25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 10, 2024

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 896 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி

 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  (09.09.2024) மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2687 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகள் வழங்குவதை தொடங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், 896 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.64.79 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S, அவர்கள்  தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்  திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில்,   வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.அதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், அருப்புக்கோட்டை  வட்டாரத்தில், 56 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.290.20 இலட்சம் மதிப்பிலும், இராஜபாளையம்  வட்டாரத்தில், 59 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.508.60 இலட்சம் மதிப்பிலும், காரியாபட்டி வட்டாரத்தில், 52 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.303.78 இலட்சம் மதிப்பிலும், சாத்தூர் வட்டாரத்தில் 59 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.414.52 இலட்சம் மதிப்பிலும், சிவகாசி வட்டாரத்தில் 87  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  ரூ.578.75 இலட்சம் மதிப்பிலும், திருச்சுழி வட்டாரத்தில் 55 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  ரூ.328.09 இலட்சம் மதிப்பிலும்,நரிக்குடி வட்டாரத்தில் 37 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  ரூ.228.10 இலட்சம்  மதிப்பிலும், வத்ராயிருப்பு வட்டாரத்தில் 32 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  ரூ.211.67 இலட்சம் மதிப்பிலும், விருதுநகர் வட்டாரத்தில் 75 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.677.50 இலட்சம் மதிப்பிலும், வெம்பக்கோட்டை வட்டாரத்தில் 73 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 413.24 இலட்சம் மதிப்பிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 51 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.326.96 இலட்சம் மதிப்பிலும், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம்  260; மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.21.98 கோடி மதிப்பிலும் என மொத்தம் 896 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.64.79 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை   வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்கள் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டிசெல்வம், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திருமதி வசுமதி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 10, 2024

விருதுநகர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தலைமையில்  (09.09.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டாமாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு,  முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.  முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச்சார்பில், திருமண உதவித் திட்டத்தின் கீழ் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணத்திற்கான 8 கிராம் தங்க நாணயங்களையும்,2024-25ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி சேர்க்கை பெற்று, முதலாமாண்டு கல்விக்கட்டணம் செலுத்துவதற்கு உதவிகள் தேவைப்பட்ட 5 மாணவர்களுக்கு விருதுநகர் கல்வி அறக்கட்டளை மூலம் மொத்தம் ரூ.42,228/- மதிப்பில் கல்விக் கட்டணத்திற்கான காசோலைகளையும்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கிறிஸ்தவ தேவாலங்களில் பணிபுரியும்; 73 உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளையும்,1 பயனாளிக்கு ரூ.6000/- மதிப்பிலான விலையில்லா மின் மோட்டார் பொருத்திய தையல்  இயந்திரத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.அமர்நாத், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் திரு.ரமேஷ், உதவி ஆணையர் (கலால்) திரு.கணேசன், மாவட்ட பிற்படுத்தப்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் திருமதி இ.கார்த்திகேயனி,  அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 10, 2024

