25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 17, 2026

விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக திரு.அ.கொ.நாகராஜபூபதி அவர்கள் (16.06.2026) பொறுப்பேற்றுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக திரு.அ.கொ.நாகராஜபூபதி அவர்கள் (16.06.2026) பொறுப்பேற்றுக் கொண்டார்.

Jun 17, 2026

சிவகாசி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள்  (16.06.2026) அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.சிவகாசி மாநகராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.14.97 கோடி மதிப்பீட்டில் இரு தளங்களுடன் கூடிய மாநாட்டு அரங்கம் அமைக்கும் கட்டுமான பணிகளையும்,2022-2023 சிறப்பு நிதியின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், மாநகராட்சி அலுவலகக் கட்டுமான பணிகளையும்,6-வது மாநில நிதிக் குழு (SFC) நிதியின் கீழ், ரூ.3.7 கோடி மதிப்பீட்டில் சிவகாசி மாநகராட்சியில் புதிய அலுவலகக் கட்டிடத்திற்கான கூடுதல் கட்டுமான பணிகளையும்,15-வது மத்திய நிதிக் குழு (CFC) நிபந்தனையற்ற மானியத்தின் கீழ், ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் சிவகாசி மாநகராட்சி அலுவலகம் மற்றும் வணிக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர் பணிகளையும்,சிவகாசி மாநகராட்சியில் செயல்பட்டு வரும் நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவேடுகள் மற்றும் கோப்புகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன், மாநகர நகர் சுகாதார அலுவலர் திருமதி ஸ்ரீதேவி, மாநகராட்சி பணியாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 17, 2026

1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மூன்றாம் நாளான இன்று வருவாய்த் தீர்வாய அலுவலர் ,மாவட்ட ஆட்சித்தலைவர் ,அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் 1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) மூன்றாம் நாளான இன்று (16.06.2026) வருவாய்த் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ம் ஆண்டு ஜூன் 12 தொடங்கி, ஜூன்16 முதல் ஜூன் 19 வரை மற்றும் ஜூன் 23 முதல் ஜூன் 25 வரை ஆகிய நாட்களில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் சாத்தூரில் நடைபெற்ற இத்தீர்வாயத்தில் 17-பயனாளிகளுக்கு கணினி வழி இணைய பட்டாக்களையும், 4-கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், மாண்புமிகு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மரணமடைந்த 3-நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.22,500/- வீதம் மொத்தம் ரூ.67,500/-க்கான உதவித் தொகையினையும், 2-பயனாளிகளுக்கு அடங்கல் நகலினையும், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், ஜமாபந்தியின் முதல் நாளன்று மின்கலன் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளி நபரின் கோரிக்கை மனுவினை ஏற்று ரூ.78,000/-மதிப்பிலான மின்கலன் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டியினையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.இந்த வருவாய் தீர்வாயத்தின் போது கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா சர்வே எண்கள் மாற்றங்கள் தொடர்பாக வருவாய் தீர்வாயத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்படும்.அதன்படி, சாத்தூர் வட்டத்தில், ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையிலும், சிவகாசியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையிலும், திருவில்லிபுத்தூரில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 3 நாட்கள் சிவகாசி சார் ஆட்சியர் அவர்கள் தலைமையிலும், விருதுநகரில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 7 நாட்கள் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையிலும்,காரியாபட்டியில்       ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 6 நாட்கள் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையிலும்,அருப்புக்கோட்டையில்       ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 7 நாட்கள் உதவி ஆணையர் (கலால்), விருதுநகர் அவர்கள் தலைமையிலும், இராஜபாளையத்தில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்     அவர்கள் தலைமையிலும்,வெம்பக்கோட்டையில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) அவர்கள் தலைமையிலும்,திருச்சுழியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 8 நாட்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்கள் தலைமையிலும்,வத்திராயிருப்பில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 3 நாட்கள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்கள் தலைமையிலும், நடைபெற்று வருகிறது.இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் / கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.  மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும்.எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில், சாத்தூர் நகராட்சி ஆணையாளர் திருமதி ஜெகதீஸ்வரி, வட்டாட்சியர் திரு.மு.வடிவேல், வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 16, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (15.06.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.97 இலட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களை  மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.கு.மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 16, 2026

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.06.2026 அன்று நடைபெறவுள்ளது.

