25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Oct 18, 2024

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், ஆவியூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி செயலக கட்டடத்தை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், ஆவியூர் கிராமத்தில் (17.10.2024)  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், ரூ.42.65 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி செயலக கட்டடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை செயல்படுத்தி வருகிறார்கள்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு நிதித்திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது.அதுமட்டும்மல்லாமல், பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.அதன்படி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், ஆவியூர் கிராமத்தில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், ரூ.42.65 இலட்சம் மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி செயலக கட்டடம் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது என  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் திருமதி முத்துமாரி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய குழுத் துணைத்தலைவர் திரு.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.தங்கதமிழ்வாணன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.சிதம்பரபாரதி, ஆவியூர் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி தனலெட்சுமி ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி வாசுகி மற்றும் திருமதி உஷா, முக்கிய பிரமுகர்கள் திரு.கண்ணன், திரு.செல்லம், உட்பட  உதவி பொறியாளர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Oct 18, 2024

சிவகாசி ஊராட்சி ஒன்றியம், அனுப்பங்குளம் மற்றும் செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில், கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அமைச்சர்  அவர்கள் திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், அனுப்பங்குளம் மற்றும் செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில், ரூ.1.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி.சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர்கள் முன்னிலையில்,  (17.10.2024) நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்.அதன்படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியம், அனுப்பங்குளம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், ரூ.1.35 கோடி மதிப்பில் 6 தொகுப்புகளாக கட்டப்பட்டுள்ள 24 வீடுகளையும், செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், ரூ.44.88 இலட்சம் மதிப்பில் 2 தொகுப்புகளாக கட்டப்பட்டுள்ள 8 வீடுகளையும் என மொத்தம் ரூ.1.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்பு வீடுகள்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வரும்  இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பான கவுரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தருவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் கட்டித் தரப்படும். முகாம்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். ஆண்டுதோறும் இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பொறியியல்/வேளாண்/முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவியருக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் வழங்குதல், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதி, மாதாந்திர பணக்கொடை உயர்வு, இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லாமல் அரிசி, விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் போன்ற சுமார் 300 கோடிக்கு மேல் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்கள். இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய நம் உறவுகளை முகாம்களில் தங்கவைத்து, அகதிகள் முகாம் என்று இருந்ததை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்தவர்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். முகாம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததோடு, பத்திரிகையில் இலங்கை தமிழர் முகாம் சம்மந்தமாக ஒரு கட்டுரை வந்ததை படித்த முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்கள், உடனடியாக அமைச்சர்களை தமிழகத்தில் உள்ள முகாம்களுக்கு ஆய்வு செய்ய அனுப்பி அவர்களின் குறைகளை களைந்தார். அதன் வழிவந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று மறுவாழ்வு முகாம்களில் நிரந்தர வீடுகட்டவும் ஆணையிட்டுள்ளார்.மேலும் விருதுநகர் மாவட்டத்தில், உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கைத்தமிழர்களுக்கு பல்வேறு கட்டங்களாக குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டு  வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று அனுப்பங்குளம் மற்றும் செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில், உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்பு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இலங்கைத் தமிழர் வாழக்கூடிய இந்த மறுவாழ்வு முகாமில், இருக்கக்கூடிய பழைய குடியிருப்புகளை எல்லாம் அகற்றி விட்டு, அவர்களுக்கு புதிய குடியிருப்புகளை வழங்கக்கூடிய இந்த திட்டம்,  தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளில் நமது மாவட்டத்திற்கு மூன்று கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது.இந்த மூன்று கட்டங்களில் ஏறத்தாழ 850 வீடுகளை நமது மாவட்டத்தில் மொத்தம் எட்டு இடங்களில் கட்டப்பட்டு வருகிறது. இந்த எட்டு இடங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் சுமார் 200 வீடுகள் வரை பயனாளிகளுக்கு பல்வேறு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளன.மேலும் பணிகள் நடைபெற்று இருக்கக்கூடிய ஏறத்தாழ 600 வீடுகள் வரக்கூடிய சில மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு, உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.இந்த திட்டத்தின் மூலமாக ஏறக்குறைய 900 குடும்பங்கள் பயனடையக்கூடிய வகையில் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வீடுகளை சுற்றி இருக்கக்கூடிய உட்கட்டமைப்பு வசதிகளான சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவைகளை ஊரக வளர்ச்சித் துறையின் திட்டங்களோடு இணைந்து முழுமையாக செயல்படுத்துவதன் மூலமாக, அந்தப் பகுதிகளில் வீடுகளாக மட்டுமில்லாமல் அனைத்து வசதிகளும் இருக்கக்கூடிய  குடியிருப்பு பகுதிகளாக உருவாக்கப்படுவது தான் இந்த திட்டத்தினுடைய மைய நோக்கம்.அந்த நோக்கத்தை நிறைவேற்றக் கூடிய வகையில் நமது துறை சார்ந்த அலுவலர்கள் நிறைவேற்றி கொண்டிருக்கிறார்கள். எனவே மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருக்க கூடிய மக்கள் எல்லாம் புத்துணர்வு பெறுவதற்கும், புது வாழ்வு பெறுவதற்கும் இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி முத்துலட்சுமி, சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திரு.விவேகன்ராஜ், சிவகாசி வட்டாட்சியர் திரு.லட்சம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

