கார் பந்தயங்களில் பிஸியாக இருக்கும் நடிகர் அஜித் துக்கு எஸ். ஆர். ஓ. மோட்டார் ஸ்போர்ட் குழுமம் இந்த ஆண்டின் 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது வழங்கியுள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.பிரெஞ்சு தொழிலதிபரும், கார் பந்தய வீரருமான மறைந்த பிலிப் சாரியோல் (Philippe Charriol) நினைவாக இத்தாலியின் வெனிஸ் நகரில் வழங்கப்படும் 'ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025' (Gentleman Driver of the Year 2025) விருதை பெற்றிருக்கும் நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ, ராணா நடித்து செல்வராஜ் செல்வமணி இயக்கத்தில் வெளியான 'காந்தா' படம் வரவேற்பை பெற்றுள் ளது. படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில் துல்கர், "இதுவரை நான் தேசிய விருது வாங்கியதில்லை, காந்தா படத்தை பார்த்தவர்கள், எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்கிறார்கள். அப்படி கிடைத்தால் மகிழ்ச்சி என்றார்
'லிப்ட்' பட இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் 'டீசல்' படத்தை தொடர்ந்து தனது 15வது படத்தில் நடித்து வருகிறார் ஹரிஷ் கல்யாண். நாயகியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார்.மலையாள நடிகர் செம்பியான் வினோத் மற்றும் தெலுங்குநடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'தாஷமக்கான்' என தலைப்பு இப்படத்திற்கு வைத்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ளது.
,கொடைக்கானல் அருகிலுள்ள மலையக மக்களின் ஒரு கிராமத்தில் தங்கள் வாழ்விற்காகப் போராடும் கதையாக உருவான படம் 'கெவி'. தமிழ்தயாளன்இயக்கியிருந்தார். இப்படம் 98வதுஆஸ்கர்அகாடமிவிருதுகளுக்கானபரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல், 'தலித் சுப்பையா: கலககாரர்களின் குரல்' என்ற ஆவணப் படம் ஆஸ்கர் தகுதி செயல்முறையின் பகுதியாக அகாடமி திரையிடல் அறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஹனு ராகவபுடி பிரபாஸை வைத்து 'பவுஸி' என்ற படத்தை இயக்குகிறார் .. இருபாகங்களாக இந்தபடத்தை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார். முதல் பாகத்தில் ஒருவிதமாகவும், இரண்டாம் பாகத்தில் இன்னொரு விதமாகவும் பிரபாஸ் கதாபாத்திரம். இருக்கும் என்கிறார். ஹனு ராகவபுடி.
ஹிந்தியில் தனுஷ் நடித்து ஆனந்த் எல் ராய் இயக்கிய 'தேரே இஷ்க் மெயின்' படம் நவ., 28ல் ரிலீசாகிறது. சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் 'ரிவால்வர் ரீட்டா'. டார்க் காமெடி கலந்த ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே இருமுறை அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. நவ., 28ல் ரிலீஸாகும் என புதிய தேதியை அறிவித்துள்ளனர்.
'அமரன்' திரைப்படம் இந்திய பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது படக்குழுவினருக்கு ஒரு பெரிய கௌரவமாகும். கமல்ஹாசன் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்காக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி, அனைத்து முக்கிய உறுப்பினர்களுடன் கோவாவுக்குச் சென்றிருந்தனர்.கோவாவில் நடைபெற்ற56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய பிறகு விமான நிலையத்தில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களைச் சந்தித்தபோது அவர் இந்தக் கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.சிவகார்த்திகேயன் கூறுகையில்,“நான் நடித்த ஒரு படம் இவ்வளவு பெரிய விழாவில் அங்கீகரிக்கப்பட்டது எனக்கு ஒரு பெரிய மரியாதை.'அமரன்' ஒரு வருடம் முன்பு வெளியானாலும், இன்றைய அனுபவம் படத்தின் முதல் நாளின் உணர்வை மீண்டும் கொண்டுவருகிறது. இது ஒரு நடிகருக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய மகிழ்ச்சி," என்று அவர் கூறினார்.மேலும், இந்தப் படத்தை உருவாக்கும் பயணம், கதையின் ஆழம், வீரர்களின் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் ஆகியவை தன்னைப் பெரிதும் பாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.'அமரன்' படக்குழுவுடனான தனது பிணைப்பை சிவகார்த்திகேயன் பகிர்ந்து கொள்கிறார். சாய் பல்லவி மற்றும் ஒட்டுமொத்த குழுவினருடனான இந்த தருணத்தை அனுபவிப்பது தன்னை ஒரு புதிய படத்தின் தொடக்கப் புள்ளியில் மீண்டும் கொண்டு வந்ததாகவும் சிவகார்த்திகேயன் கூறினார். 'அமரன்' சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்பது தனக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக அவரது உரை முழுவதும் உணரப்பட்டது.
VIJAY TV பாடகரான பூவையார் ஜெயவேல் இயக்கத்தில் 'ராம் அப்துல்லா ஆண்டனி' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் . இன்று படம் ரிலீஸாகிறது. பூவையார் கூறுகையில், "நான் கதை நாயகனாக நடித்த படம் பல தடைகளை தாண்டி வருவது மகிழ்ச்சி. தன் தந்தை புகைபிடிக்கும் பழக்கத்தால் தான் உயிர் இழந்தார் என் படங்களில் புகைபிடிக்கும் காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்றார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினி, கமல், விஜய், கார்த்தி போன்ற நடிகர்களின் படங்களை இயக்கி பிரபலமானவர். அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் நாயகனாக அறிமுகமாக உள்ளார். நாயகியாக வாமிகாகபிநடிக்கிறார். 'டிசி' எனப் பெயரிட்டுள்ள இப்படத்தில் தேவதாஸ் கதாபாத்திரத் தில் லோகேஷூம், சந்திரா கதாபாத்திரத்தில் வாமிகாவும் நடிக்கின்றனர். அதிரடி ஆக்ஷன் கதையில் இவர்களின் பெயர் சுருக்கமே 'டிசி' தயாராகிறது.
'அனந்தா என்ற தலைப்பில் சாய் பாபா பற்றிய பக்தி படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெகபதி பாபு, சுஹாசினி, ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட் டோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் விரைவில் ரிலீசாகிறது. 'அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட பல படங் களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. புட்டபர்த்தி சாய்பாபாவின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் மகிமை சொல்லும் படமாக வருகிறது அனந்தா. இந்த பட விழாவில் பேசிய சுரேஷ் கிருஷ்ணா, "நான் புட்டபர்த்தி சென்றேன். இவ்வளவு ஆண்டுகள் எங்கே இருந்த, ஏன் வரலை, இப்ப வந்துட்டே என்று பாபா பேசினார். எனக்கு அழுகை வந்தது. ஒருநாள் அதிகாலை 3:30 மணிக்கு என் கன வில் பாபா வந்து விபூதியை கொட்டினார். தயாரிப்பாளர் கனவிலும் பாபா வந்து படம் பண்ணுவது பற்றி பேசினார். சத்யசாய் பக்தர்களுக்கும் இது முழுமையான பக்தி படமாக இருக்கும்'' என்றார்.