25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 27, 2026

அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசைதிருவிழாவினை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, I A S., அவர்கள் ஆகியோர் தலைமையில் (25.07.2026) ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள். இவ்விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தவும் காவல்துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.தரிசனம் செய்ய வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளும், வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வண்ணம் முன்னேற்பாடு பணிகளையும், எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை அளித்திடும் வகையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவக் குழுவும்,  ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.மேலும், சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் நெகிழி பொருட்கள், போதை வாஸ்து போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.  தாணிப்பாறை அடிவாரத்தில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு தேவையான துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். சதுரகிரிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கேற்ப மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வெளியூர் பேருந்துகள், தனிநபர்களுக்கு சொந்தமான வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் வனப்பகுதிக்குள் சென்று சாமி தரிசனம் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் தெரிவித்தார்கள்.இந்த ஆய்வின் போது,  துணை இயக்குநர் (திருவில்லிபுத்தூர்மேகமலை புலிகள் காப்பகம் ) திரு.ரவி மீனா.,இ.வ.ப., சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S., திட்ட இயக்குநர் (விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)  திருமதி வானதி,  வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jul 27, 2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 அங்கன்வாடி மைய கட்டடங்களை திறந்து வைத்தார்.

 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள்  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S ., அவர்கள் தலைமையில், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் முன்னிலையில் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட இராஜபாளையம். ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில்  ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 அங்கன்வாடி மைய கட்டடங்களை  (25.07.2026) திறந்து வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வளரிளம் குழந்தைகள் முன்பருவ கல்வியினை சிறந்த முறையில் கற்றிடவும், ஊட்டச்சத்து குறைபாடின்றி நல்ல ஆரோக்கியத்துடன் நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் மூலம் ஏராளமான திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் 1,504 அங்கன்வாடி மையங்கள் மூலம் 0 முதல் 6 மாதம்  வரை உள்ள 36,000 குழந்தைகளுக்கு இணைவுணவும், 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள 29,061 குழந்தைகளுக்கு முட்டையுடன் இணைவுணவும், 8,475 கர்ப்பிணி தாய்மார்கள், 9,050 பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துடன் இணைவுணவும்  வழங்கப்படுகிறது.குழந்தைகளுக்கு வண்ணச்சீருடைகளும், திங்கட்கிழமை முட்டையுடன் தக்காளிசாதமும், செவ்வாய்க்கிழமை கலவை சாதத்துடன் பச்சைப்பயறு அல்லது கொண்டைக்கடலையும், புதன்கிழமை முட்டையுடன் புலாவ் சாதமும், வியாழக்கிழமை முட்டையுடன் எலுமிச்சை சாதமும், வெள்ளிக்கிழைமை பருப்பு உருளைக்கிழங்கு சாதமும், சனிக்கிழமை கலவை சாதமும் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவானது சுத்தமான முறையில் சுகாதாரத்துடன் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பான கட்டட வசதியும், காற்றோற்டத்துடன் கூடிய இடங்களில் கல்வி கற்பிக்கும் வகையில் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வடகரை அங்கன்வாடி மையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கொத்தன்குளம் காலனி அங்கன்வாடிமையம், நூர்சாகிபுரம் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொட்டல்பட்டி  அங்கன்வாடி மையம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அழகாபுரி அங்கன்வாடி மையம், ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாத்தூர் அங்கன்வடி மையம்,  ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதுப்பட்டி காலனி அங்கன்வாடி மையம் என மொத்தம் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 அங்கன்வாடி மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதனை நல்ல முறையில் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமை திட்ட இயக்குநர் திருமதி வானதி,  சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி  திட்ட அலுவலர் திருமதி ஷீலா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 27, 2026

