விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அமலாசுப்பையா திருமண மண்டபத்தில்(08.02.2025) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S..,அவர்கள் தலைமையில்விழா நடைபெற்ற விழாவில், அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் 603 பயனாளிகளுக்கு ரூ.1.05கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, அரசின் திட்டங்களைமக்களுக்கு எடுத்துச் செல்வதில் மிகுந்த முனைப்போடு செயலாற்றி வருகிறது.அறிவிக்கப்பட்டஅரசதிட்டபயன்களைசாதாரணமான ஏழைஎளிய மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று சொன்னால் அதற்கான முழு ஆதரவும், முனைப்பும் அரசு அலுவலர்களிலேயே இருந்திட வேண்டும் அமைச்சர்.அதன்படி, இன்று நடைப்பெற்ற விழாவில்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 35 பயனாளிகளுக்கு ரூ.12.16 இலட்சம் மதிப்பிலான நத்தம் இலவச வீட்டு மனைபட்டாக்களும்,ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 73 பயனாளிகளுக்கு ரூ.44.57இலட்சம் மதிப்பிலான மின்னணு பட்டாக்களும்,120 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டைகளும்,102 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1இலட்சம்மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களும்,56 பயனாளிகளுக்கு ரூ.45.40 இலட்சம் மதிப்பிலான முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரண தொகைகளும், தோட்டக்கலை துறையின் மூலமாக 3 பயனாளிகளுக்கு ரூ.2இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், பொது சுகாதாரத் துறையின் சார்பில் 198பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஒருங்கிணைந்த காப்பீடு திட்ட அடையாள அட்டைகளும், வேளாண்மைத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.9700 மதிப்பில் இயற்கை உரம்மற்றும் மரக்கன்றுகளும் எனமொத்தம் 603 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தனி நபர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அடிப்படை வசதியான குடிநீர், சாலை, போக்குவரத்து,பள்ளிகள், சுகாதாரம், தெருவிளக்குகள், மழை நீர்வடிகால் வசதிகள்,உதவித்தொகைகள், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள், குடியிருப்பை உறுதி செய்யும் வகையில் பட்டாககள் உள்ளிட்ட திட்டங்களும் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது..காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு மிகப்பெரிய குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.இத்திட்டம் விரைவில் முடிக்கப்பட்டு இந்த இரண்டு பேரூராட்சிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் முழு அளவில் வழங்கப்படும்.விவசாயத்தை நம்பி இருக்கக்கூடிய இப்பகுதி மக்களுக்கு கம்பிக்குடிகால்வாய் திட்டத்தை சுமார் 18 கிலோமீட்டர் நீளத்திற்கு தனியாக கால்வாய் அமைக்கக்கூடிய பணிகளுக்கு ஏறத்தாழ ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான நில எடுப்பு பணிகளை தொடங்கி இருக்கிறோம். .மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:விருதுநகர் மாவட்டத்தில் பலஇடங்களில் பொது கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை அமைச்சர் அவர்களின் தொடர் முயற்சியால் குடிநீர், சாலை போன்ற அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுவந்தாலும், தனி மனிதர்களுக்கு, ஒவ்வொரு நபர்களுக்கும் அரசனுடைய திட்டங்கள் நேரடியாக சென்று சேர வேண்டும். அதுவும் குறிப்பாக அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய திட்டங்களாக இருக்கக்கூடிய நிதியுதவி திட்டங்களாக இருந்தாலும் சரி,பட்டா வழங்குவது உள்ளிட்ட உரிமைகளுக்கான திட்டங்களாக இருந்தாலும் சரிஅவற்றையெல்லாம் நேரடியாக சென்றுவழங்க வேண்டும் என்பதில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு தொடர்ச்சியாக இது போன்ற பல்வேறு நிகழ்வுகளை நமது மாவட்டத்தில் நடத்தி இருக்கிறோம்.அரசினுடைய கலைஞரின் கனவுஇல்லம் என்ற வீடுகட்டும் திட்டம் இருக்கிறது.ஆனால் வீடு கட்டும் திட்டத்திற்கு முன்பாக அனைவருக்கும் பட்டாக்களை வழங்க வேண்டும்.என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக நமதுமாவட்டத்திற்கு வருகை தந்த போது ஏறத்தாழ 41 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டாக்கள் உள்ளிட்ட வீடு நில உரிமைக்கான ஆணைகளைவழங்கினார்.திருச்சூர், காரியாபட்டி நரிக்குடி போன்ற ஒன்றியங்களில்இன்னும் நிலங்களை தேர்வு செய்து பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்க வேண்டும் என்பதற்காக தொடர் முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது. நமது பகுதியில் தான்முதன்முதலாக நரிக்குறவர் இனமக்களுக்கு புதிதாக வீடுகளை கட்டி அவர்களுக்கு வழங்கி இருக்கின்றோம். அதேபோன்று திருநங்கைகளுக்கு பட்டாக்களை வழங்கி வீடுகள் கட்டக்கூடிய திட்டத்தின் மூலமாக அவர்களுக்கும் வழங்கி இருக்கின்றோம். இப்படி சமூகத்தினுடைய எந்தஒரு பகுதியினரையும், பிரிவினரையும் விட்டுவிடக்கூடாது என்பதிலும் முனைப்போடு செயல்பட்டு வருகிறோம்.