ஜித்து மாதவன் இயக்கத் தில் 2024ல் ரிலீசாகி ,மலையாளத்தில் பஹத் பாசில் நடித்து, ரூ.150 கோடி வசூலித்த படம் 'ஆவேஷம்'. பஹத்திற்கு முதல் 100 கோடியை கடந்த படம் , இதன் 2ம் பாகம் பற்றி பேசியுள்ள பஹத் பாசில், அதற்கான பணிகள் துவங்கி யுள்ளதாகவும், 2027 அல்லது 2028ல் படப் பிடிப்பு துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இளையராஜா கடந்தாண்டு லண்டனில் 'வேலியன்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார்.அடுத்து 2வது சிம்பொனியை எழுதப்போவதாகவும் அறிவித்த இளை யராஜா வெளியிட்ட பதிவில், 'புதிய ஸ்டுடியோவிற்கு வந்து 5 ஆண்டுகள் ஆகி,. எனது இரண்டாவது சிம்பொனியின் எழுத்துப் பணியும் முடித்தது ' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை .ஹிந்தியில் சாகித் கபூருக்கு ஜோடியாக இவர் நடித்த 'காக் டைல் 2" படம் விரைவில் ரிலீசாகிறது. . காதல், காமெடி கதையில்,. 'மைதான்' இயக்குனர் அமித் ரவீந்திரநாத் ஷர்மா இயக்க, இவர்கள் ஜோடி மீண்டும் இணைகிறது.
'தாய் கிழவி' படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் என்பவர் இயக்கத்தில் அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். கிராமத்து கதையில் உருவாக உள்ள இந்த படத்திற்கான புரோமோ வீடியோவிற்கான படப்பிடிப்பை மதுரையில் எடுக்க உள்ளனர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் திலீப் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த வாரம் பிப்., 20ல் "லவ் சப்ஸ்க்ரைப் ஷேர், சிவசம்போ, எம்ஜி 24” ஆகிய மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸாகின்றன. 17th feb முதல் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வுகள் துவங்குகின்றன.அடுத்த இரு மாதங்களுக்கு தேர்வுகள் நடப்பதால் பட வெளியீட்டில் சுணக்கம் நிலவும் என்பதால் தியேட்டர்களுக்கு இன்னும் சிக்கல் ஏற்படலாம்.
நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா காமினேனி கொனிடேலா, ஜனவரி 31அன்று தங்கள் இரட்டைக் குழந்தைகளான ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தையை வரவேற்ற பிறகு இரட்டைக் குழந்தைகளுக்கு ஷிவ்ராம் மற்றும் அன்வீரா தேவி என்று பெயர் சூட்டி.நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா காமினேனி கொனிடேலா, ஜனவரி 31அன்று தங்கள் இரட்டைக் மகிழ்ச்சியின் புதிய கட்டத்தில் திளைத்து வருகின்றனர்.அவர்கள் தங்கள் பதிவில் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்திருப்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருப்பது,எங்களுக்கு மிகுந்த நன்றியுணர்வை அளிக்கிறது. எங்கள் வாழ்க்கையில் பெண்கள் எங்கள்மிகப்பெரிய பலமாக இருந்துள்ளனர். ஒவ்வொரு தருணத்திலும் எங்களுடன் நின்று எங்களுக்குஆதரவளித்த எங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் நான்மிகவும் நன்றி கூறுகிறேன்என்று எழுதியுள்ளனர்.இந்தச் செய்திக்கு நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் நலம் விரும்பிகள்ஏராளமானோர் அன்பைப் பொழிந்தனர்.சில நாட்களுக்குப் பிறகு, இரட்டையர்களின் வருகையைச் சுற்றியுள்ள ஆன்மீக மற்றும்ஜோதிட ஏற்பாடுகளை எடுத்துக்காட்டும் ஒரு வீடியோவைப் பகிர்வதன் மூலம் உபாசனாஅவர்களின் பயணத்தைப் பற்றிய ஒரு நெருக்கமான பார்வையை வழங்கினார்.எங்களுக்காக பிரார்த்தனை செய்த உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் - உங்கள்ஆசீர்வாதங்கள் என்றென்றும் போற்றப்படும்.2012 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்ட ராம் சரண் மற்றும் உபாசனா,2023 ஆம் ஆண்டு முதல் முறையாக தங்கள் மகள் கிளின் காரா கொனிடேலாவின் பிறப்புடன் பெற்றோரானார்கள்.
'ஆர் ஆர்ஆர்' படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது.மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா நடிப்பில் தற் போது 'வாரணாசி' படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இவர் இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' படத்தை அனி மேஷனில் உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஜப்பான் நிறுவனம் ஒன்றில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்த 'அனிமல்' படம் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஆயிரம் கோடிவசூலித்தது. இதன் 2 ம் பாகத்திற்கு 'அனிமல் பார்க் என பெயர் வைத்துள்ளனர். சந்தீப் ரெட்டி, "தற்போது பிரபாஸை வைத்து 'ஸ்பிரிட்' படத்தை இயக்கி வருகிறேன். 'அனிமல் 2' படப்பிடிப்பு 2027 ஜூனில் துவங்கும். இதில் ரன்பீர் கபூர் இரண்டு வேடங்களில் நடிப்பதால் , 'அனிமல் பார்க்' டைட்டில் வைத்துள்ளேன்" என்றார்.
'ராமாயணா' படத்தில் சீதாவாக சாய் பல்லவி, மூக்குத்தி அம்மன் 2'வில் அம்மனாக நயன்தாரா நடிக்க ,'நாகபந்தம்' படத்தில் நடிகை நபா நடேஷ் பார்வதியாக நடிக்கிறார். கோடை விடுமுறைக்கு படம் ரிலீசாகிறது.அபிஷேக் இயக்கும் இப்படத் தில் தெலுங்கு நடிகர் விராட் கர்ணா ஐஸ்வர்யா மேனன் இன்னொரு நாயகியாகவும் நடிக்கின்றனர்.
அல்லு அர்ஜுன் நடிக்கும் 22வது படம் 600 கோடி பட் ஜெட்டில் அட்லி இயக்கத்தில் உருவாகிறது.. இப்படத் தில் பாலிவுட் நடிகர் ஜிம் செராப் இணைந்துள்ளார். இவர் கடந் தாண்டு வெளியான தனுஷின் 'குபேரா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். நாயகிகளாக தீபிகா படுகோனே மிருணாள் தாகூர் நடிக்கின்றனர்.