25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பழமொழி.

Apr 05, 2023

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?அடுப்பூதும் பெண்ணுக்கு படி பூ எதற்கு?பொருள்: ஒரு படி பூவை தலையில் வைத்துக்கொண்டு அடுப்பை ஊதினால், நீ ஊதுற அந்த நேரத்தில்  அடுப்பின் அனலுக்கு தலையில் வைத்த ஒரு படி பூவும் கருகி போகும். ஆகவே சமையல் முடித்து குளித்து பூவை சூடுங்கள் என்று அறிவுரை சொல்லுவார்கள்.

Apr 04, 2023

ஆலை இல்லா ஊருக்கு, இலுப்பைப்பூ சர்க்கரை

ஆலை இல்லா ஊருக்கு, இலுப்பைப்பூ சர்க்கரை.பொருள்:இலுப்பைப்பூ இனிப்புச்சுவை உடையது.பழங் காலத்தில் சர்க்கரை எனும் இனிப்புப் பொருளை கண்டு பிடிக்காத காலங்களில் இதனையே இனிப்புக்காக உண்டனர். இப்போதும் பழங்குடிகள் இனிப்புக்காக இலுப்பைப்பூவை பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. இலுப்பையின் பூமட்டும் அல்ல இதன் இலை, பட்டை, காய், பழம், வேர் என அனைத்துமே மருத்துவ குணம் உடையது.தாகத்தைத் தீர்க்கும் மலச் சிக்கலைப் போக்கும். மருத்துவ குணம் நிறைந்த இலுப்பைப்பூவில் குளுக்கோஸ் அதிகம் என்பதாலேயே இனிப்புச்சுவை உருவாகிறது.

Mar 28, 2023

சோறு கண்ட இடம் சொர்க்கம்.

இந்த பழமொழியானது ,தற்காலத்தில் உழைக்காமல் சாப்பிடுபவர்களை, கேலி செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதன் உண்மை பொருள் யாதெனில், ஐப்பசி பௌர்ணமியில் சிவன் கோவில்களில் பச்சரிசி சாதத்தால் சிவனுக்கு அபிஷேகம் நடக்கும். அதை காண்பவருக்கு சொர்க்கம் கிட்டும் என்பதே இதன் பொருள்.

Mar 22, 2023

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை புடிப்பான்

,இன்றைய தலைமுறையினரிடத்தில் இந்த பழமொழி இவ்வாறு கூறுவதை நாம் கேட்டிருப்போம் ஆனால் அன்று வயதானவர்கள் இந்த பழமொழி அவ்வாறு கூற வில்லை. அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரி- யிலும் கூட கொடை கொடுப்பான். இது தான் சரியான பழமொழி .அதாவது மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள், நேரம் காலம் பார்க்காமல் எந்த நேரத்திலும் மற்றவர்களுக்கு உதவும் வள்ளல்களை குறித்து, நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்த பழமொழி. காலப்போக்கில் இவ்வாறு மறுவி விட்டது. 

Sep 13, 2022

நம்புன மனுசன் வாரான் சொம்புல தண்ணி கொடு"

“நம்புன மனுசன் வாரான் சொம்புல தண்ணி கொடு”நல்லவன் வருகிறான் .செம்பை எடுத்து உள்ளே வை. என்பதை வஞ்சப்புகழ்ச்சியணியாக மாற்றி கொங்கு தேசத்தில் சொல்கிறார்கள். 

1 2 ... 9 10 11 12 13 14 15 16 17 18

AD's



More News