தொடர்ச்சியாக நிறைய பேருக்கு கலைஞர் காப்பீடு திட்டம் என்ற ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகளை வழங்குகிறோம்.அமைச்சர் பெருமக்கள் அவர்களின் அறிவுரையின் படி,மருத்துவ காப்பீடு அட்டைக்கான முகாம்கள் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும் சென்று நடத்தி மருத்துவ காப்பீடு அட்டை யாருக்கு இல்லையோ அவர்களிடம் முறையான ஆவணங்களை பெற்று மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி இருக்கின்றோம். அரசு அலுவலர்கள் இன்னும் விரைந்து செயல்பட்டு அனைத்து மனுக்களுக்கும் விரைவில் தீர்வு கண்டு, உரியகாலகட்டத்திற்குள் அந்தபயன்களை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இன்று(08.02.2025)இராஜபாளையம் - சங்கரன்கோவில் - திருநெல்வேலி சாலை கி.மீ.2/0லிருந்து (மா.நெ.சாலை-41) (இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம்) திருமங்கலம் கொல்லம் 1600 கி.மீ.66/8 வரை (தே.நெ.744) (இராஜபாளையம் அரசு மருத்துவமனை) இணைப்புச்சாலை ரூ.38.24 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S.., அவர்கள் தலைமையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:இந்த இணைப்பு சாலை பணிக்கு ரூ.30.00 கோடியும், நில எடுப்பிற்காக ரூ.8.34 கோடியும் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு மொத்தம் ரூ.38.34 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.இச்சாலை அமைப்பதற்கு தேவையான நிலங்கள் அனைத்தும் வருவாய்த் துறை மூலம் கையகப்படுத்தப்பட்டு நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளன. ஆகையால், இப்பணி விரைவில் துவங்கும் நிலையில் உள்ளது.இராஜபாளையம் நகரமானது வளர்ந்து வரும் ஒரு முக்கிய நகரமாகும். இந்நகரத்தில் பின்னலாடைகள் மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனால், இராஜபாளையம் நகருக்குள் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் இராஜபாளையத்தின் புதிய பேருந்து நிலையம் இராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ளதால்,மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் தென்காசி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் முக்கிய வீதிகளில் சென்று வருகிறது. அவ்வாறு வருவதால், பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதித்த வண்ணம் உள்ளது. இவற்றை கருந்தில் கொண்டு இந்த புதிய சாலையை அமைப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு சாலைப்பணிகள் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கிய காரணத்தினால் இப்பணி செயலாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இச்சாலைப்பணி அனைத்தும் முடிந்தவுடன், திருநெல்வேலி, சங்கரன்கோவில், இராஜபாளையம், மதுரை, தென்காசி, கொல்லம் போன்ற வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனத்தும் ஊருக்குள் சென்று நெரிசல் ஏற்படுத்தா வண்ணம் மக்களுக்கு இடையூறு இன்றி புதிய சாலை வழியாக இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று அதே வழியில் திரும்பி செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது.இதனால் இராஜபாளையத்திற்கு போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், இராஜபாளையம் நகர்மன்ற தலைவர் திருமதி பவித்ரா ஷியாம், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் 2024 மற்றும் மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் மினி பேருந்தின் கட்டண திருத்தம் வாகன சட்டம் 1988 G.O.Ms.No.33, நாள் 23.01.2025-ன் படி பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போதுமான பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை அரசு வழங்குவதற்காகவும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களின் மக்கள் தொகை மற்றும் போதுமான பேருந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ள அருகில் உள்ள பேருந்து நிலையம் அல்லது அருகிலுள்ள நகரத்தை அடைய எந்த வழியும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் தமிழக அரசால் மேற்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாநிலத்தில் மினி பேருந்துக்கான கட்டண திருத்தம் 1.5.2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:1. அதிகபட்ச தூரம் 25 கிலோ மீட்டருக்கு மிகையாக இருக்கக் கூடாது.2. குறைந்தபட்ச சேவை செய்யப்படாத பாதை நீளம் ((Unserved Route Length) சாலையில் மொத்த பாதை நீளத்தில் 65% க்கு குறைவாக இருக்கக்கூடாது.3. தொடக்கப்பள்ளி/முனையப்புள்ளி என்பது சேவை செய்யப்படாத குடியிருப்பு/கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும். புள்ளிகளில் ஒன்று பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்.4. முனைய புள்ளியிலிருந்து அடுத்த ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அரசு