25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நாட்டின் மதச்சார்பின்மையை  வலிமைப்படுத்தும் அயோத்தி ராமர் கோவில்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நாட்டின் மதச்சார்பின்மையை வலிமைப்படுத்தும் அயோத்தி ராமர் கோவில்

நாட்டின் மதச்சார்பின்மையை அயோத்தி ராமர் கோவில் வலிமைபடுத்தும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த மாதம்22ம் தேதி நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், திரைப்பிரபலங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.ராமர் கோவில் பிரதிஷ்டை நிறைவடைந்ததையடுத்து பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் ராமர் கோவிலில்தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல், சுற்றுலா பயணிகளும், உள்ளூர், வெளியூர் மக்களும் ராமர் கோவிலை பார்வையிட அயோத்தி வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், நாட்டின் மதச்சார்பின்மையை அயோத்தி ராமர் கோவில் வலிமைப்படுத்தும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநில தலைவர் சித்திக் அலிஷிஹப் தங்கல் தெரிவித்துள்ளார். கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பால்படா நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் சித்திக் அலி, அயோத்தியில் கடவுள் ராமர் கோவில் கட்டவேண்டும் என்பது நாட்டின் பெரும்பான்மை மக்களின் கோரிக்கை. அதற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டியதில்லை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையடுத்துராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோர்ட்டு தீர்ப்பின் மற்றொரு பகுதியாக பாபர் மசூதியும் கட்டப்பட உள்ளது. அதில் இருந்து நாம் பின்வாங்க முடியாது. அயோத்தி ராமர் கோவிலும், பாபர் மசூதியும் நாட்டின் மதச்சார்பின்மையை உறுதிபடுத்தும் சிறந்த உதாரணங்கள்.அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News