தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டியில் இளங்கலை அறிவியல் B.Sc (Hospitality & Hotel Administration) பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் (Diploma) சேர்ந்து படித்திட விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு B.Sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பும், ஒன்றரை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma in Food Production) பட்டயப் படிப்பும் மேலும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினஞர் (Craftsmanship Course in Food Production & Patisserie) ஆகிய படிப்புகள் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.சென்னை தரமணியிலுள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition என்ற நிறுவனமானது ISO 9001 2015 தரச்சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமையப் பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம், மேலும் இந்நிறுவனம் சர்வதேச Amercian Council of Business அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் பிரான்ஸ் நாட்டில் உள்ள Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. Hotel Management Institute Survey ன்படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது. CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் பதிமூன்றாவது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது. மேற்கண்ட நிறுவனத்தில் பயில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மொத்த மதிப்பெண்ணில் 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க இப்படிப்புகளை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் தங்களது திறமையின் அடிப்படையில் நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள் விமானத்துறை, கப்பல் துறை மற்றும் சேவை துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படும்.ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000- முதல் ரூ.35,000- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000- முதல் ரூ.70,000- வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். இப்பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம் ww.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) அளிக்கப்படவுள்ளது.இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பி.எஸ்.சி மற்றும் எம்.எஸ்.சி நர்சிங் பட்டப் படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங், மற்றும் பொது செவிலியர் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியில் பங்கு பெற 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்காக கால அளவு இரண்டு மாதமும் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் அளிக்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் ww.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ்; வேலைவாய்ப்பு பயிற்சி (PM INTERNSHIP) வழங்கும் திட்டத்தின் வாயிலான நடப்பாண்டில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 14,889 நபர்களுக்கு முன்னனி தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் சேர்வதற்கு தேவையான கல்வி தகுதியுடைய 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டயப்பொறியாளர், இளங்கலை கலை, அறிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு, வணிக நிர்வாகம் மற்றும் பார்மஸி பட்டம் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 11.03.2025 செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இத்திட்டத்திற்கான சிறப்பு சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற 21 முதல் 24-வயதிற்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்காலத்தில் 12 மாதங்களுக்கு உதவித்தொகையாக மாதத்திற்கு ரூ.5,000- வீதம் வழங்கப்படும். மேலும் பயிற்சிக்காலத்தில் ஒருமுறை மட்டும் மானியமாக ரூ.6,000 வழங்கப்படும். இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவர்கள் கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசியுடன் வரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஏற்கனவே தேசிய தொழிற்பழகுநர் திட்டத்தில் தொழிற் பழகுநர் பயிற்சி பெற்றிருக்க கூடாது. மேலும் முழுநேர பணிசெய்பவராகவோ, முழுநேரக் கல்வி கற்பவராக இருக்ககூடாது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 12.03.2025 அன்று கடைசி நாளாகும்.மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம் மற்றும் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்; (04562 -294755) என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் இணையம் மூலம் விண்ணப்பிக்க https://pminternship.mcg.gov.in/ என்ற வலைதளத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.மேலும், நான் முதல்வன் பினிஸிங் ஸ்கூல் (NMFS) என்னும் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சித்திட்டத்தில் இணைந்து பயிற்சி பெற விரும்புவோர் 16 வயது முதல் 45 வரை உள்ளவர்கள் அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் https://candidate.tnskill.tn.gov.in-இல் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட இருதிட்டங்களிலும் விண்ணப்பிக்க விரும்புவோர் இம்முகாமில் கலந்துகொள்ளவும், கலந்துகொள்ள இயலாதவர்கள் மேற்காணும் வலைதளங்களில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமம் துவக்கப்பள்ளியில் (10.03.2025) முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் ழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சித் தலைவர் மாணவர்களுக்கு வழங்கப்படும் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் (08.03.2025) பெருந்தலைவர் காமராஜர் புதிய பேருந்து நிலையத்தின் 200-வது நாள் விழாவானது மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தின் நகரின் உடைய வடக்கு பகுதியில் இருக்கக்கூடியவர்கள் மிகவும் பாதிப்பு அடைவார்கள். அவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் இருக்காது. அதே நேரத்தில் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய தெற்கு பகுதியில் இருக்கக்கூடிய மக்களின் வளர்ச்சி குறைவாக இருக்கிறது.எனவே, எந்த ஒரு வளர்ச்சியும் சமநிலையோடு, நீடித்த நிலையான அனைத்து தரப்பு வளர்ச்சியும் உள்ளடக்கிய ஒரு முயற்சியாக தான் இருக்கவேண்டும்.புதிய பேருந்து நிலையமானது அரசு அதிகாரத்தின் மூலமாக இயங்க வைக்கக்கூடாது. அது பொதுமக்களின் ஆதரவோடு தான் வரவேண்டும்.இந்த பேருந்து நிலையம் சரியாக செயல்பட வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக 20 கூட்டங்கள் நடத்தப்பட்டு,அதற்கான சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி பொதுமக்களே பேசி அதனை சரிசெய்தார்கள்.அமைச்சர் பெருமக்கள் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள்கள் உள்ளிட்டோர்களின் பேச்சுவார்த்தை மற்றும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த பேருந்து நிலையம் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செயல்பட்டது.அதற்கு பின்பும் கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதனுடைய நடைமுறை சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.எனவே, ஒவ்வொரு செயலும் பொதுமக்களுடன் இணைந்து மக்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் அவர்களின் எந்த நலனையும் பாதிக்காத வகையில் தொடர்ச்சியாக செயல்பட்டு அனைவரும் இணைந்து மிகவும் சிறப்பாக 200 நாள் வந்திருக்கிறது.இந்த பேருந்து நிலையத்தில் கடைகள் பொதுமக்களுக்கு தேவைப்படுவதால் அதிகமான கடைகள் கொண்டு வர வேண்டும். மேலும், பேருந்து நிலையம் ஆரம்பித்த பிறகு இந்த நகரின் உடைய தெற்கு பகுதி நிறைய வளர்ச்சியை பெற வேண்டும். விருதுநகர் மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க நகராட்சியாக மாற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் திரு.மாதவன், போக்குவரத்து அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் (08.03.2025) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பிரதம மந்திரி திவ்ய கேந்திரா திட்டத்தின் மூலமாக Artificial Limbs Manufacturing Corportation of India (ALIMCO)/PMDK நிறுவனம் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.47.38 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வழங்கினார்கள்.