25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


வெள்ளித்திரை

Oct 16, 2025

தீபாவளிக்கு முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகாத நிலையில், 6 படங்கள் அக்., 17ல் ரிலீஸாகின்றன.

கடந்த சில வாரங்களாக தமிழில் வெளியான தலைவன் தலைவி படத்திற்கு பின் எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்த தீபாவளிக்கு முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகாத நிலையில் 'பைசன், டியூட், டீசல், கம்பி கட்ன கதை' உள் ளிட்ட 6 படங்கள் அக்., 17ல் ரிலீஸாகின்றன. இந்த படங்களாவது வெற்றியை தருமா ?

Oct 16, 2025

35 நாட்களில் நடத்தி முடித்துள்ள அபிஷன்  ஜீவிந்த் படம்.

ஒரு படத்தில் ஹீரோவாக டூரிஸ்ட் பேமிலி' பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், அறிமுகமாகிறார்.நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா தயாரித்துள்ள ,இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக, 35 நாட்களில் நடத்தி முடித்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படம் நவீன கால இளைஞர்களை கவரும் காதல் கதையாக உருவா கியுள்ளது. இணை இயக்குனராக . 'லவ்வர், டூரிஸ்ட் பேமிலி' படங்களில் இருந்த மதன் இயக்கியுள்ளார்.

Oct 09, 2025

தயாரிப்பாளர் 'மிராய்' நாயகன், இயக்குனருக்கு கார் பரிசளிக்கப்படும் என அறிவித்தார்.

தேஜா சஜ்ஜா நடிப்பில்  கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் கடந்தவாரம் வெளிவந்த தெலுங்குப் படமான 'மிராய்' ரூ.100 கோடி வசூலைகடந்துள்ளது. இதற்கான வெற்றி கொண்டாட்டம் விஜயவாடாவில் நடந்தது. தயாரிப்பாளர் தேஜா, கார்த்திக் ஆகியோருக்கு அவர்கள் விரும்பிய கார் பரிசளிக்கப்படும் என அறிவித்தார்.

Oct 09, 2025

'விருஷபா' மோகன்லால் நடிப்பில் தீபாவளிக்கு  இப்படம் ரிலீஸாகிறது.

 'விருஷபா' மோகன்லால் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் நந்தா கிஷோர் இயக்கி உள்ளார். தற்போது வெளியிட்டுள்ள டீசரில் ,'பாகு பலி' போன்று சரித்திர பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. பிரமாண்ட அரண்மனை செட்டுகள்  மன்னர் வேடத்தில் மோகன்லால் சண்டையிடும் காட்சிகள், போன்றவை டீசரில் இடம் பெற்றுள்ளன.  தீபாவளிக்கு தெலுங்கு, மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் ரிலீஸாகிறது. 

Oct 09, 2025

சூர்யா குடும்பம் ஒரு வேளை சாப்பிட ஆகும்  செலவு . எனக்கு 7 வருஷத்துக்கு ரூ7500 செலவு. நடிகர் சிவக்குமார்.

 நடிகர் சிவக்குமார் ஒரு நிகழ்ச்சியில் ,அந்த காலக்கட்டத்தில் நான் ஓவியம் வரைவதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஆன தொகையை விட,2 மடங்கு இப்போது சூர்யா, ஜோதிகா ஒருவேளை சாப்பாட்டுக்கு செலவு செய்கிறார்கள் என்று ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.சிவக்குமார்  சென்னைக்கு வந்த புதிதில் குடியிருந்த வீட்டின் வாடகை ரூ15. அங்கிருந்து தான்7 ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றி ஓவியம் வரைவதற்கு ஆன செலவு மொத்தம் ரூ7500. ஆனால் இப்போது சூர்யா கார்த்தி குடும்பம் மதியம் ஹோட்டலில் போய் சாப்பிட்டால் ரூ.15000 வருகிறது. பைவ் ஸ்டார் ஹோட்டலில் ஒருவேளை சாப்பாடு இவ்வளவு செலவு ஆகிறது. ஆனால் நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை7 ஆண்டுகள் தெருத்தெருவாக போய் ஓவியம் வரைய7 ஆண்டுகள் ஆன செலவு ரூ7500 என்று சிவக்குமார் கூறியுள்ளார்.

