந்த ஆடைக்கு லக்ஸுரியான தோற்றத்தில் மிளிர்ந்தது .அவர் அந்த ஆடையின் டிசைனிற்கு ஏற்ப பின் புறம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது ஆடைக்கு மேலும் அழகு சேர்த்தது. இந்த அழகு கொள்ளா ஆடையை வடிவமைத்தவர் பிரபலங்களின் ஸ்டைலிஸ்டான அனைடா ஸ்ராஃப் அடஜானியா. இஷாவின் தன்னிகரில்லா தனித்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைடா இந்த ஆடையை வடிவமைத்திருக்கிறார். அதற்கு ஏற்ப ஹேர் டூ மற்றும் அணிகலன்களின் தேர்வு  super.அனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்துக்கு முந்தைய விழாக்கள், மணமகனின் விலங்குகள் மீதான அன்பை பிரதிபலிக்கும் வகையில், அனந்த் அம்பானி உருவாக்கிய வனந்தரா-வில் மரங்கள் விலங்குகளுக்கு மத்தியில் நடந்தது. திருமணத்துக்கு முந்தைய விழாக்களில் கலந்து கொள்ளும் சில விருந்தினர்களும் வந்தாராவுக்கு வருகை தந்தனர். சனிக்கிழமை நிகழ்ச்சி நிரல் 'எ வாக் ஆன் தி வைல்ட்சைடு' என்ற தீமீல் நடைபெற்றதுவந்தாராவில் உள்ள விலங்குகள் மீட்பு மையத்தின் சுற்றுப்பயணம், வெளிப்புற வசதியாக இருப்பதால், விருந்தினர்கள் வசதியான காலணிகளை அணியுமாறு முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.விழாவுக்கு வந்த விருந்தினர்களுக்கு ஒரு பரிசுப் பெட்டியுடன் சேர்த்து கையால் எழுதப்பட்ட குறிப்பையும் தந்துள்ளனர். அதில், அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் தங்கள் திருமணத்துக்கு முந்தைய விழாக்களில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தனர். விருந்தினர்கள் விலங்குகளைச் சுற்றிப் படம் எடுப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்த நிகழ்வுகளில் நீங்கள் புகைப்படம் எடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் நிகழ்ச்சியை முழுமையாக ரசிக்கவும், அனுபவிக்கவும், உணவுகளை சுவைக்கவும், போன் பயன்படுத்துவதையும், போட்டோ எடுப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.இதேபோல் நிகழ்ச்சியின் முக்கியமான தருணங்கள் அனைத்தையும், நிகழ்வுக்குப் பிறகு உங்களுடன் பகிர்ந்து கொள்வதை நாங்கள் உறுதி செய்கிறோம் என தெரிவித்துள்ளனர்.இதேபோல் விலங்குகளைச் சுற்றி புகைப்படங்கள் அல்லது வீடியோ எடுப்பதைத் தவிர்க்கவும். மனிதர்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விலங்குகள் உள்ள அனைத்து இடத்திலும் புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. உங்கள் புரிதலுக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி என ராதிகா மற்றும் அனந்த் குறிப்பில் கையொப்பமிடப்பட்டிருந்தனர். வந்தாரா என்பது அனந்த் அம்பானியின் பேரார்வம் கொண்ட விலங்குகள் காப்பகமாகும். வந்தாரா முயற்சியின் கீழ், ஜாம்நகரில் விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்தின் கிரீன் பெல்ட்டில் உள்ள 3,000 ஏக்கர் வசதியில் யானைகள், சிறுத்தைகள், சிங்கங்கள், முதலைகள் மற்றும் பல வகையான பறவைகள் உட்பட நூற்றுக்கணக்கான விலங்குகள் உள்ளன. தங்கள் இளைய மகன் அனந்த் அம்பானியின் ஜூலை திருமணத்துக்கு முன்பு, ஜாம்நகரில் சில உயர்மட்ட விருந்தினர்களை நீதாவும் முகேஷ் அம்பானியும்வரவேற்றனர்.திருமணத்துக்குமுந்தையவிழாக்களில்மார்க் ஜூகர்பெர்க், பில்கேட்ஸ், தீபிகா பட்குகோன் உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். ரன்வீர் சிங், ஆலியா பட், ரன்பீர் கபூர், அக்‌ஷய் கண்ணா, ஜான்வி கபூர், கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா, சாய்னா நேவால், ஷனாயா கபூர், அனன்யா பாண்டே, ஆதித்யா ராய் கபூர், ஹர்திக் பாண்டியா, சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, வருண் த்வான், இவான்கா ஷ்ரத்தா கபூர், சைஃப் அலி கான், கரீனா கபூர் கான், நீது கபூர் மற்றும் மாதுரி தீட்சித் உட்பட பலர் இந்த திருமண முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.பயணத்திட்டத்தின்படி, அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்தின் முன்னோட்ட விழாக்களின் 1வது நாள் மாலை, சர்க்யூ டி சோலைல் உட்பட விருந்தினர்களுக்காக பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டிருந்தது. அங்கு வந்த விருந்தினர்களுக்காக ’வந்தாரா நிகழ்ச்சி’ நடைபெற்றது. அதில் விலங்கு இராச்சியத்தின் அழகை பிரதிபளிக்கும் விதமாக இந்நிகழ்ச்சி இருந்தது. பின்னர் ஒரு கண்கவர் ட்ரோன் ஷோவும் நடத்தப்பட்டது.மாலையின் சிறப்பம்சமாக, இந்தியாவில் முதன்முறையாக இசையமைத்த ரிஹானாவின் சிறப்பு நிகழ்ச்சி இருந்தது, பின் அந்நாளின் இறுதி கொண்டாட்டமாக விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியுடன் திருமண முன்னோட்ட விழாவின் முதல் நாள் சிறப்பாக நிறைவடைந்தது.

