மணிரத்னம் இயக்கிய” பொன்னியின் செல்வன் 2 “படம் சிறந்த நடிகர்(விக்ரம்),நடிகை (ஐஸ்வர்யா ராய்),இயக்குனர்(மணிரத்னம்),குணச்சித்ர நடிகர்(ஜெயராம்),இசை(ஏஆர் ரஹ்மான்),பாடகர்(ஹரிச்சரண்),பாடகி (சக்திஸ்ரீ கோபாலன்),ஒளிப்பதிவாளர்(ரவி வர்மன்),கலை இயக்கம் (தோட்டாதரணி) என 9 விருதுகளை வென்றது. சிறந்த வில்லனாக எஸ்ஜே சூர்யா(மார்க் ஆண்டனி) தேர்வானார். சினிமாவின் சிறந்த பெண்மணி, என்ற சிறப்பு விருது சமந்தாவுக்கு வழங்கப்பட்டது. 9 விருதுகளை அள்ளிய “பொன்னியின் செல்வன் 2”படம்.
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் நடிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில், வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'கருடன்'. இந்த படத்தை தெலுங்கில் இப்போது ரீமேக் செய்கின்றனர். பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், நரா ரோஹித் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகிகளாக ஆனந்தி, அதிதி ஷங்கர் மற்றும் திவ்யா பிள்ளை ஆகியோரை நடிக்க வைக்க பேசுகின்றனர்.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள'வேட்டை யன்' படத்தில் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் நடித் துள்ளார். சமீபத்தில் இப்பட டீசர் வெளியானது. இதில் அவருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்திருந் தார். ஆனால் அது சரியாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து அமிதாப்பிற்கு ஹிந்தி தவிர மற்ற மொழி களில் ஏஐ மூலம் அவரின் குரலையே பயன்படுத்த பணிகள் நடக்கின்றன.அக்., 10ல் படம் ரிலீஸாகிறது. தற்போது சினிமா'ஏஐ'கட்டத்தை நோக்கி நகர துவங்கி உள்ளது. இதுபற்றி முழுமையாக தெரிந்து கொள்ள மூன்று மாத பயிற்சி வகுப்பு ஒன்றில் சேர்ந்து படிக்க கமல் அமெரிக்கா சென்றுள்ளார். அத்துடன், அவரின் கதர் ஆடை நிறுவனத்தை விரிவுப்படுத்தும் பணியையும் செய்ய உள்ளாராம். தமிழ் சினிமா வில் பல புதிய தொழில்நுட்ப விஷயங்களை அறிமுகம் செய்திருக்கிறார் கமல்.
மீசையை முறுக்கு, சிவகுமாரின் சபதம் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவதாக'கடைசி உலகப்போர்' எனும் படத்தை தயாரித்து, இசையமைத்து, இயக்கி, நடித்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி. நாயகியாக அனகா நடித்துள்ளார். போர்க்கள கதையை மையமாக வைத்து கடந்தவாரம் வெளியானது. இந்த படத்தை இப்போது ஹிந்தியில் டப்பிங் செய்து அக்.,4ல்'லாஸ்ட் வேர்ல்ட் வார்' என்ற பெயரில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
புதிதாக திருமணமாகி முகத்தை மூடிக்கொண்டு வரும் இரண்டு பெண்கள் ஒரே ரெயிலில் பயணம் செய்யும் போது தவறுதலாக வெவ்வேறு இடங்களுக்கு சென்று விடுகின்றனர். இதில் கிராமப்புறங்களில் பெண்கள் அழுத்தப்படும் நிலைமை, முன்னேற துடிக்கும் ஆசை, சமத்துவம் போன்றவை உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. பிரதியா ரந்தா, ஸபர்ஷ் ஸ்ரீவஸ்தலா, நிதான்ஷி கோயல்,சாயா கடம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அமீர்கான் தயாரித்து இருந்தார். கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. ஆஸ்கார் விருதுக்கான சிறந்த வெளிநாட்டுப் படங்கள் போட்டி பிரிவுக்கு “லாபட்டா லேடீஸ் ” படம் அனுப்பப்படுகிறது.