விருதுநகர் மாவட்டம் 22 பயனாளிகளுக்கு ரூ.14.69 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், விஜயரெங்காபுரத்தில் (25.07.2026) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 22 பயனாளிகளுக்கு  ரூ.14.69 இலட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் வழங்கினார்.இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தகுதியான பயனாளிகளுக்கு  அரசு புறம்போக்கு இடத்திலோ, அரசு புறம்போக்கு இடம் இல்லாத பட்சத்தில் தனியாரிடமிருந்து அரசு நிர்ணயத் தொகையை செலுத்தி கையகப்படுத்தி, வீட்டு மனைகளாக அளவீடு செய்து   வழங்கப்பட்டு வருகிறது..அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம்  விஜயரங்கபுரம் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, 22 பயனாளிகளுக்கு ரூ.14.69 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 3 சென்ட் வீட்டுமனை இலவசமாக வழங்கப்பட்டது.இதன் மூலம் ஆதிதிராவிடர் குடும்பங்கள் சொந்த வீட்டுமனை பெற்று பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு சமூக நீதி மற்றும் சமத்துவத்தை முன்னிறுத்தி ஆதிதிராவிடர் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தகுதியுடைய அனைத்து பயனாளிகளும் அரசின் நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் , குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சாத்தூர் கோட்டாட்சியர் திரு.கனகராஜ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல  அலுவலர் திருமதி சாந்தி, வெம்பக்கோட்டை வட்டாட்சியர் திருமதி ஆண்டாள்,  வருவாய்த்துறை அலுவலர்கள்,  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Jul 25, 2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் 3,992 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., தலைமையில் 3,992 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணியினை விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில்  (24.07.2026) தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலனையே பெரிதும் முக்கியத்துவமாக கருதி செயல்பட்டு வருகிறார்கள். நாங்கள் அனைவரும் சட்ட மன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் இருப்பதற்கு மக்களாகிய உங்களுடைய பெருத்த ஆதரவே காரணம். அதனால் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், குறைகளை தீர்ப்பதற்கும் 24 மணி நேரமும் களப்பணியாற்ற தயாராக இருக்கின்றேன். அதனால் நீங்கள் எந்நேரமும் உங்களது குறைகளை தெரிவிக்கலாம் நிறைவேற்ற தயாராக உள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறார்.அதனடிப்படையில் பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் சமூகப் பொருளாதாரப் வேறுபாடின்றி அனைத்து குடும்பங்களுக்கும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மானியத்தின் அடிப்படையில் அரிசி மற்றும் கோதுமையுடன், சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம்பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.  விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக, 727 முழு நேர நியாய விலைக் கடைகளும், 235 பகுதி நேர நியாய விலைக்கடைகளும் என மொத்தம் 962 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகள் மூலம் 5,51,793 அரிசி குடும்ப அட்டை தரார்கள், 10,060 சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், 5,933 முதியோர் உதவித் தொகை குடும்ப அட்டைதாரர்கள், 2,518 காவலர்கள் குடும்ப அட்டைதாரர்கள் ஆக மொத்தம் 6,18,619 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.ஒவ்வொரு மாதமும் நியாய விலைக்கடைகளின் மூலம் 8,723 மெட்ரிக் டன் அரிசியும், 740 மெட்ரிக் டன் சர்க்கரையும், 890 மெட்ரிக் டன் கோதுமையும், 485 மெட்ரிக் டன் துவரம்பருப்பும், 5,02,415 பாக்கெட் பாமாயிலும், லிட்டர் மண்ணெண்ணையும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.மேலும்,  தமிழக அரசின் சார்பாக 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அடங்கிய 5,311 குடும்ப அட்டைகளுக்கு தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொதுவிநியோக பொருட்கள் நேரடியாக ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வீடுகளுக்குச் சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.ஒரு நபர் மட்டும் இருக்கும் குடும்ப அட்டைக்கு 12 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.01.05.2026 முதல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் அரசு உத்திரவு வரப்பெற்ற உடன் வெகு விரைவில் தகுதியான நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்படவுள்ளன.தமிழக முதல்வர் அவர்களால் கடந்த வாரம் புதிய குடும்ப அட்டை வழங்கும் விழா நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் இன்று (24.07.2026) இந்த விழாவில் கடந்த 16.12.2025 முதல் 30.04.2026 வரை புதிய குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பம் செய்த நபர்களில் தகுதியான 3,992 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது. அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ்  முன்னுரிமையுள்ள AAY குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.தற்பொழுது மத்திய அரசு மூலமாக மானியம் பெறுவதை உறுதிப்படுத்தும் பொருட்டு AAY, PHH, NPHH ஆகிய முன்னுரிமை குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கைரேகை பதிவு செய்ய வேண்டுமென தமிழக அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 18,00,580 நபர்களில் 16,35,694 நபர்கள் கைரேகை பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 1,64,886 நபர்களும் உடனடியாக கைரேகை பதிவு செய்யவும். தங்களது குடும்பத்தில் கைரேகை பதிவு செய்யாத நபர்களை உடனடியாக பதிவு செய்யவும் படிப்பு சம்மந்தமாக மற்றும் பணி சம்மந்தமாக தங்களது குடும்பத்தில் உள்ள நபர்கள் வெளியூரில் இருக்கும் பட்சத்தில் அந்த ஊரில் அருகில் உள்ள நியாய விலைக்கடையில் கைரேகை பதிவு செய்திட வேண்டும் எனசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்பான் I A S., மாவட்ட  வழங்கல் அலுவலர் சு.சோமசுந்தர சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 25, 2026