Mar 02, 2024

சென்னை பேருந்துகளில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு மார்ச் முதல் வாரத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை கொண்டு வரப்பட உள்ளது. வரும் நாட்களில் மற்ற நகரங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சென்னையில் உள்ள பேருந்துகளில் எல்லாம் பயணிகள் தகவல் அமைப்பு வழங்கப்படும். அதாவது பேருந்துகளில் தானியங்கி மூலம் எந்த நிறுத்தம் என்ற அறிவிப்பு வெளியிடப்படும். மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மார்ச் முதல் வாரத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி-எம்) 'சென்னை நகரத்தின் எளிமை' என்ற அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்டிசி நிர்வாக இயக்குநர் ஆல்பி ஜான் இதை உறுதி படுத்தி உள்ளார்.அதன்படி விரைவில் பயணிகளுக்கு பயணிகள் தகவல் அமைப்பு (பிஐஎஸ்) வழங்கப்படும். அதேபோல் தானியங்கி டிக்கெட் அமைப்பும் வழங்கப்படும். பேருந்துகளில் இருக்கும் கருவி ஒன்றை ஸ்கேன் செய்து நாம் டிக்கெட் எடுக்கலாம். மாநகர பேருந்து கார்டுகள் எதிர்காலத்தில் வழங்கப்படும். அதை இதில் டேப் செய்தும் டிக்கெட் எடுக்கலாம்.நாம் செல்லும் தூரத்திற்கு ஏற்றபடி டிக்கெட் வழங்கப்படும். வெளிநாடுகளில் இப்படி டேப் செய்யும் முறை ஏற்கனவே அமலில் உள்ளது. அதே முறை சென்னையிலும் கொண்டு வரப்பட உள்ளது. மெட்ரோ வழங்க உள்ள ஸ்மார்ட் கார்டுகளை இப்படிப்பட்ட பேருந்துகளிலும் பயன்படுத்தும் வசதி விரைவில் வர உள்ளது. சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட மூன்று ஆப்ஷன்கள் மக்களுக்கு உள்ளன. ஆனால் இது மூன்றிற்கும் மக்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள். மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி இந்த மூன்றிலும் பயணிக்க முடியும்.இதற்காக ஒரு கார்ட் அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும். இந்த கார்டை மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். மின்சார ரயில்களில் செக்கர் சோதனை செய்யும் சமயங்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்து கொள்ள முடியும். பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும். எனவே இந்த ஒரு கார்டை ரீ சார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். எந்த சேவையை பயன்படுத்த வசதியாக இருக்கிறதோ மக்கள் அதை பயன்படுத்த முடியும். இதனால் அவர்கள் கவுண்ட்டர்களின் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. கடந்த 2020ம் ஆண்டில் அனைத்து துறைகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் உருவாக்கப்பட்டது. இந்த குழு சார்பாக தற்போது இது தொடர்பான திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், புறநகர் ரயில்வே அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோரிடம் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை செய்து உள்ளார். இதன் மூலம் சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் வசதியை விரைவில் அரசு ஏற்படுத்த உள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Mar 02, 2024

தமிழக மக்களின் வசதிக்காகவும், பயன்பாட்டுக்காகவும், மின் வாரியத்தின், "எக்ஸ்'" என்ற வெப்சைட்

