25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


வெள்ளித்திரை

Aug 14, 2024

எனிமி' படப் பாடலான 'டம் டம்' பாடல்- 600 மில்லியனைக் கடந்தது

 தமன் இசையில் விஷால், மிருணாளினி நடித்த 'எனிமி' படப் பாடலான 'டம் டம்' 600 மில்லியன் சாதனையைப் கடந்துள்ளது.தமிழ் சினிமா பாடல்களில் 1500 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிடத்தில் உள்ளது மாரி 2 பட பாடலான'ரவுடி பேபி'. யுவன் ஷங்கர் ராஜா இசையில் தனுஷ், தீ பாடினர். இதற்கு அடுத்து அனிருத் இசையில் விஜய்யின் பீஸ்ட் படப் பாடலான 'அரபிக் குத்து' 621 மில்லியன் பார்வைகளுடன் இரண் டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவதாக 'டம் டம்' 600 மில்லியன் சாதனையைப் கடந்துள்ளது.

Aug 14, 2024

கீர்த்தி சுரேஷ் அரசியல் ஆசை

 இப்போதைக்கு அரசியலுக்கு வரும் ஆசை இல்லை,நடிப்பு மட்டும் தான். எதிர் காலத்தில் அரசியல் ஆசை வரலாம், வராமலும் போகலாம்" என்றார்.சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள  'ரகு தாத்தா' படம் ஆக., 15ல் ரிலீஸாகிறது. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி சுரேஷ் ''எனக்கு பிடித்த ஊர் மதுரை. மல்லிப்பூ, மீனாட்சி  அம்மன் கோயில் என பிடித்தமான நிறைய விஷயங்கள் உள்ளன. இந்த படத்தில் பெண்ணியத்திற்காக போராடும் பெண்ணாக நடித்துள்ளேன். கலாசாரம் என்ற பெயரில் பெண் கள் மீது திணிக்கப்படும் விஷயங்களை காட்டி உள்ளோம். ஹிந்தி திணிப்பு பற் றியும் ஆங்காங்கே பேசியிருக்கிறோம். ஆனால் எதுவுமே சீரியஸாக இருக் காது. முழுக்க முழுக்க காமெடியாக சொல்லி உள்ளோம். 

Aug 07, 2024

பிரபாஸ், திரிஷா நான்காவது முறை இணைந்து நடித்துள்ளார்.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் போலீஸாக நடிக்கும் அவரின்25வது படமான'ஸ்பிரிட்' விரைவில் துவங்க உள்ளது. இதன் பட்ஜெட்மட்டும் ரூ.300 கோடி.. இதில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க உள்ளார். இன்னொரு நாயகியாக திரிஷாவும் நடிக்க போகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. ஏற்கனவே பிரபாஸ் உடன் வர்ஷம், புஜ்ஜி காடு, பவுர்ணமி ஆகிய படங்களில் திரிஷா இணைந்து நடித்துள்ளார்.

Aug 07, 2024

ஜெயம் ரவியின் 'மிருதன் 2'

 2016ல் சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் அவர் நடித்த படம் மிருதன். ஜாம்பிஸ்களை மையமாக வைத்து வெளியான இந்த படம் வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம்8 ஆண்டுகளுக்கு பின் உருவாக உள்ளது. இதற்கான பணிகள் துவங்கி உள்ளன. இதுதவிர ஜெயம் ரவியின் தனி ஒருவன்2 படமும் ஆரம்பமாக உள்ளது. ஜெயம் ரவி நடித்துள்ள'பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை' ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன.

Aug 07, 2024

அந்தகன் ரிலீஸை ஆக., 9க்கு மாற்றிவிட்டனர் 

ஹிந்தியில் வரவேற்பை பெற்ற 'அந்தாதூன்' படம் தமிழில் அந்தகன்' என்ற பெயரில் ரீமேக்ஆகி உள்ளது. பிரசாந்த், பிரியா  ஆனந்த், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரித்துள்ளார். ஆக., 15ல் படம் ரிலீஸ் என அறிவித்தனர். அந்தசமயம் விக்ரமின் 'தங்கலான்', கீர்த்தி சுரேஷின் 'ரகு தாத்தா' மற்றும் அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2' ஆகிய படங்களின் வெளியீடும் அறிவிக்கப்பட் டுள்ளது. இதனால் நான்கு படங் களுக்கும் கணிசமான தியேட்டர் கிடைக்குமா என்ற சூழல் இருந்தது. இதனால் அந்தகன் ரிலீஸை ஆக., 9க்கு மாற்றிவிட்டனர்.

