25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 07, 2024

அருங்காட்சியகத்துறையின் மூலம் சென்னையில் அமைக்கவுள்ள சுதந்திர தின அருங்காட்சியகத்திற்காக பொதுமக்களின் பங்களிப்பை கோரும் வகையில் - இந்திய சுதந்திரப் போரட்டம் தொடர்பான பொருட்கள் இருப்பின் நன்கொடையாக வழங்கலாம்

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும், பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 75-வது சுதந்திர தின விழா உரையின் போது அறிவித்துள்ளார்கள்.சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரியக் கட்டடமான ஹ{மாயுன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் அரசு அருங்காட்சியகங்கள் துறையின் மூலம் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. ஆகையால், விருதுநகர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் தங்களிடமுள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ. சீருடைகள் மற்றும் ஐ.என்.ஏ. அஞ்சல் தலைகள் போன்ற சுதந்திரப்போராட்டம் தொடர்பான அரும்பொருட்கள் இருப்பின் அன்பளிப்பாக கொடுத்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.அவ்வாறு, தங்கள் கைவசமுள்ள அரிய பொருட்களை சென்னை அரசு அருங்காட்சியகம் (பாந்தியான் சாலை, எழும்பூர்-08)அல்லது விருதுநகரிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் (40/1, லிங்க் ரோடு, வி.வி.ஆர். அரங்கம், விருதுநகர்-01, அலைப்பேசி-99944-59521) வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியக ஆணையர் அவர்களால் வழங்கப்படும்.இவ்வாறான அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் பொழுது அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெறும். ஆகவே விருதுநகர் மாவட்ட பொதுமக்கள் தங்களிடமுள்ள சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை கொண்டு அமையவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Sep 07, 2024

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர்/ அருப்புக்கோட்டை/ சாத்தூர்/ திருச்சுழியில் 2024-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்கள் நேரடிச்சேர்க்கைக்கு 30.09.2024 அன்று வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர் / அருப்புக்கோட்டை / சாத்தூர் / திருச்சுழியில் 2024-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்கள் நேரடிச்சேர்க்கை மூலம் 31.08.2024 முடிய சேர்ந்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது ஒரு சில தொழிற்பிரிவுகளில் 100 சதவீத பயிற்சியாளர்கள் சேர்க்கை பூர்த்தியடையாத காரணத்தினால் மேலும் 30.09.2024 முடிய நேரடி சேர்க்கைக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இப்பயிற்சிக்கு இருபாலரும் (ஆண்/பெண்) 30.09.2024-க்குள் உரிய தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள்.வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்பக்கட்டணமாக ரூ.50/-யை செலுத்தி விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள (இயந்திர வேலையாள், தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை, உட்புற வடிவமைத்தல் மற்றும் அலங்கரித்தல் மற்றும் தொழிற்துறை எந்திரவியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்பவியலாளர்) ஓராண்டு/ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேரலாம்.  மேலும், சேர்க்கை கட்டணம் ஓராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.185/- ஈராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.195/- ஆகும்.  அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) / சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட்  / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் /  பயிற்சியாளர் அடையாள அட்டை / அரசு பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பெறும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 /- மற்றும் 2024-ம் ஆண்டு ஆகஸ்ட முதல்; பயிற்சியில் சேரும் ஆண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 /- கூடுதலாக உதவித்தொகை வழங்கப்படும்.     விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்  (2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) / பள்ளி மாற்றுச்சான்றிதழ் / சாதிச்சான்றிதழ் / ஆதார் அட்டை / பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி கைபேசி எண் விவரம். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்களான விருதுநகர்: 04562-294382 / 252655, அருப்புக்கோட்டை: 04566-225800 சாத்தூர்: 04562-290953 / திருச்சுழி: 95788-55154/ 70100-40810 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 07, 2024

அரசு/அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு “இளம் பசுமை ஆர்வலர்“ என்ற சிறப்பு பயிற்சி முகாம்

மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை மற்றும் வனத்துறை இணைந்து விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அரசு/அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு “இளம் பசுமை ஆர்வலர்“ என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்ட பயிற்சி முகாமானது நான்கு கல்லூரிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.1. ராம்கோ பொறியியல் கல்லூரி, இராஜபாளையம்2. செந்திகுமார நாடார் கலைக்கல்லூரி, விருதுநகர்3. இராமசாமி நாயுடு கலைக்கல்லூரி, சாத்தூர்4. சௌடாம்பிகா பொறியியல் கல்லூரி, அருப்புக்கோட்டைமேற்கண்ட பயிற்சியில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஆர்வமும் விருப்பமும் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வரும் ஞாயிறு 08.09.2024 அன்று காலை 7.00 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.ஒரு நாள் பயிற்சி கட்டணமாக ரூ.200/- செலுத்தப்பட வேண்டும். மாணவர்களுக்கு இலவசம்.  பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் காலை மற்றும் மதியஉணவு பயிற்சி நடைபெறும் கல்லூரியில் வழங்கப்படும் .இதன் தொடர்சியாக இரண்டாம் பயிற்சி 14.09.2024 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. மேலும் பயிற்சி சார்ந்த முன்பதிவிற்கு 79042-67235 என்ற கைபேசியை தொடர்பு  கொள்ளலாம். எனவே ஆர்வம் உள்ள பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 06, 2024

உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு உடனடித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து,  அம்மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் விதமாக உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் (05.09.2024) நடைபெற்றது.தமிழக அரசு, மாணவர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை அதிகமாக உயர்கல்விக்கு சேர்க்கை பெறும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 2023-2024 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 97 சதவீத மாணவர்கள், உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அந்த வகையில் 12-ஆம் வகுப்பு உடனடித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் விதமாக இன்று நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட  மாணவர்கள் கலந்து கொண்டனர். இம்மாணவர்களிடம்; தனித்தனியாக உயர்கல்விக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதற்கான காரணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், சரியான வழிகாட்டியின்மை, பாடப்பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடர முடியாமல் இருப்பதாக தெரிவித்த மாணவ, மாணவியர்களிடம், அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பாடப்பிரிவு துறைகளை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்தும், தீர்வுகளை எடுத்துக்கூறியும், உயர்கல்வி தொடர்வதற்கான உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களில் 11 மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 5 மாணவர்கள் தனியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 11 மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் என முதற்கட்டமாக மொத்தம் 27 மாணவர்கள் உயர்கல்வி பயில கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான முதலாமாண்டு கல்வி கட்டணம் விருதுநகர் கல்வி அறக்கட்டளையின் மூலம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள மாணவர்களையும், உயர்கல்வியில் சேர்க்கை பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டிசெல்வன், அரசு அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 06, 2024

கல்லூரிச் சந்தை நிகழ்ச்சி மூலம் நடைபெற்று வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை

விருதுநகர்  மாவட்டம், சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் (தன்னாட்சி) கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை கல்லூரி மாணவியரிடம் சந்தைப்படுத்தும் நோக்குடன்  நடைபெற்று வரும் கல்லூரிச் சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட  ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,  I A S., அவர்கள்  (05.09.2024) நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் 04.09.2024 முதல் 06.09.2024 வரை நடைபெறும்  இக்கண்காட்சியில்  விருதுநகர் மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய வெளி மாவட்டங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களான காட்டன் சேலைகள், சுடிதார் டாப்ஸ், சணல் நார் பொருட்கள், மர பொம்மைகள், செயற்கை ஆபரணங்கள், கிறிஸ்டல் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பேன்ஸி பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றம் திண்பண்டங்கள் உள்ளிட்ட உற்பத்திப்பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில்,  திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரகஃநகர்புர வாழ்வாதார இயக்கம்) திரு.ஜே.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், கல்லூரி நிர்வாகிகள், துணைமுதல்வா,பேராசிரியர்கள், உதவி திட்ட அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவியர்  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 06, 2024

