விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், (25.01.2025) தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி இணைந்து வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு மொத்தம் ரூ.84,000- மதிப்பிலான பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வழங்கினார்.அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கோகுல் மற்றும் மதன் ஆகியோரின் குழுவிற்கு முதல் பரிசாக ரூ.30,000-மும், விருதுநகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் மலைப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் செல்வன் ஆகியோரின் குழுவிற்கு இரண்டாம் பரிசாக ரூ.20,000-மும், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவராம் குமார் மற்றும் கணக்கனேந்தல் பகுதியைச் சேர்ந்த மணி சேகர் ஆகியோரின் குழுவிற்கு மூன்றாம் பரிசாக ரூ.10,000- மும்,கரூரைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் திருச்சியை சேர்ந்த கோகுல் பிரசாத் ஆகியோரின் குழுவிற்கு நான்காம் பரிசாக ரூ.7000- மும், திருவாரூரைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த கபிலன் ஆகியோரின் குழுவிற்கு ஐந்தாம் பரிசாக ரூ.5000- மும், சிவகாசியை சேர்ந்த சுந்தரபாண்டியன் மற்றும் விருதுநகரைச் சேர்ந்த ஜெயராமகிருஷ்ணன் குழுவிற்கும், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அய்யப்ப தாஸ் மற்றும் பந்தன்திட்டாவை சேர்ந்த டென்சின் சைமன் ஆகியோரின் குழுவிற்கும், விருதுநகரை சேர்ந்த பாலாஜி மற்றும் விருதுநகரைச் சேர்ந்த மைதிலி ஆகியோரின் குழுவிற்கும், விருதுநகரை சேர்ந்த சுந்தரலிங்கம் மற்றும் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோரின் குழுவிற்கும், திருச்சியைச் சேர்ந்த மணிவேல் மற்றும் சேலத்தைச் சேர்ந்த நவீன் குமார் ஆகியோரின் குழுவிற்கும், பல்லடத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த விஷ்ணுகுமார் ஆகியோரின் குழுவிற்கும் என 6 குழுவிற்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.2000- மும் என மொத்தம் 11 குழுக்களுக்கு ரூ.84,000- மதிப்பிலான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்த வினாடி - வினா போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஒரு குழுவிற்கு இரண்டு நபர்கள் வீதம் 262 குழுக்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் (26.01.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 130-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீ குமார் அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.தியாகி சங்கரலிங்கனார், தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று போராடி, உண்ணாவிரதம் மேற்கொண்டு தனது இன்னுயிரை ஈந்த தியாகச் செம்மல் ஆவார். இவர் 1895ஆம் ஆண்டு, பெரிய கருப்பசாமி நாடார் வள்ளியம்மை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்தார். 1914ஆம் ஆண்டு, பெண்கல்வி வளர்ச்சிக்கான சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்தார். 1915ஆம் ஆண்டு திருமணம் புரிந்த இவர் 1917ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1920ஆம் ஆண்டு இராஜாஜியை சந்தித்தபோது அவரது சீடரானார். இவர், “மாதர்கடமை” என்னும் நூலை எழுத்p வெளியிட்டார். கதர் இயக்கத்தில் சேர்ந்து, கதர் வளர்ச்சிப்பணியை மேற்கொண்டார்.திருச்சியில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டமைக்காக 6 மாத சிறைத் தண்டனைப் பெற்றார். கரூரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக இவருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனையும் 5 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தேசசேவையின் காரணமாக 1944ஆம் ஆண்டு மாதம் ரூ.150/- ஊதியத்திலிருந்த வேலையை விட்டு விட்டு திருச்செங்கோட்டிலிருந்த காந்தி ஆசிரமத்தில் ரூ.30/- சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 1951 ஆம் ஆண்டு விருதுநகரில் உள்ள சூலக்கரையில் ஓர் ஆசிரமம் அமைத்து செயல்பட்டார்.இன்றைய தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என இருந்த போது, அப்பெயரை மாற்றித் தமிழ்நாடு என பெயரிட வேண்டும் எனக் கோரி 27.07.1956 நாள் முதல் 13.10.1956 முடிய 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். 