25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


விளையாட்டு (SPORTS)

May 21, 2025

21ST  MAY IPL MATCH  MUMBAI- DELHI

MAY 21-ம் தேதி  மும்பையில்,  டெல்லி, மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த  மும்பை அணி 180/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 121/10 ரன்கள்  எடுத்து தோல்வியடைந்தது.  59 ரன்கள் வித்தியாசத்தில்  மும்பை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SURYAKUMAR YADAV  தேர்ந்தெடுக்கப்பட்டார்.    

May 21, 2025

May 22 nd விளையாட்டு போட்டிகள்

துப்பாக்கி சுடுதல்  ஜூனி யர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் ஜெர்மனியில் நடக்கிறது. பெண்களுக்கான 10 மீ., ஏர்பிஸ்டல் போட்டி நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் கானக் (572), பிராச்சி (571) 4, 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். மற்ற இந்திய வீராங்கனைகள் ராஷ்மிகா (566) 14, சான்ஸ்கிருதி (565) 15வது இடம் பிடித்தனர்.அடுத்து நடந்த பைனலில் சிறப்பாக செயல்பட்ட கானக், 239 புள்ளி எடுத்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார்.இந் தியாவின் பிராச்சி (176) ஐந்தாவது இடம் மட்டும் பிடித்தார்.இதுவரை தலா ஒரு தங்கம், வெள்ளி என 2 பதக்கம் வென்ற இந்தியா, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டென்னிஸ் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் ஜார்ஜியாவில் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சித்தாந்த் ஜோடி, நியூசிலாந்தின் அஜீத் ராய், லாட்வியாவின் ராபர்ட் ஜோடியை சந்தித்தது.முதல் செட் 5-5 என இழுபறி ஆனது. பின் இந்திய ஜோடி 7-5 என கைப்பற்றியது. தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-4 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம் 6 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 7-5, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. ஹாக்கிநான்கு நாடுகள் பங்கேற்கும் தொடருக்காக (மே 25 - ஜூன் 2) ஜூனியர் இந்திய பெண்கள் அணி, அர்ஜென்டினா சென்றது. இதில் உருகுவே, சிலி அணிகளும் விளையாடுகின்றன. 

May 20, 2025

20 TH MAY IPL MATCH  CHENNAI - RAJASTHAN

MAY 20-ம் தேதி  டெல்லியில்,  ராஜஸ்தான்,  சென்னை,அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த  சென்னை அணி 187/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 188/4 ரன்கள்  எடுத்து  6 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக AKASH MADHWAL தேர்ந்தெடுக்கப்பட்டார்.    

May 20, 2025

உ.பி., மாநில அரசு 'டி. எஸ்.பி.,' பதவி வழங்கிய இந்திய தடகள வீராங்கனை பாருல் சவுத்ரி

இந்திய தடகள வீராங்கனை பாருல் சவுத்ரி 30. உ.பி.,யின் மீரட்டை சேர்ந்த இவர், 2023, ஹாங்சு (சீனா) ஆசிய விளையாட்டு 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார். அடுத்து 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் வெள்ளி கைப்பற்றினார்.தோகா டைமண்ட் லீக் போட்டியில் 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை (9 நிமி டம், 13:39 வினாடி),  படைத்தார்.இவரை கவுரவிக்கும் வகையில் உ.பி., மாநில அரசு 'டி. எஸ்.பி.,' பதவி வழங்கியது. மொரதா பாத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் போலீஸ் அகாடமியில் நேற்று பொறுப்பேற்றுக் கொண் டார். தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இருப்பதால், பயிற்சிக்காக பெங்களூரு தேசிய அகாடமிக்கு பாருல் சவுத்ரி கிளம்பினார்.

