25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நலம் வாழ

Dec 26, 2023

கோதுமை புல்

 கோதுமைப் புல் செடியில் வேர் முதல் முழுமையும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.கோதுமைப் புல்லில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து. கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், அமினோ அமிலங்கள், வைட்டமின் பி1, பி2, பி1,2,3,4,5,6,8,12 சி, வைட்டமின் ஈ. வைட்டமின் கே மற்றும் நியாசின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.உடலில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்கின்ற தன்மை கொண்டது. இதன்மூலம் உடலின் ரத்த சிகப்பணுக்களை அதிகரிக்கும். ஹீமோகுளூாபினை கூட்டும் தன்மை கொண்டது இந்த கோதுமைபுல் நார்ச்சத்து, குளோரோபில், ஆன்டி ஆக்ஸிடன்ட்களின், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ள கோதுமை புல் வீக்கத்தை குறைக்க உதவும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இரத்தப்போக்கு மற்றும் வலியைக் குறைக்கவும், காயத்தை குணப்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும். கோதுமைப் புல் சாறு குடிப்பதன் மூலம் வாய்வழி அழற்சியையும் குறைக்கலாம்.

Dec 23, 2023

பலாப்பழ கொட்டை

பலாப்பழம் இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால் சிலர் பழத்தை அதிகம் சாப்பிட்டு, வயிற்றுப் பொருமலால் அவதிப்படுவர். அதற்கு ஒரு பலாக் கொட்டையை மென்று சாறை மட்டும் விழுங்கினால் உடனே வயிற்றுப் பொருமல் நீங்கும். பலாப்பழ கொட்டைகளை கொண்டு ருசியான உணவு வகைகளை செய்யலாம். பலாப்பழ கொட்டைகளில் உடலுக்கு தேவையான அளவு இரும்புச்சத்து உள்ளது.இதில் துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால் திசுக்களுக்கு வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது. பலாப்பழ கொட்டைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கும். பலாப்பழ கொட்டைகளில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் கண்புரை, மாகுலர் சிதைவு எனும் கண்  பிரச்சனைகளை தடுக்கிறது. புரத உள்ளடக்கம் நிறைந்த இந்த பலாப்பழ கொட்டைகள், தசைகளை வலுவாக்க உதவுகின்றன. பலாப்பழக் கொட்டைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலின் புரதச்சத்து அதிகரிக்கிறது.பலாக் கொட்டைகளை சுட்டும். அவித்தும் சாப்பிட்டால் காரத்தோடு சாப்பிடுவதால் வாயுத் தொல்லைகளை நீக்க உதவும்.பலாப்பழ விதைகளில் காணப்படும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வயதான தோற்றம், சரும சுருக்கங்களுக்கு எதிராக போராடுகிறது. பொலிவான சருமத்தை பெற, பலாப்பழ கொட்டைகளை குளிர்ந்த பாலுடன் அரைத்து சருமத்தில் தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Dec 22, 2023

கற்றாழை பூ

கற்றாழை மிக சிறந்த மூலிக மகத்துவம் நிறைந்த செடி ஆகும். இதில் பூக்கும் பூக்களுக்கும் அதே மருத்துவ குணங்கள் நிரம்பி இருக்கின்றன. கற்றாழை பூ உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் உடற்சூட்டின் காரணமாக பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல், நீர்க்கடுப்பு ஆகிய பிரச்சனைகளை தீர்க்க இதன் பூ உதவி புரிகிறது. இந்த பூவை காய வைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான போது சிறிது நீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் வெள்ளைப்படுதல் அறவே நின்று விடும்.இதில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கிவிடுகிறது. கற்றாழை பூ உடலை சோர்வு அடையாமல் சுறுசுறுப்பாக வைக்கிறது என்றும் பல ஆய்வுகள் கூறுகின்றன.கற்றாழை பூ உடலில் உள்ள நச்சுக்களை மட்டும் அல்ல, காற்றில் உள்ள நச்சுக்களையும் நீக்கும் தன்மை கொண்டது. இது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து ,நம்மை காற்றின் மூலம் பரவும் பல தொற்றுக்களில் இருந்து காக்கிறது.கற்றாழை பூவில் ஆன்டி இன்பிளமேட்டரி தன்மை உள்ளது. இதனால் இது வயிற்றில் ஏற்படும் அல்சர் எனப்படும் புண் மற்றும் கர்ப்பப்பையில் உருவாகும் புண்களை அழிக்கும் தன்மை கொண்டது வயிற்று புண் உள்ளவர்கள் பூவை அரைத்து பாலுடன் வைத்து குடிக்கலாம்.தலையில் உண்டாகும் பொடுகு பேன், ஆகியவற்றை அடியோடு ஒழிக்கிறது. இந்த பூவை அரைத்து தலையில் தேய்த்து கொள்ள தலைமுடியும் நீண்டு வளரும்.

