25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 23, 2026

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தூய்மைப் பணியாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாமினை தொடங்கி வைத்தார்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள்,  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி மாஸ்டர் பிரிண்டர்ஸ் திருமண மண்டபத்தில்    (22.07.2026) தூய்மைப் பணியாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாமினை  தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  தலைமையிலான அரசு வீடும், நாடும் ஆரோக்கியமாக இருக்க உறுதுணையாக இருக்கும்  தூய்மைக் காவலர்களின் நலனை பாதுகாக்கும்  அரசாக செயல்பட்டு வருகிறது.  தூய்மைப் பணியாளர்களின் ஆரோக்கியத்திற்காகவும், சுகாதார மேம்பாட்டிற்காகவும் அவர்களின் குடும்ப வாழ்வாதத்திற்காகவும் பல்வேறு துறைகளில் ஏராளமான திட்டங்களையும் தமிழக அரசு  செயல்படுத்தி வருகிறது.அதனடிப்படையில் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் ,  அரசின் சேவைகள், தேவையான சான்றிதழ்களை ஒரே இடத்தில் பெறவேண்டும் என்பதற்காக மாநில அளவில் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிப்  பகுதிகளில் சிறப்பு முகாம்களை நடத்திட உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் இம்முகாம்கள் நடத்தப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சியிலும், விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் ஆகிய 5 நகராட்சிகளிலும் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.சிவகாசி மாநகராட்சியில் 119 நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், 270 ஒப்பந்த  தூய்மைப் பணியாளர்கள், 26 பள்ளிப் பராமரிப்பு தூய்மைப் பணியாளர்கள், 86 தனியார் நிறுவன தூய்மைப் பணியாளர்கள், 28 கழிவு நீர் வாகன பணியாளர்கள், 18 திடக் கழிவு சேகரிப்பாளர்கள் என மொத்தம் 547 தூய்மைப் பணியாளர்களுக்கு காப்பீடு அட்டை, நலவாரிய அட்டை, வருவாய்த்துறை சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, வீட்டு வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இம் முகாம்களில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் மூலம் பெறப்படும் சேவைகள்,  வங்கிகளின் மூலம் சுய தொழில் தொடங்க முதலீட்டுக் கடன் பெறுவதற்கும், ஆதி திராவிட வீட்டு வசதி மேம்பாட்டு கழகத்தின் மூலம்  தூய்மைப் பணியாளர் உறுப்பினர் அட்டை பதிவு செய்வதற்கும், சமூக நலத்துறையின் மூலம் குடும்ப நல உதவி பெற்றிடவும், வருவாய்த் துறையின் மூலம் பல்வேறு சான்றிதழ்கள், மகளிர் திட்டத்தின் மூலம் சுய தொழில் கடன் திட்டத்திற்கும் விண்ணப்பிக்கும் வகையிலும், திடக் கழிவு சேகரிப்பாளர் பதிவு மற்றும் சரிபார்ப்பு, இயந்திரமாக்கப்பட்ட சுகாதார சூழல் அமைப்புக்கான தேசிய செயல்திட்டத்தின் (NAMASTE) கீழ் அடையாள அட்டை, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் காப்பீடு, ஓய்வூதியம், திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகிய சேவைகளுக்காகவும்  பல்வேறு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.இம்முகாமினை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என   தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S.,சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன், மாநகர நல அலுவலர் திருமதி ஸ்ரீதேவி, சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 23, 2026

தடகள பயிற்றுநர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை விளையாட்டில் முதன்மையான மாநிலமாக உருவாக்குவதுடன்பல்வேறு விளையாட்டுகளில் உயர்தர பயிற்சிக்கான வழிகளை உருவாக்கி வீரர்,வீராங்கனைகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் அவர்களின் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு, விளையாட்டு வீரர்களின் பின்புலம் மற்றும் தனித்திறன்களுக்கு அப்பாற்பட்டு  அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், ஒரு சீரான விளையாட்டு மேம்பாட்டு அணுகுமுறை மற்றும் சமவாய்ப்பினை வழங்கிட, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் செயல்படுத்தி வருகிறது.அதன் படி விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்டார் விளையாட்டு பயிற்சி மையத்தின் கீழ் தடகள விளையாட்டானது தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இவ்விளையாட்டு பயிற்சி மையத்திற்கு தடகள (ATHLETICS) பயிற்றுநர் பதவிக்கான விண்ணப்பங்களை 23.07.2026 முதல் விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்க அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பயிற்றுநருக்கான அதிகபட்ச வயது வரம்பு 50 ஆகும்.மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்திட கடைசி நாள் 31.07.2026 மாலை 5.00 மணி ஆகும். விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் உடற்தகுதித்தேர்வு (05.08.2026) அன்று மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. நேர்முகத் தேர்வு அன்று உரிய அசல் (ம) நகல் சான்றிதழ்கள் கட்டாயம் கொண்டு வர வேண்டும். இது நிரந்தரப்பணி அல்ல முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப்பணியோ கோர இயலாது.மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம், மாவட்ட மருத்துவ கல்லூரி எதிர்புறம். விருதுநகர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7824009970 / 04562-225947 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனமாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