10.10.1956 அன்று மதுரையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.திருவாளர்கள் கு.காமராஜர், பி.கக்கன், ம.பொ.சிவஞானம், சி.என்.அண்ணாதுரை, ஜீவானந்தம் ஆகியோர் இவரைச் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி கோரினர். ஆனால், இந்திய வரலாற்றிலேயே தாம் மேற்கொண்ட கொள்கைக்காக காந்தி வழியில் அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகச் செம்மல் தியாகி சங்கரலிங்கனார், தமிழ்நாட்டு வரலாற்றில் தியாக தீபமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கிறார்.தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் ரூ.77 இலட்சம் செலவில் மணிமண்டபம் 18.06.2015 அன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் பிறந்த நாளான ஜனவரி 26 மற்றும் நினைவு நாளான அக்டோபர் 13 - ஆம் நாளன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் (26.01.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 130-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், செயற்பொறியாளர்(பொதுப்பணித்துறை) திரு.செந்தூர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (மு.கூ.பொ) திரு.ச.தங்கவேல், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.மாதவன், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், வட்டாட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (26.01.2025) நடைபெற்ற இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வருகை தந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் வரவேற்றார்.பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காலை 8.05 மணியளவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.பின்னர், சிறப்பாக பணியாற்றிய 133 தலைமைக் காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பாக 2 நபர்களுக்கு தலா ரூ.25,000ஃ- மதிப்பில் வருடாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.50,000ஃ-த்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தொடர்ந்து, அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு நல்கி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக திகழ தொடர்ந்து தங்களது பங்களிப்பை வழங்கி வரும் 12 மாவட்ட நிலை அலுவலர்களுக்கும், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சிறப்பு இனங்களில் சிறந்த ஆலை பராமரிப்பு மற்றும் தொழிலாளர் நலன் காக்கும் 4 நிறுவனங்களுக்கும், அதிகமாக பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதியினை வழங்கிய 4 நிறுவனங்களுக்கும், சிறந்த உழவர் உற்பத்தியாளர் 5 நிறுவனங்களுக்கும், பொதுநலன் சார்ந்த செயல்பாடு மற்றும் சமூக மேம்பாட்டுக்கான பங்களிப்பு ஆற்றிய 55 நபர்களுக்கும், 3 சிறந்த தன்னார்வ நிறுவனங்களுக்கும், 2 சிறந்த குருதிக் கொடையாளர்களுக்கும், 1 சிறந்த தொண்டு நிறுவனத்திற்கும், திருநங்கைகளின் சுகாதார நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த 3 நபர்களுக்கும், சிறந்த சமூக ஆர்வலர்கள் 2 நபர்களுக்கும், 2 சிறந்த குழந்தைகள் நல காப்பகத்திற்கும், கரிசல் இலக்கிய எழுத்தாளர்கள் 2 நபர்களுக்கும், கரிசல் இலக்கிய படைப்புகளுக்கு உதவிய எழுத்தாளர்கள் 2 நபர்களுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மானிய கடனுதவி பெற்று சுய தொழில்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மானிய கடனுதவி பெற்று சுய தொழில்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் 3 பெண் தொழில் முனைவோர்களுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மானிய கடனுதவி பெற்று சுய தொழில்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் 3 சிறந்த இளம் தொழில் முனைவோர்களுக்கும், சிறுதானிய உற்பத்தியில் சிறப்பாக செயலாற்றும் 6 விவசாயிகளுக்கும், 2 சிறந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கும், 1 சிறந்த அங்கன் வாடி மையத்திற்கும், அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருதல், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் நீர்நிலைகளை பாதுகாத்தல் ஆகிய இனங்களுக்கு