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்; வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 19.06.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், விருதுநகர் சூலக்கரையில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் RELIANCE JIO INFOCOM, ADYAR ANANDHA BHAVAN, TVS SUNDARAM BRAKE LININGS, CEPHAS MEDICAL, MTC POLYMERS AND PACKAGING, SMARTHANAM TRUST FOR DISABLED போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள்  கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு; ஐ.டி.ஐ. டிப்ளமோ மற்றும்  பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 19.06.2026 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு சுய விவரச் சான்றிதழ் (RESUME), அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது  மேலும் இச்சேவையானது  முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.  இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnrjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்தார்.

Jun 16, 2026

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் ஜூன் -15 அனுசரிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (15.06.2026) முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சமூக நலத்துறையின் மூலம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா அவர்கள் தலைமையில், அனைத்து அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 15 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்நாள் 2011 ஆம் ஆண்டு முதல் இத்தினமானது அனுசரிக்கப்பட்டு வருகிறது. முதியோர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் அவர்களுக்கு எதிராக நடைபெறும் கொடுஞ்செயல்களை தடுத்து அவர்களை கன்னியமாகவும், மரியாதையாகவும் நடத்துவதை உறுதி செய்திடும் வகையில் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் ஜூன்-15, 2026 திங்கட்கிழமையன்று, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சமூக நலத்துறையின் மூலம் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், இராஜபாளையம் சேத்தூர் சேவுக பாண்டியன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இராஜபாளையம் வட்டாட்சியர் திரு.ராஜீவ்காந்தி அவர்கள், இராஜபாளையம் நகராட்சி ஆணையர் திரு.நாகராஜன் அவர்கள், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.கி.திலகம் அவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட, முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம்  உறுதி  மொழி எடுத்திடும் நிகழ்ச்சியும் மற்றும் இத்தினம் தொடர்பாக பள்ளிகளில் நடத்தபட்ட கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும் இத்தினம் அனுசரிக்கப்பட்டது.மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மக்கள் குறைதீர் கூட்டரங்கில் அவர்கள்  மற்றும் தனி  துணை ஆட்சியர்(ச.பா.தி) அவர்கள் தலை மையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஜீன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழி எடுக்கப்பட்டது.