முதலமைச்சர் அவர்கள் தலைமையில் செயல்படும் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அறிவிக்கும் திட்டங்களின் மூலம் அவர்களது வாழ்வில் புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையையும், சமூக பாதுகாப்பையும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதனடிப்படையில், Artificial Limbs Manufacturing Corportation of India (ALIMCO) நிறுவனம் சார்பில், (பேட்டரி மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, ஊன்றுகோல், சிறப்பு நாற்காலி) என118 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.21,34,331/- மதிப்பிலும், TORCHIT நிறுவனம் மற்றும் ONGC நிறுவனம் மூலம் சமூக பங்களிப்பு நிதி (CSR Fund) திட்டத்தில் பார்வைத் திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் மற்றும் ஸ்மார்ட் கேன் என 90 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10,00,000/- மதிப்பிலும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் (ஸ்மார்ட் போன்) என 99 பயனாளிகளுக்கு ரூ.16,03,701/- மதிப்பிலும் என மொத்தம் 307 பயனாளிகளுக்கு ரூ.47.38 இலட்சம் மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இவ்விழாவில் விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சீனிவாசன், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் (08.03.2025) மாவட்ட நிர்வாகம் சார்பில், சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற தாயும் மகனும் இணைந்து ஓடும் நெடுந்தூர விழிப்புணர்வு ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த மராத்தான் போட்டியானது காலை 6.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள நுழைவுவாயில் இருந்து ஆரம்பித்து சூலக்கரை மேடு வரை சென்று மருத்துவ கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது.இந்த மராத்தான் போட்டியில் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி வசந்தி மற்றும் அவரது மகன் செல்வன் மணிகண்டன் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.30,000/-மும், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி சங்கரேஸ்வரி மற்றும் அவரது மகன்கள் செல்வன்.குருராகவ் மற்றும் குருசரண் ஆகியோருக்கு இரண்டாம் பரிசாக ரூ.25,000/-மும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திருமதி ரதி மற்றும் அவரது மகன் செல்வன் ஹரிஷ் என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.20,000/-மும், விருதநகர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி கனகலெட்சுமி மற்றும் அவரது மகன் செல்வன் காமேஷ்குரு அவர்களுக்கு நான்காம் பரிசாக ரூ.15,000/-மும், மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி ராஜேஸ்வரி மற்றும் அவரது மகன் தங்கேஸ்வரன் என்பவருக்கு ஐந்தாம் பரிசாக ரூ.10,000/-மும் என வெற்றிப்பெற்ற 5 தாய்மார்கள் மற்றும் அவரது மகன்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வின் போது, திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.சே.குமரமணிமாறன், சாத்தூர் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், அனைத்து தாய்மார்கள் மற்றும் அவர்களது மகன்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், தமிழ்நாடு முழுவதும் 34,073 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 4,42,949 மகளிருக்கு 3,190.10 கோடி ரூபாய் வங்கிக்கடன் இணைப்புகள் வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் 3,584 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த மகளிருக்கு 366.26 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளை காணொலி காட்சி வாயிலாக இன்று (08.03.2025) வழங்கினார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரகஃ நகர்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த 10,569 நபர்களுக்கு ரூ.87.37 கோடி கடனுதவி மற்றும் இணை மானியத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.