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் (09.09.2024) கால்நடை பராமரிப்புத் துறை சார்பில்,  9 புதிய நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள்  தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்  திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள்.தமிழ்நாட்டில் உள்ள கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில்  கால்நடை மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் சேவை (1962) 20.08.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டன.அதனடிப்படையில்,  இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு, ஒன்றியத்திற்கு 1 ஊர்தி வீதம் 11 ஒன்றியங்களுக்கு 11 ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 9 ஊர்திகள் தற்போது வரப்பெற்றுள்ளது. இந்த நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி ஒன்றிற்கு முதல் வருடத்திற்கு ரூ.24.10 இலட்சம் வீதம் மொத்தம் 11 ஊர்திகளுக்கு ரூ2.65 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.இந்த நடமாடும் மருத்துவ ஊர்திகள் மூலம் தொலைதூர கிராமங்களுக்கும், கால்நடை மருத்துவ சேவை இல்லாத கிராமப் பகுதிகளுக்கும், கால்நடை மருத்துவ சேவைகளை அந்தந்த இடத்திலேயே வழங்கிடவும், நோயுற்ற கால்நடைகளை நீண்ட தூரத்திற்கு அழைத்து செல்வதில் உள்ள சிரமங்களையும் , கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஏற்படும் நேர விரயத்தை தவிர்க்கும் நோக்கத்துடன் அப்பகுதியில் வசிக்கும் அனைத்து கால்நடை வளர்க்கும் விவசாயிகளும்  பயன்பெறும்  வகையில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் செயற்கைமுறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி, சினை ஆய்வு, மலடு நீக்க சிகிச்சை, கால்நடை மருத்துவ முகாமில் கலந்து கொள்ளுதல், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பங்கேற்று உதவுதல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படும்.இந்த நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் வார நாட்களில் ஞாயிறு தவிர பிற நாட்களில் காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் கால்நடைகளுக்குத் தேவையான சேவைகள் வழங்கப்படும். மேலும் 1962 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவசர அழைப்புகளை ஏற்று மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும்  இச்சேவையை கால்நடை வளர்ப்போர் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம் என மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தார்கள்.இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர், மரு.பி.டி.ஆர்.தியோபிலஸ் ரோஜர் மற்றும் துணை இயக்குநர், உதவி இயக்குநர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் உள்ளிட்ட  கால்நடை பராமரிப்புத்துறை  அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும்அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 10, 2024

முன்னாள் படைவீரர்களுக்கு வேலை வாய்ப்பினை ஊக்குவித்திடும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன-

முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான வேலை வாய்ப்பினை ஊக்குவித்திடும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள்  வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.  மேலும் பயிற்சியில் கலந்து கொள்ள குறைந்த பட்சம் 35 நபர்கள் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அப்பயிற்சியானது அந்த மாவட்டத்திலேயே நடத்தப்படும். இப்பயிற்சியில் சேர்ந்து பயனடைய விரும்பும் முன்னாள் படைவீரர்கள் திருவில்லிபுத்தூரிலுள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 07, 2024

"Coffee With Collector” என்ற 103-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (06.09.2024) ராஜபாளையம் சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 40 பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector”  என்ற 103- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 103-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு,  இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.  

Sep 07, 2024

மூன்றாவது புத்தகத் திருவிழாவினை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பொதுமக்களுக்கான குறு மாரத்தான்; 15.09.2024 அன்று நடத்தப்படவுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா செப்டம்பர் 27.09.2024 முதல் அக்டோபர் 07.10.2024 வரை கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.இப்புத்தகத் திருவிழாவில்  நூற்றுக்கும்  மேற்பட்ட  புத்தக  அரங்குகள்,பிரபல எழுத்தாளர்களின்  கருத்தரங்கு, , பள்ளி  மாணவ,  மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், தொல்லியல்   துறை அரங்குகள், உள்ளிட்ட  பல்வேறு சிறப்பு  அம்சங்களுடன்  அனைத்து  தரப்பு  மக்களும்  மாணவ  ,மாணவியர்களும், கலந்து  கொண்டு  பயன் பெறுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான  பணிகள்  நடைபெற்று  வருகிறது.  இப்புத்தகத்  திருவிழாவின்     மையக்கருத்து ” மரமும், மரபும் ”என்பதாகும். இப்புத்தகத் திருவிழா   குறித்து  விழிப்புணர்வு  ஏற்படுத்தும்  பொருட்டு  குறு மராத்தான் (10கி.மீ ) 15.09.2024 அன்று விருதுநகர்  மாவட்ட   ஆட்சியர்  அலுவலகத்தில்  இருந்து தொடங்கப்பட  உள்ளது  . புத்தகத் திருவிழா    விழிப்புணர்வு   மராத்தானில்  பொதுமக்களும்  கலந்து  கொள்ளலாம். ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவாக நடத்தப்படும். மேலும்  பரிசுத் தொகையாக முதல் பரிசு ரூ.10,000 இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000 வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ..பஜெயசீலன்.,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 07, 2024

வ.உ.சி. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 07.09.2024 அன்று விருதுநகர் ஸ்ரீ அம்பாள் கிராண்ட் அரங்கத்தில் ‘வ.உ.சி.யும் இலக்கியமும்”என்ற தலைப்பில் கருத்தரங்கம்