மருத்துவமனை மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம், உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை சந்தை, ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், புகழ்பெற்ற வழிப்பாட்டு தளங்கள் அல்லது பேருந்து நிலையத்திற்கு சற்று முன்பு உள்ள இடம் மற்றும் வழங்கப்பட்ட பாதை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட பாதை நீளத்தை விட அதிகமாக இருக்கும். பின்னர் பிராந்திய போக்குவரத்து ஆணையம்/மற்ற பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து, அதாவது மாநில போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளாட்சி அமைப்புகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் போன்றவை மேற்கூறிய தேவைப்படும் இடங்களுக்கு பயணிகளை சென்றடைய உதவும் வகையில் சேவை பகுதியில் ஒரு கிலோ மீட்டர் வரை கூடுதல் தூரத்தை அனுமதிக்கலாம். மேற்கூறிய இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு இது பொருந்தாது.5. பழைய மினி பேருந்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்கள் இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு விருப்பத்தினை எழுத்துப்பூர்வமாக அளித்து அனுமதி சீட்டினை ஒப்படைக்க வேண்டும். இப்புதிய வழித்தடத்தில் குறைந்த பட்சம் 1.5கி.மீ கூடுதல் சேவை செய்யப்படாத பாதை இருக்க வேண்டும்.6. மினி பேருந்து இருக்கைகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருக்கைகள் தவிர்த்து அதிகபட்சமாக 25 ஆக இருக்க வேண்டும். மேலும், மினி பேருந்துகள் Wheel Base 390cm-க்கு மிகாமல் இருக்க வேண்டும்7. நிலைப்பேருந்து அல்லது மினி பேருந்து மூலம் வழிதடத்தின் ஒரு பகுதி அல்லது போதுமானதாக இல்லாத பாதைகளில் பொதுமக்கள் மேற்கொள்ளும் பயணங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 4 நடைகளுக்கு குறைவாக உள்ளதை சேவை செய்யப்படாத வழித்தடமாக கருதப்படும்.விருதுநகர் மாவட்டத்தில் இந்த மினி பேருந்து புதிய விரிவான திட்டம் 2024-இன் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விவரங்களை மேற்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள,; தனியார் அமைப்புகள், பேருந்து மற்றும் மினி பேருந்து உரிமையாளர்கள் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலரிடம் 10.02.2025க்குள் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S. அவர்கள் தெரிவித்துள்ளார்.
அரசு,அரசு உதவி பெறும் கல்வி கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட(பி.வ) மிகப்பிற்படுத்தப்பட்ட(மி.ப.வ) மற்றும் சீர்மரபினர் (சீ.ம) மாணவ/மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Schloarship) திட்டம்கீழ்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்(ம) சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ/மி.பிவ/சீ.ம மாணவ/மாணவியருக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணாக்கர்களுக்கு பெற்றொரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000 -க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.திட்டத்திற்கான விண்ணப்பங்கள்,University Management Information System (UMIS) (https://umis.tn.gov.in/) என்ற இணையதளம் மூலம் வரவேற்க செயல்பாட்டிற்கு வந்து உள்ளது.கல்வி உதவித்தொகைக்கு, மாணாக்கர்கள் உடனடியாக விண்ணப்பிக்காலம் எனவும், கல்வி உதவித்தொகை விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 28.02.2025 ஆகும். அ). புதுப்பித்தல் மாணாக்கர்கள்: (Renewal Students i.e.2nd, 3rd & 4th Year in the year 2024-25) ஏற்கனவே கல்லூரியில் கல்வி உதவித் தொகை பெற்று 2024-25 ஆம் ஆண்டில் 2,3 (ம) 4 ஆம் ஆண்டு பயின்று வரும் புதுப்பித்தல் மாணாக்கர்கள், கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அம்மாணாக்கர்களுக்கு கல்லூரிகளில் நடப்பாண்டில் கல்வி பயில்வதை, சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.ஆ)-புதிய மாணாக்கர்:((1st Year student & the students who are not applied the scholarship during the year 2023-2024) நடப்பு கல்வியாண்டில் (2024-2025) புதிதாக கல்வி உதவித் தொகை பெற கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற (ம) சென்ற வருடத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய புதிய மாணர்க்கர்கள், தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal officer) அணுகி https.//umis.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மூலம் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.3) மேற்படி விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து, BC, MBC, & DNC வகுப்பைச் சார்ந்த மாணாக்கர்களை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.4) கல்வி உதவித் தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் (07.02.