.தமிழக மின்வாரியம் வீடுகளில் கரண்ட் பில் கணக்கெடுக்கப்பட்டதுமே, மின் ஊழியர்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விபரங்களை, அலுவலக கம்ப்யூட்டரில் அப்லோடு செய்வார்கள்.. சிறிது நாளில் மின் கட்டண விபரம் நுகர்வோருக்கு, SMS வாயிலாக அனுப்பப்பட்டுவிடும்.கணக்கெடுத்த உடனேயே, கட்டண விபரம் தெரிவிக்க, புது "மொபைல் செயலி" அறிமுகம் செய்ய முடிவாகியிருக்கிறாம். அதன்படி, மீட்டரிலுள்ள மின் பயன்பாடு, அதற்கான கட்டண விபரங்கள், செயலி மற்றும் மின் வாரிய சர்வரில் வந்துவிடும். உடனே, நுகர்வோருக்கு SMS சென்றுவிடும். இந்த பயன்பாடு விரைவில் தமிழகம் முழுவதும் வரப்போகிறது. இணையதளம்: அதேபோல, மின் வாரிய இணையதளம், செல்போன் ஆப், "பாரத் பில் பே" வாயிலாக டிஜிட்டல் முறையில் செலுத்தலாம்.. முந்தைய மின் கட்டண ரசீதுகளை பெற விரும்புவோர், அதை வெப்சைட்டில் டவுன்லோடும் செய்து கொள்ளும் வசதியை, மின்வாரியம் செயல்படுத்தி உள்ளது. அதன்படி, மின் வாரியத்தின், "எக்ஸ்'" என்ற வெப்சைட் வாயிலாக, 'tnebnet.org/.என்ற இணையதள பக்கத்திற்கு நேரடியாக சென்று, மின் இணைப்பு எண், ரசீது எண், தேதியை பதிவிட்டு, ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அதிகரிக்க செய்துள்ளது.தமிழக மக்களின் வசதிக்காகவும், பயன்பாட்டுக்காகவும், மின்வாரியத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதுஇப்படி எண்ணற்ற வசதிகளை மின்வாரியம் செய்து வரும்நிலையில், இன்னொரு அதிரடியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, மின்வாரிய களப்பணிகளை கண்காணிப்பதற்காகவே, புது செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஐடி பிரிவு தலைமைப் பொறியாளர், மின்வாரிய அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தாழ்வழுத்த மின் இணைப்பு பிரிவில் களப்பணிகளை மேற்கொள்வோருக்காக ஆண்ட்ராய்டு கைபேசி செயலி (எப்எஸ்எம்) உருவாக்கப்பட்டுள்ளதுஇதில், மின் இணைப்பை துண்டித்தல், மீண்டும் இணைப்பு வழங்குதல், பழுதான மீட்டர்களை மாற்றுதல், புதிய மின் இணைப்பு வழங்குதல், மின் நுகர்வோர் அளிக்கும் புகார்கள் உள்ளிட்ட 7 சேவைகள் தொடர்பான தரவுகள், புகைப்படங்களை பதிவு செய்வதோடு, சரிபார்க்கவும் முடியும். இந்த செயலி மூலம் களப்பணியாளர்களுக்கான பணிகளை உதவிப் பொறியாளர் ஒதுக்கீடு செய்ய முடியும். மேலும், மின் நுகர்வோரின் புகார்கள், சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளருக்கு நேரடியாக சென்று சேர்ந்துவிடும். இந்த செயலியை சோதனை அடிப்படையில் பயன்படுத்த மின்வாரியத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதிரடி நடவடிக்கை: அதன்படி, 12 வட்ட அலுவலகங்களில் உள்ள பணியாளர்களுக்கு வழங்கும் வகையில் செயலியின் ஏபிகே மின்னஞ்சல் வாயிலாக சம்பந்தப்பட்ட மேலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதை பயன்படுத்தும்போது தொழில்நுட்ப ரீதியாக ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும்" என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mar 02, 2024