பாராட்டி சிறந்த பள்ளி, சிறந்த ஆசிரியர், சிறந்த மாணவர், சிறந்த சுற்றுச்சூழல் ஊக்கி, சிறந்த நீர் பாதுகாவலர் என 5 நபர்களுக்கும்,சிறார் குற்றவாளிகளுக்கான மறுவாழ்வு பணிகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக 1 நபருக்கும், 5 சிறந்த மருத்துவர்களுக்கும், 11 சிறந்த ஊராட்சி செயலர்களுக்கும், சிறப்பாக செயல்படும் 4 பள்ளிகளுக்கும், 2 சிறந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 2 கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கும், 11 சிறந்த சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர்களுக்கும், சாலை பாதுகாப்பு உறுப்பினர் 1 நபருக்கும், சிறந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்) 2 நபர்களுக்கும், சிறந்த மருத்துவ ஊர்தி பணியாளர்கள் 2 நபர்களுக்கும், விருதுநகர் மாவட்ட தேசிய தகவல் மைய பணியாளர்கள் 4 நபர்களுக்கும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்திய 2 பணியாளர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைச் சார்ந்த 158 அரசு பணியாளர்களுக்கும், குடியரசு தின விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த 5 நபர்களுக்கும் என மொத்தம் 463 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.அதனைத்தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) மரு.தண்டபாணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S., மாவட்ட அளவிலான அலுவலர்கள், கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஓ.கோவில்பட்டி கிராமத்தில் (26.01.2025) 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் (01.04.2024 முதல் 31.12.2024 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்சியில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் (People’s Plan Campaign) ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.அரசு என்பது எல்லா மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும். இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், ஜனநாயக நாட்டில், கிராமத்தில்; ஊராட்சி தலைவர்கள், மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் இருப்பார்கள். நாங்கள் எல்லாம் மக்களின் பணியாளர்கள். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரம் உங்களிடம் இருந்து பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அதனடிப்படையில் இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம்.மேலும், ஒரு கிராமத்தினுடைய உண்மையான வளர்ச்சி என்பது அந்த கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை கல்வி கற்று, நல்ல வேலை வாய்ப்பை பெறும் பொழுது, அந்த குடும்பம், கிராமம் வளர்ச்சி அடையும். எனவே, அனைவருக்கும் கல்வி என்பது மிக முக்கியமானது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நல்ல கல்வியாளராக உருவாக்க வேண்டும். கல்வி மற்றும் அதற்கு இணையாக சுகாதாரத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும்.கல்வி, சுகாதாரம் இரண்டும் இருந்தால் நமது குடும்ப வளர்ச்சியும், சமுதாய வளர்ச்சியும் மேன்மையடையும் என தெரிவித்தார்.இக்கிராமசபை கூட்டத்தில் போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு தொடர்பாகவும், தொழுநோய் விழிப்புணர்வு தொடர்பாகவும் உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த கிராம சபை கூட்டத்தில் மருத்துவத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.இந்த கிராம சபைக் கூட்டத்தில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.அரவிந்த், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவர், அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் (24.01.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர் ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.மேலும், இராஜபாளையம் வட்டாரத்தில், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோர் ஆக்குதல் என்ற திட்டத்தில் ரூ.1,00,000ஃ-த்திற்கான காசோலை வழங்கப்பட்டது.