Jul 22, 2026

JEE தேர்வில் வெற்றி பெற்று NIT Calicut  மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்கு தேர்ச்சி பெற்றுள்ள பி. எஸ் சிதம்பர நாடார் சி.பி.எஸ்.இ பள்ளியை சேர்ந்த மாணவி யமுனா அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சால்வை அனுவித்து பாராட்டினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (21.07.2026) JEE தேர்வில் வெற்றி பெற்று NIT Calicut  மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்கு தேர்ச்சி பெற்றுள்ள பி. எஸ் சிதம்பர நாடார் சி.பி.எஸ்.இ பள்ளியை சேர்ந்த மாணவி யமுனா அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் சால்வை அனுவித்து புத்தகம் தந்து பாராட்டினார்.

Jul 22, 2026

விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ / மாணவிகள் விடுதிகளில் உள்ள குறைபாடுகள்  மற்றம் புகார்களை வாட்ஸ் அப் எண்ணிற்கு 9445477016 தெரிவிக்கலாம் .

விருதுநகர்  மாவட்டத்தில்  பிற்படுத்தப்பட்டோர்,   மிகப்பிற்படுத்தப்பட்டோர்  மற்றும்  சிறுபான்மையினர்  நலத்துறையின், கீழ் செயல்படும் அனைத்து  பள்ளி  மற்றும் கல்லூரிகள்  சமூக நீதி  விடுதிகளில் தங்கி பயிலும்  மாணவ /  மாணவியர்கள்  விடுதிகளில் நடைபெறும் தவறுகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க  9445477016 என்ற  வாட்ஸ்அப்  எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.                   எனவே  மாணவ / மாணவிகள்  விடுதிகளில்  உள்ள  குறைபாடுகள்   தொடர்பாக  மேற்படி   9445477016 எனற  வாட்ஸ்அப்  எண்ணிற்கு  தகவல்  தெரிவிக்கலாம்  என  மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S..  அவர்கள்  தெரிவித்துள்ளார். 

Jul 22, 2026

தென்னை விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நேரடியாக வியாபாரிகளுக்கு தேங்காய் விற்பனை செய்யும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டம், சேத்தூரில் (21.07.2026) வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், தென்னை விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நேரடியாக வியாபாரிகளுக்கு தேங்காய் விற்பனை செய்யும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தொடங்கி வைத்தார்.தமிழக அரசானது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலையினை பெற்றுத்தருவதற்காகவும், வியாபாரிகள் எவ்வித இடைத்தரகர்கள் இன்றி தேங்காய்காயினை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளும் வகையிலும் தேசிய வேளாண் மின்னணு சந்தை (e-NAM) திட்டத்தினை  செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளது.அதனை உறுதி செய்யும் வகையில் தேசிய வேளாண் மின்னணு சந்தை   (e-NAM) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை வெளிப்படையான, தொழில்நுட்ப அடிப்படையிலான இணையதள ஏல முறையில் விற்பனை செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இதனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த வணிகர்கள் போட்டி அடிப்படையில் ஏலத்தில் பங்கேற்பதால், விவசாயிகளுக்கு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அதிகபட்ச விலை கிடைக்கிறது.விருதுநகர் மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தியில் சிறந்து விளங்கும் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு  பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, தேங்காய் கொள்முதல் செய்து  மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக விற்பனை செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகள்  அதிக வருமானம் பெற முடியும். தரமான விளைபொருட்களை சந்தைப்படுத்துவதன் மூலம் வணிக வாய்ப்புகள் விரிவடைவதுடன், சந்தை தொடர்பான தகவல்கள், ஏல விவரங்கள் மற்றும் விலை நிலவரங்களையும் விவசாயிகள் உடனுக்குடன் அறிந்து பயன்பெற முடியும்.மேலும், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு குறைக்கப்பட்டு, வெளிப்படையான விற்பனை நடைமுறை உறுதி செய்யப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக தொகை செலுத்தப்படுவதால் பாதுகாப்பான மற்றும் விரைவான பரிவர்த்தனை நடைபெறுகிறது. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயர்வதோடு, வேளாண் பொருட்களின் சந்தைப்படுத்தல் நவீனமயமாக்கப்பட்டு, வேளாண் வணிக வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன. எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் மின்னணு தேசிய வேளாண் சந்தை (e-NAM) திட்டத்தில் பதிவு செய்து, அதன் மூலம் தங்களது வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்து அரசின் இத்திட்டத்தின் முழுப் பயனையும் பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.தென்னை விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு சரியான விலை, இடைத்தரகர்களின்றி விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, மாவட்டத்தில் 3 இடங்களில் தென்னை கொள்முதல் செய்து, மின்னணு சந்தை மூலம் சரியான விலை கிடைக்க உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு இப்பகுதி தென்னை விவசாயிகள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ்  சௌமியன், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்) திருமதி நாச்சியார் அம்மாள், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், வணிகர்கள், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Jul 21, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2.30 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (20.07.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2.30 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா , அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து தீர்வு காணவேண்டும் என  உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.2.30 இலட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 690 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கு.மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 20, 2026

பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் நடத்தும் மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாமானது விருதுநகரில் உள்ள  அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்  வரும் 20.07.2026 திங்கட்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.இம்முகாமில் விருதுநகர் மாவட்டம் மற்றும் வெளி மாவட்ட முன்னணி நிறுவனங்கள் நேரடியாக தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை நடத்தயிருப்பதால் இந்த சேர்க்கை முகாமில் அவசியம் கலந்து கொண்டு நீங்கள் விரும்பும் நிறுவனத்தில் சேர்ந்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் National Apprenticeship Certificate (NAC) பெற்றுக்கொள்ளலாம்.இந்த முகாமில் அரசு/தனியார் ஐடிஐ-யில் பயின்றவர்கள் மற்றும் NCVT, SCVT மற்றும் COE  முறையில் அரசு/தனியார் ஐடிஐ-யில் பயின்றவர்களும் கலந்து கொள்ளலாம்.  மேலும், ஐடிஐ சான்று இல்லாத 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு, பாலிடெகனிக், பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் Fresher Apprentice ஆக நேரடியாக தொழிற்சாலைகளில் சேர்ந்து பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும்  பயிற்சியின் போது உரிய உதவித்தொகையும் வழங்கப்படும்.NAC சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது. எனவே, உரிய கல்வி சான்றிதழ்களுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S.,அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

Jul 20, 2026

சின்னமூப்பன் பட்டியில் வருவாய்த்துறை மூலம் கணினி வழி இ-பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் பயனாளிகளின் இடத்திற்க்கு சென்று வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், சின்னமூப்பன் பட்டியில் வருவாய்த்துறை மூலம் (18.07.2026) கணினி வழி இ-பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் பயனாளிகளின் இடத்திற்க்கு  சென்று வழங்கினார்.