தமிழகத்தில் குலசேகரன்பட்டினத்தில் இருந்து விண்வெளி பயணம்  

இஸ்ரோவுக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் செயல்பாட்டில் உள்ளன. பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு பல செயற்கைக்கோள்கள் இங்கிருந்து விண்ணில் ஏவப்படுகின்றனநாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது இஸ்ரோ. அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம்.  ஒரு ராக்கெட் ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருக்க வேண்டும். ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் விண்கலங்கள் தென்துருவத்தை நோக்கி, கிழக்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு பகுதியிலிருந்து ஏவப்பட வேண்டும்.அப்போதுதான் பூமியின் சுழல் வேகமான 0.5 கிமீ/செகண்ட் கூடுதலாக கிடைக்கும் (நமக்கு தேவை 8 கி மீ/செகண்ட்). இவ்வாறு ஏவப்படும்போது ஒரு ராக்கெட்டின் முழு ஆற்றலும் பயன்படுத்தப்படும் என்பதால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைக் கூட இந்த இடங்களில் இருந்து நம்மால் எளிதாக ஏவ முடியும்.இந்தக் காரணத்திற்காக பல நாடுகள் வேறு கண்டங்களில் இருந்துகூட தங்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகின்றன. எடுத்துக்காட்டாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்கலங்கள் தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானா ஏவுதளத்திலிருந்து ஏவப்படுகின்றன.ஏவுகளங்களில் இருந்து பிரிந்து வரும் பாகங்கள் (உதாரணமாக சில பாகங்கள் ஏறக்குறைய 20 மீட்டர் நீளமும் 3 மீட்டர் விட்டமும் கொண்டவை) கடலில்தான் விழ வேண்டுமே தவிர மக்கள் வசிக்கும் நிலபரப்பின் மீது விழக்கூடாது. அப்படி விழுந்தால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். இந்த விதி மிக முக்கியமானது.இந்த விதியை கருத்தில் கொண்டு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளின் பாகங்கள் இலங்கை நாட்டின் மீது விழுந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் இஸ்ரோ. இதற்காக ராக்கெட்டுகள் 'Doglegmaneuver' எனும் முறையில் விண்ணில் ஏவப்படுகின்றன.ஆனால் இந்த முறையில் ஏவும்போது எரிபொருள் அதிகமாக செலவாகும். எனவே புதிய ஏவுதளம் இலங்கை நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், எரிபொருளையும், செலவுகளையும் மிச்சப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.அதுமட்டுமின்றி, ஏவுதளம் அமைக்கப்படும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீட்டருக்கும் குறைவாக இருக்க வேண்டும மேலும், அந்தப் பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடிய பகுதியாக இருக்கக்கூடாது. புயல், மின்னல், மழையின் தாக்கமும் அங்கு குறைவாக இருக்க வேண்டும்.தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரபட்டினம் மேலே சொன்ன அனைத்து அம்சங்களையும் கொண்ட ஓர் இடமாக உள்ளது. எனவேதான் இஸ்ரோ இதைத் தேர்வு செய்துள்ளது. 

Mar 02, 2024

குறைந்த வேலை நேரத்தை கடைபிடித்து பொருளாதாரத்தில் மேம்பட வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

ஜெர்மனியில் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்யும் முறையை கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள ஜெர்மனி, அதிலிருந்து மீள கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகின் வளர்ந்த நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்பெயின், இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் மிகவும் குறைவான வேலை நேரத்தை கடைபிடிக்கின்றன.குறைந்த வேலை நேரத்தை கடைபிடித்தாலும் இந்த நாடுகள் பொருளாதாரத்தில் மேம்பட்டுள்ளதை உணர்ந்த ஜெர்மனியும் குறைந்த வேலை நேரத்தை கடைப்பிடிக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் முயற்சியாக வாரத்தில் 4 நாட்கள் வேலையும் 3 நாட்கள் விடுமுறையும் அளிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது. இவ்வாறு குறைந்த வேலை நாட்களை கடைபிடிப்பதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனது புத்துணர்ச்சி அடைந்து செயலாக்கம் அதிகரிக்கும் என ஜெர்மனி அரசு எதிர்ப்பார்க்கிறது. முன்னதாக வாரத்தில்4 நாட்கள் மட்டும் வேலை செய்யும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று அந்நாட்டின் தொழிலாளர் சங்கங்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன. இந்த நிலையில் அமலுக்கு வரும் இந்த திட்டம், நல்ல பொருளாதார மாற்றத்தை கொடுக்கும் என தொழிற்சங்கங்களும் ஜெர்மனி அரசும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றன. 6 மாதங்கள் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்படும் இந்த திட்டத்தில் 45 நிறுவனக்கள் பங்கேற்கின்றன. இதன் மூலம் ஜெர்மனியில் நிலவும் பணியாளர்கள் பற்றாக்குறை முடிவுக்கு வரும் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

Mar 02, 2024

ப்ளூ ஆதார் கார்டு எப்படி பெறுவது?