மேலும் விருதுநகர் மாவட்டத்தில், ஊரக பகுதியை சார்ந்த 703 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.62.41 கோடி மதிப்பிலான வங்கி நேரடி கடன், மற்றும் நகர்புற பகுதியை சார்ந்த 128 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20.50 கோடி மதிப்பிலான வங்கி நேரடி கடன், இதர மகளிர் நலத் திட்டங்களின் கீழ் 410 நபர்களுக்கு 2.30 கோடியும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 186 நபர்களுக்கு 2.16 கோடியும் ஆக மொத்தம் 10569 நபர்களுக்கு 87.37 கோடி கடனுதவி மற்றும் இணை மானியம் வழங்கப்பட்டது.பெண் பெற்றதால் பெருமை பெற்றோம் என்று சொன்னவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இந்த உலகில் இயற்கை நமக்கு அளித்து இருக்கக்கூடிய மிகப்பெரிய கொடை பெண்கள் தான் என்று சொன்னால் அது நிச்சயமான உயர்வு உணர்ச்சி அல்ல. இயற்கை நமக்கு வழங்கியிருக்க கூடிய இந்த கொடைதான் இந்த பூமி பந்தினுடைய சுழற்சியை, இயக்கத்தை நம்முடைய தலைவர்களை என்றென்றும் காக்கக் கூடியவர்களாக தொடர்ந்து பெண்கள் இருக்கிறார்கள்.அந்தப் பெண்களின் சக்தி, அண்டம் துவங்கிய காலத்திலிருந்து இன்று இருக்கக்கூடிய காலம் பார்த்தால் எங்கெங்கு காணினும் சக்தியானாய் என்று கவிஞர்கள் பாடினார்கள் என்று சொன்னால் உங்கள் சக்தி எல்லா இடங்களிலும் யாவித்து பரவி இருக்கிறது.அப்படி யாவித்து பரவி இருக்கக்கூடிய அந்த பெண் சக்தி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, அவர்கள் தங்களுடைய சக்தியை இந்த சமுதாயத்தின் பல்வேறு காரணங்களால் அவர்கள் இழக்க நேரிட்ட போது, தந்தை பெரியார் போன்ற சமுதாய தலைவர்கள் உருவாகி பெண்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்தார்கள்.வடக்கே ஒரு ராஜா செம்முன்றாய் தோன்றினார் என்று சொன்னால், இங்கே தந்தை பெரியார் வந்தார். அவர்தான் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினர். பெண் ஏன் அடிமையானால் என்கின்ற என்ற அவர் எழுப்பிய கேள்விக்கு விடை தான் இன்று பெண்கள் அடிமை இல்லை, அவர்கள் எல்லா துறையிலும் சாதிக்க பிறந்தவர்களாக இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையை வழங்கினார் என்பதற்கு பெரியார் காட்டிய வழி அவர்கள் எழுப்பிய கேள்வி இன்றைக்கு உங்களை உயர்த்தி இருக்கிறது.தமிழ்நாடு பெண் கல்விகளில் சிறந்து இருக்கிறது. இந்திய அளவில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலமாக நிதி உதவிகளை பெற்று பெண்கள் தொழில் முனைவராக இருக்கக்கூடிய மாநிலம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தான் என்ற பெருமை பெற்றிருக்கிறது. அந்த பெருமையை நீங்கள் தமிழ்நாட்டுக்கு பெற்று தந்து இருக்கிறீர்கள் என்று சொன்னால், உங்கள் மீது அரசும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நம்பி இந்த அரசாங்கம் இருக்கிறது உங்கள் மீது அரசும் முதலமைச்சரும் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை என்று உரைக்க சொன்னார் அவர்கள் உங்களுக்கு அறிவித்திருக்க கூடிய அத்தனை திட்டங்களும் மகளிர் உரிமைகளை காப்பதற்கு, உங்களுடைய நலனை பெறுவதற்கு, இந்த சமுதாயத்தில் நீங்கள் தலைநிமிர்ந்து நிற்பதற்கு காரணமான ஆட்சி நம்முடைய முதலமைச்சர் அவர்கள் என்றென்றும் உறுதுணையாக இருப்பார்கள்.எனவே இந்த மகளிர் தின நாளில் நாங்கள் உங்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதற்காக அல்ல உங்களுடைய பணிகளில் உங்களுடைய சிறப்புகளில் உங்களுடைய உயர்வுகளில் உங்களோடு என் இணைந்திருக்க கூடியவர்களாக நாங்களும் உங்களோடு உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று சொல்லி அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்களை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் நகரின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் நந்தா ஹோட்டல் சர்வீஸ் ரோடு மற்றும் எம்.ஜி.ஆர் சாலை வழியாக கர்மவீரர் காமராஜர் புதிய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து கோவில்பட்டி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் எம்.ஜி.ஆர் சாலை வழியாகவும், மதுரை செல்லும் பேருந்துகள் எம்.ஜி.ஆர் சிலை ஆத்துப்பாலம் டி.டி.கே ரோடு வழியாகவும், அருப்புக்கோட்டையில் இருந்து இராஜபாளையம் செல்லும் அனைத்து பேருந்துகளும் எம்.ஜி.