விருதுநகர் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பிறப்பு, இறப்பு, வருமானம், சாதி உள்ளிட்ட 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை.7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தேவையான சான்றிதழ் விவரம் மற்றும் ஆதாரங்களை அனுப்பினால், சான்றிதழ் நேரடியாக வாட்ஸ்அப்பிலேயே கிடைக்கும்.பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 78452-52525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி பொதுமக்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம்.
புதிய ரேஷன் அட்டைக்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். குடும்ப தலைவரின் போட்டோ(5 MB), குடும்ப தலைவர் & உறுப்பினர்களின் ஆதார், மின் கட்டண ரசீது ஸ்கேன் செய்து வைத்து கொள்ளவும். tnpds.gov.in தளத்திற்கு சென்று Apply new smart card லிங்கை கிளிக் செய்து செல்போன் எண் உள்ளிட்ட தகவலை பதிவேற்றம் செய்யவும். பின்னர், TSO (அ) RI நேரில் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்வர். பின்னர் உங்களுக்கு கார்டு வழங்கப்படும்.ரேசன் அட்டையில் புதிய நபர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய அல்லது புதிய ரேசன் அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் tnpds.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் எளிதாக மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
வெள்ளரிக்காய் துண்டுகள், புதினா இலைகள் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு, சேர்த்து மிக்ஸியில் அரைத்து குடிக்கவும். இந்த பானம் உடலை குளிர்வித்து, நீர்ச்சத்தை பராமரிக்க உதவும். கோடைக்காலத்தில் தினமும் குடித்தால் உடல் வெப்பம் குறைந்து தோல் ஆரோக்கியமும் மேம்படும்.
கடலுக்கடியில் அமையவுள்ள புதிய SING (Singapore-India-Gulf) கேபிள் திட்டம் மூலம் ஆசியா மற்றும் வளைகுடா நாடுகள் டிஜிட்டல் முறையில் இணைய உள்ளன! இந்தியாவின் முக்கிய நகரங்கள் சிங்கப்பூர் மற்றும் துபாயுடன் நேரடியாக இணையும். ஒரு வினாடிக்கு 18 டெராபிட்ஸ் (Tbps) வேகத்தில் தரவு பரிமாற்றம் நடைபெறும்.துபாயைச் சேர்ந்த 'du' நிறுவனம் மற்றும் சைப்ரஸின் 'Datawave Networks' இணைந்து இத் திட்டத்தை செயல்படுத்துகின்றன.
சீனா அமெரிக்காவின் கர்வத்தை நொறுக்கியது. அதனால் அமெரிக்கா சீனாவுக்குப் பணிய வேண்டியிருந்தது. அமெரிக்கா சீனா மீது வரிகளை விதித்தபோது. அதற்குப் பதிலடியாக, சீனாவும் அமெரிக்காவிற்கு அரிய மண் தாதுக்களை வழங்குவதை நிறுத்தியது. இது அமெரிக்காவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியைப் பாதித்தது. இதன் விளைவாக டொனால்ட் டிரம்ப் சீனாவுக்குப் பணிய வேண்டியிருந்தது. வல்லரசின் கர்வம் நொறுக்கப்படும் அளவிற்கு சீனா அத்தகைய கடுமையைக் காட்டியது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தைபகிரவும். நீங்கள் உங்களை இந்தியாவின் பெருமையாகக் கருதினால், கண்டிப்பாக லைக் செய்யுங்கள்.
காலை11 மணி முதல் மாலை3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் இணை நோய் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் வெளியே சென்றால் பருத்தி ஆடைகள் அணிய அறிவுறுத்தல்.வெயில் காலத்தில் வெண்மை நிற அல்லது வெளிர் நிறப் பருத்தி ஆடைகள் அணியலாம்.கட்டட வேலை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெயிலில் பணியாற்ற வேண்டாம்.தொடர்ச்சியாக 2 நாள்கள் வெயிலில் இருந்தால் வெப்ப வாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.வெப்ப வாதத்தால் சிறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்புள்ளது.பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை
அறையிலிருந்து குளிர்ந்த காற்று வெளியேறாமல் இருக்க அனைத்து ஜன்னல்களையும் கதவுகளையும் கவனமாக மூடவும். உண்மையில், ஏசியுடன் சேர்த்து ஃபேனையும் பயன்படுத்தினால் மின்சாரத்தை சேமிக்க முடியும்.இதற்கு, ஏசியில் வெப்பநிலை 24 முதல் 26 வரை அமைக்கப்பட வேண்டும் மற்றும் மின்விசிறியை குறைந்தபட்ச ரூ வேகத்தில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அறை விரைவில் குளிர்ச்சியடையும். உதாரணமாக,6 மணி நேரம் ஏசிபயன்படுத்தினால்12 யூனிட் செலவாகும்.ஆனால் ஏசியுடன் மின்விசிறியும்பொருத்தினால் 6 யூனிட் மட்டுமே செலவாகும். இதன் மூலம் ஏசி பயன்படுத்துவதற்கான மின்சார செலவு மிச்சமாகும்.
