ஜிம்பாப்வே மீது இந்தியா அபார வெற்றி... தொடரில் 1-0 முன்னிலை!
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கியது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் இலக்கை விரட்டிய இந்தியா, 13.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
0
Leave a Reply