மகாவிஷ்ணுவின் கையால் தகனம் பெற்ற பாக்கியவான் கர்ணன்.
தானம் என்பது கேட்ட பிறகு கொடுப்பது, தர்மம் என்பது கேட்கும் முன் கொடுப்பது. கர்ணனின் காதில் கவச குண்டலம் இருக்கும் வரை, தன் உயிர் பிரியாது என தெரிந்தும் இந்திரனுக்கு தானமாக கொடுத்தார்.
தன் வாழ்நாள் முழுவதும் தர்மம் செய்த கர்ணனுக்கு கடைசி நேரத்தில் உயிர் பிரியவிடாமல், அவர் செய்த தர்மம் காப்பாற்றியது .அந்த நேரத்தில் வந்த கிருஷ்ணன் நீ செய்த தர்மம் அனைத்தும் எனக்கு வேண்டும், என்று கேட்ட உடன் தானமாக கொடுத்தார்.
கர்ணன் இறப்பதற்கு முன்தன் விஸ்வரூபத்தை காட்டிய மகாவிஷ்ணு, கர்ணன் இறந்த பிறகு உடலை தகனம் செய்தார். மகாவிஷ்ணுவின் கையால் தகனம் பெற்ற பாக்கியவான் கர்ணன்.
0
Leave a Reply