வன உயிரினங்களால் பயிர்கள் பாதிக்கப்பட்ட 4 விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (24.07.2026) நடைபெற்ற  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வன உயிரினங்களால் பயிர்கள் பாதிக்கப்பட்ட 4 விவசாயிகளுக்கு ரூ.94,500/-  மதிப்பீட்டிலான நிவாரணத்தொகையைமாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் வழங்கினார்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அதிகமான வெப்ப அலை ஏற்படக்கூடும் என இந்திய வானிலை ஆய்வகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வறட்சியைத் தாங்கும் பயிர்களை பயிர் செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்.வேளாண் பொறியியல் துறை மூலமாக 100சதவீதம் மானியத்தில் 40 பண்ணைக்குட்டைகள் அமைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் பண்ணைக்குட்டைகள் அமைத்திட முன்வரலாம்.வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை மூலமாக 25 உலர்களம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு  விரைவில் உலர்களம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தரமான விதைகள் மற்றும் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் அறிக்கை செய்யப்பட்ட கண்மாய்களில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளது.விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று 4 இடங்களில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடையாமல் பாதுகாத்திட வனத்துறையின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் எதிர்பாராத வகையில் வனவிலங்குகளால் பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் 4 விவசாயிகளுக்கு ரூ.94,500/- மதிப்பீட்டிலான நிவாரண உதவித்தொகை (24.07.2026) வழங்கப்பட்டது.விவசாயிகள் அளிக்கும் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் துணை இயக்குனர்(மேகமலை புலிகள் காப்பகம் திருவில்லிபுத்தூர்) திரு.ரவி மீனா இ.வ.ப., அவர்கள், வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர் திரு. சௌமியன், தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.அ.அறுமுகம், வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம் மற்றும் விற்பனை) திருமதி.த.வளர்மதி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி. இந்திரா, பேராசிரியர் மண்டல ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை மற்றும் பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், இணை பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள், உட்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Jul 24, 2026

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள் சிவகாசி ரயில் நிலையத்திற்கான புதிய வழித்தட பேருந்து சேவையினை தொடங்கி வைத்தார்.

 தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தலைமையில் சிவகாசி என்.ஆர்.கே.ராஜரத்தினம் பேருந்து நிலையத்தில் சிவகாசி ரயில் நிலையத்திற்கான புதிய வழித்தட பேருந்து சேவையினை  (23.07.2026) தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.பொதுமக்களின் போக்குவரத்து வசதியினை மேம்படுத்திடவும், பாதுகாப்பான போக்குவரத்தினை உறுதி செய்திடவும் அதிக முன்னுரிமை எடுத்து விபத்தில்லா தமிழகம் என்ற நிலையினை எய்திட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கிராம பொதுமக்கள் பணியின் காரணமாக நகரங்களுக்கும், நகரங்களை கிராமங்களோடு இணைப்பதற்கும் பொது போக்குவரத்துத்துறையின் செயல்பாடுகள் இன்றியமையாததாக உள்ளது.சிவகாசி மாநகராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிவகாசி என்.ஆர்.கே.ராஜரத்தினம் பேருந்து நிலையத்தில் இருந்து  சிவகாசி ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு  பேருந்து வசதி இல்லாத நிலையினை சீர்படுத்தும் வகையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விரைந்து அனுமதி அளிக்கப்பட்டது. இதுநாள் வரை பொதுமக்கள் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் ஆட்டோ, இரண்டு சக்கர வாகனம் மற்றும் இதர தனியார் வாகனங்கள் மூலமாக சென்றனர். இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் செலவினமும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வந்தனர். இந்த சூழ்நிலையை மாற்றிடும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.அதனடிப்படையில் புதிய வழித்தட பேருந்து வசதி துவக்கி வைக்கப்படுகிறது. தினமும் இப்பேருந்தானது 10 முறை இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.பொதுமக்களின் தேவையினை அறிந்து நிறைவேற்றுவதில் எவ்வித சமரசமுமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பொதுமக்களிடம் பேருந்து வசதி செய்து தரப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.பொதுமக்கள் பேருந்து வசதியினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என  தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., விருதுநகர் மண்டல பொது மேலாளர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்) திரு.கே.கண்ணன், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன்,  உதவி மேலாளர் (வணிகம்) திரு.எஸ்.நாகராஜ்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 24, 2026

குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையுடன் அருகில் உள்ள நியாய விலைக் கடைக்குச் சென்று 31.07.2026-க்குள் கைரேகை பதிவினை கட்டாயமாக செய்துகொள்ள வேண்டும்.

குடியிருப்புக்கு அருகில் உள்ள நியாய விலைக் கடைக்குச் சென்று தங்களது கைரேகையினை பதிவு 31.07.2026 இக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.  தமிழக அரசு, தமிழ்நாட்டில்  உள்ள   குடும்ப  அட்டைதாரர்கள்,  குடும்ப  அட்டையில்  உள்ள அனைத்து உறுப்பினர்களின்     e-KYC  கைரேகையினை கட்டாயமாக பதிவு செய்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.எனவே,  இதுவரை  கைரேகை   பதிவு  செய்யாத   குடும்ப  அட்டைதாரர்கள் தங்கள்   குடும்ப அட்டையுடன்   அருகில்   உள்ள   நியாய   விலைக்  கடைக்குச்  சென்று 31.07.2026-க்குள்   கைரேகை  பதிவு செய்து e-KYC   மேற்கொள்ள வேண்டும். மேலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் பணி  நிமித்தமாக  வேறு    பகுதிகளில்  தற்காலிகமாக  வசிப்பவர்கள் தற்போது வசிக்கும்   பகுதிக்கு  அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று வரும் 31-ஆம் தேதிக்குள் பதிவு  செய்து  தங்கள்   உரிமையை உறுதி  செய்ய  வேண்டும்.      இறந்த உறுப்பினர்களின் பெயர்களை வரும் 25 ஆம் தேதிக்குள் வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நீக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் தங்களது பகுதியில் உள்ள நியாய விலைக் கடை விற்பனையாளரிடம் இறந்த உறுப்பினரின் குடும்ப அட்டை எண்ணுடன் ஆதார் அட்டையின் நகலை வழங்க வேண்டும்.                கைரேகை இல்லாத குழந்தைகள் மற்றும் முதியோர்கள் முதலில் தங்கள் ஆதார் அட்டையில் கைரேகை மற்றும் கண் பதிவை புதுப்பித்த பின்னரே e-KYC மேற்கொள்ள வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 18,00,580 உறுப்பினர்களில் 16,34,820 நபர்கள் பதிவு செய்துள்ளனர்.  1,65,760 நபர்கள் பதிவு செய்யாமல் உள்ளனர். இப்பணி 90.79% நிறைவடைந்துள்ளது.   இதற்காக  அருப்புக்கோட்டை , காரியாபட்டி,  இராஜபாளையம்,   சாத்தூர், சிவகாசி,  திருவில்லிபுத்தூர்,  திருச்சுழி,  வத்திராயிருப்பு,  வெம்பக்கோட்டை,  விருதுநகர் ஆகிய  பத்து வட்டாட்சியர்  அலுவலங்களில்  உள்ள  ஆதார்   இ-சேவை  மையங்களை அணுகி  ஆதார்  புதுப்பிப்பை  மேற்கொண்ட  பிறகு  குடும்ப அட்டையுடன் நியாயவிலைக் கடைக்குச்  சென்று e-KYC  கைரேகை பதிவு செய்து கொள்ளலாம்  என  மாவட்ட  ஆட்சித் தலைவர், அவர்கள்   தெரிவித்துள்ளார்.

