25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து  ஆய்வு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் (02.07.2024) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கீழசேகரநல்லூர் ஊராட்சி மேலகண்டமங்களம் கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.25.64 இலட்சம் மற்றும் ரூ.47 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து, கீழகண்டமங்களம் ஊராட்சி சித்தலக்குண்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.12.73 இலட்சம் மதிப்பில் புணரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளியில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளும் வகையில் வில்லுப்பாட்டு மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருவதை பார்வையிட்டார்.
பின்னர், கொட்டம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.3.57 இலட்சம் மதிப்பில் புணரமைப்பு பணிகள்  செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அங்கு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News