Oct 18, 2024

சிவகாசி மாநகராட்சி 27-வது வார்டு தென்றல் நகரில் மேம்பாடு பணிகள் முடிக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காவினைஅமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி 27-வது  வார்டு தென்றல் நகரில்  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூ.34 இலட்சம் மதிப்பில் மேம்பாடு பணிகள் முடிக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி.சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் (17.10.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராமப்புறங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மூலம் அடிப்படை தேவைகளான குடிநீர் இணைப்புகள், சுகாதாரம், உள்புறச் சாலைகள், தெருவிளக்குகள், பூங்காக்கள், சமுதாய கூடங்கள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.அதன்படி, சிவகாசி மாநகராட்சி நூற்றாண்டு விழா திட்டம் 2020-2021-ன் கீழ் ரூ.1.66 கோடி மதிப்பீட்டில் ஏற்கனவே 4 பூங்காக்கள் அமைக்கும் பணி முடிவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து இன்று, சிவகாசி மாநகராட்சி 27-வது  வார்டு தென்றல் நகரில்  ரூ.34 இலட்சம் மதிப்பில் மேம்பாடு பணிகள் முடிக்கப்பட்டு, ஆக மொத்தம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 5 சிறுவர் பூங்காக்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த பூங்காவை சுற்றி நடைபாதை, மின் விளக்குகள், இருக்கைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், அலங்காரச் செடிகள், தண்ணீர் வசதி, சுற்றுச் சுவர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் காலை, மாலை வேளைகளில் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்வதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும் ஏற்றதாக அமையும் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி முத்துலட்சுமி, சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திரு.விவேகன்ராஜ், சிவகாசி மாநகராட்சி துணை மேயர் திருமதி விக்னேஷ் பிரியா, மாநகர பொறியாளர் திரு.இராமசாமி, மாமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Oct 18, 2024

தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், (17.10.2024) மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு குருதி பரிமாற்று குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பாக தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு, அதிக முறை ரத்ததான முகாம்களை நடத்தி கொடுத்த 3 கல்லூரி மற்றும் 3 தன்னார்வ அமைப்புகளுக்கு கேடயங்களையும், 164 இரத்ததான முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கி கௌரவித்தார்.இரத்தம் உயிரின் நாடி என்பதால், இரத்த தானம் செய்வது விலைமதிப்பற்ற மனித உயிரை காப்பாற்றும் புனிதமான   செயலாகும்.  இத்தகைய  முக்கியத்துவம்  வாய்ந்த  இரத்த  தானம்  குறித்த  விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், இரத்த தானத்தின் அவசியத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து, தமிழ்நாட்டில் இரத்த  தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.மேலும், ஆண்டுதோறும் இரத்த  கொடையாளர்கள், சிறப்பாக பணியாற்றும் இரத்ததான முகாம் அமைப்பாளர்கள், அரசு இரத்த வங்கி ஊழியர்கள்ஆகியோருக்குதமிழ்நாடுஅரசுபாராட்டுச்சான்றிதழ்களும்,பதக்கங்களும்வழங்கிகௌரவித்துவருகிறது.அதனடிப்படையில், தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு, அதிக முறை ரத்ததான முகாம்களை நடத்தி கொடுத்த மெப்கோ பொறியியல் கல்லூரி, கலசலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி ஆகிய கல்லூரிகள், சிவகாசி நண்பர்கள் இரத்ததான குழு, விருதுநகர் ஐயப்பசாமி மண்டல பூஜை அன்னதான குழு மற்றும் சிவகாசி அன்புத்தடம் அறக்கட்டளை ஆகிய தன்னார்வ அமைப்புகளுக்கு கேடயங்களும், இரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.  சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முதல் 350 மில்லிலிட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். எனவே, பொதுமக்கள் பெருமளவில் இரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில்  மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.யசோதாமணி,  அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் மரு.அனிதா மோகன், மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் மரு.சாந்தினி கில்டா, உட்பட இரத்த வங்கி மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள், இரத்த தான முகாம் அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Oct 18, 2024