ஆர் சிலை, புதிய பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர் சாலை வழியாகவும், இராஜபாளையத்தில் இருந்து அருப்புக்கோட்டை, இராமநாதபுரம், இராமேஸ்வரம், செல்லும் பேருந்துகள் எம்.ஜி.ஆர் சாலை வழியாக, புதிய பேருந்து நிலையம் வந்து எம்.ஜி.ஆர் சிலை வழியாக அருப்புக்கோட்டை மேம்பாலம் வழியாகவும், பழைய பேருந்து நிலையம் செல்லும் அனைத்து பேருந்துகளும் எம்.ஜி.ஆர் சிலை, ஆத்துப்பாலம், டி.டி.கே ரோடு வழியாக செல்ல வேண்டும்.பழைய பேருந்து நிலையத்திலிருந்து வரும் அனைத்து பேருந்துகளும் மீனாம்பிகை பங்களா வழியாக வரும் மதுரை- சிவகாசி பேருந்துகளும் டி.டி.கே ரோடு,ஆத்துப்பாலம், எம்.ஜி.ஆர் சிலை வழியாக புதிய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து மேற்கு மற்றும் தெற்கு செல்லும் பேருந்துகள் எம்ஜிஆர் சாலை வழியாக செல்ல வேண்டும்.கிழக்கு பகுதிக்கு செல்லும் அருப்புக்கோட்டை மற்றும் அருப்புக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் எம்ஜிஆர் சிலை, மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும்.இதனால் புதிய பேருந்து நிலையம் மேலும் சிறப்பாக செயல்படவும், வாகன விபத்துகளை தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், பள்ளி மாணவ மாணவிகளின் இடையூறு இன்றி செல்வதற்கும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் இடையூறு இன்றி செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.சிவகாசி முதல் விருதுநகர் மார்க்கம் நகர் பேருந்துகளில்சிவகாசியிலிருந்து விருதுநகர் வரும் பேருந்துகள் நந்தா ஹோட்டல், புறவழிச்சாலை, எம்ஜிஆர் சாலை, புதிய பேருந்து நிலையம், கருமாதி மடம், ஆத்துப்பாலம், டிடிகே ரோடு, மீனாம்பிகை பங்களா பழைய பேருந்து நிலையம் சென்று, மீண்டும் அதே வழியாக சிவகாசி செல்ல வேண்டும்.சாத்துார் முதல் வத்திராயிருப்பு மற்றும் அருப்புக்கோட்டை முதல் வத்திராயிருப்பு மார்க்கம் செல்லும் புறநகர் பேருந்துகளில்வத்தியிராயிருப்பிலிருந்து விருதுநகர் வழியாக சாத்தூர் செல்லும் பேருந்துகள் கணபதி மில், எம்ஜிஆர் சாலை, புதிய பேருந்து நிலையம், கருமாதி மடம், ஆத்துப்பாலம், டிடிகே ரோடு வழியாக பழைய பேருந்து நிலையம் சென்று மீண்டும் அதே வழியாக திரும்ப செல்ல வேண்டும்.இராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, முதல் இராமநாதபுரம், இராமேஸ்வரம் மார்க்கம் (அழகாபுரி, சிவகாசி வழி) அருப்புக்கோட்டை பேருந்துகள்விருதுநகருக்குள் நுழையும் போது நந்தா ஹோட்டல், புறவழிச்சாலை, எம்.ஜி.ஆர் சாலை, புதிய பேருந்து நிலையம், கருமாதி மடம், அல்லம்பட்டி வழியாக அருப்புக்கோட்டை இராமநாதபுரம் செல்ல வேண்டும். இராமநாதபுரம், அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகருக்குள் நுழையும் பேருந்துகள் கருமாதிமடம், புதிய பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர் சாலை, கணபதி மில் சந்திப்பு, புறவழிச்சாலை வழியாக இராஜபாளையம், தென்காசி மார்க்கம் செல்ல வேண்டும்.இதன்படியான வழித்தட மாறுதல்கள் 09.03.2025 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (07.03.2025) நடைபெற்ற சிறப்பு “ காபி வித் கலெக்டர்” 151-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் 30-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களுடன் கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி 07.01.2022 அன்று தொடங்கப்பட்டு, மொத்தம் 150 கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.மேலும் இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, தங்களின் துறை மற்றும் பணிகள் சார்ந்த வாய்ப்புகள், படிப்புகள் மற்றும் அதற்கான திறமைகள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றி ஊக்கப்படுத்தி, அவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற 151 வது அமர்வு காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் அனுபவங்கள், படைப்புகள், பெறப்பட்ட அங்கீகாரங்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து, ஆக்கப்பூர்வமான படைப்புகளை புதிய தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வது குறித்தும், புதிய படைப்பாளர்களை உருவாக்குதல், அதற்கான விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்துவது குறித்தும் கலந்துரையாடினார்.