கண்மாய்கள் மற்றும் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று முன்னுரிமை அடிப்படையில் அப்பகுதிக்குரிய வட்டாட்சியர், செயற்பொறியாளர், நீர்வளத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, விருதுநகர் இணைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், முதன்மை செயலாளருக்கு நேர்முக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மேலும், வனவிலங்குகளால் பயிர் சேதம் ஏற்பட்டிருப்பின் கள ஆய்வு செய்து கூடிய விரைவில் இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கவும், தாமதமாக்கும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.பின்னர், பரளச்சி, இராஜகோபாலபுரம், தொப்பலாக்கரை, தும்முசின்னம்பட்டி ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு, மாசுப்பட்டுள்ளதால் சிறுநீரக பாதிப்புகள் அதிகளவில் உள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு தொடர் நடவடிக்கையில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்.குப்பை கழிவுகளால் சுற்றுச்சுழல் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் இதில் பொது மக்களும் தங்களது கடமைகளை சரிவர பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம்) திருவில்லிபுத்தூர் திரு.தேவராஜ்,இ.வ.ப., வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்ப பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (24.01.2025) தேசிய பெண் குழந்தைகள் தினம்- 2025- ஐ முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அன்பால் இணைவோம் அறக்கட்டளை இணைந்து நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணான 1098 வடிவில் 1098 பெண் குழந்தைகள் நின்று சாதனை புரியும் நிகழ்ச்சியினை சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இன்று பல்வேறு துறைகளில் குறிப்பாக அதிகாரமிக்க அரசு பணிகளில் இருந்து, நிறைய பொருளாதார வளமிக்க தனியார் துறைகள் மற்றும் நிறைய வணிகத் துறைகளிலும் பெண்களினுடைய பங்களிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது.இதற்கு மிக முக்கியமான காரணம், பெண்களுக்கு என்று நிறைய வாய்ப்புகள் இருப்பதால் அந்த வாய்ப்புகளை அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு இயற்கையாகவே புத்தி கூர்மை அதிகமாக இருக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவிபேணி வளர்த்திடும் ஈசன்மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்லமாதர் அறிவைக் கெடுத்தார்கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்காட்சிக் கெடுத்திட லாமோ?பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்பேதைமை யற்றிடும் காணீர்!பெண்;களுக்கு இயற்கையாகவே அதிகமான ஞானம் இருக்கிறது. பெண்ணுக்குள் அறிவை வளர்ப்பதன் மூலமாக இந்த சமுதாயத்தில் எதெல்லாம் பேதமையாக இருக்கிறதோ, எதெல்லாம் மடமையாக இருக்கிறதோ அவற்றையெல்லாம் அழிப்பதற்கு பெண்களுக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளை கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பது தான் என்று 115 ஆண்டுகளுக்கு முன்பாக மகாகவி பாரதியார்; பாடியிருக்கிறார்.அப்படிப்பட்ட ஒரு சமூக சூழலில் பெண்களுக்கு இன்று அவர்கள் நிறைய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் காரணமாக நிறைய தொழில்களில் மிகப்பெரிய அளவில் முன்னேறி இருக்கிறார்கள். இருப்பினும் சமூக சூழ்நிலைகள் காரணமாக அவர்கள் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சனைகள், அது குடும்பத்திலிருந்து, சமுதாயத்தில் இருந்து, அவர்கள் பழகக்கூடிய மனிதர்களிடமிருந்து எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளை இரண்டு விதமாக அணுக வேண்டிய தேவை இருக்கிறது. ஒன்று அறிவியல் பூர்வமாக உளவியலை அணுகுவது, இன்னொன்று சட்டத்தின் மற்றும் அரசினுடைய திட்டங்களின் மூலமாக வாழ்க்கையையும் தங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை புரிந்து கொள்ளுதல் ஆகும்.குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மன அளவிலான வன்முறையோ, குழந்தைத் தொழிலாளராகவோ, குழந்தைத் திருமணமோ, பெண் சிசு மற்றும் கருக்கொலையோ, பாலின பாகுபாடோ, ஜாதி வேற்றுமையா, குழந்தைத் கடத்தலோ நடைபெறாமல் தடுத்தல், அவ்வாறு எங்கேனும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு எதிரான தீங்கிழைத்தலோ அல்லது வன்முறையோ நடைபெற்றால் அல்லது நடைபெறுவது போல் தெரிந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இச்சாதனையை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டஸ், புதுச்சேரி அமைப்பு கண்காணித்து அங்கீகாரம் செய்தனர்.