Jul 31, 2024

'ராமாயணா' படம் பாலிவுட்டில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

ராமாயணம் கதையை படமாக இயக்க திரையுலகை சார்ந்த பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்தாண்டு 'ஆதி புருஷ்' படம் பிரபாஸ், கிருத்தி சனோன் நடிப்பில் வெளியானது.. கடந்த வருடம் ஓம் ராவத் இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியான 'ஆதி புருஷ்' படம் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. வசூலிலும் படு தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து தற்போது ராமாயணம் கதை தற்போது பாலிவுட்டில் படமாக்கப்பட்டு வருகிறது.ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் இணைந்து நடித்து வரும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது நிதேஷ் திவாரி இயக்கும் இப்படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது. இந்தப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர். அத்துடன் ராவணனாக யாஷும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்து வருகின்றனர். நமித் மல்ஹோத்ராவின் பிரைம் போக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன், நடிகர் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் கசிந்ததுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது., 'அனிமல்' படத்தில் சரிக்கு சமமாக பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்களை சம்பாரித்த ரன்பீர் கபூர் தற்போது இராமராக அவதாரம் எடுத்துள்ளார். அனிமலை தொடர்ந்து இப்படமும் அவருக்கு மிகப்பெரிய ஹிட்டை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jul 31, 2024

ஆக. 2ல் ரிலீஸ் ஆகும் படங்கள்

ஆகஸ்ட் மாதம் நிறையபடங்கள் வெளியாகும் என்பதன்  முன்னோட்டமாக வரும்  ஆக., 2 ல் "போட், ஜமா, மழை பிடிக்காத மனிதன், நண்பன் ஒருவன் வந்த பிறகு, பேச்சி, வாஸ்கோடகாமா 'ஆகிய 6 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் யோகி பாபுவின் போட், புதியவர் பாரி இளவழகனின் ஜமா மற்றும் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத பிடிக்காத மனிதன் ஆகிய  படங்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளன.

Jul 31, 2024

பிறருக்கு உதவும் குணம் வரம் . டாப் ஹீரோ மகேஷ்பாபு

  மகேஷ்பாபு  1000 குழந்தைகளுக்கு உயிர் வழங்கிய டாப் ஹீரோ வருசத்துக்கு  30 கோடி நன்கொடை.மகேஷ்பாபு தனது ஆண்டு வருமானத்தில் 30 சதவிதம் ந ன்கொடையாக வழங்கி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் ஆண்டுக்கு 25-30 கோடி ரூபாய் பணத்தை தொண்டு செயல்களுக்கு பயன்படுத்துகின்றார். இன்று வரை இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அத்தியாவசிய இருதய அறுவை சிகிச்சையை வழங்கியுள்ளார்.இதுகெல்லாம் ஒரு நல்ல மனசுவேணும். 

May 29, 2024

ஸ்ரீதேவி வாங்கிய பிரம்மாண்டமான முதல் வீடு

நடிகை ஸ்ரீதேவி பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். அவர் பாலிவுட்டில் போனி கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும், அவர் தமிழ்நாட்டில் சென்னையில் அவருக்கென்று ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.ஸ்ரீதேவி மறைந்த பிறகு, அவர் வாழ்ந்த அந்த வீட்டை மீண்டும் புணரமைத்தார் போனி கபூர். முன்பை விட பிரம்மாண்டமாய் மாற்ற பட்ட இந்த வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்து ஏர்பிஎன்பி என்ற தளத்தில் வெளியிட்டுள்ளார் அவரது மகளான ஜான்வி .அம்மாவை போலவே ஜான்வி படங்களில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டு, தற்போது பாலிவுட்டில் இருந்து தெலுங்கிற்கு நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஸ்ரீதேவி இங்கிருந்து பாலிவுட் வரை சென்று கலக்கினார். அவரது மகளான ஜான்வி பாலிவுட்டில் இருந்து தென்னிந்தியாவில் கலக்குவார் என்று எதிர்பார்க்க படுகிறது.இந்த வீட்டை மீண்டும் பெரிய செலவில் புதுப்பித்துள்ளார்கள். வீட்டில் கலை பொருட்கள், ஓவியங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார் போனி கபூர். இவர் ஒரு தயாரிப்பாளர் என்பதால் இவரின் சென்னை அலுவலகத்தையும் இங்கேயே வைத்துள்ளார்கள்.இந்த வீட்டில் தங்க வருபவர்களுக்கு தென்னிந்திய உண்வுகள் பரிமாறப்படும். மேலும் ஆந்திர பிரியாணி முதல் தோசை வரை மெனுக்கள் வைத்துள்ளார்கள். மேலும் காலையில் அழகான கடற்கரை காட்சியுடன் யோகா பயிற்சியும் வழங்கப்படும் என ஜான்வி அந்த தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.இந்த வீட்டில், அழகான நீச்சல் குளம் மற்றும் சோபாக்கள் என அனைத்தும் பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளார்கள்.மேலும்வீட்டின்முன்புறம்பெரியதாமரையில்செயற்கையானநீர்வீழ்ச்சிஅமைத்துவருபவர்களைகவரும்வகையில்செய்துள்ளார்கள்.பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த இந்த வீடு இப்போது முழுவதும் தயாராகி உள்ளது. இந்த வீட்டில் தங்க குறிப்பிட்ட அளவில் மட்டுமேஅனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பிரம்மாண்ட வீடு சென்னை இ சி ஆரில் உள்ள அக்கரை என்ற இடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

