தன் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு தமிழ் சினிமாவில் கிடைக்காதா என வாய்ப்புக்காக சுற்றித்திரிந்து அதன் பின் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பிரபலங்களும் உண்டு. இந்நிலையில் தன்னோட வயதிற்கு ஏற்றவாறு வாய்ப்பை தேடி நடிக்கும் நடிகர்கள் பற்றிய தகவலை இங்கு காண்போம். 80- 90 காலகட்டத்தில் முன்னணி கதாநாயகனாய் சத்யராஜ் மேற்கொண்டு எண்ணற்ற படங்கள் வெற்றியை பெற்றிருக்கிறது. இவரின் கொங்கு தமிழ் குசும்பு பேச்சும், நகைச்சுவையும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து தற்போது தன் வயதுக்கு ஏற்றவாறு குணச்சித்திர கதாபாத்திரங்களில் சிறப்புற நடித்து வருகிறார்.இவரைத் தொடர்ந்து சுப்ரீம்ஸ்டார் என அழைக்கப்படும் சரத்குமார்நடிப்பில் எண்ணற்ற படங்கள் வெற்றியைக்கண்டிருக்கிறது. அவ்வாறு ஹீரோவாய் கலக்கிவந்த இவர் தற்பொழுது தன்வயதிற்கு ஏற்றவாறு வில்லன் கதாபாத்திரங்களையும், குணச்சித்திர கதாபாத்திரங்களையும்ஏற்று நடித்து வெற்றி கண்டுவருகிறார். சமீபத்தில் PS 1 மற்றும் PS 2 வில் தன் சிறப்பானநடிப்பினை வெளிக்கட்டியிருப்பார். ஒரே வெற்றியால் 8 படத்திற்கு புக் ஆன சரத்குமார் இப்படத்தின் வெற்றியை கொண்டு தன் அடுத்தகட்ட படங்களை புக் செய்துவிட்டார் என்றே சொல்லலாம். தன் அதிரடியான நடிப்பினை வெளிக்காட்டி ஆக்சன் நிறைந்த படங்களை மேற்கொண்டு வந்தவர் ராஜ்கிரண். தற்பொழுது தன் வயதை கருதி படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.வில்லன் கதாபாத்திரத்திற்கு பேர் போனவர் பிரகாஷ்ராஜ். படத்திற்கு ஏற்றவாறு தன் தத்ரூபமான நடிப்பினை வெளிக்காட்டும் இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் சிறப்புற நடித்து வருகிறார். 80 - 90 காலகட்டத்தில் வில்லனாக குடைச்சல் கொடுத்தவர்தான் நாசர். தற்பொழுது தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.,சிறந்த இயக்குனராய் நாடோடிகள், போராளி போன்ற படங்களை இயக்கி வெற்றுக் கண்டவர் தான் இயக்குனர் சமுத்திரக்கனி. தற்பொழுது இயக்கத்தை விட்டுவிட்டு நடிப்பில் இறங்கிய இவர் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். தற்பொழுது தமிழ் மட்டும் அல்லாது அக்கட தேசத்திலும் தன் அடுத்த கட்ட பட வாய்ப்புகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள ஜெயிலர் படம். டிக்கெட் புக்கிங் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில்ஜெயிலர் பட உரிமத்தை வெறும் ஒரு கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது,சன் பிக்சர்ஸ்.ரஜினிக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இங்கு இவருடைய படத்தின் ரிலீஸ் நாளை எப்படி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்களோ அதே போல் மலேசியாவிலும் ரஜினி படம் திருவிழா போல் கொண்டாடப்படும்.அதன் காரணமாகவே வெளிநாடுகளிலும் ரஜினியின் படங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். ஆனால் இந்த முறை அதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ரஜினியின் படத்தை வழக்கமாக வாங்கும் வெளிநாட்டு விநியோகஸ்தர் மாலிக் இந்த முறை ஜெயிலரின் உரிமையை ஆறு கோடிக்கு விலை பேசி இருந்தார்.இவர் ஒரு லாபகரமான விநியோகஸ்தர் என்பதால் பொதுவாக ரஜினி பட உரிமம் இவருக்கு தான் கிடைக்கும். ஆனால் இப்போது இவருக்கே பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது தற்போது அமலாக்கத்துறை பிரச்சினையை சந்தித்து வரும் இவரால் ரஜினி படத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.