கடந்த 45 ஆண்டுகளில் தான் நடித்த 156 படங்களில் இடம்பெற்ற 537 பாடல்களில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடன அசைவுகளை நிகழ்த்தியதற்காக, கின்னஸ் சாதனை விருது அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்தி நடிகர் அமீர்கான் கலந்து கொண்டு சிரஞ்சீவிக்கு கின்னஸ் சாதனை விருது சான்றிதழை வழங்கினார். அவர் பேசும்போது நான் சிரஞ்சீவியின் ரசிகன். அவர் எல்லா பாடல்களிலுமே திறமையாக ஆடி இருப்பார். கஷ்டமான நடன அசைவுகளில் கூட எளிதாக ஆடிவிடுகிறார். அதுதான் அவரது தனித்துவமான திறமை என்றார். Iசிரஞ்சீவி பேசும்போது எனது திரையுலக வாழ்க்கையில், நடனம் முக்கிய அங்கமாக இருந்தது. நடிப்பைவிட நடனத்தில் தான் அதிக ஆர்வம் இருந்தது. கின்னஸில் இடம்பிடித்தது பெரிய கவுரவம் என்றார். சிரஞ்சீவி 1978-ல் “புனாதிரல்லு ”என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகமானார். தெலுங்கு தாண்டி தமிழ், இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.
உலகம் முழுவதும் வருகிற 27-ந்தேதி திரைக்கு வர இருக்கும் “ஹிட்லர் ”படம் குறித்து இயக்குனர் தனா கூறியதாவது. விஜய் ஆண்டனி என்றாலே மாறுபட்ட நடிப்பு எனலாம். அந்தவகையில் விஜய் ஆண்டனியின் தனித்துவ நடிப்பால் தயாராகியுள்ள புதிய படம் “ஹிட்லர்” பொதுவாகவே ஹிட்லர் என்றாலே சர்வாதிகாரம் என்பார்கள். ஆனால் இந்த" ஹிட்லர் "அதற்கு நேர்மாறாக சர்வாதிகாரத்துக்கு எதிரானவன். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி கலக்கி இருக்கிறார். அவரை போலவே கவுதம் மேனனும். சரண்ராஜும், பிரமாதப்படுத்தி இருக்கிறார். Iஇது அட்டகாசமான கமர்ஷியல் படமாகும். அதேவேளை அனைத்து ஜனரஞ்சகமான அம்சங்களும் படத்தில் நிறைந்திருக்கிறது. நடிகர் நடிகைகளின் சிறப்பு மிக்க கவனத்தை ஈர்த்தது இது படத்தின் ரிலிசிலும் எதிரொலிக்கும் என்று நம்புகிறோம்.
இந்தாண்டின் செப்டம்பர் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையான 27ல் விஜய் ஆண்டனி யின் 'ஹிட்லர்', கார்த்தி யின் 'மெய்யழகன்', 'பிரபுதேவாவின் பேட்ட ராப்', சதீஷின் 'சட்டம் என் கையில்' ஆகிய நான்கு தமிழ் படங்கள் வெளியாகின்றன. இவற்றுடன் ஜூனியர் என்.டி.ஆர்., நடித்துள்ள தெலுங்கு படமான 'தேவரா' தமிழிலும் வெளியாகிறது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப் படம் "காதலிக்க நேரமில்லை". ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற் கொள்கிறார். கடந்த மாதம் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜெயம் ரவிக்கு வாழ்த்து கூறி படக்குழு பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி - வடிவேலு வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. பென்ஸ் மீடியா தயாரிப்பில் சுந்தர் சி இயக்கி நடிக்கும் திரைப்படத்திற்கு கேங்கர்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. வடிவேலுலின் 63ஆவது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு, ஃபர்ஸ்ட்லுக் வெளியிட்டுள்ளது. கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் இப்படத்தில் வடிவேலு நடித்து இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது