நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் மோடி.
ஹரியானாவின் ஜிந்த்–சோனிபட் இடையே இயக்கப்படும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில், தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை நோக்கிய முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
0
Leave a Reply