Jul 20, 2026

15 கலைஞர்களுக்கு மாவட்ட கலை விருதுகள் மற்றும் ரூ.1.65 இலட்சம் பரிசுத்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் (19.07.2026) நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள்   மாவட்ட கலை விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகளையும்,  மாவட்ட கலைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் சிறந்த ஓவிய, சிற்ப படைப்பாளிகளுக்கு  சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கினார்.கலை மற்றும் பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் அடையாளமாகும்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நமது பாரம்பரிய கலைகளைப் பாதுகாத்து, இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவும், கலைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும் நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இளம் தலைமுறையினர்கள் விளையாட்டு, கலை, ஓவியம், சிற்பம் உள்ளிட்டவைகளில் ஈடுபடும் போது அவர்களின் தனித்திறமைகள் வளர்வதோடு நமது சமுதாயத்தை நல்ல நோக்கத் தோடு கொண்டு செல்வதற்கு ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் மாவட்டத்தில் உள்ள கலைஞர்களை ஊக்குவிப்பதோடு அடுத்த தலைமுறைக்கும் இதனை கடத்துவதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செயல்படுத்தும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் 2025-2026 ஆம் ஆண்டு மாவட்ட கலை விருதுகளில் கலை இளமணி விருது பெற்ற  செல்வி பா.காவ்யஸ்ரீ(பரதநாட்டியம்), செல்வி செ.ஸ்ரீநிதி (பரதநாட்டியம்), செல்வி.மு.வேதசாதனா(ஓவியம்) ஆகியோர்களுக்கு தலா ரூ.4000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும், கலை வளர்மணி விருது பெற்ற திரு.இர.சுரேஷ்குமார்(நாடகம்), திரு.பொ.விஸ்வநாத்(கரகாட்டம்),  திரு.பெ.சிவக்குமார்(நாட்டுப்புறப் பாடல்) ரூ.6000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும்,கலை சுடர்மணி விருது பெற்ற திரு.வே.சுடலைக்கனி(தவில்), திரு.கா.கருப்பசாமி(ஒயிலாட்டம்), திரு.த.தனலெட்சுமி(வில்லிசை பாடகர்) ரூ.10,000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும், கலை நன்மணி விருது பெற்ற திரு.அ.கந்தவேல்(நாதஸ்வரம்), திரு.ப.மாரிராஜ்(வாய்பாட்டு), திரு.பா.வெங்கடேஸ்வரன்(சிலம்பம்) ரூ.15,000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும், கலை முதுமணி விருதுகளுக்கு திருமதி இளவரசி சொக்கர்(ஓவியம்), திரு.எஸ்.கே.கோபால்(நாதஸ்வரம்), திரு.பே.காளியப்பன்(நாடகம்) ரூ.20,000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும்  என மொத்தம்  15 கலைஞர்களுக்கு  ரூ.1.65 இலட்சம் பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றி பெற்ற 21 மாணவர்களுக்கும், ஓவிய, சிற்பக் கண்காட்சியில் வெற்றி பெற்ற 21 நபர்களுக்கும் கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மண்டல கலைபண்பாட்டு மைய உதவி இயக்குநர்(திருநெல்வேலி) திரு.து.சிவப்புகழ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.கொ.நாகராஜ பூபதி, அரசு அலுவலர்கள், கலைஞர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 18, 2026

288 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட  வத்தல் மண்டபத்தில்  288 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.90 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை   (17.06.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S.,  அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாற்றுத்திறனாளிகள் நலனை பாதுகாத்திடவும், பிறர் துணையின்றி தங்களது தேவையினை தாய்களே பூர்த்தி செய்து கொள்ளவும், சமூகத்தில் தானும் ஓர் அங்கம் என்பதனை உறுதி படுத்திடவும் தன்னம்பிக்கையுடன் வாழவேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் எனும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர் கொள்ளும் பல்வேறு தடைகளை நீக்குதல், அனைத்து நிலைகளிலும் சமத்துவமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல், எளிதான முறையில் அரசின நலத்திட்டங்களை கிடைக்கச் செய்தல், வாழ்வாதார மேம்பாடு மற்றும் சமூக பங்கேற்பு உறுதி செய்வதே இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.இத்திட்டத்தின் மூலம் தமிழக அரசால் பல்வேறு துறைகளின் வாயிலாக  செயல்படுத்தப்படும் சேவைகள் மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்து சேவைகள் வழங்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளின் தனிப்பட்ட தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதனடிப்படையில், பிசியோதெரபி சிகிச்சை, ஆக்குபேசனல் தெரபி, பேச்சு மற்றும் மொழிசார் சிகிச்சை, உளவியல் ஆலோசனை, சிறப்புக் கல்வி, கண் பரிசோதனை போன்றவை வழங்கப்படுகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் 13 இடங்களில் ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்கள் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது 6 இடங்களில் வெம்பக்கோட்டை  கல்லமநாயக்கன்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையம், ராஜபாளையம் இளந்தோப்பு, ராமசாமி ராஜா அரசு மருத்துவமனை, நரிக்குடி, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், விருதுநகர் கன்னிசேரி புதூர், வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், காரியாபட்டி காட்டுகுத்தகை கரிசல்குளம், பெண்கள் பிரிவு, அரசு மருத்துவமனை, அருப்புக்கோட்டை பந்தல்குடி, பல் மருத்துவ பிரிவு, நகர்புற சுகாதார மையம் ஆகிய இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், ஆண்டுதோறும் ALIMCO நிறுவனத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் NLC India Limited நிறுவன CSR நிதியின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதனை நல்லமுறையில் பயன்படுத்தி வாழ்வினை மேம்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன  செயல் இயக்குநர் திரு.மூர்த்தி, மனித வள மேலாண் இயக்குநர் திரு.சமீர் சுவரப், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வ.செந்தில்வேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 2 ... 12 13 14 15 16 17 18 ... 144 145

AD's



More News