May 29, 2024

அஜித்தின்  “குட் பேட்அக்லி” சூட்டிங்துவங்கும் முன்பே விற்றுத்தீர்ந்தது

 நடிகர் அஜித்குமாரின்விடாமுயற்சி சூட்டிங் தொடர்ந்துதள்ளி போய் வருகிறது.இந்தப் படத்தின் சூட்டிங்மே மாதம் முதல் வாரத்தில் துவங்கஉள்ளதாக கூறப்பட்ட சூழலில்ஷூட்டிங் மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தன்னுடையஅடுத்த படமான குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கைமுன்னதாகவே அதாவது மே மாதம்10ம்தேதியே துவங்க அஜித் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்முதல்கட்ட சூட்டிங் ஐதராபாத்தில்ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்துவங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போதுமுழுவீச்சில் நடந்து வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங்முன்னதாக ஜூன் மாதத்தில்துவங்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் விடாமுயற்சிசூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போவதால் இந்த படத்தைமுன்னதாகவே துவங்கலாம் என்று அஜித் திட்டமிட்டுஅதற்கான வேலைகள் நடந்துவருகின்றன. ஆதிக் ரவிச்சந்திரன்இயக்கத்தில் உருவாக உள்ளதுகுட் பேட் அக்லி.இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு பட நடிகை ஸ்ரீலீலாஇணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.ஆனால் அவர் அஜித்துக்குஜோடியாக இல்லாமல் படத்தில்இணைய உள்ள மற்றொருஹீரோவிற்கு ஜோடியாக நடிக்கஉள்ளதாக கூறப்பட்டுள்ளது.குட் பேட் அக்லி படத்தில்  அஜித்திற்குஜோடியாக மீனா அல்லதுசிம்ரன் இணையலாம் என்றும்அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும்கூறப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே இந்த படத்தின் சூட்டின்துவங்குவதற்கு முன்னதாகவே இந்த படத்தின் வெளிநாட்டுஉரிமையை படத்தை தயாரித்துவரும்மைத்ரி மூவி மேக்கர்ஸ்நிறுவனம், 22 கோடி ரூபாய்க்குபார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்குவிற்றுள்ளதாக தற்போது தகவல்கள்வெளியாகி உள்ளன. அஜித்திற்குசர்வதேச அளவில் மிகப்பெரியமார்க்கெட் காணப்படும் சூழலில்அவரது படத்தின் வெளிநாட்டுஉரிமை விற்றுள்ளது பெரிய விஷயம் இல்லை என்று கோலிவுட்தரப்பில் கூறப்பட்டுள்ளது.தயாரிப்பு தரப்பின் வேலைகளில்தலையிடாமல் அஜித் நடந்துக்கொண்டு வருவது தயாரிப்புதரப்பில் அவருக்கு மிகப்பெரியநன்மதிப்பை பெற்றுத் தந்து வருகிறது. அஜித்தின்துணிவு படம் கடந்த ஆண்டு ஜனவரியில்வெளியான சூழலில் அவரது அடுத்தப்பட ரிலீசுக்காகரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

1 2 ... 64 65 66 67 68 69 70 ... 79 80

AD's



More News