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியம், நெடுங்குளம் ஊராட்சியில், பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் திட்டத்தின் கீழ், ரூ.1.20 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,நெடுங்குளம் ஊராட்சி நல்லுத்தேவன்பட்டி கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தக் கூடம் கட்டப்பட்டு வருவதையும், தச்சக்குடி ஊராட்சி தலைப்பட்டி கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.13.35 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடை கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், நடுவப்பட்டி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.மேலும், நடுவப்பட்டி ஊராட்சியில், பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் திட்டத்தின் கீழ், ரூ.1.20 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி எஸ்.எப்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (07.02.2025) தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது. ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது. நீங்கள் உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர் உரிமையை பெறுகிறீர்கள்.ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். உங்களுக்கு உரிமைகள் வருகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் அனுபவங்கள் தான் சிறந்த ஆசிரியர். மற்றவர்களின் சரியான அனுபவங்களை அவர்கள் கடந்து வந்த பாதைகளை நாம் நன்கு கற்றுகொள்ள வேண்டும்.மிக புகழ்பெற்ற தத்துவஞானி மனிதன் என்பவன் தன்னால் செய்ய முடியாமல் போன, தன்னால் தவற விடப்பட்ட வாய்ப்புகளை நினைத்து உருகும் ஒரு குற்ற உணர்ச்சியின் தொகுப்பு என்று குறிப்பிடுகிறனர். அப்படிப்பட்ட அனுபவங்களை நீங்கள் ஒருபோதும் தவற விடக்கூடாது. உங்களுக்கு என்ன விதமான வாய்ப்புகள் இருக்கின்றன. என்ன விதமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்கள் என்பதை பற்றி சொல்லப்படக்கூடியது தான் இந்த நிகழ்ச்சி.அடுத்தவர்களின் அனுபவங்களில் இருந்து தனக்கான பாடத்தை கற்றுக்கொள்வது தான் மிக முக்கியமானது. இரண்டு வகையில் ஒருவருக்கு துன்பம் வரும். நமக்கு நாமே உருவாக்கி கொள்ளக்கூடிய துன்பம். இதை தான் இலக்கியத்தில் தீதும் நன்றும் பிறர் தர வாரா. நமக்கு வரக்கூடிய இன்பமும், துன்பமும் மற்றவர்களால் வராது. நாமே உருவாக்கி கொள்கிறோம். மற்றொன்று மற்றவர்களால் ஏற்படக்கூடிய துன்பம். இந்த இரண்டில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்வதற்கு அறிவு தான் மிக முக்கியமானது.இந்த கால கட்டத்தில் கற்றலில் 15 விழுக்காடு மட்டும் தான் நீங்கள் படிப்பது, தேர்வு எழுதுவது, மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது. மீதமுள்ள 85 விழுக்காடு வாழ்க்கைக்கு தேவையான கற்றல். இந்த கால கட்டத்தில் தான் நீங்கள் நல்ல நட்பை, உறவை உருவாக்கி கொள்ளகூடியது மிகவும் அவசியம். எதையெல்லாம் செய்யவேண்டும், செய்யக்கூடாது எனவும், நாம் அறிவை முதன்மைப்படுத்தி, உணர்ச்சியை இரண்டாம் நிலைப்படுத்தி செயல்படுத்துவது குறித்த பக்குவத்தை பெறக்கூடிய காலக்கட்டம். யாரெல்லாம் சிறந்த வெற்றிகளை பெற்று சிறந்த நிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவான பண்புகள் இருக்கிறது. யாருக்கெல்லாம் விழிப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாரும் வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் அந்த பொதுப்பண்பு.நான் சிறப்பாக இருக்கிறேன். அல்லது நான் எப்படி என்னை வெளிப்படுத்தி கொள்கிறேன் என்பதை குறித்து நேர்மறையான, எதிர்மறையான செய்திகளை, விமர்சனங்களை, நன்மைகளை நாம் கவனமாக புரிந்து கொள்ள வேண்டும்.நமக்கு என்னென்ன பிரச்சினைகளை நாம் நினைத்துக்கொள்கிறோமோ, அல்லது உண்மையாகவே இருக்கின்றதோ அதே பிரச்சினைகள் தான் எல்லோருக்கும் வேறு வேறு வழிகளில் இருக்கும். எனவே, இந்த பிரச்சினைகள், இயலாமையோ அல்லது நமக்குண்டான வாய்ப்புகளோ ஒருபோதும் நமக்கான வெற்றியையோ, எதிர்காலத்தையோ தீர்மானிப்பதில்லை.நீங்கள் அனைவரும் எல்லாவற்றிலும் கவனத்தோடு இருக்க வேண்டும் ஒவ்வொரு தவறுகளில் இருந்தும் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும். தவறை தைரியமாக ஒத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டு வர வேண்டும். நான் தவறு செய்து விட்டேன் என ஒத்துக் கொள்வதற்கு மிகப்பெரிய தைரியமும், அறிவும் வேண்டும்.இந்தக் கால கட்டத்தில் உங்களுக்கு நேரமும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும். அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அரசினுடைய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம். ஏனென்றால், திறமையை விட, கல்வியை விட, உழைப்பை விட என மற்ற எல்லாவற்றையும் விட ஒரு பெண்ணை வெற்றியாளராக மாற்றுவதற்கு விழிப்புணர்வு தான் மிகவும் அவசியம். எனவே, நீங்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற்ற மாணவிகளாக உருவாக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் (06.02.2025) தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது. ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது. நீங்கள் உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர் உரிமையை பெறுகிறீர்கள்.ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். உங்களுக்கு உரிமைகள் வருகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.எந்த ஒன்றிற்கும் சரியான புரிதலோடு உண்மையை சரியாக புரிந்து கொள்ளுதல் தான் மிகப் பெரிய திறனாக பார்க்கப்படுகிறது. யாராது ஒருவரை அவருடைய முகமதிப்பு வைத்து நம்புவதற்கு தான் இந்த சமூகத்தில் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி நமக்கு இருக்கக்கூடிய அறிவை பயன்படுத்தி அறிவின் துணையோடு எந்த ஒன்றும் சரியானதா இல்லையா என்று புரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதுவும் குறிப்பாக கல்லூரி மாணவிகள் கல்லூரியை விட்டு வெளியில் செல்லும் பொழுது உங்களுக்கு அதிகமான கடமைகள் இருக்கிறது.எனவே, இந்த வயதில் உங்களுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்ற பொழுது, அதை எப்படி அதற்காக தயார்படுத்தி கொள்வது, வாய்ப்புக்களை எப்படி பயன்படுத்தி கொள்வது, அதுவும் குறிப்பாக ஒரு கிராமப்புற சூழலில் இருந்து வரக்கூடிய மாணவிகளுக்கு இன்னும் என்னென்ன வாய்ப்புக்களை இந்த சமூகம் வழங்குகிறது என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.தங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு தனிமனித, சமூக, பொருளாதாரத்தில் வாழ்க்கை முழுவதும் வரக்கூடிய சிக்கல்களுக்கு நாம் நம்முடைய அறிவின் மூலமாக நம்மை தயார் செய்து கொள்வது மிக முக்கியம்.யாரெல்லாம் சிறந்த வெற்றிகளை பெற்று சிறந்த நிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவான பண்புகள் இருக்கிறது. யாருக்கெல்லாம் விழிப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாரும் வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் அந்த பொதுப்பண்பு.மேலும், மதிப்பெண்கள் மிகவும் முக்கியம். ஆனால் அந்த மதிப்பெண்களோடு விழிப்புணர்வு பெறுவது தான் மிகவும் முக்கியம். கல்வியறிவு என்பது அடுத்தவர்களின் அனுபவங்களை நாம் பெற்று கொள்வது. அந்த அனுபவங்கள் தான் நம் வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடிய தனிமனித, சமூக, பொருளாதார சிக்கல்களுக்கு நமக்கு தீர்வுகளை தருகிறது.நாம் மனிதனிடத்தில் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களுக்கு நம்முடைய அறிவு துணை செய்கிறது. நாம் படித்து வேலைக்கு சென்று பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு அறிவு தான் துணை செய்கிறது. இதனை தான் திருவள்ளுவர்அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண் என்ற திருக்குறளில், அறிவு என்பது நம்மைத் துன்பத்தில் இருந்து காக்க உதவுகிறது. அறிவிற்கு அந்த திறமை, தகுதி உண்டு. நாம் தான் அந்த அறிவை பெற்றுக்கொள்ளவும், பெற்ற அறிவை பயன்படுத்தி துன்பத்தில் இருந்து காத்துக்கொள்வதும் தொடர்ச்சியான விழிப்புணர்வில் இருக்கிறது.மனிதர்களை மாற்றுவது என்பது அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் தான். வாய்ப்புகளை மனிதன் உருவாக்கி கொண்டே இருக்கிறான் அல்லது வாய்ப்புகள் எங்கு எல்லாம் இருக்கிறது என்று தேடிக்கொண்டே இருக்கிறான். தேடக்கூடியவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.இந்த காலகட்டத்தில் எதிர்கால திட்டமிடுதல் செய்வது மிகவும் அவசியம். இன்று மனிதனுடைய வெற்றி என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆனால் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி கொள்வதும், அந்த அடையாளத்தோடு வாழ்க்கையினுடைய சிக்கல்களை எதிர்கொள்வதும் குறிப்பாக பொருளாதாரத்தில் ஒருவர் தன்னிறைவு பெறுவது மிக மிக முக்கியமான ஒன்று.ஒரு காலகட்டத்தில் பெண்கள் இந்த சமுதாயத்தில் தாய்மொழி சமூகமாக இருந்தது. பெண்கள் தான் ஒரு குடும்பத்தின் தலைவியாக இருந்தார். வேட்டைச் சமூகமாக இருந்த பொழுதும் கூட பெண்கள் தான் அந்த வேட்டை சமூகத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தார்.பெண்களுக்கான விடுதலை என்று சொல்கின்ற பொழுது அவர் விரும்பிய பணியை செய்வது தான் சுதந்திரம். இன்றைய சமூகத்தில் இன்று மட்டுமல்ல எப்பொழுதும் பெண்களுக்கான மிக வலிமையான விடுதலை என்பது அவர்கள் இருக்கக்கூடிய பொருளாதார சுதந்திரம் தான். அதிகமாக பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் இருக்க வேண்டும். தான் சம்பாதித்ததை தான் உருவாக்கிக் கொண்ட செல்வத்தை முழுமையாக தானே அந்த செல்வத்தின் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு வாய்ப்புகளும், உரிமைகளும் கிடைப்பதே மிக முக்கியமான பெண்களுக்கான விடுதலை ஆகும்.