விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், மி.புளியங்குளம் கிராமத்தில் (15.05.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மி.புளியங்குளம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.அதனடிப்படையில், இன்று மி.புளியங்குளம் கிராமத்தில், ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக நிலம் கையகப்படுத்தப்பட உள்ள இடங்கள் குறித்தும், புளியங்குளம் கண்மாயில், இருந்து நிரம்பி வரும் மறுகால் நீர், ரயில்பாதையை கடந்து செல்ல ஏதுவாக மாற்று ஒடைப்பாதை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வில், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் திரு.பொன்னுத்தம்பி(திருச்சுழி), திருமதி காளீஸ்வரி சமயவேலு (நரிக்குடி), திருச்சுழி வட்டாட்சியர் திரு.சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி பத்மினி, திரு.புகழேந்தி, மண்டல துணை வட்டாட்சியர் திரு.திருக்கண்ணன், வருவாய் ஆய்வாளர் திருமதி மல்லிகா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் (15.05.2025) நடைபெற்றது.இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் இந்த பசலி ஆண்டிற்கான 1434-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 15.05.2025 முதல் 28.05.2025 வரை என 10 வட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.இந்த வருவாய் தீர்வாயத்தின் போது கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா சர்வே எண்கள் மாற்றங்கள் தொடர்பாக வருவாய் தீர்வாயத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்படும்.சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 15.05.2025, 16.05.2025 20.05.2025, 21.05.2025 மற்றும் 22.05.2025 ஆகிய 5 தினங்களும்,விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 ஆகிய 7 தினங்களும்,இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிவகாசி சார் ஆட்சியர் அவர்கள் தலைமையில் 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 தினங்களும்,சாத்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 தினங்களும்,அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 ஆகிய 7 தினங்களும்,காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 ஆகிய 6 தினங்களும்,வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 நாட்களும்,திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி ஆணையர்(கலால்) அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 முதல் 28.05.2025 ஆகிய 8 தினங்களும்,திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025 மற்றும் 20.05.2025 ஆகிய 3 தினங்களும்,வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில், தாட்கோ மாவட்ட மேலாளர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025 மற்றும் 20.05.2025 ஆகிய 3 தினங்களும் நடைபெற்று வருகிறது.பின்னர், உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினார். பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டதை தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர்களின் பதிவேடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் ஃ கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும்.எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி வட்டாட்சியர் திரு.லட்சம், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், (15.05.2025) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் செயலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S, அவர்கள் மற்றும் சீர்மரபினர் வாரியத்துணைத் தலைவர் திரு.இராசா அருண்மொழி அவர்கள் ஆகியோர்கள் முன்னிலையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுத்தலைவர் / விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்காணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் (District Development Coordination and Monitoring Committee(DISHA)) பணியாகும். மத்திய அரசின் திட்டப்பணிகளை செயல்படுத்தும் போது ஏற்படும் இடர்களை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வுகளை கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது.விருதுநகர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (District Development Coordination and Monitoring Committee(DISHA)) கூட்டம் காலாண்டிற்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான முதலாம் காலாண்டிற்கான கூட்டம் இன்று நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம் (PMEGP) , பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் (PMUY), தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பொது விநியோகத் திட்டம், டிஜிட்டல் இந்தியா - பொது தகவல் மையம், நில ஆவணங்கள் கணினி மயமாக்குதல்(DILRMP), தேசிய நெடுஞ்சாலை - மத்திய சாலை திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்(ICDS), மதிய