ஏனென்றால் தற்போது பணப்புழக்கம் செய்ய முடியாத சிக்கலில் அவர் மாட்டிக் கொண்டுள்ளார். இவரை தவிர மலேசியாவில் சொல்லிக்கொள்ளும்படியான விநியோகஸ்தர்கள் கிடையாது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த சன் பிக்சர்ஸ் தற்போது லோட்டஸ் நிறுவனத்திற்கு ஜெயிலர் பட உரிமத்தை வெறும் ஒரு கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது.அடி மாட்டு விலைக்கு விற்பனையாகி இருந்தாலும் படம் வெளி வந்தால் பல மடங்கு கலெக்சனை தட்டி தூக்கி விடலாம் என சன் பிக்சர்ஸ் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறது.ரஜினியின் ரசிகரான தனுஷ் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்த்தார்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான ஜெயிலர் படத்தை நடிகர் தனுஷ், கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் படம் பார்த்தார். ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான தனுஷ், இதற்கு முன் வெளியான லிங்கா, காலா, கபாலி போன்ற படங்களை எல்லாம் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்த்துள்ளார். அந்த வகையில் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவை ரசிகர்களோடு சேர்த்துப்பார்த்தார்.அதே போல சென்னையில் உள்ள குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் ஜெயிலர் படம் பார்ப்பதற்காக இசையமைப்பாளர் அனிருத், நடிகை ரம்யா கிருஷ்ணன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் வந்திருந்தனர். அங்கு ரசிகர்களோடு சேர்ந்து பாட்டுப்பாடி அசத்தினார்.பெரிய எதிர்பார்ப்புடன் உலகம் முழுவதும் ஜெயிலர் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இரண்டு வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் படம் வருவதால் அவரது ரசிகர்கள் இதனை ஒரு திருவிழா போலவே கொண்டாட ஆரம்பித்திருக்கின்றனர். கட் அவுட்டுகள், பேனர்கள் என திரையரங்குகள் களைகட்டியிருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு சிறிய ஏமாற்றமாக இருப்பது அதிகாலை காட்சி இல்லாததுதான்.படமானது தங்களுக்கு முழு திருப்தியை கொடுத்திருப்பதாகவும்; முழுக்க முழுக்க ரஜினி படத்தில் மாஸ் செய்திருக்கிறார்; யோகிபாபு - ரஜினியின் காமெடி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என பெரும்பாலானோர் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தின் மூலம் வெறித்தனமான கம்பேக் கொடுத்துவிட்டார். பீஸ்ட்டால் ரோஸ்ட் செய்தவர்களுக்கு பதிலடி அளித்திருக்கிறார் எனவும் கூறுகின்றனர்.படத்துக்கு பெரும்பாலானோரிடத்திலிருந்து பாசிட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் சிலர் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனத்தையும் கூறிவருகின்றனர். அதாவது ஜெயிலர் படத்தின் திரைக்கதை மோசமாக இருக்கிறது; கதை ஆங்காங்கே சொதப்பியிருக்கிறது. டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆகவே இல்லை. முதல் பாதி பரவாயில்லை ரகம். இரண்டாம் பாதி மோசம் என பதிவிடுகின்றனர்.இந்தப் படம் தற்போது சில ஷோக்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். முதல் பாதி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது பாதி குறித்தும் நல்ல விமர்சனங்களே வந்துள்ளன.
.சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது சூர்யாவின் கங்குவா படம் உருவாகி வருகிறது.3d அனிமேஷனில் உருவாகி வரும் இப்படம் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பட்ஜெட் ஆரம்பத்தில்250 கோடி என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது நாளுக்கு நாள் பட்ஜெட் எகிறி கொண்டே போகிறதாம். இதனால் தயாரிப்பாளரை கதிகலங்க வைத்திருக்கிறார் சிறுத்தை சிவா.. இந்த சூழலில் சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை திக்கு முக்காட செய்தது இயக்குனர் ஷங்கரை மிஞ்சும் அளவிற்கு சிறுத்தை சிவாவின் கங்குவா பட பட்ஜெட் அதிகமாகியுள்ளது. முதலில் 250 கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட நிலையில் இப்போது500 கோடி பட்ஜெட்டை நெருங்க இருக்கிறதாம். இப்படத்தின் சூட்டிங் கொடைக்கானலில் பாதி முடிந்த நிலையில், இப்போது மீதி உள்ள காட்சிகளை எடுப்பதற்காக படக்குழு வெளிநாடு சென்று இருக்கிறதாம்.கங்குவா படம் ஹிஸ்டாரிக்கல் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இப்போது ஒரு தீவு பகுதியில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். இதற்காக படக்குழு தாய்லாந்து சென்றிருக்கிறார்கள். ஆகையால் இங்கும் பல கோடிகள் செலவாகும் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் இப்போது தயாரிப்பாளருக்கு சிறு கலக்கம் ஏற்பட்டிருக்கிறது.ஆனாலும் சூர்யா ரசிகர்கள் கங்குவா படத்திற்கு கொடுக்கும் வரவேற்பை பார்க்கும் போட்ட பட்ஜெட்டை விட கண்டிப்பாக பல மடங்கு வசூலை பெரும் என்ற நம்பிக்கையை தயாரிப்பாளருக்கு சிறுத்தை சிவா கொடுத்திருக்கிறாராம். அந்த தைரியத்தில் தான் தயாரிப்பாளரும் கங்குவா படத்திற்கு செலவு செய்து வருகிறார்.
கமல் நடிப்பில் விக்ரம் படம் மாபெரும் வெற்றியை சந்தித்தது. மேலும் வசூல் ரீதியான வெற்றியை சந்தித்த இப்படத்தைக் கொண்டு லோகேஷ் இயக்கத்தில் ரஜினி படம் நடிக்க ஆசைப்பட்டதாக கூறப்பட்டது. அதை நிறைவேற்றும் விதமாய் லோகேஷ் தற்பொழுது இப்படத்திற்கான வேலையை தொடங்கியுள்ளார்.இப்படத்தில் லோகேஷ், ரஜினிக்கு வில்லனாக கமலை நடிக்க வைப்பதாக பேச்சும் எழுந்துள்ளது. தற்போது ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் கமல், இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாய் நடித்தாலும் அதற்கு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இப்படமே ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்ற பேச்சும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நண்பனுக்காக இப்படத்தில் கமல் நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்பார் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் இயக்கம் என்றால் பல எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், தற்பொழுது இப்படத்தில் ரஜினி, கமல் இருவரையும் இணைத்து படம் இயக்க முயற்சித்துள்ளார்.அடுத்த1000 கோடி வசூலிக்க, புதிய யுத்தியை பயன்படுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அப்படி என்றால் இது இந்தியாவில் அதிக வசூல் செய்யப்பட்டு முதலிடத்தில் வந்து நிற்கும். மேலும் உலக அளவில் வசூலில் இதுதான் பெரிய படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது..அவ்வாறு இது மட்டும் நடந்து விட்டால், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி கண்ட படமாக இவை அமையும் எனவும் கூறப்படுகிறது. ஒரே படத்தில் ஒட்டுமொத்த பிரம்மாண்டத்தையும் படைக்கும் லோகேஷ் கனகராஜின் மதிப்பும் உயர்ந்துவிடும் என சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது..