அந்த விடுதலை பெறுவதற்கும், பொருளாதார வலிமை பெறுவதற்கும் கல்வி மிகப்பெரிய ஆயுதம். அந்த ஆயுதத்தின் துணைக்கொண்டு ஒருவருடைய எதிர்கால வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். எனவே இப்படிப்பட்ட சிந்தனைகள் பெறுவதற்கும், பொருளாதார வலிமை பெறுவதற்கும், நீங்கள் சிந்திப்பதற்கும் உங்களுக்கு வழிகாட்டுவதற்கும் தான் இந்த நிகழ்ச்சி என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து (06.02.2025) பொது தேர்வை எதிர் கொள்ளுதல் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வலையொளி (YOUTUBE) நேரலையில் உரையாற்றினார்.தற்போது பொதுத்தேர்வு ஆரம்பிக்கக்கூடிய காலகட்டத்தில் நாம் எல்லோரும் இருக்கிறோம். தேர்வுகள் என்பது வாழ்க்கை முழுவதும் வந்து கொண்டே இருக்கக்கூடிய ஒரு தொடர் நிகழ்வு. 10, 11, 12 ஆம் வகுப்புகளில் தேர்வு, அடுத்து நீங்கள் உயர்கல்விக்கு செல்கின்ற பொழுது நிறைய தேர்வுகளை எதிர் கொள்ள வேண்டும். பிறகு நீங்கள் ஏதேனும் ஒரு வேலைக்கு, ஒரு பொறுப்புக்கு அல்லது ஒரு தனியார் நிறுவனத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கூட தேர்வுகளை எழுதி வெல்ல வேண்டும். பிறகு ஒரு பணிகள் சேர்வதற்;கும் பிறகு பல்வேறு இடங்களில் அது அரசுப்பணி அல்லது தனியார் பணியாக இருந்தாலும் அதில் நிறைய பதவி உயர்வுகளுக்கான தேர்வுகள் கூட இருக்கின்றன.இப்படி தேர்வுகள் என்பது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரக்கூடிய ஒரு செயல்பாடு. ஆனால் நாம் ஒன்றை மட்டும் மிக நுட்பமாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விளையாட்டில், ஒரு போரில் முதலில் அவர் தன்னுடைய மனதளவில் வென்று இருக்கிறாரா என்பது மிக மிக முக்கியமான ஒன்று. அதுபோல இந்த தேர்வினை மாணவர்கள் மனவலிமையோடு எதிர்கொள்ள வேண்டும். இந்த காலகட்டங்களில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும், நேரங்களும் மிக முக்கியமானது. மாணவச் செல்வங்கள் இந்த இளம் பருவத்தில் அதை அறிந்து கொள்வது உங்களுக்கான வெற்றியை எளிதாக்கும்.எந்த ஒன்றையும் திரும்பத் திரும்ப தொடர்ச்சியாக செய்வதன் மூலமாக உங்களுக்கு அந்த திறமை வருகிறது. எனவே ஒரு சிறந்த படிப்பாளி என்று யாரும் இருப்பதில்லை. தொடர்ச்சியாக அதன் மீது ஆர்வத்தோடு, அதனை முயற்சி செய்பவர் வெற்றி பெறுகிறார். கவனச் சிதறல் என்பது மாணவர்களுக்கு மட்டும் இருக்கக்கூடிய பிரச்சனை இல்லை. இப்பொழுது இருக்கக்கூடிய உலகத்தில் எல்லோருக்கும் எல்லா காலகட்டத்திலும் இருக்கக்கூடிய பிரச்சனைதான். உங்களுடைய கவன சிதறல்களை வேறு நல்ல ஒன்றுக்கு திருப்புங்கள்.நமது மாவட்டம் பள்ளி பொதுத் தேர்வு தேர்ச்சியில் சிறந்த ஒரு மாவட்டமாக தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக பொதுத்தேர்வுகளில் மாணவச் செல்வங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டும் பொதுத்தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் மிகுந்த மன வலிமையோடு தேர்வை எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் இந்த காலகட்டத்தில் அதுவும் குறிப்பாக எப்படி ஒரு தொடர் ஓட்டத்தில் கடைசி ஓட்டம், கடைசி சுற்று என்பது எவ்வளவு முக்கியமோ, அதே போன்று இந்த தேர்வு நாட்களில் நீங்கள் இன்னும் மிகுந்த ஆர்வத்தோடும், மன மகிழ்ச்சியோடும் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும்.தேர்வு என்பது வாழ்க்கை முழுவதும் வந்து கொண்டே தான் இருக்கும். அது தவிர்க்க முடியாதது. இந்த தேர்வில்; எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும். ஒரு ஐந்து ஆண்டுகள் கழித்து இன்னும் சிறிது முயற்சி செய்திருந்தால் இன்னும் மதிப்பெண்கள் அதிகமாக கிடைத்திருக்குமே என்று நினைத்துப் பார்த்தால் அது திரும்ப கிடைக்க முடியாத ஒன்று. எதிர்காலத்தில் இப்படி ஒரு நாட்களை வீணடித்து விட்டோமே அல்லது அந்த நாட்களில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருந்தால் இன்று நான்; மகிழ்ச்சியாக இருந்திருப்பேனே என்றும், வாய்ப்பை தவற விட்டு விட்டோமே என்று யோசித்தால் நிச்சயமாக அந்த வாய்ப்புகள் பெரும்பாலும் திரும்ப வரப்போவதில்லை.நீங்கள் படித்ததை இன்னும் ஒரு முகத்தோடு அதை குவியப்படுத்தி, கவனப்படுத்தி தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதும், ஒரு சில பாடங்களில் கவனக்குறைவு அல்லது ஆர்வமாக இல்லை என்றால் அடுத்து வரக்கூடிய வாரங்களில் ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொண்டும் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் வருவது, குறைவான மதிப்பெண்கள் வருவது, வெற்றி தோல்வி வருவது என்பதெல்லாம் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். இன்று ஒரு வெற்றியை பெறுபவர் நாளை ஒரு தோல்வியை சந்திப்பார். ஒரு தோல்வியை சந்திப்பவர் நாளை ஒரு வெற்றியை சந்திப்பார். வெற்றியும் தோல்வியும் ஒரு சாலையினுடைய மேடு பள்ளங்களை போன்றது. ஆனால் இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டியது, என்னால் எவ்வளவு சிறப்பாக அதில் செயல்பட முடியுமோ, என்னுடைய முழு ஈடுபாட்டை எவ்வளவு கொடுக்க முடியுமோ, என்னுடைய ஆர்வத்தை எவ்வளவு முழுமையாக வளர்க்க முடியுமோ, நாளை நான் இதை செய்யாமல் போய்விட்டேன் என்று வருத்தம் கொள்ளாத அளவுக்கு எப்படி செயல்பட முடியுமோ, அப்படி செயல்படுங்கள்.