Jun 15, 2026

சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் மற்றும் வக்ஃபு வாரிய செயல்பாடுகள் குறித்துஅமைச்சர் பெருமக்கள் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (13.06.2026) பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக்கூடத்தில்,  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் மற்றும்  சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.ஏ.எம்.ஷாஜஹான் அவர்கள் ஆகியோர் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் மற்றும் வக்ஃபு வாரிய செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.இக்கூட்டத்தில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களின் செயல்பாடுகள், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், உலமா பணியாளர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் மானியத்திட்டத்தின் செயல்பாடுகள், கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தின் செயல்பாடுகள், கிறிஸ்துவ தேவாலயங்கள் பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள், கிறித்தவர்/முஸ்லிம்களின் பயன்பாட்டிற்காக கல்லறைத்தோட்டம்/கபர்ஸ்தான் அமைத்தல், சிறுபான்மையின மாணவிகளுக்கான கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்(TAMCO) மூலம் வழங்கப்பட்ட கடனுதவிகள், சிறுபான்மையினருக்கு மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், பிரதான் மந்திரி ஜன்விகாஸ் கார்யகிராம் திட்டம்(PMJVK) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பின்னர், முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், சுயதொழில் செய்து வருமானம் ஈட்ட வழிவகை செய்யும் பொருட்டு, 160 முஸ்லீம் மகளிர்களுக்கு ரூ15.78 இலட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சிறுதொழில் விரிவாக்க உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், 15 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு ரூ.80,980/- மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரம், விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளையும், 4 உறுப்பினர்களுக்கு உலமாக்கள் நல வாரிய அட்டைகளையும், 1 உறுப்பினருக்கு கிறிஸ்துவ உபதேசியர் நல வாரிய அட்டையையும் என மொத்தம் 180 பயனாளிகளுக்கு ரூ.16.59 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் மற்றும்  சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.ஏ.எம்.ஷாஜஹான் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:          தமிழக அரசு மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சிறுபான்மையின மக்களை பாதுகாக்கவும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கான கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டை நோக்கமாக கொண்டு பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஒரு மாநிலத்தின் உண்மையான வளர்ச்சி என்பது தொழில்துறை வளர்ச்சியில் மட்டுமல்ல அந்த மாநிலத்தில் வாழும் விளிம்புநிலை மற்றும் சிறுபான்மையின மக்களின் பொருளாதார வளர்ச்சியிலும் தான் அடங்கியுள்ளது. அதை மிகச்சரியாக உணர்ந்த அரசுதான் நமது அரசு.ஆதரவற்ற, ஏழை இஸ்லாமிய மற்றும் கிறித்துவ மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்த இஸ்லாமிய/கிறித்துவ 'மகளிர் உதவும் சங்கங்கள்' மூலம் தையல் இயந்திரங்கள், சிறுதொழில் மற்றும் கல்வி நிதியுதவிகள் பெருமளவில் வழங்கப்பட்டுள்ளன. சமூகத்திற்கு வழிகாட்டும் உலமாக்கள் மற்றும் கிறித்துவ உபதேசியார்கள், பணியாளர்கள் நல வாரியங்கள் மூலம் பல்வேறு சமூகப் பாதுகாப்பு உதவிகள் வழங்கப்படுகின்றன.அதன்படி, இன்றைய தினம் 180 பயனாளிகளுக்கு ரூ.16.59 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.          அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற்றுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உதவிகளை நல்வழியில் பயன்படுத்தி உங்கள் வாழ்வை நீங்கள் வளமாக்கிக் கொள்ள வேண்டும்.இத்தகையதொரு சிறப்பான ஆய்வுக்கூட்டத்தை ஒருங்கிணைத்த சிறுபான்மையின நலத்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.சிறுபான்மை சமுதாயத்தினுடைய கல்வி, பொருளாதாரம் போன்ற நிலைகளை உயர்த்துவதற்காக நீதியரசர் ஸ்ரீ ராஜிந்தர் சச்சார் அவர்களுடைய பரிந்துரையின் அடிப்படையிலே சிறுபான்மையினர் நலத்துறை என்று ஒரு துறை பிரிக்கப்பட்டு, இஸ்லாமிய, கிருஸ்துவ சமுதாயத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும், கல்விக்கான திட்டங்களையும் அரசு தொடர்ச்சியாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.அந்த வகையிலே விருதுநகர் மாவட்டத்திலே 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுமார் 11 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடிய இந்த மொழி வழி, மத வழி சிறுபான்மையின மக்களுக்கு அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் சரியான முறையில் சென்று சேர்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காகத்தான் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்று தமிழகத்திலே முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், அனைத்து மக்களின் நன்மைக்காகவும், அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் நலனுக்காகவும் மிகுந்த அக்கறை கொண்டுள்ள காரணத்தினால், வரக்கூடிய நிதிநிலை அறிக்கையிலே பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவிக்க இருக்கிறார்கள்.