உணவுத் திட்டம், பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா(PMKVY), டிஜிட்டல் இந்தியா - பொது தகவல் மையம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்(MPLADS), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்(MGNREGS), பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம்(PMAY(G), தூய்மை பாரத இயக்கம் (கி) (SBM(G), ஜல் ஜீவன் மிஷன் திட்டம்(JJM), பிரதம மந்திரி கிராம முன்னேற்றத் திட்டம்(PMAY(G), பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்(PMGSY), தீன்தயாள் அந்த்தோயா யோஜனா, தீன்தயாள் உபாத்தயாகிராமின் கௌசல்யா யோஜனா(DDUGKY), தூய்மை பாரத இயக்கம் - மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்(SBM(G), அம்ருத் திட்டம், அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டம் (Urban) (AHP), இராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா(RKVY), பரம்பரக்கத் கிருஷி விகாஸ் யோஜனா(PMVY), பிரதம மந்திரியின் திருத்திய பயிர் காப்பீட்டு திட்டம்(RPMFBY) மண் வள அட்டை இயக்கம்(SHC), Agricultural Technology Management Agency Scheme(ATMA) ,பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத் திட்டம் - ஒரு துளி பல பயிர்(PMKSY-PDMC), தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்(NADP), மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம்(e-NAM),தேசியநலக் குழுமம்(National Health Mission), பிரதம மந்திரி கனிஜ் சேஷ்த்ரா கல்யாண் யோஜனா(PMKKY), மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை(UDID), தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டம்- கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துதல், நோய் கட்டுப்பாட்டு திட்டம் - புருசெல்லோசிஸ் தடுப்பூசி செலுத்துதல், தேசிய செயற்கை முறை கரூவூட்டல் திட்டம், தேசிய கால்நடை இயக்கம் - கால்நடை காப்பீடு திட்டம், பொதுப்பணித் துறை - National Health Mission(NHM), ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக திட்டம், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம் (கதர் கிராமத் தொழில்கள்) உட்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.பின்னர், அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் வேலை உத்தரவு பெற்றவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை தரமாக முடிக்க வேண்டும் எனவும் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும், மேற்கண்ட திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதிவராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் ஆகியவை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நமது மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, நமது மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அனைவரின் ஒத்துழைப்பை நல்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை) மரு.இரா.தண்டபாணி, மாவட்ட நிலை அலுவலர்கள்,அனைத்து நகராட்சித் தலைவர்கள்,பேரூராட்சித் தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளைம் வட்டம், புத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன், I A S, அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் (14.05.2025) நடைபெற்றது.இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா ரூ.2,08,440/- மதிப்பிலும், 20 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளையும், 9 பயனாளிகளுக்கு இணையவழி ஆதிதிராவிடர் பட்டா ரூ.19,69,200/- மதிப்பிலும், 8 பயனாளிகளுக்கு ரூ.9,600/- சமூக பாதுகாப்புத்திட்ட உதவித்தொகைகளையும், உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும், மருத்துவத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.8000/- மதிப்பில் நலத்திட்டங்களையும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.7,536/- மதிப்பிலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.500/- மதிப்பிலும் என மொத்தம் 95 பயனாளிகளுக்கு ரூ.22.03 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். ஏழை எளிய நடுத்தர மக்கள் பல்வேறு சேவைகளை அரசு மூலமாக பெறுவதற்கும், தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதற்கும் புதிய தொழில்களை செய்வதற்கும், அரசினுடைய திட்டங்களை பெறுவதற்கும், இருக்கக்கூடிய வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) திரு.காளிமுத்து, இராஜபாளையம் வட்டாட்சியர் திரு.வடிவேல், பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் வேளாண் உதவி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் இன்று(14.05.2025) வேளாண் இயந்திரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் தனியார் வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.