Dec 19, 2023

நன்மைகளை கொண்ட திராட்சை இலைகள்

திராட்சை இலைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. மேலும் இதில் உள்ள மெக்னீசியம் தசைப்பிடிப்பைக் குறைக்க உதவுகிறது.இவை எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கஉதவுகின்றன.திராட்சை இலைகளில் உள்ள கால்சியம் எலும்புகளின் உருவாக்கத்திற்கு அவசியமானது. இந்த சத்து பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் அவற்றை வலுப்படுத்தவும் உதவுகிறது.திராட்சை இலைகளில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன. இது உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்தத்தை திறம்பட செலுத்த உதவுகிறது.திராட்சை இலைகள் குறைந்த அளவு கிளைசெமிக் குறியீட்டை மட்டுமே கொண்டுள்ளன. இவை குளுக்கோஸின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கஉதவுகின்றன.இதில் உள்ள வைட்டமின்C ஃப்ரீ ரேடிக்கல்களின்சேதத்தில் இருந்து உடலை பாதுகாக்கின்றன. இது ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்பட்டு பல்வேறு நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது.திராட்சை இலைகள் புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

Dec 15, 2023

குளிர்கால தொற்று நோய்களை குறைக்கும்  மூலிகைகள்

குளிர்காலம் என்றால் குளிர்ச்சியுடன் சளி பிடிக்கும் ஆபத்து அதிகரிக்கிறது. மாரடைப்பு மற்றும் நீரிழிவு ஆகியவை குளிர்காலத்தில் அதிகரிக்கும்.குளிர்காலத்தில், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உள்ளன. எட்டு முதல் எண்பது வரையிலான அனைவரும் அடிக்கடி நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மூலிகைகளை நம்பினால் நோய் பயம் இருக்காது.துளசி இலைகள் நீண்ட காலமாக உணவாக அறியப்படுகிறது. இதன் சாறு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றிலிருந்து விடுபடுங்கள். இஞ்சியில் ஜிஞ்சரால் என்ற சிறப்பு மூலப்பொருள் உள்ளது. இது வாந்தி பிரச்சனையை அகற்ற உதவுகிறது. மேலும், உணவு விரைவாக ஜீரணமாகும். வேப்ப இலைகளில் பல கலவைகள் காணப்படுகின்றன. வேப்ப இலையின் பண்புகள் மூட்டுவலி பிரச்சனையை நீக்குகிறது. மேலும், வேப்ப இலைகளின் சிறப்புப் பண்பு ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். வேப்ப இலைகள் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் தொற்றுநோயையும் குறைக்கின்றன மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கிறது. அஸ்வகந்தா அந்த ஹார்மோனின் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. இது கவலைப்படும் போக்கையும் குறைக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, அஸ்வகந்தா தூக்கமின்மையை குணப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்ஆகியவை திரிபலா என்று அழைக்கப்படுகின்றன. திரிபலா செரிமானத்திற்கு சிறந்தது. மலச்சிக்கல் பிரச்சனையால் பலர் அவதிப்படுகின்றனர். திரிபலா மலச்சிக்கலைக் குறைப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது.

Dec 12, 2023

கல்லீரலைப் பாதுகாக்க......

கல்லீரல்.எப்போதும் முழு செயல் திறனுடன் இயங்கும் விதத்தில் பாதுகாத்து வந்தாலே அநேக நோய் பாதிப்பில் இருந்து நம்மை பாது காத்திட முடியும்.கல்லீரல் பாதிப்பால் வரும் நோய்களில் முக்கியமானது மஞ்சட் காமாலை. கல்லீரலை எளிதில் பாதிப்படைய செய்யும் மது போன்ற போதை பழக்கங்களை தவிர்த்தல். மற்றும் உணவில் காரம். உப்பு அளவுடன் சேர்த்துக் கொள்வது நலம்.காலை வேளையில் மிதமான சூட்டுடன் உள்ள நீரில்1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது. கல்லீரல் புத்துணர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. கல்லீரலில் சேதமுற்ற செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்க மிகவும் துணை புரியும்.நன்மை செய்யும் உணவுகளைச் சாப்பிட வேண்டும்; கல்லீரலைப் பாதிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். கல்லீரை பாதுகாக்கும் உணவகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்:திராட்சை, இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட் ,விஷ்ணு கிரந்தி போன்றவை கல்லீரலைப் பாதுகாக்க உதவுகிறதாம்

