விருதுநகர் மாவட்டத்தில் செப்டம்பர்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.09.2025 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்கவும், விவசாயிகள் வட்டாரத்திற்கு இருவர் வாரியாக பொதுவான கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கவும், சிறந்த முறையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தினை நடத்த முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பிரிவு 27(1)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்குட்பட்டு இந்த திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக குறை தீர்ப்பு அலுவலராக திரு.மு.ஜெயபிரகாஷ் என்பவர் கடந்த 06.08.2025 முற்பகல் விருதுநகர் மாவட்டத்தில் பணியேற்பு செய்து பணிபுரிந்து வருகிறார்.இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களிடமிருந்து வரும் புகார்களை பெற்று, பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார். பிரச்சனைகள் நடக்கும் இடத்திற்கே சென்று விசாரணை மேற்கொள்வார். பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பிற புகார்கள் மீதும் நடவடிக்கைகள் மேற்கொள்வார்.மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் தங்களின் புகார்களை மனுக்களாக குறைதீர்ப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர் என்ற முகவரிக்கும் மற்றும் mgnregsvnrombudsperson@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் நிவர்த்தி செய்யும் வகையில் பொது மக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குறை தீர்ப்பு அலுவலரான திரு.மு.ஜெயபிரகாஷ் என்பவர் 8925811346 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வேளாண்மை உழவர் நலத்துறையின் திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (11.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், விழுப்பனூர் ஊராட்சியில் வேளாண்மைத்துறை கீழ் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்தில் வழங்கப்பட்ட பசுந்தாள் உர விதைகள், தக்கைப்பூண்டு விதைகள் பயிரிடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.மேலும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், விழுப்பனூர் ஊராட்சியில் வேளாண்மை பொறியியல்துறை கீழ் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தில் 70 சதவீத மானியத்தில் வழங்கப்பட்ட விசை களை எடுக்கும் இயந்திரத்தினை (பவர் வீடர்) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி, இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், விழுப்பனூர் ஊராட்சியில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தில் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 ஆயிரம் மானியத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வழங்கப்பட்டுள்ள தேனீப்பெட்டி, மண்புழு உரப்படுக்கை மற்றும் கால்நடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பயனாளிகளுடன் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.மேலும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளாக்குளம் ஊராட்சியில் வேளாண்மைத்துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனத்தில் அமைக்கப்பட்ட மகாகனி மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், முத்து வெங்கட்ராயபுரத்தில் வேளாண் பொறியியல் துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்து வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் பிறை ஊரணி தூர்வாரப்பட்டு புதிய குளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டைப்பட்டி ஊராட்சி, சிங்கம்மாள்புரம் கிராமத்தில் வேளாண் பொறியியல் துறையின் கீழ் வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் வேலியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், திருவண்ணாமலையில் தமிழ்நாடு நீர் பாசன நவீன மயமாக்கல் திட்டத்தில் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் நிலக்கடலையிலிருந்து எண்ணெய் பிரித்து, எடுத்தல் மற்றும் தரம்பிரிக்கும் மதிப்பு கூட்டு நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொருட்களின் தரம், பணியின் தன்மை குறித்து ஆய்வு செய்தார்.முன்னதாக, மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மண்புழு உரப்படுக்கை 50 சதவீத மானியத்திலும், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் மக்காச்சோள செயல்விளக்க திடல் இடுபொருட்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாணான்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்தும், குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பாடு குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,)திருமதி அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ)திருமதி சுமதி, வேளாண்மை துணை இயக்குநர் (வே.வணிகம்) திருமதி செல்வி, செயற்பொறியாளர் திருமதி இந்திரா, வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 ஆவது நிதி ஆணைய சுகாதார மானியம் 2025-2026 கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் பொது சுகாதார அலகு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் (11.09.2025) அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு மருத்துவ சேவைகள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செயலாற்றி வருகிறது. கடந்த நான்காண்டு ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் மற்றும் சேவைகள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த முன்னேற்றத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளும் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 ஆவது நிதி ஆணைய சுகாதார மானியம் 2025-2026 கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் பொது சுகாதார அலகு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இந்த புதிய கட்டடம் ஆய்வக அறை, மருந்து வழங்கும் அறை, மருத்துவர் அறை மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.இது போன்ற மக்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கான பணிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும். எனவே, மருத்துவ சேவைகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.ந.மணிகண்டன், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, செயல் அலுவலர் திரு.அன்பழகன், உதவி செயற்பொறியாளர் திரு.முத்து, உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவப் பணியாளர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னனி பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1-2025 முதல்நிலைத் தேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணக்கர்களுக்கு முதன்மைத் தேர்விற்கு (Mains Examinations) பயிற்சி வழங்கப்படவுள்ளது.இப்பயிற்சியில் சேர தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1-2025 முதல்நிலைதேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணாக்கர்கள் தாங்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்து பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம் மற்றும் விடுதியில் தங்கி பயிலுவதற்கான விடுதி கட்டணம் தாட்கோவால் ஏற்கப்படும்.இப்பயிற்சியில் சேர்ந்து பயில www.tahdco.com என்கிற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில், (10.09.2025) தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் “ வாசித்ததும் யோசித்ததும் ” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் உயர்கல்வித் துறையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து "மாபெரும் தமிழ்க்கனவு" என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு, 2022- 2023 மற்றும் 2023 - 2024 கல்வியாண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 2000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2 இலட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 200 இடங்கில் சிறப்பாக நடத்தப்பட்டன.இதன் 100-வது நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு, தமிழர் தொன்மை, மொழி முதன்மை, சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது. எனவே, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, அடுத்த கட்ட நிகழ்ச்சியானது தற்போது தொடங்கியுள்ளது. நமது தமிழ் மரபின் வளமையும் பண்பாட்டின் செழுமையும், சமூகச் சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு இந்தப் பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலகம் மூலம் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை, கல்லூரி மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் உயர்கல்;வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் கல்விக்கடன், வங்கிக்கடன், மாவட்ட தொழில் மையம் சார்பில் மத்திய மாநில அரசுகளின் தொழில் முனைவோர் திட்டங்கள், மான்யத்துடன் கூடிய கடன்உதவிகள், தாட்கோ மூலம் தொழில்முனைவோர்களுக்கான அரசுத் திட்டங்கள் மற்றும் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வாய்ப்புகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழு பொருட்களின் கண்;காட்சி மற்றும் விற்பனை உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.மேலும், கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்களது சிந்தனை மற்றும் திறனை நிரூபிக்கும் வகையில் தமிழ் பெருமிதம் குறித்து சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பெருமித செல்வன் மற்றும் பெருமித செல்வி விருதுகள் வழங்கப்பட்டன. சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் பின் சிறந்த கேள்விகள் எழுப்பிய கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேள்வியின் நாயகன் மற்றும் கேள்வியின் நாயகி விருதுகளும் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் அரசு சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் (10.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், கூரைக்குண்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடி குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், கூரைக்குண்டு ஊராட்சியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களின் தரம் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குல்லூர் சந்தையில் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் ரூ.14.06 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 244 குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு குடியிருப்பு வீடுகளின் தரம் குறித்தும் மின்சாரம் சாலை குடிநீர் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் வேளாண்மை உழவர் நலத்துறைச் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,, அவர்கள் (10.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லிபத்திரியில், வேளாண்மைத்துறையில் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தின் கீழ் பயனாளிக்கு 70 சதவீத மானியத்தில் பவர் டில்லர் இயந்திரம் வழங்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நோில் சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து பயனாளியுடன் கலந்துரையாடினார்.மேலும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லிபத்திரியில்,வேளாண்மை பொறியில் துறையின் சார்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பண்ணைக்குட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, வில்லிபத்திரியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் சார்பில் மாநில தோட்டகலை வளர்ச்சித் திட்டம் தென்னை பரப்பு விரிவாக்கம் மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள 48 தென்னை கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், அழகிய நல்லூர் ஊராட்சியில் வேளாண்மைத்துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் தெளிப்புநீர் பாசனக் கருவிகள் முழு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், முழு மானியத்தில் வழங்கப்பட்டுள்ள சப்போட்டா பழமரக்கன்றுகளையும், நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அழகிய நல்லூர் ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட தேனீ பெட்டிகள் மற்றும் தேன் எடுக்கும் கருவியினையும், ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மானியத்தில் வழங்கப்பட்டுள்ள தேனீப்பெட்டி, மண்புழு உரப்படுக்கை மற்றும் கால்நடைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,)திருமதி அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ)திருமதி சுமதி, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபாவாசுகி, செயற்பொறியாளர் திருமதி இந்திரா, வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடுஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ)மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலானபயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழித் தேர்வுக்கான பயிற்சி (German Language Test Training)அளிக்கப்படவுள்ளது.இப்பயிற்சினைபெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மற்றும் பி.எஸ்.சி நர்சிங் (B.Sc Nursing),பொதுநர்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ (GNM Diploma), பி.இ(மெக்கானிக்கல்இன்ஜினியரிங்), பி.இ (பயோமெடிக்கல் இன்ஜினியரிங்), பி.இ (மின் மற்றும் மின்னணுபொறியியல் (EEE)) & பி.டெக்.தகவல் தொழில்நுட்பம் (B.Tech IT)ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும்வயது 21 முதல் 35 வரை நிரம்பியிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00லட்சத்திற்குள் இருக்கவேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு ஒன்பதுமாதமும் விடுதியில்தங்கி படிப்பதற்கான செலவினத்தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.இப்பயிற்சிமுடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஜெர்மனி நாட்டில்பணிபுரியவும்ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.2,50,000/- முதல் ரூ.3,00,000/-வரைவருவாய் ஈட்டவும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.இப்பயிற்சியில்சேருவதற்கு www.tahdco.com என்கிற தாட்கோ இணையதளமுகவரியில்பதிவு செய்ய வேண்டும். தகுதியுடையவிண்ணப்பதாரர்கள் பதிவுசெய்து இவ்வாய்ப்பினைபயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்.மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்(09.09.2025)நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப்பணிகள், சேவைகள், நலத்திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு, அப்பணிகள் முறையாகவும், அரசு விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து வருகின்றனர்.அதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் சுந்தரநாச்சியார்புரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.09 இலட்சம் மதிப்பில் புதிய குளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், முத்துசாமிபுரம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.13.30 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணிகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, குளிரூட்டும் நிலையம், பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்கள் தயாரிக்கும் பணிகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும், ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.