Oct 09, 2025

இட்லி கடை VS காந்தரா 2நாள்  வசூல் 

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த 'இட்லி கடை. மற்றொன்று பான் இந்தியா எதிர்பார்ப்புடன் வெளியான ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1. இந்த இரண்டு படங்களின் வசூல் வேட்டையில், 'காந்தாரா சாப்டர்1!' பிரம்மாண்டமான சாதனையை நிகழ்த்தி, முதல் நாளிலேயே ரூ.89 கோடி க்கும் அதிகமாக வசூலித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Oct 09, 2025

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னட படமான 'காந்தாரா சாப்டர் 1' முதல்நாளில் ரூ.89 கோடி வசூலித்துள்ளது

'காந்தாரா' படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2ம் பாகமாக 'காந்தாரா சாப்டர் 1' படத்தை இயக்கி நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. கடந்த வாரம் ரிலீசான இப் படம் வரவேற்பை பெற்றுள்ளது. "முதல் பாக வெற்றியால் எதிர்பார்ப்பு அதிகரித்து, இப்படத்தில் முழு கவனம் செலுத்த முடியாது, என்பதால் 3 ஆண்டுகள் முழுமையாக அர்ப்பணித்து இந்த சாப்டர் 1 படத்திற்காக பணியாற்றினேன்" என்றார் ரிஷப் ஷெட்டி. ‘காந்தாரா சாப்டர் 1' நேற்றுமுன்தினம் பான் இந்தியா படமாக வெளியானது. படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் முதல்நாளில் ரூ.89 கோடி வசூலித் துள்ளது. தொடர் விடுமுறையால் இந்த வாரத்திற் குள் 300 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க் கப்படுகிறது. காந்தாரா முதல்பாகம் 400 கோடி வசூலித்த நிலையில் அதைவிட இப்படம் நிச்சயம் கூடுதலாக வசூலிக்கும்.

Oct 09, 2025

மூன்று படங்கள் ரூ.300 கோடி வசூலில் …

 'காந்தாரா சாப்டர் 1', ரிஷப் ஷெட் டியின் கன்னட படம், லோகாசாப்டர் 1 கல்யாணி பிரியதர்தஷனின் மலையாள படம், 'ஓஜி'சந்திரா, பவன் கல்யாணின் தெலுங்கு  படம் ஆகியவை ரூ.300 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் இணைந்துள்ளன. காந்தாரா 4 நாட்களிலும், லோகா 40 நாட்களிலும், ஒஜி 10 நாட்களிலும் இந்த சாதனையை படைத்தன.

Oct 09, 2025

இந்த வாரம் 10 படங்கள் வெளியீடு.

படங்களின் வெளியீடு இந்தாண்டு 200ஐ கடந்து விட்டது. வெற்றி 10 சதவீதம் வெற்றி. ஆனாலும் படங்கள் வெளியீடு குறையவில்லை.இந்தவாரம்அக்.,9ல்'அக்னிபத்து' படமும், அக்.,10ல்"அனல்மழை, இறுதிமுயற்சி, மருதம், நெடுமி, ரவாளி, தந்த்ரா, உயிர் மூச்சு, வில்" ஆகிய படங்களும், ஓடிடி யில் நேரடியாக 'ராம்போ' படம் என மொத்தம் 10 படங்கள் வெளியாகின்றன.

Oct 09, 2025

ரீ யூனியன் சந்திப்பு 80களின் நடிகர்கள், நடிகைகள்…

ஆண்டுக்கு ஒரு முறை 1980களில் நடித்த நடிகர்கள், நடிகைகள் கூடி மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு 80ஸ் ரீ யூனியன் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில்நடிகர்கள்சிரஞ்சீவி, வெங்கடேஷ், பிரபு, சரத்குமார், ரத்குமார், ரகுமான், பாக்யராஜ், நடிகைகள் குஷ்பூ, சுஹாசினி, நதியா,  ராதா, ரேவதி, ரம்யா கிருஷ்ணன், நடிகை லிசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 20 21 22 23 24 25 26 ... 75 76

AD's