Dec 09, 2023

தேற்றான்கொட்டை

`தேற்றான்கொட்டையைத் தேய்க்க கலங்கிய நீர் தெளிவதைப்போல தலைவி, தலைவனின் அரவணைப்பால் தெளிவு பெற்றாள்' என்பது அந்த பாடல்வரியின் பொருள். தேற்றான் மரம் பளபளப்பாகவும், கரும்பச்சை நிற இலைகளையும், உருண்டையான விதைகளையும் கொண்ட குறு மரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும் சமவெளிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.தேற்றா மரத்தின் விதை தேற்றான் கொட்டை என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த தேற்றான் கொட்டையை கலங்கிய நிலையில் உள்ள நீரில் சிறிது நேரம் ஊறவைத்தால் அந்த நீர் தெளிவாக மாறும்.வீட்டிலுள்ள கலங்கிய நீரானாலும் சரி. நிலக்கரிச் சுரங்கத்தில் கரிப்பொடி கலந்த நீரானாலும் சரி, நீரினைத்தெளியவைக்கும் பண்புடைய கொட்டை இதுவாகும்.இதன் பழம் சளியை போக்கும். வயிற்றுப்போக்கை சரி செய்யும். காயங்களை குணமாக்கும். சிறுநீரக பிரச்சனைகள் சரி செய்யும் மற்றும் கண்ணில் உள்ள கோளாறுகளை நீக்கும்.

Dec 08, 2023

"எப்பொழுதெல்லாம் கைகளை கழுவ வேண்டும்?

காலை எழுந்ததும் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தலாம்.தர்பூசணி,உடலைநீரேற்றமாகவைத்திருக்கும்.ஊறவைத்த சியா விதைகள் உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவலாம்.சமையலறையில் நுழையும்முன்பு,கழிவறை பயன்படுத்திய பின்பு,புகைபிடித்த பின்பு,தும்மல் மற்றும் இருமல்வந்த பின்பு - உணவு சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும்,தலை அல்லது மூக்கில் கை வைத்த பின்பு கைகளை கழுவ  வேண்டும்.

Dec 06, 2023

வெந்தயக் களி

நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மற்றும் சீரண சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் இவை கொழுப்பைக் குறைப்பதோடு பித்தம் மற்றும் கபம் அதிகமாக உள்ள நபர்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் வலியை போக்கவும் வெந்தயம் உதவுகிறது.இது உடலுக்கு குளிர்ச்சியளிக்கும். பருவம் எய்திய பெண்களுக்கு உடல் சூடு காரணமாக வெள்ளைப்படுதல் உண்டாகி உடல் மெலிந்துபோவார்கள். பெண்கள் பருவமடைந்த புதிதில் வெப்பத்தை குறைத்து உடல் மெலிந்து போவதை தடுக்கிறது. அப்படியுள்ளவர்கள் வாரம் இரு முறை வெந்தயக்களி தயார் செய்து சாப்பிட கொடுக்கவேண்டும்.இது உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கவும். எலும்புகள் நன்கு வளரச் செய்யவும் உதவும்.வாய் புண் இருந்தால் விரைவில் குணமடையும். சர்க்கரை நோயை கட்டுபடுத்த உதவுகிறது. இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

Dec 05, 2023

குழந்தைகளுக்கு நல்ல சக்தியை அளிக்கும்.பொட்டுகடலை* 

.பொட்டுகடலைஇந்தியாவில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி ஆகும். இது பொட்டுக்கடலை பொரிகடலை போன்ற பல்வேறு பெயர்களில் இந்தியா முழுவதும் அறியப்படுகிறது மற்ற அனைத்து பருப்பு வகைகளைப் போலவே. இதில் புரதம். நார்ச்சத்து தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது. மேலும் இந்த பருப்பில் கலோரிகள் மிகக் குறைவு: மற்றும் இரும்புச் சத்து அதிகம்.பொட்டுகடலை வளரும் குழந்தைகளுக்கு நல்ல சக்தியை அளிக்கிறது. இது அற்புதமான ஆரோக்கியமான சிறந்த தானியங்களில் ஒன்றாகும். குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருவருக்கும் இது ஒரு நல்ல சிற்றுண்டி ஆகும்..பொட்டுக்கடலையில் ஏராளமான நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் உள்ளன. இவை சீரணிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் உங்களை நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கும். இது செரிமான பிரச்சினைகளை களைவது, உடல் எடையை குறைக்க மற்றும் பல நோய்களை விரட்ட என நிறைய நன்மைகளை தருகிறது100 கிராம் வறுத்த பொட்டுக்கடலையில் 18.64 கி புரோட்டீன், 16.8 கி நார்ச்சத்துக்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. எனவே எடை இழப்புக்காக வறுத்த பொட்டுக்கடலையை உட்கொள்ளுங்கள்.

1 2 ... 11 12 13 14 15 16 17 ... 20 21

AD's



More News