நீல நிற ஆதார் அட்டை என்பது பால ஆதார் அட்டை என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக குறிப்பாக வழங்கப்படும் ஆதார் அட்டை ஆகும். பெரியவர்களுக்கு வழங்கப்படும் வழக்கமான ஆதார் அட்டையிலிருந்து வேறுபடுத்திக் காட்ட இது நீல நிறத்தில் உள்ளது.பயோமெட்ரிக் தரவு (கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன்) சேகரிக்கப்படும் வழக்கமான ஆதார் அட்டையைப் போலல்லாமல், நீல ஆதார் அட்டைக்கு குழந்தையிடமிருந்து எந்த பயோமெட்ரிக் தகவலும் தேவையில்லை.ஏனெனில் சிறு குழந்தைகளிடமிருந்து பயோமெட்ரிக் தரவுகளை சேகரிப்பது சவாலானது மற்றும் நம்பமுடியாதது. அதற்குப் பதிலாக, குழந்தையின் UID (தனித்துவ அடையாள எண்) அவர்களின் மக்கள்தொகைத் தகவல் மற்றும் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரின் UID உடன் இணைக்கப்பட்ட முகப் புகைப்படத்தின் அடிப்படையில் இந்த கார்டு உருவாக்கப்படுகிறது. எப்படி விண்ணப்பிப்பது: இதற்கு எளிதாக விண்ணப்பிக்க முடியும். இணையத்திலேயே இதற்கான புக்கிங் செய்யலாம். அல்லது அதிலேயே பார்ம் டவுன் லோடு செய்து அதை நிரப்பி ஆதார் அலுவலகத்தில் கொடுக்கலாம். இல்லையென்றால் பதிவு மையத்தில், நீங்கள் ஆதார் பதிவுப் படிவத்தை நிரப்ப வேண்டும். யுஐடிஏஐ இணையதளத்தில் இருந்து படிவத்தை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின் குழந்தையின் UID (தனித்துவ அடையாள எண்) அவர்களின் பிறப்பு அடையாள விவரம், மக்கள்தொகைத் தகவல் மற்றும் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரின் UID உடன் இணைக்கப்பட்ட முகப் புகைப்படம் ஆகியவற்றை கொடுக்கலாம்.அதன்பின் 5 வயது தாண்டியதும் ப்ளூ ஆதார் அட்டைக்கு பதிலாக சாதாரண ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இது போக ஆதாரிலேயே 4 வகையான ஆதார் உள்ளன. ஒன்று சாதாரண ஆதார்.இது ஒரு லெட்டர் அடிப்படையிலான லேமினேட் செய்யப்பட்ட ஆதார் கடிதம் ஆகும். இதில் ஆதார் அட்டை கொடுக்கப்பட்ட வெளியிடப்பட்ட தேதி மற்றும் QR குறியீடு இருக்கும். புதிய பதிவு அல்லது பயோமெட்ரிக் மாற்றம், மொத்தமாக ஆதார் புதுப்பிப்பு செய்யப்பட்டால், புதிய ஆதார் அட்டை சாதாரண தபால் மூலம் மக்களுக்கு அனுப்பப்படும். ஆதார் கடிதத்தை அது வரை தாற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அதே சமயம் இந்த ஆதார் கடிதம் இருந்தால் மட்டுமே தபாலில் வரும் கார்டை வாங்க முடியும். eAadhaar: eAadhaar என்பது ஆதாரின் மின்னணு வடிவமாகும். இது UIDAI ஆல் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்டது. இதில் பாதுகாப்பான QR குறியீடு இடம்பெற்று இருக்கும். அதேபோல் ஆன்லைனில் திறக்க கடவுச்சொல் கொடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் eAadhaar/masked eadhaar ஐ எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். அதற்கு ஓடிபி வரும். eAadhaar/masked eAadhaar பொதுவாக ஆதார் கார்டில் உள்ள கடைசி 4 இலக்கங்களை மட்டுமே காட்டும். ஆதார் பிவிசி கார்டு: ஆதார் பிவிசி கார்டு என்பது UIDAI ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதாரின் சமீபத்திய வடிவமாகும். எடுத்துச் செல்ல எளிதானது மற்றும் வலிமையானது. PVC-அடிப்படையிலான ஆதார் அட்டையானது டிஜிட்டல் முறை மூலம் கையொப்பமிடப்பட்ட ஆதார் ஆகும். இது டேம்பர் ப்ரூஃப் கொண்டது. அதேபோல் தண்ணீரில் விழுந்தாலும் வீணாகாது.

1 2 ... 38 39 40 41 42 43 44 45 46 47

AD's



More News