கரிசல் இலக்கியக் கழகம் சார்பாக வ.உ.சி. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 07.09.2024 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு விருதுநகர் ஸ்ரீ அம்பாள் கிராண்ட் அரங்கத்தில் ‘வ.உ.சி.யும்  இலக்கியமும்”என்ற தலைப்பில்  கருத்தரங்கம் நடைபெற உள்ளது.கரிசல் இலக்கியக் கழகத்தின் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கருத்தரங்கில் தலைமையுரை வழங்குகிறார்.  பேராசிரியர் க. ஆறுமுகத்தமிழன்  அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். பள்ளிக் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.இந்த நிகழ்வில் கலை இலக்கிய ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்கள் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Sep 07, 2024

இந்திய இராணுவத்தில் ஹவில்தாரராக பணிபுரிந்த சி.பொன்பாண்டியன் அன்னாரது பூத உடலுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் மேலாண்மறைநாடு கிராமத்தைச்சேர்ந்த இந்திய இராணுவத்தில் ஹவில்தாரராக பணிபுரிந்த சி.பொன்பாண்டியன் அவர்கள் தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் போர் ஒத்திகை பயிற்சியின் போது விபத்து ஏற்பட்டு மரணமடைந்தார். அன்னாரது பூத உடலுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்  வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள் ( 06.09.2024) மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

Sep 07, 2024

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் UPSC- 2025 தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது

 தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின்  (தாட்கோ) முன்னெடுப்பாக  டாக்டர்.அம்பேத்கார் அகாடமி  மற்றும் சென்னையில் உள்ள  முன்னனி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணக்கர்களுக்கு ஒரு வருட காலம்  UPSC தேர்வுக்கான   (பொது  அறிவு மற்றும் விருப்ப பாடங்கள்)  முதல் நிலை - முதன்மை நிலை  பயிற்சியினை  வழங்கவுள்ளது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (UPSC)  தேர்வுக்கு    தேர்வு எழுத தகுதியான மாணக்கர்கள் Screening test  மூலம்  தேர்வு செய்யப்பட்டு தேர்ச்சி  பெற்ற மாணாக்கர்களை நேர்மூகத்  தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு முதற்கட்டமாக  தகுதியுள்ள 100  மாணக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இப்பயிற்சியினை பெற பட்டப்படிப்பில்  தேர்ச்சி பெற்றவர்களும்  21 முதல் 36 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்,  இப்பயிற்சிக்கான கால அளவு ஒரு வருடம் விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும்.இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com  என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.எனவே உரிய பயனாளிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 07, 2024

கண்மாய்களில் இலவசமாக களிமண் மற்றும் வண்;டல் மண் எடுக்க அனுமதி பெற்ற விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் முறைகேடு மற்றும் விதிமீறல்கள் இன்றி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

விருதுநகர் மாவட்டத்தில்,  அரசாணை எண்.14, இயற்கை வளங்கள் (எம்;.எம்.சி.1) துறை, நாள்:12.06.2024-ன்படி, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் கட்டுப்பாட்டில் உள்ள 284 கண்மாய்களில் விவசாயிகள் விவசாய பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்டத் தொழில்களுக்கும் இலவசமாக களிமண் (Clay)  மற்றும் வண்;டல் மண் (Silt)  எடுக்க சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மூலம் இணைய வழியாக அனுமதி வழங்கப்பட்டுவருகிறது.இத்திட்டத்தில் நாளது தேதிவரை 1312 விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். கண்மாய்களில் களிமண் மற்றும் வண்டல் மண் எடுப்பதைக் கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் நிலையில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், மேற்படி திட்டத்தினை முறைகேடாக பயன்படுத்தியதாக இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டங்களில் தலா ஒரு வழக்கு வீதம் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆறு (06) வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.எனவே, மேற்படி திட்டமானது விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர் பயன்பெறும் வகையில் சீறிய நோக்கத்தோடு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட திட்டமாகும். இதில் முறைகேடு மற்றும் விதிமீறல்கள் இன்றி விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 2 ... 13 14 15 16 17 18 19 ... 69 70

AD's



More News