மாவட்டத்தில் விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர்கள் மற்றும் இதர வேளாண் இயந்திரங்களை முறையாகப் பராமரித்தால் தான் அவற்றின் பணித்திறன் மேம்பட்டு, நீண்ட கால பயன்பாட்டிற்கு உழவு பணிகளில் ஈடுபடுத்த இயலும். டிராக்டர்களை பராமரிக்கும் வழிமுறைகளை விவசாயிகள் அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் ஆகும். இதே போன்று, பவர் டில்லர்கள் போன்ற வேளாண் இயந்திரங்களும், விசை களையெடுக்கும் கருவி, ரோட்டவேட்டர் மற்றும் கருவிகளும் விவசாயிகளால் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. இவ்வேளாண் இயந்திரங்கள், கருவிகளை திறம்பட இயக்குதல் மற்றும் பராமரிக்கும் வழிமுறைகளையும் விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.அதனை கருத்தில் கொண்டு வேளாண் இயந்திரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் தனியார் வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு முகாம் நடத்தப்பட்டது.இம்முகாமில் வேளாண்மை பொறியியல் துறையின் கீழ் செயல்படும், வேளாண் பழுதுபார்க்கும் நடமாடும் வாகனத்தின் மூலம் 10 டிராக்டர்கள் பழுதுபார்க்கப்பட்டது. மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பராமரிக்கும் முகாமிற்கு கொண்டு வந்து பயன்பெற்றனர்.மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், டிராக்டர்கள், பவர் டில்லர்கள், விசை களையெடுக்கும் கருவி, ரோட்டவேட்டர், இதர உழவுக் கருவிகளும் மற்றும் புதிய வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு, முறையாகப் பராமரித்தல் குறித்து விவசாயிகளுக்கு 14 காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இம்முகாமில் தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்களின் பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டு, வேளாண் இயந்திர உரிமையாளர்கள், விவசாயிகளிடம் நேரில் கலந்துரையாடி தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். புதிய மற்றும் நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஆகியவை முகாம்களில் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் முக்கியத்துவம், பயன்பாடு, பராமரிப்பு குறித்து அவ்வியந்திர உற்பத்தியாளர்கள் மூலம் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.மேலும், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல், செய்யக் கூடியது மற்றும் செய்யக் கூடாதது, பழுதுகளைக் கண்டறிதல், உதிரிபாகங்கள், மசகு எண்ணெய் மற்றும் உயவுப் பொருட்கள் பயன்பாடு குறித்த தெளிவுரை வேளாண் இயந்திர உரிமையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் தெளிவுரை வழங்கப்பட்டது.இம்முகாமில் கலசலிங்கம் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் படிக்கும் 300 மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளா(விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், செயற்பொறியாளர் திருமதி இந்திரா, வேளாண்மை பொறியியல் துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில்(14.05.2025) பள்ளி மாணவ, மாணவியர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (கட்டுப்பாடு மற்றும் நடைமுறைப்படுத்துதல்) சிறப்பு விதிகளின்படி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்துத்துறை, பள்ளி கல்வித்துறை ஆகிய துறைகள் இணைந்து பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்து வருகிறார்கள்.அதனடிப்படையில், விருதுநகர் போக்குவரத்து வட்டாரத்தில் உள்ள 46 பள்ளிகளைச் சேர்ந்த 249 வாகனங்கள், திருவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 27 பள்ளிகளைச் சேர்ந்த 78 வாகனங்கள், சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 38 பள்ளிகளைச் 160 வாகனங்கள், அருப்புக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 21 பள்ளிகளைச் 167 வாகனங்கள், இராஜபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 45 பள்ளிகளைச் 165 வாகனங்கள் என மொத்தம் 177 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 819 வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.அவற்றில் 569 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதில் 500 பள்ளி வாகனங்கள் முழுத்தகுதி உடையவையாக உள்ளன. 69 பள்ளி வாகனங்கள் முழுத்தகுதி இல்லாத காரணத்தினால் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட வாகனங்களின் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த ஆய்வில் தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் கட்டுப்பாடு மற்றும் நடைமுறை படுத்துதல்) விதிகள் 2012-ன்; படி, தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா, உரிய மருத்துவ உபகரணங்களுடன் கூடிய முதலுதவி பெட்டி பொருத்தப்பட்டுள்ளதா, அவசரகால வழிகள் (Emergency Exit) அமைக்கப்பட்டுள்ளதா, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, உரிய நடத்துநர் உரிமம் பெற்ற உதவியாளர் (Attender), ஓட்டுநருக்கு உதவியாக மாணவ, மாணவியர்கள் உரிய முறையில் வாகனத்தில் ஏறி இறங்கும் பொழுது உதவி புரியும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளாரா, மாணவ, மாணவியர் வாகனத்தின் எளிதாக ஏறும் வகையில் படிக்கட்டின் முதல் படி தரையில் இருந்து 25 செ.