25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 20, 2024

காரியாபட்டி வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்ட கள ஆய்வு

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் மூலம் 18.09.2024 , காலை 9 மணி முதல் 19.09.2024 இன்று காலை 9 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதனடிப்படையில், 18.09.2024 அன்று நள்ளிரவில், காரியாபட்டி காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிசிடிவி கண்காணிப்பு பணிகள் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையினை 18.09.2024 அன்று நள்ளிரவில் பார்வையிட்டு,   அங்கு  உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களிடம் சிகிச்சை முறைகள்,  அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்து, காரியாபட்டி அரசு மருத்துவமனையில் இருந்து உயர் மருத்துவ சிகிச்சை, அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் பிரசவத்திற்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள் மற்றும் போதுமான மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். மேலும், இரவு பணியில் இருக்கும் மருத்துவ ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்தார்.மேலும், முகாமின் இரண்டாம் நாளான இன்று (19.09.2024)காரியாபட்டி வட்டத்தில் உழவர் சந்தையினை பார்வையிட்டு ஆய்வு செய்து, உழவர் சந்தை அலுவலர்களிடம் காய்கறி விலை நிர்ணயம் குறித்தும் கேட்டறிந்தும், எடைக்கல்லினை ஆய்வு செய்து, பின்னர் உழவர் சந்தைக்கு கூடுதலான விவசாயிகள் மற்றும் நுகர்வோர் வருகையை அதிகரிக்க அறிவுறுத்தினார்.பத்தாவது வார்டு தாமரை தெரு மற்றும் மருதம் தெருவில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதாரம், குடிநீர் பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.காரியாபட்டி வட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து நுண் உரம் தயாரிக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்து, பின்னர் பணியாளர்களிடம் குப்பை சேகரிக்கும் முறை மற்றும் அவர்களின் பணி நேரம் குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.காரியாபட்டி பேரூராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் குளத்தினை   மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் குறித்து      மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

Sep 19, 2024

காரியாபட்டி வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம்

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்ட முகாமானது 18.09.2024 இன்று காலை 9 மணி முதல் மறுநாள் 19.09.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமின் கீழ், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டம், காரியப்பட்டி வட்டத்தில், மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில், மாண்புமிகு  மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, தோணுகால் சந்திரக்குளம் கண்மாயில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நீர்நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.பின்னர், வரலொட்டி ஊராட்சியில், தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பில், பனை விதைகள் நடும்  முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பள்ளிக்கு மட்டும் அனுப்புங்கள், படிப்பும் பாதுகாப்பும் எங்கள் பொறுப்பு என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டம்,  காரியாபட்டி வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டம் மூலம் நடைபெற்று வரும் ஆய்வுப்பணிகளில் இன்று(18.09.2024) காரியாபட்டி அரசு மெல்ல கற்போருக்கான  பள்ளியில், அங்குள்ள ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி தரம், கற்பிக்கும் முறைகள் மற்றும் வருகைப்பதிவேடு உள்ளிட்டவைக் குறித்து கேட்டறிந்தார்.பின்னர் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் போது தாங்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டும் என மாணவியர்களிடம்மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை  வழங்கினார்.மேலும், காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சமைக்கப்படும் உணவு மற்றும் முட்டையின் தரம் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், காரியாபட்டி வட்டத்தில் உள்ள நூலகத்தினை ஆய்வு செய்து, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் விபரம், நூல்களின் இருப்பு மற்றும் போட்டித்தேர்வு தயாராகி வரும் மாணவ,மாணவியர்களிடம் நூலகத்தின் பயன்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், காரியாபட்டி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளின் விபரம் குறித்தும் மற்றும் காரியாபட்டி கால்நடை மருத்துவமனையில், கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.காரியாபட்டி வட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடை எண் 1 -ல் உள்ள குடிமைப் பொருட்களை சரிபார்த்து, பொருட்களின் இருப்பு மற்றும் தரம்  குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், காரியாபட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று பார்வையிட்டு, அங்குள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், வயதுகேற்ற எடை, உயரம் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சரிபார்த்து  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.காரியாபட்டி பேரூராட்சியில் ரூ.25 இலட்சம் மதிப்பில் வார்டு எண் -10-ல் கோல்டன் நகரில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு வருவதையும், காரியாபட்டி பேரூராட்சியில், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.10.27 கோடி மதிப்பில், 5 மேல்நிலைத்தேக்கத் தொட்டி புதிதாக அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.பின்னர், அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்.,த.கா.ப., அவர்கள் முன்னிலையில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, வட்டாட்சியர் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sep 18, 2024