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காத்தல் மற்றும் குறைத்தல் மாதிரி ஒத்திகைப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (17.10.2024) தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையின் மூலம் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காத்தல் மற்றும் குறைத்தல் மாதிரி ஒத்திகைப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் துவக்கி வைத்தார்.அனைவரும் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நம்மையும், மற்றவர்களையும் எப்படி எல்லாம் காத்துக்கொள்வது போன்ற வழிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் பேரிடர் ஒத்திகை பயிற்சி நடத்தப்படுகிறது.  இயற்கை சீற்றங்களின் போது ஏற்படும் அழிவினைக் குறைக்க நம்மால் இயலும். இதற்கு பலதுறைகள் பலவிதமான யுத்திகளை உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றன. இதில் தலையாய கடமை வகிப்பது தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை.எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்கள் அதிகமான மழைபெய்யும் போது அதிகமாக தண்ணீர் செல்லும் ஓடைகளையோ, நதிகளையோ பாதுகாப்பாக கடக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தண்ணீர் அதிகமாக செல்லும் போது ஓடை மற்றும் நதிகளை கடந்து செல்லக்கூடாது. மழைகாலங்களில் காற்றினால் மின்கம்பிகள் அருந்து விழுந்திருந்தால் அதன் அருகில் செல்லக்கூடாது. உடனடியாக இது குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மழைகாலங்களில் மின்கம்பங்கள் அருகே நிற்க கூடாது. மின்கம்பங்கள் மீது சாய்ந்தோ அல்லது அதனை தொட்டுப்பார்க்கவோ கூடாது. மழைகாலங்களில் மிகவும் பழைமையான கட்டிடங்களில் மழைக்காக ஒதுங்கக்கூடாது. அவ்வாறு ஒதுங்கும் போது எந்த நேரத்திலும் கட்டிடங்கள் சரிந்து விழக்கூடும் எனவும் இதன் காரணமாக ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. பேரிடர் காலங்கள் மற்றும் விபத்துக்களில் தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களைக் கொண்டு எவ்வாறு பணிபுரிந்து வருகின்றோம் என்றும், பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும், மீட்கப்பட்ட அவர்களை எவ்வாறு தூக்கி சென்று ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கலாம் என்றும், தீ விபத்தின் வகைகள் குறித்தும், அதனை ஆரம்ப நிலையில் தடுக்கும் முறைகள் குறித்தும், பெரும் தீ விபத்துக்கள் மற்றும் ஆயில் தீ விபத்துக்களை எவ்வாறு தீயணைப்பு ஊர்திகளை கொண்டு எளிதில் அணைக்கலாம் எனவும் விளக்க உரை மற்றும் செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.மேலும், அவசர கால மீட்பு ஊர்தியில் உள்ள மீட்பு கருவிகளான மகிட்டா ஷா (அ) பவர் ஷா கட்டர் ரூ ஸ்பிரிட்டர், அயன் கட்டர், கான்கிரீட் கட்டர், ஹைட்ராலிக் கட்டர் அன்டு ஸ்பிரட்டர், மேனுவல் கட்டர், ஹைட்ராலிக் ஜாக்கி, ஏர் லிப்டிங் பேக், டெலஸ்கோபி லேடார், அஸ்காலைட், டோர் ஓப்பனர், மூச்சுக்கருவி, பி.பி. சூட், மிதவை படகு(இரப்பர் படகு), தீயணைப்பான்கள் போன்ற செயல்படும் விதங்கள் பற்றியும்,விபத்தின் போது பாதிக்கப்பட்ட நபர்களை மீட்க பயன்படுத்தும் இரண்டு கை முறை, மூன்று கை முறை, நான்கு கை முறை, உப்பு மூட்டை முறை, முதுகுக்குப் பின் முதுகு வைத்து தூக்குதல், குழந்தை தூக்குதல் முறை, உட்காரும் சேர் மூலம் மீட்டல், போர்வை மூலம் மீட்டல், தீயணைப்பாளர் தூக்கி போன்ற மீட்பு முறைகள் பற்றியும் செய்து காண்பிக்கப்பட்டது. இது போன்ற செயல்முறை பயிற்சிகளில் நாம் பங்குபெற்றதன் மூலம் ஆபத்து காலங்களில் நாமும் மீட்ப்புப்பணித்துறையினருடன் இணைந்து செயல்பட உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலர், தீயணைப்பு பயிற்சியாளர்கள், பணியாளர்கள் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