மீ இல் இருந்து 30 செ.மீ;-க்குள் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளதா, வாகன ஓட்டுநரின் இருக்கைப்பகுதி தனியாக பிரிக்கப்பட்டுள்ளதா, இருக்கைகள் முறையாக வாகனத்தின் தரைதளத்துடன் Bolts மூலம் பொருத்தப்பட்டுள்ளதா, புத்தகப்பைகள் வைத்திட தனியாக சுயஉமள அமைக்கப்பட்டுள்ளதா, வாகனத்தின் தரைத்தளம் முழுமையாக ஒன்றாக நல்ல தரத்துடன் பொருத்தப்பட்டுள்ளதா, வாகனத்தின் பக்கவாட்டு ஜன்னல்கள் மாணவ, மாணவியர் கரம், சிரம் நீட்டாதவாறு, மூன்று நீளமாக கிடைமட்ட கம்பிகளால் பொருத்தப்பட்டு பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்தும், போதிய பராமரிப்பு உள்ளதா போன்றவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.பள்ளி வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விபத்தில்லாமல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பள்ளி குழந்தைகளை பாதுகாப்பாக வாகனங்களில் அழைத்து சென்று வர வேண்டும் என பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப.,அவர்கள் அறிவுறித்தினார்.மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது மருத்துவ முகாம் மற்றும்; வாசன் கண் மருத்துவமனை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அதில், பள்ளி வாகனங்களுடைய ஓட்டுநர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இந்த ஆய்வில் கலந்து கொண்ட ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மருத்துவர்கள் இலவசமாக இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு பரிசோதிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் அலுவலர்கள் மூலம் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தீயணைப்புத் துறை அலுவலர்கள் மூலம் அவசரகால தீ தடுக்கும் முறைகள் மற்றும் ஆபத்து ஏற்படும் போது செய்ய வேண்டியவைகள் என அனைத்தும் செயல்முறை விளக்கம் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.இந்த ஆய்வின் போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அசோகன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு.சந்திரசேகர், மாவட்ட கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) திரு.சுப்புராஜ், துணை காவல் கண்காணிப்பாளர் திரு.யோகேஷ்வரன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திரு.மாணிக்கம்(விருதுநகர்), திரு.சந்திரசேகர்(திருவில்லிபுத்தூர்), வேலுமணி(சிவகாசி), வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.சிவகுமார்(சாத்தூர்), திரு.கனகராஜ்(அருப்புக்கோட்டை), மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திரு.செல்வராஜ், திருமதி செண்பகவல்லி, திருமதி பூர்ணலதா, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கம் மற்றும் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில்; இன்று(14.05.2025) நான் முதல்வன்; திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கையை 100 சதவிகிதம் உறுதி செய்யும் வகையில் கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை தெரிந்து கொள்வதற்காக, குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழிகாட்டக்கூடிய பொறுப்பாசிரியர்கள் அனைவரும் உலக அளவில் இருக்கக்கூடிய சிறந்த உயர் கல்வி வாய்ப்புகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் கல்லூரிகள் சேர்ந்து உயர்கல்விகள் பெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் நோக்கத்திலும் கல்லூரி கனவு என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது.பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, வாழ்க்கையின் மிக முக்கியமான அடுத்த கட்டத்திற்கு நுழைகிறீர்கள். கல்லூரி படிப்பு என்பது இன்றைக்கும் பலருக்கு ஒரு கனவாகவே இருக்கிறது.இந்திய அளவில் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை சுமார் 32 விழுக்காடு ஆக இருக்கிறது. இதுவே தமிழ்நாட்டில் ஏறத்தாழ 55 சதவீதமாக உள்ளது. நமது விருதுநகர் மாவட்டத்தில் கடந்தாண்டு இந்தியாவிலேயே அதிகமாக 95 சதவீதமானவர்களுக்கு மேல் உயர்கல்வியில் சேர்ந்திருக்கக்கூடிய ஒரு நிலையை எட்டி இருக்கிறோம்.இன்று பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறையாக கல்லூரிக்கு செல்கிறார்கள். கடந்த தலைமுறையினர்களில் கல்லூரி படிப்பை முடிப்பது என்பதை பெரிய கனவாக இருந்தது. அதனால் உயர்கல்விக்கு செல்லக்கூடிய வாய்ப்பு என்பது இந்த தலைமுறையினர்களுக்குதான் முதன் முதலாக கிடைத்திருக்கிறது. இது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்பது இப்பொழுது நமக்கு புரியாது.நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழிக்கேற்ப எந்த இடத்தில் படிக்கவில்லை அல்லது குறைவாக படித்திருக்கிறோம் என்று எப்போது ஒரு இடத்தில் நாம் நிராகரிக்கப்படுகின்ற பொழுதுதான், படிப்பினுடைய அருமை தெரியும். அந்த நிகழ்ச்சி நடக்கின்ற பொழுது 5 முதல் 10 ஆண்டுகள் தள்ளி இருப்போம். திரும்பி பார்த்தால் மீண்டும் படிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும்.