அதிலும் குறிப்பாக வரக்கூடிய ஐந்து ஆண்டுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்க இருக்கிறார்கள். அந்த திட்டங்களை மேலும் செம்மைப்படுத்தக்கூடிய வகையிலே இந்த கலந்துரையாடக்கூடிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, நீங்கள் அளிக்கக்கூடிய தகவல்களை, கோரிக்கைகளை உள்வாங்கிக்கொண்டு, அந்த திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு உதவும் என்ற அடிப்படையில் தான் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியும் இங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.மிகக் குறிப்பாக, இந்தத் துறையின் சார்பிலே பல்வேறு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்கள் புதுப்பித்துக் கொள்ளக்கூடிய வகையிலும், சேதமடைந்திருக்கக்கூடிய இது போன்ற தலங்களை புனரமைக்கக்கூடிய வகையிலும் இந்தத் துறையின் சார்பிலே நிதி ஒதுக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.அதுபோலவே, உலமாக்களுடைய நல வாரியத்திலே பதிவு செய்திருக்கக்கூடிய உலமாக்களுக்கும், தேவாலயத்திலே பணிபுரியக்கூடிய அந்த உபதேசியார்கள் என்று சொல்லக்கூடியவர்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களும் இந்தத் துறையின் சார்பிலே செயல்படுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக இருக்கக்கூடிய கல்லறைத் தோட்டம், கபரஸ்தான் போன்றவைகளுக்கு எல்லா இடங்களிலும் அதற்கான இடங்களைத் தேர்வு செய்து, இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு வழிவகை செய்யக்கூடிய வகையிலே தமிழகத்திலே இருக்கக்கூடிய அனைத்து மாநகராட்சியிலும் இடம் ஒதுக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், 38 மாவட்டங்களிலும் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் கிட்டத்தட்ட 90-க்கும் அதிகமான இடங்களிலே அதற்கான பணிகள் முடிவு பெற்றுவிட்டது.அந்த வகையிலே விருதுநகர் நகராட்சியிலும், சிவகாசி மாநகராட்சியிலும் அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, விருதுநகர் நகராட்சி கோட்டைப்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டு நகராட்சியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சிவகாசி மாநகராட்சி பகுதியில் விரைவில் அதற்கான இடம் கையகப்படுத்தப்பட இருக்கிறது.அதுபோலவே, தமிழகத்திலே இருக்கக்கூடிய பள்ளிவாசல்களை நிர்வகிக்கக்கூடிய வக்ஃபு வாரியமும் சிறுபான்மைத் துறைக்கு கீழே வருவதால், அந்த பள்ளிவாசலினுடைய செயல்பாடுகளும், வரவு செலவுகளும், அந்த பள்ளிவாசலினுடைய புதுப்பிக்கும் பணிகளும், நிதி ஒதுக்கீடு செய்யக்கூடிய பணிகளையும் இந்தத் துறை செய்து வருகிறது.அதுபோலவே தேவாலயங்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவிலே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 100 ஆண்டுகளைக் கடந்திருக்கக்கூடிய பழமைவாய்ந்த தேவாலயங்களுக்கு ₹2 கோடி அளவுக்கு நிதி உதவி அளித்து, அது புனரமைக்கக்கூடிய பணிகளும் இந்தத் துறையின் மூலம் செய்யப்பட்டு வருகிறது. உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் ஏற்கனவே ₹25,000 ஆக இருந்து தற்போது ₹50,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுவும் இந்த மாத இறுதிக்குள் சுமார் 1,000 உலமாக்களுக்கு அந்த வாகனத்தை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலே அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.மேலும், முஸ்லிம் உதவும் சங்கங்கள், கிறிஸ்துவ உதவும் சங்கங்கள் ஒரு பங்கு நிதியை அளித்தால், அதனுடன் கூடுதலாக 2 பங்கு நிதியுடன் சேர்த்து நலத்திட்ட உதவிகளை இந்த சிறுபான்மை சமுதாயம் பெறக்கூடிய வகையிலே ஒரு திட்டம் இருக்கிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகபட்சமாக இரண்டு உதவும் சங்கங்களை நாம் நிறுவிக் கொள்ள முடியும். இரண்டாவது சங்கம் தொடங்கப்பட வேண்டும் என்று சொன்னால், இந்த முதலாவது சங்கம் முழுமையாக செயல்பட்டு, அதனுடைய பயன்கள் முழுமையாக அந்த பயனாளிகளுக்கு கிடைக்கக்கூடிய வகையில் செயல்படுமேயானால், மேலும் ஒரு சங்கத்தைத் தொடங்கி இந்த ஏழை எளிய மக்களுக்கு உதவக்கூடிய வகையிலே திட்டங்களை செயல்படுத்த முடியும்.அதேபோலவே, நிதிநிலை அறிக்கையிலே இந்தத் துறை சார்ந்து இதுவரை ஒதுக்கீடு செய்த தொகையை விட ஒரு சிறப்பான முறையிலே தொகையை ஒதுக்கீடு செய்து, இந்த சிறுபான்மை சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி போன்றவற்றிகளில் அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையிலே,  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறது.அந்த வகையிலே நிச்சயமாகச் சொல்ல முடியும், உறுதியாகச் சொல்ல முடியும், வரக்கூடிய நிதிநிலை அறிக்கையிலே இந்த சிறுபான்மை சமுதாயத்திற்கான நிதிகள் உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது.எனவே, சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதோடு, இந்தத் திட்டங்கள் சென்று சேராத அனைவருக்கும் இந்தத் திட்டங்களை கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைப்பதோடு, இந்தத் திட்டங்கள் மூலம் எல்லா நிலையிலும் பின்தங்கி இருக்கக்கூடிய சமுதாயம் அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படக்கூடிய அரசிற்கு அனைத்து நிலைகளிலும் நீங்க அனைவரும் ஒத்துழைப்போடு இருக்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கிருஸ்துவ, இஸ்லாமிய, பௌத்தர், சீக்கியர், ஜெயின் உள்ளிட்ட சிறுபான்மையின பிரதிநிதிகள் கலந்து கொண்டு,     தங்கள் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தனர். இந்த கோரிக்கைகளை முறையாக பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

