25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


முதலமைச்சர் மாநில இளைஞர் விருது-2026 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது-2026 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமுதாய வளர்ச்சிக்குத் தன்னலமின்றிப் பங்காற்றும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று *3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு* "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" வழங்கப்படுகிறது.

விருதின் மதிப்பு:

ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம்.

விருது வழங்கப்படும் நாள்: 15.08.2026 (சுதந்திர தின விழா)

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் & நிபந்தனைகள்:

வயது வரம்பு:

15 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். (01.04.2025 அன்று 15 வயது நிரம்பியிருக்க வேண்டும். 31.03.2026 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.)

சேவைக் காலம்:

கடந்த நிதியாண்டில் (*01.04.2025 முதல் 31.03.2026 வரை*) செய்யப்பட்ட சமூகச் சேவைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.

இருப்பிடம்:

விண்ணப்பிக்கும் முன்பாக, குறைந்தபட்சம் *5 ஆண்டுகள் தமிழகத்தில்* குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் (இதற்கான சான்று அவசியம்).

சேவையின் தன்மை: 

செய்த தொண்டு சமுதாய நலனுக்கானதாகவும், வெளிப்படையாகக் கண்டறிந்து மதிப்பிடக்கூடிய அளவிலும் இருக்க வேண்டும்.

பணி நிபந்தனை:

மத்திய/மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பள்ளி/கல்லூரி/பல்கலைக்கழகப் பணியாளர்கள் *விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

கூடுதல் தேவைகள்:

விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு பரிசீலிக்கப்படும்.

மாவட்ட காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட *நன்னடத்தை சான்றிதழ்* சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை & கடைசி நாள்:

விண்ணப்பிக்கும் தளம்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான *www.sdat.tn.gov.in* ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் மற்றும் நேரம்: 06.07.2026 அன்று மாலை 5.45 மணி வரை என மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News