படிப்பு என்பது மிக மகிழ்ச்சியான ஒன்று. உலகின்; பல்வேறு இடங்களில் இது போன்று ஒரு நல்ல சூழல்களில் படிப்பதற்கு வாய்ப்பு இல்லாத குழந்தைகள் இருக்கிறார்கள். நமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் மிகப்பெரிய வாய்ப்பு. யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்த்தால், தங்களுக்கான வாய்ப்புகளை தவறவிடாதவர்கள், தங்களுடைய வாய்ப்புகள் குறித்து நல்ல விழிப்புணர்வு பெற்றவர்கள் தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.உங்களுக்கு இருக்கக்கூடிய கைப்பேசி, இணையதள வாய்ப்புகள் என்பது ஒரு இரண்டு பக்கமும் கூர்மையான ஒரு கத்தியை போன்றது. அதை எவ்வளவு லாவகமாக பயன்படுத்தி நமக்கு ஏற்ப அது பயன்படுத்திக் கொள்கிறோமோ அதில்தான் ஒருவருடைய வெற்றி இருக்கிறது. உலகம் முழுவதும் நிறைய வாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன. இந்தியா முழுமைக்கும் நடக்கக்கூடிய போட்டித் தேர்வுகள் என்பது நிறைய இருக்கிறது. நமது மாவட்டத்திலேயே ஒரு சாதாரண கிராமத்தில் அரசு பள்ளியில் எந்த ஒரு பின்புறமும் இல்லாமல் படித்த மாணவர்கள் இன்று இந்தியாவின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் இருக்கின்றார்கள். அதற்கெல்லாம் ஒன்றே ஒன்றுதான் காரணம். அவர்கள் பெற்ற ஆர்வம்.இந்த தேர்வு காலகட்டத்தில் நீங்கள் படிப்பதற்கும், கல்வியின் வழியாக உயர்வதற்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். தேர்வுகள் குறித்து ஒருபோதும் பயம் வேண்டாம். ஏனென்றால் வாழ்க்கை முழுவதும் தேர்வுகள் வரும். இது ஒரு இறுதித் தேர்வு அல்லது நிலையான தேர்வு இல்லை. ஒன்றே ஒன்றை மட்டும் தான் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். சிறந்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்பவர்கள் வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சியை அடைகிறார்கள். நமது மாவட்டத்தினுடைய குழந்தைகள் மகிழ்ச்சியை பெறக்கூடிய குழந்தைகளாக, கல்வியின் வழியாக மிகப்பெரிய வாய்ப்புகளை பெறக்கூடிய குழந்தைகளாக பொது தேர்வு கால கட்டத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடும், மிகுந்த தன்னம்பிக்கையோடும் உங்களால் எவ்வளவு முடியுமோ உங்களுடைய முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி தேர்வை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்த வலையொளி (YOUTUBE) நேரலை நிகழ்ச்சியினை 90 அரசு உயர்நிலை பள்ளிகள், 100 அரசு மேல்நிலை பள்ளிகள், 67 அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகள், 54 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 311 பள்ளிகளைச் சேர்ந்த 10- ஆம் வகுப்பு பயிலும் சுமார் 25,000 மாணவர்கள், 11- ஆம் வகுப்பு பயிலும் சுமார் 26,000 மாணவர்கள் என மொத்தம் 51,000 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டு பயனடைந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (05.02.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கிய கழகம் இணைந்து உருவாக்கிய கரிசல் சொலவடைகள் - விடுகதைகள் - நாட்டார் கதைகள், கரிசல் கதைகள், கரிசல் கவிதைகள்(மரபும் புதிதும்) ஆகிய மூன்று புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வெளியிட்டார். விருதுநகர் மாவட்டத்தை பற்றிய பண்பாடு, வரலாறு, இலக்கியம், தொழில் ஆகிய நான்கு குறித்து ஆவணப்படுத்தும் வகையில் பல்வேறு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பண்பாடு, வரலாறு, இலக்கியம், தொழில் ஆகிய நான்கும் ஒரு சமூகத்தில் மிக மிக முக்கியமானது. ஒவ்வொரு தலைமுறை என்று சொல்லக்கூடிய 30 ஆண்டுகளுக்கும் இந்த நான்கும் மாற்றமடையும். அதை ஆவணப்படுத்துவது என்பது எதிர்கால தலைமுறைக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கும். அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் வைப்பாற்றங்கரையின் வரலாற்றுத் தடம், கரிசல் இலக்கிய ஆய்வுக்கோவை - 2023, கரிசல் இலக்கிய மலர், கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகளில் இளையோருக்கான பதிவுகள்- பன்னாட்டுக் கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரைகள், Glimpses Of Virudhunagar District, கரிசல் நிலவியல் கதைகள், ECHOES OF VIRUDHUNAGAR ETHNIC VISUAL CELEBRATION, விருதுநகர் மாவட்டத்தில் காந்தி, கற்றது ஒழுகு மாணவர் விழிப்புணர்வு கையேடு, தமிழ்க் கவிதைகள் ஓர் அறிமுகம், கி.ரா.வின் முத்து கதைகள் பத்து, மரமும் மரபும் ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் இல்லாத அளவிற்கு என்ன மாதிரியான வழக்காடுகள் இருக்கின்றது என்பதை ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்காக சொலவடைகள் என்ற கிராமப்புறத்தில் சொல்லக்கூடிய பழமொழிகள், விடுகதைகள், கிராமத்தில் இருக்கக்கூடிய நம்பிக்கைகள் சார்ந்த கதைகளாக இருக்கக்கூடிய நாட்டார் கதைகள் போன்றவைகள் நிறைய ஆவண படுத்தாமல் இருக்கிறது. அதனை பெரிய குழு அமைத்து, அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து, அதனை இரண்டு விதமாக ஆவண படுத்துகிறார்கள்.ஒன்று புத்தகமாகவும், மற்றொன்று வாய்மொழியாக சொல்லக்கூடியதை வீடியோ மூலமாகவும் ஆவணப்படுத்துகிறார்கள்.ஏறத்தாழ ஒரு 18 மணி நேரம் ஆவணப்படுத்த கூடிய வீடியோவை எடுத்து நமது கரிசல் கழகம் ஆவணப்படுத்தி இருக்கிறது. அதன்படி, புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ள கரிசல் சொலவடைகள் - விடுகதைகள் - நாட்டார் கதைகள், கரிசல் கதைகள், கரிசல் கவிதைகள் (மரபும் புதிதும்) ஆகிய மூன்று நூல்கள் இன்று வெளியிடப்;பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் 2024 மற்றும் மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் மினி பேருந்தின் கட்டண திருத்தம் வாகன சட்டம் 1988 G.O.Ms.No.33, நாள் 23.01.2025-ன் படி பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போதுமான பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை அரசு வழங்குவதற்காகவும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களின் மக்கள் தொகை மற்றும் போதுமான பேருந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ள அருகில் உள்ள பேருந்து நிலையம் அல்லது அருகிலுள்ள நகரத்தை அடைய எந்த வழியும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் தமிழக அரசால் மேற்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த புதிய விரிவான திட்டம் 2024 வெளியீடு உடனடியாக அமலுக்கு வருகிறது மேலும் தமிழ்நாடு மாநிலத்தில் மினி பேருந்துக்கான கட்டண திருத்தம் 1.5.2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:1. அதிகபட்ச தூரம் 25 கிலோ மீட்டருக்கு மிகையாக இருக்கக் கூடாது.2. குறைந்தபட்ச சேவை செய்யப்படாத பாதை நீளம் ((Unserved Route Length) சாலையில் மொத்த பாதை நீளத்தில் 65% க்கு குறைவாக இருக்கக்கூடாது.3. தொடக்கப்பள்ளி/முனையப்புள்ளி என்பது சேவை செய்யப்படாத குடியிருப்பு/கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும். புள்ளிகளில் ஒன்று பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்.4. முனைய புள்ளியிலிருந்து அடுத்த ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அரசு மருத்துவமனை மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம், உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை சந்தை, ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், புகழ்பெற்ற வழிப்பாட்டு தளங்கள் அல்லது பேருந்து நிலையத்திற்கு சற்று முன்பு உள்ள இடம் மற்றும் வழங்கப்பட்ட பாதை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட பாதை நீளத்தை விட அதிகமாக இருக்கும். பின்னர் பிராந்திய போக்குவரத்து ஆணையம்/மற்ற பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து, அதாவது மாநில போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளாட்சி அமைப்புகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் போன்றவை மேற்கூறிய தேவைப்படும் இடங்களுக்கு பயணிகளை சென்றடைய உதவும் வகையில் சேவை பகுதியில் ஒரு கிலோ மீட்டர் வரை கூடுதல் தூரத்தை அனுமதிக்கலாம். மேற்கூறிய இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு இது பொருந்தாது.5. பழைய மினி பேருந்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்கள் இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு விருப்பத்தினை எழுத்துப்பூர்வமாக அளித்து அனுமதி சீட்டினை ஒப்படைக்க வேண்டும். இப்புதிய வழித்தடத்தில் குறைந்த பட்சம் 1.5கி.மீ கூடுதல் சேவை செய்யப்படாத பாதை இருக்க வேண்டும்.6. மினி பேருந்து இருக்கைகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருக்கைகள் தவிர்த்து அதிகபட்சமாக 25 ஆக இருக்க வேண்டும். மேலும், மினி பேருந்துகள் Wheel Base 390cm-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.7. நிலைப்பேருந்து அல்லது மினி பேருந்து மூலம் வழிதடத்தின் ஒரு பகுதி அல்லது போதுமானதாக இல்லாத பாதைகளில் பொதுமக்கள் மேற்கொள்ளும் பயணங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 4 நடைகளுக்கு குறைவாக உள்ளதை சேவை செய்யப்படாத வழித்தடமாக கருதப்படும்.விருதுநகர் மாவட்டத்தில் இந்த மினி பேருந்து புதிய விரிவான திட்டம் 2024-இன் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விவரங்களை மேற்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள,; தனியார் அமைப்புகள், பேருந்து மற்றும் மினி பேருந்து உரிமையாளர்கள் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலரிடம் 10.02.2025க்குள் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.