தாயின் பெயரில் மரம் நடுதல் (Plant For Mother Campaign)" என்ற பிரச்சார திட்டம்

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் மூளிப்பட்டி கிராமத்தில், பேங்க் ஆப் இந்தியா மதுரை மண்டலம் சார்பில், "தாயின் பெயரில் மரம் நடுதல் (Plant For Mother Campaign)" என்ற பிரச்சார திட்டத்தின் கீழ் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் (05.09.2024) மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

Sep 06, 2024

ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா

விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகக் கூட்டரங்கில் (05.09.2024) ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற   பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், 74 அரசுப்பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்களும், 51 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்களும், 65 தனியார் பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்களும் என மொத்தம் 190 பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்களை மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.ஆசிரியர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் வழங்க வேண்டும். மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களுக்கு ஏற்ப துறைகளை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய அங்கீகாரம் பெறாத சில கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை பெறுவது தவிர்க்க முடியும்.ஆசிரியர்களாகிய நீங்கள் மாணவ, மாணவியர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்க வேண்டும். பெற்றோர்களின் விருப்பம் இல்லை என்றாலும்,  அவர்களின் அனுமதி கிடைக்கவில்லை என்றாலும், பெற்றோர்களுக்கு உயர்கல்வி படிப்பது குறித்த உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.மேலும், மாவட்டத்தில் உயர்கல்வி சேராமல் இருக்கும் மாணவர்களின் குடும்பங்களில் பொதுவாக 99 சதவிகிதம்  அவர்களின் முந்தைய தலைமுறையினர்  பட்டதாரிகளாக இருக்க மாட்டார்கள். தற்பொழுதும் உயர்கல்வி படிக்கவில்லை என்றால் இன்னும் அவர்கள் ஒரு தலைமுறை காலம் காத்திருக்க வேண்டும். அதனால்,  நாளைய வாழ்க்கை சிரமங்களை எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும்.ஒரு ஆசிரியர் பணியில் குறிப்பாக உயர்கல்விக்கு மாணவர்களை பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடனே அவர்களை வழிகாட்டுவது மட்டுமல்ல,  அவர்களை நீண்டகாலமாக அவர்களுக்கான பிரச்சினைகளை எடுத்துக்கூறி வழிகாட்டுவதும் தான். மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை தவிர அதிகமான விஷயங்கள் பற்றி எடுத்துச்சொல்ல வேண்டியுள்ளது.மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து எந்த துறையை தேர்வு செய்து படித்தாலும் அவர்களுக்கு வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வரும். இது எல்லாவற்றையும் எடுத்துக் கூறி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவதோடு, வாழ்க்கை குறித்து புரிதல்கள் ஏற்படுத்துவதிலும் ஆசிரியர்களுக்கான பணியில் மிகப்பெரிய தேவை இருக்கிறது.மாணவர்களை சரியான வழியில் ஆற்றுப்படுத்துவதற்கும், எதிர்கால வாழ்வியல் சிக்கல்களை எதிர்கொள்வதற்கும் தொடர்ச்சியாக செயல்படுவதற்கு தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.எனவே, மாணவர்களின் வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற முடியும் என்பது குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி, அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாம் செயல்பட வேண்டும் எனவும், இந்த ஆண்டும் நமது மாவட்டத்தில் 100 சதவிகிதம் அனைத்து பள்ளிகளிலும் தேர்ச்சி பெற அனைத்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டுமென எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்  அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 06, 2024