எனவே வாய்ப்புகள் என்பது இயல்பாக வருகின்ற பொழுது அதனுடைய முக்கியத்துவத்தை நாம் ஒருபோதும் உணர்வதில்லை. பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்கிறோம் என்ற மிகப் பெரிய வாய்ப்பை நீங்கள் உணர்ந்து படிக்க வேண்டும்.இயல்பாக கிடைக்கக்கூடிய எந்த ஒன்றும், இயல்பாக கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் நமக்கு எவ்வளவு முக்கியமானது என்பது ஒருபோதும் உணர்வதில்லை. நீங்கள் அப்படி இருக்கக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில்தான் இந்த நிகழ்ச்சி.கல்லூரிக்கு செல்லக்கூடியது என்பது மிகப்பெரிய வாய்ப்பு. எல்லோரும் நிச்சயமாக உயர் கல்வி படிக்க வேண்டும். உயர் கல்வி படித்தால் நிறைய செலவு ஆகும் என்ற மனநிலை இருக்கிறது.அரசினுடைய மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றான 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் படிக்கக்கூடிய மாணவ மாணவியர்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் உயர்கல்வி முடிக்கின்ற வரை மாதந்தோறும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு சமூகத்தின மாணவர்களுக்கும் அதற்குரிய கல்வி உதவி தொகை திட்டங்களும் இருக்கின்றன.நமது மாவட்டத்தில் விருதுநகர் கல்வி அறக்கட்டளை என்ற அறக்கட்டளையின் மூலம் எந்த உதவியும் கிடைக்க முடியாத வறுமை நிலையில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறோம். இது போல நிறைய தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள், உதவி மையங்கள் மாணவர்களின் கல்விக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இயங்குகின்றனர்.இதை நீங்கள் கொஞ்சம் தேடிப் பார்த்தீர்கள் என்றால், உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. நமது மாவட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.தற்போது உயர் கல்விக்கு இவ்வளவு வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த வாய்ப்புகள் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பாக இல்லை. எனவே உங்கள் காலகட்டங்களில் இருக்கும் வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் இருக்கக்கூடிய பேரா மெடிக்கல் துணை மருத்துவ படிப்புகள், சான்றிதழ் படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் மட்டுமே படிக்க வேண்டும்.நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. கொஞ்சம் பொறுமையாக இருந்து நமக்கான வாய்ப்புகளை எவ்வாறு பெற முடியும் என்பதை யோசித்தீர்கள் என்றால் தமிழ்நாடு முழுவதும் சிறந்த வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 100 சதவிகிதம் நிச்சயமாக அனைவரும் கல்லூரியில் சேர வேண்டும். நமது மாவட்டத்தில் மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட கல்வி உதவி மையம் செயல்பட்டு வருகிறது.எனவே, மாணவ, மாணவிகள் அரசு தங்களுக்காக செயல்படுத்தும் திட்டத்தின் நோக்கத்தினை புரிந்துகொண்டு, நல்ல கல்வியறிவு பெற்று, தங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து நன்கு அறிந்துகொண்டு பயணிக்கும் போது நிச்சயமாக வெற்றியடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் உலகளாவிய வாய்ப்புகள், படிப்புகள், கல்லூரிகள்;, வேலை வாய்ப்புகள் குறித்து விரிவாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட அரசுக் கல்லூரியில் 650 மாணவர்கள், கலசலிங்கம் பல்கலைகழகத்தில் 550 மாணவர்களும் என பல்வேறு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 1434-ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) 2025-ம் ஆண்டு மே 15-ந் தேதி முதல் மே 16-ந் தேதி வரை, மே 20-ந் தேதி முதல் மே 22-ந் தேதி வரை மற்றும் மே 27-ந் தேதி முதல் மே 28-ந் தேதி வரை உள்ள நாட்களில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடத்தப்பட உள்ளது.அதன்படி, சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 15.05.2025, 16.05.2025 17.05.2025, 21.05.2025 மற்றும் 22.05.2025 ஆகிய 5 தினங்களும்,விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 ஆகிய 7 தினங்களும்,இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிவகாசி சார் ஆட்சியர் அவர்கள் தலைமையில்15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 தினங்களும்,சாத்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 தினங்களும்,அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 ஆகிய 7 தினங்களும்,காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்கள் தலைமையில்,15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 ஆகிய 6 தினங்களும்,வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், விருதுநகர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அவர்கள் தலைமையில்,15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 நாட்களும்,திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி ஆணையர்(கலால்) அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 முதல் 28.05.2025 ஆகிய 8 தினங்களும்,திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025 மற்றும் 20.05.2025 ஆகிய 3 தினங்களும்,வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில், தாட்கோ மாவட்ட மேலாளர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025 மற்றும் 20.05.2025 ஆகிய 3 தினங்களும் நடைபெறவுள்ளது.