Oct 18, 2024

சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து, அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் (17.10.2024) நகராட்சி நிர்வாகப் பணிகளின் முன்னேற்றம், நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அதனுடைய தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து தொடர்புடைய நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் ஆய்வு செய்து, அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

Oct 18, 2024

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆலங்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் ஊராட்சிப்பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு தூய்மைப் பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்களிடம் உரையாற்றினார்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டத்தில்உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான  அலுவலர்கள் மேற்கொண்டு வரும் கள ஆய்வின்  இரண்டாம் நாளான (17.10.2024) வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆலங்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் I. A. S. அவர்கள் ஊராட்சிப்பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு தூய்மைப் பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்களிடம் உரையாற்றினார்.

Oct 18, 2024

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்- பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நேரடி சேர்க்கை 18.10.2024 அன்று வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை 18.10.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தில்  கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (COPA)  மற்றும் நில அளவையர் (SURVEYOR) ஆகிய பிரிவுகளில் காலி இடங்கள் உள்ளது.இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சி முடிந்தவுடன் தனியார் மற்றும் அரசு துறைகளில் அப்ரண்டீஸ் மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விருப்பமுள்ள மாணவ மாணவிகள் தங்களது கல்வி மற்றும் சாதி அசல் சான்றிதழ்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் ரூ.50/- பயிற்சியின்போது மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750/- கட்டணமில்லா பேருந்து சலுகை விலையில்லா சீருடை (தையற்கூலியுடன்) விலையில்லா மிதிவண்டி, விலையில்லா வரைபடக்கருவிகள், விலையில்லா மூடுகாலணிகள், அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழும் மாதந்தோறும் கூடுதலாக ரூ.1000/- வழங்கப்படும்.எனவே, திருச்சுழி சுற்று வட்டாரங்களில் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் விபரங்களுக்கு 98421-78028, 70100-40810, 95669-29663 என்ற தொலைபேசி  எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

Oct 18, 2024

சாட்சியாரத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் பணிகளை ஆய்வு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், சாட்சியாரத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி.சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் (17.10.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திரு.விவேகன்ராஜ் அவர்கள் உள்ளார்.

Oct 17, 2024

வெம்பக்கோட்டை வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு செய்தார். ---

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்ட முகாமானது 16.10.2024 இன்று காலை 9 மணி முதல் மறுநாள் 17.10.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமின் கீழ், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதனடிப்படையில், வெம்பக்கோட்டை அரசு துணை சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, அங்கு சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.பின்னர், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு குறித்து ஆய்வு செய்து, அங்குள்ள ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி தரம், கற்பிக்கும் முறைகள், வருகைப்பதிவேடு, உள்ளிட்டவைக் குறித்து கேட்டறிந்தார்.மேலும், வெம்பக்கோட்டை புள்ளியல் துறை அலுவலகத்தினை பார்வையிட்டு, அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள், கோப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.பின்னர், வெம்பக்கோட்டை அணையின் கரைப்பகுதியில் பனை விதைகள் நடும்  பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.தொடர்ந்து, வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு ஊராட்சியில் 21 வீடுகள் ரூ.1.28 கோடி மதிப்பில் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டு வருவதையும், ஆலங்குளம் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், ஆலங்குளம் ஏ.ரெ.இரா நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி தரம், கற்பிக்கும் முறைகள், வருகைப்பதிவேடு, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவைக் குறித்து கேட்டறிந்தார்.அதனைத்தொடர்ந்து, ஆலங்குளத்தில் உள்ள நியாய விலைக்கடையில் பயன்பெறும் மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, பொருட்களின் இருப்பு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி, பருப்புகள் மற்றும் அவைகளின் தரம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.பின்னர், அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S, அவர்கள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, கோட்டாட்சியர் திரு.சிவகுமார், வட்டாட்சியர் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 69 70

AD's



More News