சிறுமியின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு மறுவாழ்வு நடவடிக்கை

அருப்புக்கோட்டை ஒன்றியம், பெரியகட்டங்குடி, காலனி தெருவில் வசித்து வந்த திரு.தங்கராஜ் - திருமதி.மீனாட்சி தம்பதியருக்கு 12.09.2016 அன்று மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்பச்சிளம் பெண் குழந்தையை 10 நாட்கள் மட்டுமே வளர்த்த நிலையில், அருப்புக்கோட்டை வட்டம், பெரியகட்டங்குடி பகுதியில் வசித்து வந்த தம்பதியர் வசம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டனர் என அறியப்பட்டது.இப்பெண் குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுவின் ஆணைப்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்து வருகிறார். இச்சிறுமி மீது உரிமை கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் என எவரும் இதுநாள்வரை வரவில்லை என அறியப்பட்டது.இச்சிறுமியின் பெற்றோர் குறித்த விபரங்கள் அறிய மேற்கண்ட கிராமத்தில் நேரடியாக களவிசாரணை செய்தபோது எவருமில்லை என அறியப்பட்டது.இச்சிறுமியின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு மறுவாழ்வு நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் இச்சிறுமியின் பெற்றோர் அல்லது உறவினர்கள் இச்சிறுமியின்மீது உரிமைகோரி 26.09.2024-க்குள் “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5, வ.உ.சி.நகர், சூலக்கரைமேடு, விருதுநகர் - 626003, தொலைபேசி எண். 04562 -293946“ என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.அவ்வாறு எவரும் வரவில்லை எனில் இச்சிறுமியின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு மாற்றுப்பராமரிப்பு திட்டத்தின்கீழ் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,. I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 17, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தலைமையில்  (16.09.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டாமாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு,  விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை,  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.  முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச்சார்பில், பாவாலி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை மாற்றுத்திறனாளி நல அலுவலகத்திற்கு ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் சப்தகிரி மறுவாழ்வு அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான தொழிற்பயிற்சி இல்லம் செயல்படுவதற்காக ஒப்படைத்தார்.                      மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நலத்துறையின் சார்பில், அருப்புக்கோட்டை வட்டம், வெள்ளையாபுரம் கிராமத்தில் உள்ள 6 பயனாளிகளுக்கு  தலா ரூ. 3.60 இலட்சம் மதிப்பில், இலவச வீட்டுமனை பட்டாக்களையும்,மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி சேருவதற்கு  பொருளாதார உதவி வேண்டி, விண்ணப்பம் அளித்த இரண்டு மாணவிகளுக்கு  மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து  தலா ரூ.2500/- என  மொத்தம் ரூ.5000/- மதிப்பிலான காசோலைகளையும்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நேற்று நடைபெற்ற, திருக்குறள் முற்றோதல் விழாவில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள்  அனைவரையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து, பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.அமர்நாத், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் திரு.ரமேஷ், உதவி ஆணையர் (கலால்) திரு.கணேசன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 17, 2024

‘சமூக நீதி நாள்” உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (16.09.2024) ‘சமூக நீதி நாள்” உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S ., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.தமிழக சட்டபேரவையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் -17 ம் தேதி ஆண்டுதோறும்  ‘சமூக நீதி நாளாக“ கொண்டாடப்படும் என அறிவித்தார்கள்.அதன்படி,  சாதி ஏற்றதாழ்வுகள், தீண்டாமை கொடுமைகளை மத வேறுபாடுகளை உதறி தள்ளி பெண்களை சம நிலையில் மதித்திடும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 17-ம் நாள் ஆண்டுதோறும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘சமூக நீதி நாள்” உறுதிமொழியை எடுத்து கொள்ள வேண்டுமென அரசின் ஆணையின்படி,‘பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும்-யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும்,எனதுவாழ்வியல் வழிமுறைகளாகக் கடைபிடிப்பேன்.சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்.சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்.மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்”. என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள்  ஏற்றுக்கொண்டனர்.