மூன்றாவது புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு நூறாண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைக் காட்சிப்படுத்தும் கலைக்காட்சி அரங்கம் அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத்திருவிழா, விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாக பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 07.10.2024 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது. இப்புத்தகத் திருவிழாவின் மைய நோக்கம் "மரமும், மரபும்", அதாவது சுற்றுச்சூழலையும், நமது பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகும். இதனடிப்படையில் இப்புத்தகக் கண்காட்சியில், நூறாண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைக் காட்சிப்படுத்தும் கலைக்காட்சி அரங்கம் அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விருதுநகர் மாவட்டத்தின் வரலாறு, வளர்ச்சி, பண்பாடு, பின்பற்றிய பழக்க வழக்கங்கள், நடைமுறைகள்,தொழில்கள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் உள்ள நூறாண்டுகளுக்கு முந்தைய, அரிய புகைப்படங்கள் மற்றும் பழமையான, அரிய ஆவணங்கள், ஆகியவை பொது மக்களிடம் இருந்து வரவேற்கப் படுகின்றன.மேலும், பொதுமக்களால் வழங்கப்படும் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள்  காட்சிப் படுத்துவதற்காக உரிய முறையில் படியெடுக்கப்பட்டு மீண்டும் உரியவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும். பழமையான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை, செப்டம்பர் 20-ம் தேதிக்குள், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வேலை நாள்களிலும் நேரில் வந்து கொடுக்கலாம். இது தொடர்பாக 73977-15688 -என்ற கைப்பேசி எண்ணில் மாவட்ட சுற்றுலா அலுவலரைத்  தொடர்பு கொள்ளலாம்.மேலும் காட்சிப்படுத்தப்படும் சிறந்த புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 06, 2024

விருதுநகர் மாவட்ட அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு” பள்ளி திட்டத்தின் மூலமாக சமூக பங்களிப்பு நிதி வழங்க பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேண்டுகோள்

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் பெரும் முயற்சிகளில் ஒன்றாக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காகவும், சமூக பங்களிப்பு மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை ஒருங்கிணைக்கவும் 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது பங்களிப்புகளை பொருளாகவோ பணமாகவோ அல்லது களப்பணி செய்வதன் மூலமாகவோ பங்களிக்கலாம்.இத்திட்டத்தின் வாயிலாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள்,  மற்றும் தனிநபர்கள் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பங்களிக்கலாம். நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி

Sep 05, 2024

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 11.09.2024 அன்று பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள மற்றும் சமூதாய தலைவர்களுடன் சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் (04.09.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நிபந்தனைகள் குறித்து  தெரிவிக்கையில்:-1. அஞ்சலி செலுத்த செல்பவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.  வாடகை வாகனங்கள் (T.Board)   மற்றும் திறந்த வெளி வாகனங்களில் (Open type)  செல்ல அனுமதி இல்லை..  இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், டாடா ஏஸ் (TATA ACE) சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை.2. சொந்த வாகனங்கள் மூலம் (கார், வேன் மற்றும் பிற இலகு வாகனங்கள் மட்டும்) வருகை தருபவர்கள்; வாகன எண், வாகனத்தில் பயணம் செய்வோர் விபரங்களை 08.09.2024 ஆம் தேதிக்கு முன்பாக விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அலுவலக மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில் அளித்து வாகன அனுமதி சீட்டு (Vehicle Pass)  பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும்.  வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.  3. சொந்த வாகனங்களில் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு சென்றுவர வேண்டும். புதிதாக வேறு வழித்தடத்தில் சென்றுவர அனுமதியில்லை.4. வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக் கூடாது.5. வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக் கூடாது.  வரும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.6. வாகனங்களில் சாதி மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது.7. வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது.  வாகனங்களில் செல்பவர்கள் மேளதாளம் அடித்துச் செல்லக்கூடாது.  வாகனங்களில் செல்பவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபடும் பட்சத்தில் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.8. சட்டம் ஒழுங்கை கருத்திற்கொண்டு காவல்துறையினர் ஏற்படுத்திய சோதனைச் சாவடிகளில் வாகனங்களை சோதனைக்குட்படுத்தி காவல்துறையினரின் பணிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.9. பரமக்குடி நகருக்குள் சந்தைப்பேட்டை சந்திப்பு முதல் காட்டுப்பரமக்குடி வரை தேசிய நெடுஞ்சாலையில் எந்த ஒரு வாகனத்தையும் நிறுத்தி வைக்க அனுமதி கிடையாது.10. வாகனங்களில் வரும்பொழுது வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடங்களில் நிறுத்தக் கூடாது.11. அஞ்சலி செலுத்துவதற்காக கிராமங்களிலிருந்து பேருந்துகளில் வருபவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து காலை 08.00 மணிக்குள் புறப்பட வேண்டும்.12. வாகனங்களில் (பேருந்துகள் உட்பட) பிளக்ஸ் போர்டு, பேனர், கட்சி கொடிகள் மற்றும் ஒலிபெருக்கி  ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது.  மேலும் ஜோதி தொடர்பான உபகரணங்களை   பேருந்துகளில் எடுத்து வரக்கூடாது.13. வாகனங்களில் (பேருந்துகள் உட்பட) படிக்கட்டு மற்றும் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது.14. பேருந்துகளில் அனைவரும் முறையாக பயணச் சீட்டு பெற்று வர வேண்டும்.15. அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் செல்லும் பொழுது உடன் 3 சொந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்,  மேலும் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு செல்ல வேண்டும்.16. நடைபயணமாக அஞ்சலி செலுத்த செல்லக்கூடாது.  17. மேற்படி பேனர்களை நிகழ்ச்சி முதல் நாளும் நிகழ்ச்சி நாளன்றும் மட்டுமே வைக்க வேண்டும்.  நிகழ்ச்சி முடிந்த மறுநாள் சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக பேனர்களை அகற்ற வேண்டும்.  அவ்வாறு அகற்றத்தவறும் பேனர்களை காவல்துறையினர் எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றுவார்கள்.  அதற்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது.18. ஜோதி, முளைப்பாரி மற்றும் பால்குடம் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை.  நினைவிடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிற்குள் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும்.19. செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முந்தைய தினமோ, பிந்தைய தினமோ எவ்வித நிகழ்ச்சிகள் கொண்டாடவும், ஒலிபெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது.   செப்டம்பர் 11-ஆம் தேதி மட்டும்  அவரவர்களது சொந்த ஊரில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம். பரமக்குடி நினைவிடத்தில் செப்டம்பர் 11-ஆம் தேதி மட்டும்  அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும்.20. மேற்படி நிகழ்ச்சி தொடர்பாக பேனர் மற்றும் கட்அவுட்கள் வைக்கக் காவல் துறையினர் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினரிடம் முன்அனுமதி பெற்ற பின்னரே  வைக்க வேண்டும்.   அவ்வாறு அனுமதி பெறாமல் வைக்கப்படும் கட்அவுட்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றப்படும்.  மேலும் சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரம் செய்வதற்கு அனுமதி இல்லை21. அலங்கார ஊர்தி அணிவகுப்பு மாட்டு வண்டியில் வருதல், சாதித் தலைவர்கள் வேடமணிந்து வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை22. நினைவிடத்தில் தேவேந்திர பண்பாட்டுக் கழகம் சார்பாக மட்டுமே கூட்டத்தை முறைப்படுத்த ஒரு ஒலிபெருக்கி மட்டும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். நினைவிடத்திற்குள் தலைவர்கள் ஒலிபெருக்கியில் பேசுவதற்கு அனுமதி கிடையாது.23. பரமக்குடி நினைவிடத்தில் 11.09.2024 ஆம் தேதி அன்று மாலை 04.00 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொள்ள வேண்டும்.24. அஞ்சலி செலுத்த வருபவர்களில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் (Registered Political Parties) தலைவர்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும்.  இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 06.09.2024 ஆம் தேதி மாலை 5.45மணிக்கு முன்பாக விண்ணப்பத்தினை அளிக்க வேண்டும்.மேற்கூறிய இயக்க நடைமுறைகளை மீறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர்களின் மீதும், அமைப்புகள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள்  தெரிவித்துள்ளார்.

1 2 ... 14 15 16 17 18 19 20 ... 69 70

AD's



More News