Jun 13, 2026

1435-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம், வருவாய்த் தீர்வாய அலுவலர் ,மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் இன்று (12.06.2026) வருவாய்த் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ம் ஆண்டு ஜூன் 12 தொடங்கி, ஜூன்16 முதல் ஜூன் 19 வரை மற்றும் ஜூன் 23 முதல் ஜூன் 25 வரை ஆகிய நாட்களில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.அதன்படி, சாத்தூர் வட்டத்தில், ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையிலும், சிவகாசியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையிலும், திருவில்லிபுத்தூரில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 3 நாட்கள் சார் ஆட்சியர், சிவகாசி அவர்கள் தலைமையிலும்,  விருதுநகரில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 7 நாட்கள் வருவாய் கோட்டாட்சியர், சாத்தூர் அவர்கள் தலைமையிலும்,காரியாபட்டியில்       ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 6 நாட்கள் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையிலும்,அருப்புக்கோட்டையில்       ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 7 நாட்கள் உதவி ஆணையர் (கலால்), விருதுநகர் அவர்கள் தலைமையிலும், இராஜபாளையத்தில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், விருதுநகர்     அவர்கள் தலைமையிலும்,வெம்பக்கோட்டையில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி), விருதுநகர் அவர்கள் தலைமையிலும்,திருச்சுழியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 8 நாட்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும்,வத்திராயிருப்பில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 3 நாட்கள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும், வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளனஅதன்படி, முதல் நாளான இன்றைய தினம், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல் (முழுப்புலம்) தொடர்பாக 4 மனுக்களும், அத்துமால் அளத்தல் தொடர்பாக 3 மனுக்களும், பட்டா மேல்முறையீடு தொடர்பாக 36 மனுக்களும், கணினி திருத்தம் தொடர்பாக 4 மனுக்களும், வீட்டுமனை பட்டா தொடர்பாக 11 மனுக்களும், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக 3 மனுக்களும், நில ஒப்படை தொடர்பாக 1 மனுவும்,கணினி சிட்டா/புட்டா நகல் புலப்பட நகல் தொடர்பாக 2 மனுக்களும், நத்தம் சிட்டா/புட்டா நகல் தொடர்பாக 3 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பாக 1 மனுவும், சான்றுகள் தொடர்பாக 3 மனுக்களும், 6 இதர மனுக்களும், பிற துறைகள் சார்பாக 3 மனுக்களும் என மொத்தம் 80 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் உரிய காலக்கெடுவிற்குள் விரைந்து முடிக்குமாறு வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, சாத்தூர் வட்டம், பெத்துரெட்டியாபட்டி கிராமத்தைச் சேர்ந்த 14 பயனாளிகளுக்கு கணினி இணைய வழி பட்டாக்களையும், மாண்புமிகு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.38 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகைக்கான ஆணைகளையும் வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் / கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் வட்டாட்சியர், வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 13, 2026