இரவில் ஒளி வீசியவாறு செல்லும் மின்மினி பூச்சிகள் நம்மை கவரும். இணையை தேடுதல், தற்காப்பு, இரை தேடுதலுக்காக இவ்வாறு ஒளியை வெளிப்படுத்துகிறது. இதன் முட்டை, புழு, முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. சாதாரண விளக்குகளில் வெப்பம் இருக்கும். ஆனால் இதன் வெளிச்சத்தில் வெப்பம் கிடையாது. இதன் உடலிலுள்ள 'லுலூசிபெரின்' என்ற பொருள் 'லூசிபெரேஸ்' என்ற என்சைமுடன் இணைந்து வேதிவினை புரிவதால் ஒளி உருவாகிறது. குளிர்காலத்தில் மண்ணுக்கு அடியில் பதுங்கும். இவை மண்புழு, நத்தையை உணவாக உட்கொள்கிறது.
தமிழ்நாட்டில் கேஸ் புக்கிங் தொலைபேசி எண் செயல்படாதது குறித்த பூகார்களை தொடர்ந்து, புதிய முன்பதிவு முறைகளை அறிமுகப்படுத்தியது. Indane. வாட்ஸ் ஆப் மூலம் புக் செய்ய 75888 88824, இந்தியன் ஆயில் ஆப் செயலி மூலம் பதிவு செய்யலாம், 77189 55555 எண்ணுக்கு SMS மூலமாகவும், 84549 55555 எண்ணுக்கு MISSED CALL மூலமாகவும் தினமும் காலை 10 முதல் மாலை 6 மணிவரை புக் செய்யலாம்.
தேர்தலில் வாக்களிப்பவர் வாக்களித்ததை உறுதிசெய்வதற்காக இடது கை ஆள்காட்டி விரலில் மை ஒன்று வைப்பார்கள். அது சில வாரங்கள் அழியாமல் இருக்கும். அது என் உடனடியாக அழிவதில்லை? காரணங்கள் என்ன ?இந்தியாவில்தேர்தல்மை பயன்படுத்தும்முறை 1962ம்ஆண்டுமக்களவைத்தேர்தலின்போதுமுதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது விரலில் மை அழியாமல் இருக்க முக்கிய காரணம்.மையில் உள்ள சில்வர் நைட்ரேட் (AgNO 3) என்ற வேதிப்பொருள் தான், இந்த மையை விரலில்வைக்கும்போது, அது தோலில்உள்ளஉப்புச்சத்துமற்றும்ஈரப்பதத்துடன்வினைபுரிந்து,சூரியஒளி படும்போது, சில்வர் நைட்ரேட் சில்வர் குளோரைடாக மாறி தோலுடன் மிகக் கடுமையாக ஒட்டிக்கொள்கிறது. இந்த சில்வர் குளோரைடு நீரில் கரையாது. சோப்பு, ஆல்கஹால் அல்லது நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு கழுவினாலும் இந்த மை எளிதில் அழியாது. இந்த மை தோலின் மேற்பகுதியில் மட்டும் இல்லாமல், நகம் மற்றும் தோலுக்கு இடையில் உள்ள பகுதியில் ஊடுருவிச் செல்கிறது. நகம் வளர்ந்து பழைய தோல் செல்கள் உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும் வரை சுமார் 2 முதல் 4 வாரங்கள் இந்த மை நீடிக்கும். இந்தியாவில் பயன்படுத்தப்படும் இந்த அழியாத மை, கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள 'மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட்' என்ற அரசு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது..