ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 18 அடி கொள்ளளவு கொண்ட நகராட்சி நீர்த் தேக்கம் நிறைந்து இரண்டாவது நீர்த்தேக்கம் 13 அடியை எட்டி உள்ளதால் மக்கள் சுற்றுபகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று முன்தினம் மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததை அடுத்து நீராவி, முள்ளிக்கடவு ஆறு, மாவரசி அம்மன் கோவில், மலட்டாறு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.பாதுகாப்பு கருதி, திருக்கார்த்திகைக்கு ஆற்றில் குளிக்க குவிந்த மக்களுக்கு வனத் துறையினர் தடை விதித்தனர்.
0
Leave a Reply