இந்நிகழ்வில் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரா.பாஸ்கர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திருமதி இல.மீனாட்சி, அன்பால் இணைவோம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைமை இயக்குனர் திரு.சதீஷ்குமார், பள்ளி தலைமையாசிரியர், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (24.01.2025) தேசிய பெண் குழந்தைகள் தினம்- 2025- ஐ முன்னிட்டு நடைபெற்ற மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியைகளுக்கான வளர் இளம் பருவ உளவியல் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மென்ஸ்ட்ரூபீடியா காமிக் (Menstrupedia Comics) தமிழ் புத்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, வளரிளம் பருவத்தில் இருக்கக்கூடிய பதினோரு வயதிலிருந்து 17 வயது வரை பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் இருக்கக்கூடிய மாணவியர்களுக்கு வழிகாட்டுவதற்காக மருத்துவ உளவியல் மற்றும் உடல் சார்ந்த மருத்துவங்கள் பற்றி எடுத்து கூறுவதற்காக இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் இந்திய அளவில் கல்வி மற்றும் மனித வள குறியீடுகளில் நன்கு வளர்ச்சி அடைந்த மாவட்டம். உயர்கல்வி பொருத்தவரையில் இந்தியாவில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் உயர்கல்வி சேர்க்கையில் அதிகமான எண்ணிக்கை கொண்ட முதல் மாவட்டம் விருதுநகர் தான். மனிதவள குறியீடுகளிலும் மிக அதிகமாக உள்ள மாவட்டம்.இப்படி நன்கு வளர்ச்சி அடைந்த விழிப்புணர்வு பெற்ற நமது மாவட்டத்தில் கூட ஒவ்வொரு ஆண்டும் 200- 300 வரையிலான குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதுபோல நமது மாவட்டத்தில் மகப்பேறு புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் 19 வயதிற்குள் தாய்மை பேறு அடையும் சிறுமிகளின் எண்ணிக்கை ஆண்டிற்கு சுமார் 700 முதல் 800 வரை இருக்கிறது. இது இன்னும் விழிப்புணர்வுக்கான தேவை இருப்பதை காட்டுகிறது.குறிப்பாக மாணவிகளுக்கு பதின் பருவத்தை புரிந்து கொள்ளுதல், பதின் பருவத்தில் ஏற்படக்கூடிய உளவியல், உடல் சார்ந்த மாற்றங்களை புரிந்து கொள்ளுதல் ஆகியவையோடு அதனை அறிவியல் பூர்வமாக அணுகுதல் என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. இன்றைக்கு அறிவியல் மனப்பாங்கு என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. நாம் அறிவியலை படித்து அறிவியல் தகவலை பெற்று ஒரு அறிவியல் நிபுணராகவோ அல்லது படித்த படிப்பாளியாகவோ இருப்பது வேறு, அறிவியல் மனப்பாங்கோடு இருப்பது என்பது வேறு. இரண்டிற்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. எனவே நிரூபிக்கப்பட்ட அறிவியல் வழியாக, அறிவியல் மருத்துவத்தின் உடைய நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு அறிவியல் மனப்பாங்கு மிகவும் முக்கியமானது. அதனை இளம் குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும். 19 வயதிற்குள்ளாக தாய்மை பேறு அடையும் பெண்களின் குழந்தைகள் தான் பெரும்பாலும் எடை குறைவான குழந்தைகளாகவும், குறிப்பிட்ட காலகட்டத்தில் அடைய வேண்டிய உடல், மனவளர்ச்சி அடையாத குழந்தைகளாக இருக்கிறார்கள்.குழந்தை பிறப்பு விகிதம்(IMR) என்று சொல்லக்கூடிய பிறந்ததிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் ஒரு ஆறு மாதம் அல்லது ஒரு ஆண்டிற்குள் இறந்து போகக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கையும் இதுபோன்ற ஒரு வளரிளம் பருவத்தில் உள்ள பெண்கள் பெறக்கூடிய குழந்தைகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். எனவே, ஒரு குழந்தை பிறப்பு என்பதும், அந்த குழந்தை இறந்து போவது என்பதும் எவ்வளவு பெரிய வலியாக அந்த தாய்க்கும், அந்த குடும்பத்திற்கும் இருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது.நாம் வளர்ச்சியடைந்த இந்த சூழ்நிலையிலும் கூட நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மாணவிகளுக்கு நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வளரிளம் பருவத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களில் உளவியல் சார்ந்த மாற்றங்களுக்கு அவர்களை தங்களை தயார்படுத்தி கொண்டிருக்கிறார்களா என்றும் அதனுடைய நன்மை தீமைகளை அறிவியல் மனப்பான்மையுடன் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.நம்முடைய மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பிரச்சனைகளை ஆய்வு செய்து பார்த்தால், இந்த குழந்தைகளுக்கு எல்லாம் நல்ல வழிகாட்டுதலும் ஆற்றுப்படுத்துதலும் அவசியமாகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, ஒவ்வொரு பள்ளிகளிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் படிக்கக்கூடிய உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் அதற்கென்று நியமிக்கப்படக்கூடிய ஆசிரியர்கள், இது குறித்து மாணவிகளுக்கு குறைந்த பட்சம் வாரத்தில் ஒரு நாளாவது, ஒரு வகுப்பாவது அவர்கள் வாழ்க்கை முறை சார்ந்த கல்வியை, குறிப்பாக அவர்களுடைய உடல் உளவியல் சார்ந்த பிரச்சினைகளை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்வதற்கும், அதைவிட மிக முக்கியமானது அதற்கான தீர்வுகள் குறித்து அவர்களுக்கு தெரிந்து கொள்வது மிக முக்கியமானது.ஒரு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அறிவியல் பூர்வமாக மருத்துவர்களை அணுகி எப்படி தீர்வு காண்பது. ஒரு உளவியல் சார்ந்த பிரச்சனைக்கு எப்படி ஒரு ஆலோசனைகளை பெறுவது. தங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை எப்படி முறையாக தீர்வுக்கு கொண்டு வருவது. இவற்றையெல்லாம் அறியாமையின் காரணமாக நமது குழந்தைகளுக்கு தெரியவில்லை. அவற்றை எல்லாம் அவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக அனைத்து வட்டாரங்களில் இருந்தும் சுமார் 200 ஆசிரியர்கள் என்று இந்த நிகழ்ச்சியில் வருகை தந்திருக்கிறீர்கள். ஆசிரியர்களாகிய நீங்கள் ஒவ்வொரு வட்டாரங்களிலும் சென்று தொடர்ச்சியாக செயல்படக்கூடிய நிகழ்ச்சிகளில், நீங்கள் இது குறித்து அறிவியல் பூர்வமாக பேச வேண்டும். அறிவியல் பூர்வமாக இருக்கக் கூடிய தீர்வுகளுக்கு மாணவிகளை ஆற்றுப்படுத்த வேண்டும். தேவை ஏற்படக்கூடிய சூழ்நிலையில் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் நீங்கள் ஆதரவோடும், பெற்றோர்களுக்கு ஆலோசனைத் தரக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மாணவிகளை உயர்கல்விக்கும், கல்வியின் வழியாக பெரிய வாய்ப்புகளை பெறுவதற்கும் இருக்க்க்கூடிய சூழ்நிலைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இன்று பெண்களுடைய முன்னேற்றம் என்பது மிகப்பெரிய சமூக முன்னேற்றம். அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் பெண்கள் அதிகமாக வருகிறார்கள்.எனவே எதிர்காலத்தில் அவர்கள் வெற்றி அடையக்கூடிய பெண்ணாக இருக்க வேண்டும் என்றால் அவர்கள் பொருளாதாரத்தில் தலைநிமிர வேண்டும். பொருளாதாரத்தில் தலை நிமிர்ந்தால் தான் உண்மையான வெற்றி கிடைக்கும். அதை மாணவிகள் அடைவதற்கு அவர்களுடைய பதின் பருவத்தை மிக கவனமாகவும் விழிப்புணர்வோடும் ஆரோக்கியமாகவும் கடந்து, அடுத்து வாழ்க்கை தரக்கூடிய பல்வேறு வாய்ப்புகளை பெறக்கூடிய மாணவிகளாக நமது மாணவச்செல்வங்கள் உருவாக வேண்டும். அவர்களுக்கு ஆற்றுப்படுத்தக்கூடிய பணிகளை நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும். எனவே இந்த நிகழ்ச்சியினை நீங்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு மாணவிகளுக்கான ஒரு ஆரோக்கியமான சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாம் உறுதி மொழி மேற்கொண்டால் அதுதான் இந்த தேசிய பெண் குழந்தைகள் தினத்தின் வெற்றியாக இருக்கும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட மனநல மருத்துவர் மரு.விதுபிரபா, விருதுநகர் மருத்துவக்கல்லூரிமருத்துவமனைபேராசிரியர்(மகப்பேறு) மரு.சுதா, மாவட்ட தொற்று நோய் அலுவலர் மரு.நிஜவர்த்தன் ஆகியோர் விளக்கவுரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி உட்பட மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆசிரியைகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், செந்திக்குமார நாடார் கல்லூரியில் (24.01.2025) செந்திக்குமார நாடார் கல்லூரி முதுகலைத் தமிழ்த்துறை, மதுரை நியூ செஞ்சுரி புத்தக நிலையம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியின் படைப்புலகம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி எஸ்.