Sep 17, 2024

எழுத்தாளர் கி.ரா. அவர்களின் 103-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, எழுத்தார்வம் மிக்க மாணவர்களுக்கு ஒரு நாள் சிறுகதைப் பயிலரங்கம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில்  (16.09.2024) கரிசல் இலக்கிய கழகம் மற்றும்  சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்த எழுத்தாளர் கி.ரா. அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, எழுத்தார்வம் மிக்க மாணவர்களுக்கு ஒரு நாள் சிறுகதைப் பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.பின்னர், கி.ரா.வின் கதைகளில் இருந்து பத்து கதைகளை தேர்ந்தெடுத்து “முத்துக்கதைகள் பத்து” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட  புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கினார்.நமது மண்ணில் வாழ்ந்த ஒரு மகத்தான எழுத்தாளர். இந்த மண்ணில் பல நூற்றாண்டுகளாக இருந்த வறுமை, ஜாதி, ஏற்றத்தாழ்வு, பெண் அடிமை, விவசாயிகள் காலங்காலமாக சந்தித்து வரக்கூடிய நெருக்கடிகள், இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பிறகு அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியிலும், அவர்கள் வாழ்விலும் விரும்பத்தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டதா என்பன குறித்த வரலாற்று ஆவணமாக கி.ரா-வின் சிறுகதைகள் இருக்கும்.ஒரு சிறுகதை  என்றால் என்ன?  சிறுகதையை நீங்கள் எவ்வாறு படைக்க முடியும்? ஒரு சிறுகதை என்பது  எப்படி இருக்க வேண்டும் என்பது எல்லாம் கி.ரா.வின்  சிறுகதைகளில் இருந்தே நாம் கற்றுக்கொள்ளலாம்.ஒரு சாதாரண கதை என்பது இந்த சமூகத்தில் உள்ள மாற்றங்களை எவ்வாறு பதிவு செய்கிறது. சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கக்கூடியவர்களின் பிரச்சனைகளை எவ்வாறு பதிவு செய்கிறது. எளிய மனிதர்களின் மன உணர்வுகளை எவ்வாறு பதிவு செய்கிறது என்று சொல்லலாம்.எனவே நீங்களும் இதுபோன்ற எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாக சமூகத்தின் அனுபவங்களை பெற முடியும். அனைவரும் சிறுகதை வாசித்து விட்டு, சிறுகதை எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு சிறுகதை வாசிப்பது என்பது அந்த சிறுகதையில் இருக்கக்கூடிய கதை மாந்தர்களின் வழியாக அந்த சூழலில் நாம் வாழ்ந்து பார்க்கலாம்.அந்த கதை மாந்தர்கள் வழியாக மனிதர்களோடு பேசுவது, நாம் எதிர்கொள்ளாத அனுபவங்களை ஒருவேளை எதிர்க்கொண்டால், நாம் எவ்வாறு அதற்கு எதிர்வினை ஆற்றுவோம் என்பது குறித்து நமக்கு சொல்லித்தருவது சிறுகதை.நம் மண்ணைச் சேர்ந்த கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்று போற்றக்கூடிய  தன்னுடைய வாழ்நாளில் ஏறக்குறைய  80 ஆண்டுகள் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டு சாதாரண மனிதர்கள் பற்றி, விவசாய பெருங்குடி மக்களை பற்றி,  தொழிலாளர்களை பற்றி, பெண்களுடைய முன்னேற்றம் பற்றி, பெண் விடுதலைப் பற்றி, எளிய மனிதர்களைப் பற்றி தன்னுடைய கதைகள் முழுவதிலும் பதிவு செய்தவர் எழுத்தாளர் கி.ரா. அவர்கள்.எழுத்தாளர் கி.ரா.வின் அவர்களின் பிறந்த தினமான இன்று நம் அனைவரும் அவரின் சிறுகதைகள் வழியாக இந்த சமூகத்தில் புரிந்து கொள்வதற்கும்,  நாளை இந்த சமூகம் விரும்பத் தகுந்த மாற்றங்களை அடைவதற்கு நம்முடைய செயல்பாடுகள் வழியாக உறுதி ஏற்பதற்கும்  இந்த நாள் இனிய நாளாக அமைந்திருக்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் திரு.கி.ரா.பிரபாகர் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். எழுத்தாளர்கள் திருமதி.விஜிலா தேரிராஜன், திரு.முத்துபாரதி, திரு.சரவணகாந்த்,  ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி முதல்வர் முனைவர் பெ.கி.பாலமுருகன், துணை முதல்வர்  செல்வி இரா.முத்துலெட்சுமி, கரிசல் இலக்கிய கழக செயலாளர் மரு.த.அறம்,  கல்லூரி பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sep 17, 2024

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்புவைப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எச்சரிக்கை.

தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் தீவிர ஒழிப்புத் திட்டத்தின்படி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்த 6 குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளிலும் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள்  விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.          கடந்த  01-01-2024 முதல்  07-09-2024 முடிய உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும்  குழுவாக இணைந்து 586 முறை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்ட  260 கடைகள்  மற்றும்  29 வாகனங்களில்  1207 கிலோ 774 கிராம் எடையிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 260 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும்,  260 கடைகள் மற்றும் 29 வாகனங்களுக்கும் ரூ.67,60,000/- ( ரூபாய் அறுபத்து ஏழு இலட்சத்து  அறுபதாயிரம் )  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 08-09-2024 முதல் 14-09-2024 முடிய ஒரு வாரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், காவல் துறையினரும்  இணைந்து  மேற்கொள்ளப்பட்ட 12 குழு ஆய்வுகளில் 7 கடைகள் மற்றும் 1 வாகனங்களில் 35 கிலோ 867 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 7 கடைகள் சீல் வைக்கப்பட்டன. 7 கடைகள் மற்றும்  1 வாகனங்களுக்கு ரூ.2,25,000/- ( ரூபாய் இரண்டு இலட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால்  ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2வது முறையாக  தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் ஒரு மாதம் வரை  கடை மூடி சீல் வைக்கப்படும்.  3வது முறையும் தவறு செய்தால்  ரூ.1லட்சம் அபராதம், மூன்று மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். இம்மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு  வைப்பது  கண்டறியப்பட்டால் கடும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 17, 2024

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20.09.2024 அன்று விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக இந்த மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. அதன்படி படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக  20.09.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 108 AMBULANCE , ADYAR ANANDHA BHAVAN,  TVS BREAKLINE, AANAIMALAI TOYOTO,  போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள்  கலந்து கொண்டு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, I.T.I. டிப்ளமோ மற்றும்  பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 20.09.2024 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in   என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது  மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.           இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் .விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I AS., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 17, 2024

2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு 19.10.2024 அன்று நடத்தப்படவுள்ளது - மாணவர்கள் விண்ணப்பங்களை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பிபாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2024-2025-ஆம்  கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு 19.10.2024 (சனிக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.தமிழ்நாடு அரசின் 10-ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.2024-2025-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் (மெட்ரிக்/CBSE / ICSE/ உட்பட ) மாணவர்கள். 19.10.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in  என்ற இணையதளம் 05.09.2024 முதல் 19.09.2024 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஃ முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 19.09.2024 ஆகும் என  முதன்மைக் கல்வி  அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 16, 2024

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட  பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள்  (14.09.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, சிவகாசி மாநகராட்சி பகுதியில், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.61 இலட்சம் மதிப்பில் செல்லி அம்மன் கோவில் ஊரணி, தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு வரும்; பணியினையும்,திருத்தங்கல் வடக்கு ரத வீதியில், ரூ.25 இலட்சம் மதிப்பில் கிளை நூலகக் கட்டடம் கட்டப்பட்டு வரும் பணியினையும்,  பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், சிவகாசி மாநகராட்சி வார்டு 23-ல், ரூ.15 இலட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருவதையும், ரூ.3.30 கோடி மதிப்பில், சிவகாசி பேருந்துநிலையத்தில் உள்ள வணிக வளாகங்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் கூடம், சுகாதார வளாகம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 9 10 11 12 13 14 15 ... 69 70

AD's



More News