பழம் பெரும் நடிகரான ஜெய்சங்கர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய திரைப்படங்களை தாண்டியும் ரசிகர்களின் மத்தியில் தன்னுடைய உதவும் குணத்தால் அதிகமாக பரீட்சையமானவர்தான். தான் வாழும் போதே பலருக்கும் உதவிகளை செய்து கொண்டிருந்தார். அதோடு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தானே செலவு செய்து பல பிரபலங்கள் கூட்டிக்கொண்டு சென்று அவர்களை உதவ வைத்திருக்கிறார். அதுபோல நடிகர் ஜெய்சங்கருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.. ஜெய்சங்கரின் மூத்த மகனான விஜய் சங்கர் அப்பா ஆசை பட்ட படியே கண் மருத்துவராக ஆகி இருக்கிறார். அத்தோடு தன்னுடைய தந்தை சொன்னபடியே பல கஷ்டப்பட்டவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறாராம். தன்னுடைய தந்தை நினைவு நாளில் ஏழைகள், சினிமா துறையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் என பலருக்கும் தொடர்ச்சியாகஉதவிசெய்துகொண்டிருக்கிறாராம். 25 வருட அனுபவத்தில் இதுவரைக்கும் இலவசமாக பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண் ஆபரேஷன் செய்து முடித்திருக்கிறேன் என்று சமீபத்தில் அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த நிலையில் பிரபல நடிகை குட்டி பத்மினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் சங்கர் பற்றி ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் டாக்டர் விஜய் சங்கரின் புதிய கிளினிக் திறப்பு விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் பயணத்தில் இந்த புதிய அத்தியாயத்தில் நீங்கள் பெரும் வெற்றியையும், செழிப்பையும் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.. அதோடு நேரில் சென்று விஜய் சங்கரை ஆசிர்வாதமும் வழங்கி இருக்கிறார்.இதற்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தொடர்ச்சியாக நீங்களும் உங்கள் அப்பாவை போல பலருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று விஜய் சங்கருக்கு ஆசிர்வாதங்களை வழங்கி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் சுமார்40 ஆண்டுகளாக ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் சிவக்குமார். இவருக்கு பின்பு அவருடைய இரண்டு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் கோலிவுட்டில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 44-வது ஆண்டு நிகழ்வு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.இந்த விழாவில் தமிழகத்தில் இருக்கும் 12ஆம்வகுப்புஏழைமாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் விருதும் வழங்கப்பட்டது. அப்போது கலந்து கொண்டு பேசிய சிவக்குமார், குடும்ப சூழ்நிலையினால் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என அவருடைய சிறு வயது கதையை சொல்லி கண் கலங்கினார்.சிவக்குமார் தன்னுடைய தந்தை கருப்பா சிவப்பா என்று கூட பார்த்ததில்லை. அவர்10 மாத குழந்தையாக இருக்கும்போதே அவருடைய தந்தை இறந்து விட்டார். அதன் பின்பு இவருக்கு4 வயதில் இருக்கும்போதே குடும்ப பாரத்தை சுமக்க இருந்த அண்ணனும்14 வயதில் பிளேக் நோயில் இறந்து விட்டார். அவர்கள் ஊரில் மழை பெய்யாததால் சோளம், ராகி என எந்த விளைச்சலுமே இல்லை.ஆனால் எருக்கன் செடியும், அரளி செடியும் வளர்ந்து நின்றது. புருஷனும் போய்விட்டார், குடும்பத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய மகனும் இறந்துவிட்டார் என்ற விரத்தியில், அன்று என்னுடைய தாய் அரளிக்கொட்டையை அரைத்து எனக்கு கொடுத்திருந்தால் அன்றே கதை முடிந்திருக்கும். ஆனால் அந்த அப்பாவி மக அதை செய்யாமல் விட்டதால்தான் இன்று இங்கே நிற்கிறேன் என்று மேடையில் கண்கலங்கி அழுதார்.இதை சிவக்குமார் அங்கிருக்கும் மாணவர்களுக்கு ஏழ்மை கல்விக்கு தடையாக இருக்கக்கூடாது,என்பதைஉணர்த்துவதற்காகவே பகிர்ந்து கொண்டார். ஆனால் அதே மேடையில் இருந்த சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தந்தை பட்ட கஷ்டத்தையும், அவர் கண்கலங்கி நிற்பதையும் நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் அவர்களும் கண் கலங்கியபடி தலைகுனிந்து அந்த மேடையில் அமர்ந்திருந்தனர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.