எனவே, வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறும் தினங்களில் தொடர்புடைய கிராம நில உடைமைதாரர்கள் நிலப்பதிவு சம்பந்தப்பட்ட மனுக்கள், பட்டா மாறுதல், நில ஒப்படை, நில நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் பொதுமக்கள் நேரில் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பேருந்து நிலையத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் குழந்தைகளுக்கு எதிரான புகார்களை தெரிவிக்கும் 1098 குழந்தைகள் உதவி மையத்தினை(Child Help Desk) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று(13.05.2025) திறந்து வைத்தார்.குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலமாக குழந்தைகள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் மாவட்ட குழந்தைகள் உதவி மையம் 1098 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் 01.08.2023 அன்று முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சிவகாசி பேருந்து நிலையத்தில் குழந்தைகளுக்கான உதவி மையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த மையம் மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக குழந்தைகள் உதவி மையம் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.குழந்தை திருமணம், குழந்தைத்தொழிலாளர், பாலியல் வன்கொடுமை, பள்ளி குழந்தைகள் பள்ளி இடைநிற்றல், போதை பழக்கத்திற்கு அடிமையான குழந்தைகள், வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகள் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக கூடிய சூழ்நிலையில் உள்ள குழந்தைகள், கல்வி உதவி தேவைப்படும் குழந்தைகள் உள்ளிட்ட குழந்தைகள் நலம் சார்ந்த புகார்களை அல்லது உதவிகளை குழந்தைகளுக்கான உதவி எண் 1098 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.அவ்வாறு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், இம்மையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அழைப்பு வரப்பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட குழந்தையை நேரில் சந்தித்து, இம்மைய பணியாளர்கள் தேவையான உதவிகளை மேற்கொள்வார்கள்.எனவே, பொதுமக்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கான உதவிகளுக்கு இம்மையத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி மாநகராட்சி ஆணையர் திரு.சரவணன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி மற்றும் சிவகாசி வருவாய் வட்டாட்சியர் திரு.லட்சம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் அரசு 2025 ஆம் ஆண்டு முதல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (SC/ST) தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம் (ANNAL AMBEDKAR BUSINESS CHAMPIONS SHCEMES (AABCS)) என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்கள் (SC/ST) தொழில் தொடங்கும் ஆரம்ப அமைவு கட்டத்தில் எதிர்கொள்ளும் நிதிச்சுமையை தணிப்பது மற்றும் தேவையான வளங்களைப் பெறுவதை எளிதாக்குவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். மேலும் தொழில் முனைவோர்களின் ஒட்டுமொத்த செலவை கணிசமாக குறைத்து தொழில் முனைவோர்கள் தங்கள் வணிகத்தில் ஆர்வமுடன் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் இத்திட்டம் பேருதவியாக இருக்கும்.இத்திட்டத்தில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கான கடனுக்கு 35 சதவீத மூலதன மானியமும் 6 சதவீத வட்டி மானியமும் வழங்க வழிவகை செய்யப்பட்டள்ளது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். நேரடி விவசாயம் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ள இத்திட்டத்தில் வழிவகை இல்லை.இத்திட்டத்தில் புதிய தொழில் ஆரம்பிக்கவும் மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்படும் தொழில்களின் விரிவாக்கத்திற்கும் மானிய கடனுதவி வழங்கப்படும். வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு இயந்திரங்கள், நிலம், சோதனைக்கருவிகள், மற்றும் கணிணி சார்ந்த பொருட்கள் வாங்கவும் இத்திட்டத்தில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். இதுவரை இத்திட்டத்தில் 69 பயனாளிகளுக்கு ரூ.458.37 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.மேற்காணும் திட்டத்தில் பயன்பெற திட்ட அறிக்கை, விலைப்பட்டியல் மற்றும் உரிய ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in/aabcs என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பித்து பயனடையுமாறு விருதநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பொது மேலாளர் அலுவலகம் மாவட்ட தொழில் மையத்தினை நேரிலோ அல்லது 89255-34036 என்ற தொலைபேசியிலோ கூடுதல் விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.