விஜய் அவரது கடைசி படமாக அறிவித்து, நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் வினோத் இயக்கத்தில் ஜன., 9ல் ரிலீஸாகிறது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ நடித்துள்ளனர். படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் விஜய் நிற்க அவரை அவர்கள் தொட்டு வரவேற்பது போல் உள்ளது. படத்தின் முதல் பாடல் நவ. 8 ல் வெளியானது.
மூத்த இயக்குனர் எஸ்.பி., முத்துராமன், 'அறியாத பசங்க' பட விழாவில் ,"80 ஆண்டு பாரம்பரிய மிக்க நிறுவனமான ஏ.வி.எம் இன்று படங்கள் தயாரிப்பதில்லை. இதை அவர்களிடம் கேட்டேன்.படம் தயாரித்து விடலாம். வியாபாரம் செய்வது கஷ்டம் என்றனர். பக்கா ஸ்கிரிப்ட் இருந்தால் தான் ஒரு படத்தை தொடங்குவர். அதனால் தான் ஏ.வி. எம்., படங்கள் வெற்றி பெற்றன. உழைப்பு, ஒழுக்கம் இருந்தால் சினிமாவில் ஜெயிக்கலாம்" என்றார்.
'மா வந்தே' என்ற படம் ஹிந்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை தழுவி உருவாகி, பான் இந்தியா படமாக வெளியிட உள்ளனர்.கிராந்தி குமார் இயக்க, பிரதமர் மோடியின் வேடத்தில் உன்னி முகுந்தன் நடிக்கிறார். பிரதமர் மோடியின் அம்மா ஹீரா பென் வேடத்தில் நடிகை ரவீனா டாண்டன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
'வாரணாசி' என தலைப்பு வைத்து, ராஜமவுலி இயக்கத்தில் ,மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, நடிக்கும் படத்திற்கு ,ஹைதராபாதில் நடந்த விழாவில் படக்குழு அறிவித்தது. விழாவில் மகேஷ்பாபு, "இது என் கனவு திரைப்படம். இதன் மூலம் அனைவரையும் பெருமைப்படுத்துவேன். ஒட்டுமொத்த இந்தியாவும் 'வாரணாசி' ரிலீஸ் ஆனதும் எங்களைப் பார்த்து பெருமைப்படும்" என்றார்.
கோபி சந்த் மலினேனி தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 111வது படத்தை இயக்கிறார். வரலாற்று பின்னணியில் பிரமாண்ட ஆக்ஷன் படமாக ,மகாராணி வேடத்தில் நயன் தாரா நடிக்கிறார். நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இதற்கான அறிவிப்பு வெளியானது. 4வது முறையாக நயன்தாரா பாலகிருஷ்ணா ஜோடி சிம்ஹா, ஜெய் சிம்ஹா ஸ்ரீ ராம ராஜ்யம் ஆகிய படங்களுக்கு பின் இணைகின்றனர்.
கலை இயக்குனர் தோட்டா தரணி தென்னிந்திய சினிமாவின் முக்கியமானவர். இயக்குனர் தோட்டா தரணி. நுாற்று கணக்கான படங்களில் பணியாற்றி உள்ளார். இவரின் கலைச் சேவையை பாராட்டி பிரான்ஸின் கலை மற்றும் கலாசார அமைப்பின் சார்பில் செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நவ., 13ல் சென்னையில் வழங்கப்படுகிறது.
ரஜினி, சரத்பாபு, குஷ்பு நடித்து, 1992 சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பெரும் வரவேற்பை பெற்ற படம் 'அண்ணாமலை'. ரஜினியின் திரை வாழ்க்கையை அண்ணா மலைக்கு முன்பு, ஹிட் அடித்த, இப்படம் முதல்முறையாக 32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் பிறந்தநாளான டிச. 12ல் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். அதுபோல, 2004ல் சேரன் இயக்கி நடித்த 'ஆட் டோகிராப்' படம் நவ.14ல் ரீ ரிலீஸ் ஆகிறது. சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா 3 உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் தேசிய விருது களை வென்றிருந்தது
இயக்குனர் விக்ரம் குமார், தெலுங்கு நடிகர் நிதினை வைத்து ஒரு படம் இயக்குவதாக சொல்லப்பட்டது. படம் துவங்கப்படாத தால், அதே கதையை விஜய் தேவரகொண்டாவிடம் சொல்லி ஒகே வாங்கி விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளாராம் விக்ரம் குமார்.
.ஆந்திர துணை முதல்வரான பின்பு, நடிகர் பவன் கல்யாண், ஹரிஹர வீர மல்லு, ஓஜி படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. தற்போது 'உஸ்தாத் பகத்சிங்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் படத்தை கேவிஎன் நிறுவனம் எடுக்க முன் வந்துள்ளது. தமிழ் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், எச்.வினோத் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இளையராஜாவை தொடர்ந்து, அவரது மகன்களான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரணி ஆகியோரும். இசை துறைக்கு வந்தனர்., கார்த்திக் ராஜாவின் மகனும், இளையராஜாவின் பேரனுமான யத்தீஸ்வர் ராஜாவும், 'போற போக்குல' என்ற பெயரில் ஒரு ஆல்பத்துக்கு இசையமைத்து பின்னணி பாடியுள்ளார். இந்த ஆல்பத்தை ரஜினி, கமல் வெளியிட்டுள்ளனர். திரைப்படங்களுக்கு இசையமைக்கவும் தயாராகி வருகிறார், யத்தீஸ்வர் ராஜா.