எப்.ஆர்.பெண்கள் கல்லூரியில்(24.01.2025) தேசிய பெண் குழந்தைகள் தினம்- 2025- ஐ முன்னிட்டு, தகவல் வளமையம் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த வாசகர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (22.01.2025) தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையின் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.சமூக ஊடகங்களில் இலவசம் என்று நாம் பார்க்கும் அனைத்திற்கும் ஒரு விலை இருக்கிறது. பொருளாதாரத்தின் முக்கிய கொள்கை என்னவென்றால், உலகத்தில் எந்த ஒன்றும் இலவசம் இல்ல என்பதுதான்.ஒருவர் தன் வாழ்நாளில் செய்ய முடியாத செயல்களை, மற்றொருவர் தனது வாழ்க்கையில் செய்து முடிப்பவரே சிறந்த அறிவாளி. ஒரு இடத்திலிருந்து மற்றொரு மாநிலம் அல்லது நாட்டிற்கு வேலை வாய்ப்பிற்கு செல்கிறார் என்றால் அந்த வேலைக்கான சுய அறிவு, விழிப்புணர்வுகள் மற்றும் வழிகாட்டுதல் முறையாக கிடைக்கப் பெற்றிருக்க வேண்டும். யார் சிறந்த அறிவாளி என்று பார்த்தால் மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து தனக்கான பாடத்தை கற்றுக்கொள்பவர் தான் சிறந்த அறிவாளி. சமூக வலைத்தளங்களில் நாம் கற்றுக்கொள்ள நல்ல விசயங்கள் நிறைந்துள்ளது. சமூக வலைதளங்களை கையாளுவது என்பது இரண்டு பக்கமும் கூர்மையாக உள்ள கத்தியை கையாளுவது போன்றதாகும். இதில் சரிசமமான நிலை என்பது தான் மிகவும் முக்கியம். சமூக வலைத்தள பதிவுகளை நாம் எவ்வாறு கவனமாக கையாளவேண்டும். அது நமக்கு எவ்வாறு பாதுகாப்பு தருகிறது என ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும். எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எல்லோரும் சமூக, பொருளாதார, குடும்ப சூழ்நிலைகளில் ஒரு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை நாம் எடுத்து பார்த்தோமேயானால் அவர்கள் 25 வயதிற்குள் தனது வாழ்க்கையில் எடுக்கக் கூடிய முடிவுகள் மிகவும் கவனமாக இருந்திருக்கும். நமது வாழ்க்கை எதனை நோக்கி செல்கிறது என்ற முடிவுகளை சரியாக எடுத்தால் போதும் வெற்றி அடைய முடியும்.உங்களுடைய கல்வியில் மதிப்பெண்ணில் விழிப்புணர்வோடு இருப்பது முக்கியம். அதைவிட முகியம் உங்களுக்கான வாய்ப்புகளை தெரிந்து கொள்வதில் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். யார் தங்களுடைய வெற்றிக்கான வாய்ப்புகளை, வாழ்க்கைக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து தேடிக்கொண்டே இருக்கிறார்களோ அவர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் வருகிறது. அந்த வாய்ப்புகள் நிறைய பேர்களுக்கு தெரிந்திருப்பதில்லை.திறமை என்பது என்னவென்றால் எந்த ஒன்றை நாம் தொடர்ச்சியாக செய்கின்றோமே அப்போது அந்த செயலுக்கான திறன் நமக்கு வருகிறது. அதுதான் திறமை. பல நேரங்களில் திறமையானவர்கள் வெற்றி பெறுவது இல்லை. ஏனென்றால் அவர்கள் தொடர்ச்சியாக உழைப்பதில்லை. யார் தொடர்ச்சியாக ஒரு செயலை செய்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி அடைகிறார்கள்.இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி. உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்கு இணையதளத்தில் நிறைய கற்றுக் கொள்வதற்கும் இந்த உலகை புரிந்து கொள்வதற்கும் நீங்கள் தினசரி குறைந்தபட்சம் 2 மணி நேரத்தில் 8 மணி நேரம் வரை செலவிடக் கூடிய இணைய உலகத்தில் நீங்கள் பாதுகாப்போடு இருப்பதற்கு நிறைய விழிப்புணர்வு, நிறைய அறிவுரைகள் தேவைப்படுகின்றன. நிறைய வாய்ப்புகள் குறித்த புரிதலும், விழிப்புணர்வுகளும் தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் ஆர்வத்தோடு பெற்றுக் கொள்ளக் கூடியவர்கள் வாழ்வில் சிறந்த வெற்றிகளை பெறக்கூடியவர்களாகவும், துன்பமில்லாத ஒரு வாழ்க்கையை வாழக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இளம் பெண்களாக நீங்கள் அனைவரும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.முன்னதாக மாணவியர்களுக்கு “சாதிக்கலாம் வாங்க” என்ற தலைப்பில் உயர்கல்வி மற்றும் வேலைவழிகாட்டி புத்தத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.