குடிசை மாற்று வாரியத்தின் தரமற்ற குடியிருப்புகளின் அவலநிலையை அழுத்தமாகப் பதிவு செய்கிறது கதைக்கரு. முதற்பாதியின் இறுதிபகுதியில் விஜய் சேதுபதியின் குரலில் வரும் வசனங்கள் ஆங்காங்க ரசிக்க வைக்கின்றன. கதை சொல்லும் பாணியிலான செந்தமிழ் வசனங்கள் கொண்ட வாய்ஸ் ஓவர்தான் ஐடியா என்பதால் அந்த மீட்டரிலிருந்து விலகாமல் விஜய் சேதுபதியிடம் தேவையானதை மட்டும் வாங்கியிருப்பது சிறப்பு.சென்னையின் கூவம் ஆற்றங்கரையில் தன் அம்மா(சரிதா) மற்றும் தங்கையுடன்(மோனிஷா) வாழ்ந்துவருகிறார் காமிக்ஸ் ஓவியரான சத்யா(சிவகார்த்திகேயன்). ஆற்றங்கரையில் உள்ள அம்மக்களை புதிதாகக் கட்டிய அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு மாற்றுகிறது அரசு. ஊழலால் விளைந்த தரமில்லாத அந்தக் கட்டடத்தால் பல பிரச்னைகளை சத்யாவின் குடும்பமும் அம்மக்களும் சந்திக்கிறார்கள். இந்த ஊழலுக்குப் பின்னால் அமைச்சர் ஜெயக்கொடிதான்(மிஷ்கின்) இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டாலும், அமைச்சரையும் அவரின் ஆட்களையும் எதிர்க்க தைரியம் இல்லாமல் பயப்படுகிறார் சத்யா.ஒருகட்டத்தில் அம்மாவின் சுடுசொல்லால் தற்கொலைக்கு முயலும் சத்யாவின் காதிற்கு மட்டும் ஒரு குரல் கேட்கத் தொடங்குகிறது. அந்தக் குரல் சாமானியன் சத்யாவை எப்படி வீரன் , மாவீரன் ஆக்கியது, தரமில்லாத குடியிருப்பில் வாழும் அம்மக்களை சத்யா காப்பாற்றினாரா, அந்த அமைச்சருக்கு இறுதியில் என்ன ஆனது போன்ற கேள்விகளுக்கு தன் கதைக்களத்தால் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மடோன் அஷ்வின். அப்பாவியான சத்யாவாகவும் மாஸான மாவீரனாகவும் கலக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். தன் கலகல கவுன்ட்டர் உடல்மொழியைத் தவிர்த்து, தடுமாற்றம், பயம், நடுக்கம் என பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார். குரல் உண்டாக்கும் குழப்பங்களின்போது வரும் முகபாவங்கள், அதுவே பின்னர் ஹீரோயிசமாக மாறும்போது வரும் ரியாக்ஷன் என எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். கதாநாயகி அதிதி ஷங்கர் முதல் பாதியில் மட்டும் தலைகாட்டிவிட்டு, பின்னர் காணாமல் போகிறார். ஆனால், அந்த முதல் பாதி நடிப்பில் குறையேதும் இல்லை. அம்மாவாக சரிதா, சுயமரியாதை மிக்க, இறுமாப்பு கலந்த அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். இனி நிறைய அம்மா ரோல்கள் அவரைத் தேடி வரலாம். தங்கையாக மோனிஷா பிளஸ்ஸிக்குப் பெரிய வேலை இல்லை என்றாலும் நடிப்பில் சிக்கல் இல்லை.அதேபோல், க்ளைமாக்ஸ் முன்னரே முடிந்த உணர்வைக் கொடுத்த பின்பும், கமெர்ஷியலாக கதையை நகர்த்திக்கொண்டே சென்றிருக்கின்றனர். இதனால் புதுமையான விஷயங்களும் சுவாரஸ்யமான விஷயங்களும் சிறுக சிறுக மறைந்துபோய் வழக்கமான `மசாலா ஹீரோ' கதையாக படம் முடிகிறது.
.பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர்இந்தப்படத்தில் நடிகர் வடிவேலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்: மாமன்னன் திரைப்படம் இரண்டாவது வாரத்தில் வசூலை அள்ளி வருகிறதுபெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாமன்னன் திரைப்படம் ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் சாதிய வன்முறையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.உதயநிதி, கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். படத்தில் மாமன்னாக நடித்த வடிவேலு, மாமன்னன் படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார். சிறப்பாக நடித்த வடிவேலுவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் என்ற பேச்சும் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது.மகத்தான வசூல்: இந்நிலை மாமன்னன் திரைப்படம் வெளியாகி இன்றோடு சரியாக இரண்டு வாரம் ஆகி உள்ள நிலையில், படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் உலக அளவில் ரூ.62.58 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ரூ. 48 கோடியும், வெளிநாடுகளில் 13 கோடியும் வசூல் செய்துள்ளது.
நெல்சன் திலிப் குமார் தற்போது ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சுதந்திர தின விடுமுறையையொட்டி படம் வெளியாகிறது.இதைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார். அந்த திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் படுதோல்வியை தழுவியது. இதன் காரணமாக ஜெயிலர் திரைப்படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு கதை கூறியிருந்தார்.அந்த திரைப்படத்திற்கு முன்பு கமல்ஹாசன் தயாரிப்பில் நெல்சன் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகி விட்டார். அதில் தனுஷ் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார், ஜெயிலர் திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்து படம் வெளியான பிறகு, அடுத்த படத்திற்கான பணிகளை நெல்சன் மேற்கொள்ள உள்ளார்.
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான். ஒரு பாடலுக்கு அவர் ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவர் தலைமையிலான மேடை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாட்டாளர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டுகிறார்கள். இவ்வளவு வருமானம் இருந்தும் ஸ்டைலிஸ்ட் கூட இல்லாத நபர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.. கடந்த15 வருடங்களாக பல பொது நிகழ்ச்சிகளிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் சாய்ரா பானு தேர்ந்தெடுக்கும் ஆடைகளை அணிந்து தான் பங்கேற்று வருகிறார் ரஹ்மான்.அவர் எதை அணியச் சொல்கிறாரோ, அதையே தான் அணிந்துக் கொள்வதாக ரஹ்மான் கூறுகிறார். அவர் கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக என்னுடைய ஆடைகள் அனைத்தையும் வாங்கிக் கொடுக்கிறார். அவர், என்றார் ரஹ்மான்.எல்லாக் கிரெடிட்டும் அவருக்கே சொந்தம் எனும் ரஹ்மான், தனது மனைவி பரிந்துரைக்கும் எந்த ஆடையும் தனக்கு பொருந்தவில்லை என்று தான் உணர்ந்ததில்லை என்றும், அணிய முடியாது என்று அவரிடம் சொன்னதில்லை என்றும் கூறியுள்ளார்.என் மனைவி ஓரளவு பாரம்பரியமானவர். பெரும்பாலும் கருப்பு நிறத்தை தான் விரும்புவார். நான் அதை மற்றும் அவ்வப்போது மாற்ற முடியுமா என்று கேட்பேன். அதை அவர் ஏற்றுக் கொள்வார் என்றார். ரஹ்மானுக்கும் சாயிராபானுவுக்கும்1995ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ரஹ்மான் என 2 மகள்களும் 1 மகனும் இருக்கிறார்கள்.இந்திய திரைப்பட இசை உலகின் ஹாட் மேன் ஏ.ஆர்.ரஹ்மான். அவர்'மெட்ராஸ் மொஸார்ட்’ போன்ற பல அடைமொழிகளால் குறிப்பிடப்படுகிறார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூலம் ஆஸ்கர் விருதை வென்று, இசை உலகிற்கு பெருமை சேர்த்த ரஹ்மான் தான், தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸ். ஏ.ஆர்.ரஹ்மானின் அன்பு மனைவி சாய்ரா பானு தான், அவரது ஒப்பனையாளர். வேலையை அனுபவித்து செய்கிறார் என்றார் ரஹ்மான்.