25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


உடல்நல குறைவால் ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடல்நல குறைவால் ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் .

நடிகர் தர்மேந்திரா 1960ல் வெளியான தில் பி தேரா ஹம் பி தேரே என்ற ஹிந்தி திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான இவர், 60 ஆண்டுகளுக்கு மேலாக பல படங்களில் நடித்து வந்தார். ஹிந்தி திரைப்படத் துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர்இவர் நடிப்பில் வெளியான ஷோலே ஹிந்தி படம், மிகப்பெரிய அளவில் ஹிட்டானதை அடுத்து நாடு முழுதும் தர்மேந்திரா பிரபலமானார். பிலிம்பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள தர்மேந்திரா, பா.ஜ., சார்பில் ராஜஸ்தானின் பிகானேர் தொகுதியில் இருந்து லோக்சபா எம்.பி.,யாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

300க்கும் மேற் பட்ட படங்களில் நடித்துள்ள இவர், ஹிந்தி சினி மாக்களில் அதிக ஹிட் படங்களை தந்த ஹீரோ என்ற சாதனையையும் படைத்துள்ளார். தர்மேந்திரா நடிப்பில் உருவான இக்கீஸ் படம், அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. பிலிம்பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள தர்மேந்திரா, பா.ஜ., சார்பில் ராஜஸ்தானின் பிகானேர் தொகுதியில் இருந்து லோக்சபா எம்.பி.,யாகவும் தேர்வு செய்யப்பட்டார். 2012ல், நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் வழங்கி அப்போதை மத்திய அரசு கவுரவித்தது.

இந்நிலையில், சமீபத்தில் உடல்நலக் குறைவால், சுவாசக் கோளாறு மற்றும் இதயநோய் காரணமாக தர்மேந்திரா உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News