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  (12.06.2026) ஜீன்-12 சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் வேல்டு விசன் இணைந்து நடத்திய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, நான், குழந்தை மற்றும் இளம் பருவத்தொழிலாளர் எவரையும் பணியில் அமர்த்த மாட்டேன். குழந்தை மற்றும் இளம் பருவத்தொழிலாளர் முறையை அகற்றிட - குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்தி தயார் செய்யும் எந்த பொருளையும் உபயோகப்படுத்த மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன் என்ற  விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.பின்னர், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்அதனைத்தொடர்ந்து, சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, “இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்.” என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் எடுத்துக்கொண்டனர்.முன்னதாக, விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட மின்னனு விளம்பர திரையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைத் தொழிலாளர் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறை, தொண்டு நிறுவனமான வேல்டு விஷன் இந்தியா உட்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 13, 2026

அருப்புக்கோட்டை நகரட்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் கள ஆய்வு.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (12.06.2026)  நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆய்வு:மேலரத வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.சமூக நீதி விடுதி ஆய்வு:உள்கட்டமைப்பு மற்றும் தூய்மை (Infrastructure & Cleanliness), வளாகத் தூய்மை, மின்சார வசதி, உணவு மற்றும் குடிநீர் பராமரிப்பு (Food & Drinking Water) குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை உபகரணங்கள் குறித்தும், விடுதியில் முதலுதவி பெட்டி (First Aid Box) இருப்பு நிலை குறித்தும்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், மாணவர்களுக்கு கால அட்டவணைப்படி, சமைக்கப்படும் உணவுகளின் பதிவேடு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.நகராட்சி அலுவலக ஆய்வுக் கூட்டம்:நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம், தெருவிளக்கு வசதிகள் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது நகராட்சி அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வுகாண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.பாப்பன்குளம் கண்மாய் சீரமைப்புப் பணி:கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் (KNUD) கீழ், ரூ.89 இலட்சம் மதிப்பீட்டில் பாப்பன்குளம் கண்மாய் சீரமைக்கப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கம்மாயைச் சுற்றி தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் மற்றும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார்.தூய்மைப் பணி  ஆய்வு:          தொடர்ந்து, பாளையம்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை (Cleanliness Drive) மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு சுற்றுப்புறத் தூய்மையை உறுதி செய்தார்.குப்பைகளை ஈரக்கழிவு, உலர்க்கழிவு, சுகாதார கழிவு மற்றும் சிறப்பு கவனக் கழிவு என நான்கு வகைகளாக பிரித்து திடக்கழிவு மேலாண்மை பின்பற்றுவதை ஆய்வு செய்தார்.          பாளையம்பட்டி, SBK வீடு தெருவில், முதன்மை பணிகள் சேமிப்பு நிதி 2025-2026 திட்டத்தின் கீழ், ரூ.10 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிகழ்வின் போது, நகராட்சி ஆணையர், நகராட்சிப் பொறியாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 130 131

AD's



More News