Jul 24, 2026

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளர் பணியிடங்களுக்கான செய்முறை தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB), பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் ரயில்வே ஆட்சேர்பு வாரியம் (RRB) போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் Wifi வசதியுடன்  கூடிய கணினி ஆய்வகம் உள்ளது.தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) கள உதவியாளர் (Field Assistant) – Wireman / Electrician பணியிடங்களுக்கான செய்முறை தேர்விற்கு (Practical) மின்கம்பம் ஏறுவதற்கான இலவசப் பயிற்சியானது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக நடைபெறவிருக்கிறது.இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக பதிவு செய்வது அவசியமாகும்.எனவே, செய்முறை தேர்விற்குத் தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 23, 2026

திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா ஆலோசனைக் கூட்டம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா 14.08.2026 அன்று நடைபெறுவதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழாவினை சிறப்பான முறையில் நடத்திட ஒவ்வொரு துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் துறை வாரியாக விரிவான ஆலோசனை நடைபெற்றது.திருவில்லிப்புத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா வருகின்ற 14.08.2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்டம் தங்குதடையின்றி, விபத்துகள் இன்றி சிறப்பாக நடைபெறுவதை உறுதிபடுத்தும் விதமாக தமிழக அரசு அறிவித்துள்ள திருத்தேரோட்ட வழிபாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய அலுவலர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொள்ளவும், போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணியிலும் காவல் துறையினரும், காவல் துறையினருக்கு துணையாக கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும், ஹோம் கார்டு காவலர்களும், சாரணர்களும் கூட்ட நெரிசலை ஓழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பொதுமக்கள் திருவிழாவிற்கு எளிதில் வந்து செல்லவும், போக்குவரத்து நெரிசல், இல்லாமல் போக்குவரத்து வசதிகளை ஒரு வழிப்பாதை ஏற்படுத்தி தேரோட்டத்தினை நடத்திடவும், குற்றங்களை தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளை சிறப்பான முறையில் செய்திடவும், நகரின் முக்கிய பகுதிகளில் குறிப்பாக தேர் வலம் வரும் பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்க்கள் அமைத்திடவும், லாரிகள் மூலமும், தண்ணீர் பந்தல் அமைத்தும் சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும்.திருவில்லிப்புத்தூர் நகராட்சி மூலம் தற்காலிகமாக கழிப்பறை, நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உணவு விடுதிகளில் தடைசெய்யப்பட்ட  பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதனையும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், பாதுகாப்பான குடிநீர் வழங்கவும், சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுவதை உறுதிப்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் எளிதாக தெரிந்துகொள்ளும் வண்ணம் விளம்பரப்பதாகைகளும் வைக்கப்பட வேண்டும். இப்பணிகளை திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு வண்டிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் இருக்கவும்;, இப்பாதுகாப்பு ஏற்பாடுகளை கோட்ட தீயணைப்பு அலுவலர் மேற்கொள்ள வேண்டும்.மேலும், திருவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை அளித்திடும் வகையில் மருத்துவர் குழுவினர் போதிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் தயார் நிலையில் இருக்கவும், ஆம்புலன்ஸ்சுகளும் தயார் நிலையில் வைக்கவும், திருக்கோயில் முன்புறமுள்ள ஆடிப்பூரக் கொட்டகையிலும் தற்காலிக முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, போதிய மருத்துவப் பணியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரம் பணியில் இருக்க வேண்டும். இப்பணிகளை இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் ஆகியோர் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆடிப்பூரத் தேர்த்திருவிழா அன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க உரிய ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல போக்குவரத்து அலுவலர், பொது மேலாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியூர் பேருந்துகள் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிய பேருந்துநிலையம் அமைக்கப்பட உள்ளது.தேரோட்ட தினத்தன்று சாலையின் குறுக்கே செல்லும் மின் கம்பிகளும், தொலைபேசி இணைப்புகளும் தற்காலிகமாக தேரோட்டம் முடியும் வரை அகற்றப்பட்டு தேரோட்டம் முடிந்த உடன் சரிசெய்யவும், இப்பணிகளுக்கு உரிய ஏற்பாடுகளை மின் வாரிய ஊழியர்களும், தொலை தொடர்புத்துறை ஊழியர்களும் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும். மேலும், தேர்த்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படுகின்ற தீமைகள் குறித்து எடுத்துரைத்து, மாற்றாக துணிப்பையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத துணிப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு;ள்ளது. எனவே, அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் செயல்பட்டு நல்ல முறையில் தேர்த்திருவிழாவினை நடத்தி முடித்திட முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல்,இ.கா.ப., துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு.ரவி மீனா,இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., ஆண்டாள் கோவில் செயல் அலுவலர், உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jul 23, 2026

