மணிரத்னம், கமல் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'தக் லைப்'. சிம்பு, திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட் டோரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் பாடல் காட்சி படமாகி வருகிறது. கமல் பிறந்தநாளை முன்னிட்டு காலை 11:00 மணியளவில் இதன் சிறப்பு வீடியோவை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.ஏ.ஆர் ரஹ்மான் இசை. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்போது ஒரு பாடல் காட்சி பட மாகிறது. அதன் படப்பிடிப்பு போட்டோவை பகிர்ந்து, 'இந்த ஆல்பத்தில் எனக்கு பிடித்த பாடல்' என திரிஷா குறிப்பிடப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்களாவது வெளியாகும். இந்த வாரம் நவ. 8 (நாளை) தமிழ் செல்வன் என்பவர் இயக்கிய 'இரவினில் ஆட்டம் பார்' என்ற படம் வெளியாவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. சரவணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
45 இலவசப் பள்ளிகள், 26 அனாதை இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், 19 கோசாலைகள், 1800 மாணவர்கள் கல்வி. மேலும் இறப்பதற்கு முன் கண்ணை தானம் செய்தார்.மாபெரும் நடிகரான புனித் ராஜ்குமாரை நினைவுகூறுவோம், அவரைப் போல் இன்னொரு சூப்பர் ஸ்டார் இருக்க மாட்டார்
பான் இந்தியா நடிகராக பிரபலமாகிவிட்ட பிரபாஸ் தற்போது மாருதி இயக்கத்தில் 'ராஜா சாப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மாளவிகா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி 24 மணிநேரத்தில் 8.3 மில்லியன் பார்வைகளைப் பெற்று இந்திய அளவில் சாதனை படைத்தது. இதற்கு முன் பவன் கல்யாணின் 'ப்ரோ' மோஷன் போஸ்டர் 5.83 பார்வைகளை பெற்று முதலிடத்தில் இருந்தது.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 50 ஆண்டுகளை கடந்ததை முன்னிட்டு 1974ல் கல்லுாரி படிப்பின்போது இ நடித்த முதல் நாடகத்தின் புகைப்படத்தை வெளியிட்ட சிரஞ்சீவி நர்சபூர் ஒய்என்எம் 'ராஜினாமா'. கோனா கோவிந்தராவ் எழுதியது ; நடிகராக முதல் அங்கீகாரம். 50 ஆண்டு நடிப்பு... தீராத மகிழ்ச்சி" என நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
இன்றையடிஜிட்டல் யுகத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களே அதிகம் கேட்கப்படுகிறது. அவருடைய பாடல்கள் பல தளங்களில் கிடைத்தாலும், தனக்கென தனியாக யுடியூப் சேனல் ஒன்றையும் வைத்து பாடல்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது பின்னணி இசைகளை வெளியிடுவதற்காகவும் தனியாக ஒரு யுடியூப் சேனலை துவக்கியுள்ளார். அதில் அவர் இசையமைத்த திரைப்பட பின்னணி இசை தொகுப்புகளை வெளியிட உள்ளார்.
ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க உள்ளார் ராஜமவுலி. இதற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ள மகேஷ்பாபு, பல்வேறு பயிற்சிகளையும் எடுத்து வருகிறார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் இதன் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி, படம் திரைக்கு வரும்வரைஇந்த படத்திற்கான கெட்டப்பில் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள கூடாது என மகேஷ்பாபுவுக்கு கண்டிஷன் போட்டுள்ளார்.
விடாமுயற்சி' படத்தை முடித்துவிட்டு 'குட் பேட் அக்லி' படத் - தில் நடிக்கிறார் அஜித். அதோடு கார் ரேஸ் களத்தில் மீண்டும் இறங்கி உள்ளார். தற்போது 'அஜித் 'குமார் ரேஸிங்' என்ற பெயரில் கார் பந்தய அணியை துவக்கி, அதற்கான லோகோவையும் அவரது மேலாளர் மூலம் வெளியிட்டுள்ளார். அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித்தும், அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஐரோப்பியா வில் நடக்கும் 24எச் கார் ரேஸிங்கில் போர்ஷே 992 ஜிடி3 கப்' பிரிவில் இவரது அணி பங்கேற்கிறது.
வந்தாரை வாழவைக்கும் தமிழகம்னு சொல்லிட்டு, தமிழ் நாட்டோட மத்திய பகுதி திருச்சில இருந்து வந்த ஒரு பையன் நடிச்சி இவ்ளோ சீக்கிரம் மேல் வரானா அவன நம்ம பாராட்டணும்,ஆதரவா இருக்கணும். சினிமாவுல ஆரோக்கியமான போட்டி வெச்சிக்கோங்க, இன்னைக்கு சிவகார்த்திகேயன் நடிச்ச படம் டாப் 5 நடிகர்கள் படத்துக்கு சமமா வசூல் ஆகுதுனா நீங்க அத விட சிறந்த படம் குடுக்க முயற்சி பண்ணுங்க அத விட்டுட்டு பொறாமைப்படுறது, இழிவா பேசுறது சரி இல்ல! நடிகர் நெப்போலியன்
.கார்த்தியின் 25வது திரைப்படத்தை முன்னிட்டு 25 சமூகசெயற்பாட்டாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ.25 லட் சமும், நிதியுதவி தேவைப்படும் பள்ளிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ.25 லட்சமும், மருத்துவமனைகளுக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.25 லட்சமும், 25 நாட்களுக்கு சுமார் 25,000 பேர் பசியாற்ற ரூ.25 லட்சம் என ரூ.1 கோடி வழங்க உள்ளார் நடிகர் கார்த்திஇது ஒரு நடிகன் செய்யும் உதவி அல்ல தன்னை வளர்த்த சமூகத்திற்கு ஒரு மனிதன் செலுத்தும் நன்றிக்கடன். பாராட்டலாம். இவரை போல அனைவரும் முன்வந்தால் மகிழ்ச்சி,