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தினை (One stop center) திறந்து வைத்தார்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள்,  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி  அரசு மருத்துவமனை வளாகத்தில்  (22.07.2026)  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் ரூ.12.58 இலட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தினை திறந்து வைத்தார்.மேலும், இந்நிகழ்ச்சியில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.16 இலட்சம் மதிப்புள்ள மின்கல சக்கர நாற்காலிகளையும், 3  அறிவு சார் குறைவு உடைய குழந்தைகளுக்கு ரூ.27,900/- மதிப்புள்ள அறிவு சார் உபகரணங்களையும் என மொத்தம் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.44 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் வழங்கினார்மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம், உலக வங்கி நிதி உதவியுடன் தமிழக அரசால் 38 மாவட்டங்களிலும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டு, விருதுநகர் மாவட்டத்தில்  கடந்த ஜூன்"2025 முதல் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் கடைக்கோடியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளில் ஒருவர் கூட விடுபடாமல் கணக்கெடுத்து, அவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டை(UDID) மற்றும் மறுவாழ்வு சேவை வழங்குவதற்காக உலக வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 32,696 மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளனர்.விருதுநகர் மாவட்டம் 13 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு 6 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் (அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, இராஜபாளையம், விருதுநகர் - கன்னிசேரிபுதூர், வெம்பக்கொட்டை - கல்லமநாயக்கன்பட்டி) கடந்த மார்ச் 2026 ஆம் மாதம் முதல் தொடங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 13 வட்டார ஓரிட சேவை மையங்களில் சிவகாசி நகர ஒருங்கிணைந்த சேவை மையம் 1500 சதுர அடியில் ரூ.12.58 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு இன்று (22.07.2026)  சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தில்   1 உளவியல் ஆலோசகர்(Counceller cum case worker),  1 தசைப்பயிற்சியாளர் (Physiotherapist), 2 சிறப்பு கல்வி பயிற்றுனர் (Special Educator - ID & Special Educator - HI),  3 சமூகப் பணியாளர் (Community Facilitators). 7 சமூக மறுவாழ்வு பணியாளர் (Community Rehabilitation Workers) மற்றும் இம்மையத்தின் பணியாளர்களை கண்காணிப்பதற்கு 1 வட்டார ஒருங்கிணைப்பாளர் என மொத்தம் 15 முன்களப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் மையத்தில் சிறப்பு கல்வி, பிசியோ தெரபி, உளவியல் ஆலோசனை, மறுவாழ்வு உதவிக்கான ஆலோசனை உள்ளிட்ட  சேவைகள் வழங்கப்பட உள்ளது.இம்மையத்தின் இதர சேவைகளாக வாழ்க்கை திறன், கல்வி, பெற்றோர் /பாதுகாவலர்களுக்கான பயிற்சி, UDID அட்டை விண்ணப்பிக்க, அரசு நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பித்தல், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்தல், வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல், உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பித்தல், புகார்கள் பரிசீலித்து தீர்வு காண வழிகாட்டுதல் போன்றவைகள் வழங்கப்பட உள்ளது. எனவே, அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இந்த சேவை மையத்தினை அணுகி பயன்பெறலாம் என தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S.,சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.செந்தில், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 141 142

AD's



More News