May 20, 2025

21 ST MAY விளையாட்டு போட்டிகள்

டென்னிஸ் மே 25-ஜூன் 8ல் பிரெஞ்ச் கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. ஒற்றையர் தரவரிசையில் 170 வது இடத்திலுள்ள இந்தியாவின் சுமித் நாகல், 141 வது இடத்திலுள்ள அமெரிக்காவின் மிட்செல் குருகரை சந்தித்தார்.காலிறுதியில் நடந்த முதல் செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றிய சுமித் நாகல், அடுத்த செட்டையும் 6-1 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 14 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சுமித் நாகல் 6-1, 6-1 என்ற நேர் செட் டில் வெற்றி பெற்றார். பாட்மின்டன்மலேசிய 'மாஸ்டர்ஸ் சூப்பர் 500' தொடர் கோலாலம்பூரில் நடக்கும் தகுதி சுற்றில், இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹூவாங் யுவை (சீன தைபே )வீழ்த்தி, பிரதான சுற்றுக்கு முன்னேறினார். துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ஜெர்மனியில் நடக்கிறது. ஆண் களுக்கான 50 மீ., ரைபிள் புரோன் போட்டியில் இந்தியா சார்பில் அட்ரியன் கர்மாகர் பங்கேற்றார். இவர் 2010 டில்லி காமன்வெல்த் துப்பாக்கிசுடுதலில் தங்கம் வென்ற இந்தியாவின்  ஜோய்தீப்  கர்மாகரின் மகன் சிறப்பாக செயல்பட்ட அட்ரியன்,மொத்தம் 626.7 புள்ளி பெற்று, இரண்டாவது இடம் பிடிக்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. சுவீடனின் ஜெஸ்பெர் (627.0) தங்கம் வென்றார். மற்ற இந்திய வீரர்கள் ரோஹித் (620.2) 12, நிதின் வேதாந்த் (614.4) 35வது இடம் பெற்றனர்.பெண்களுக்கான 50 6., ரைபிள் புரோன் போட்டியில் இந்தியாவின் அனுஷ்கா, 623.5 புள்ளி மட்டும் பெற, 6வது இடம் தான் கிடைத்தது. மற்றொரு இந்திய வீராங்கனை பிராச்சி (618.3) 24 வது இடம் பிடித்தார். இதுவரை ஒரு வெள்ளி மட்டும் வென்ற இந்தியா, பதக்க பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. 

May 19, 2025

19 TH MAY IPL MATCH  LUCKNOW - HYDERABAD

MAY,19ம் தேதி லக்னோவில், ஹைதராபாத், லக்னோ,அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 205/7 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ஹைதராபாத் அணி 206/4  ரன்கள்  எடுத்து  6 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ABHISHEK SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார்.    

May 19, 2025

20 TH MAY விளையாட்டு போட்டிகள் 

 டென்னிஸ் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் ஈரானில் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் கரண் சிங், ரஷ்யாவின் அலெக் சாண்டர் லோபனோவை சந்தித்தார்.முதல் செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதை கரண்சிங் 7-6 என வசப்படுத்தினார். அடுத்த செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார்.  ஒரு மணி நேரம், 41 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் கரண் சிங் 7-6, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் அரங்கில் முதன் முதலாக கோப்பை வென்றார்.கோல்ப்நெதர்லாந்தில் நடந்த பெண்களுக்கான சர்வதேச தொடரில் இந்தியாவின் திக் ஷா தாகர், ஹிதாஷீ பக்ஷி, அவானி பிரஷாந்த் முறையே 9,12,19வது இடத்தை பகிர்ந்து கொண்டனர். குத்துச்சண்டை'சூப்பர் பைட்டர் சீரிஸ்-3' பெங்களூருவில் நடந்த தொடரில் 'வெல்டர்வெயிட்' பிரிவில் இந்தியாவின் பைசான் அன்வர், கானாவின் கபக்போ அல்லோடேவை வீழ்த்தி சாம்பியன் ஆனார். 

May 18, 2025

18 TH MAY IPL MATCH  ராஜஸ்தான் - பஞ்சாப்

MAY18ம்தேதி ஜெய்ப்பூரில், ராஜஸ்தான், பஞ்சாப், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 219/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 209/7 ரன்கள்  எடுத்து தோல்வியடைந்தது. 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக HARPREET BRAR தேர்ந்தெடுக்கப்பட்டார்.    MAY18ம்தேதி டெல்லியில், குஜராத், டெல்லி, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 199/3 ரன்கள் எடுத்து, அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 205/0 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SAI SUDHARSAN தேர்ந்தெடுக்கப்பட்டார். 

May 18, 2025

கிராண்ட் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முதன் முறையாக சாம்பியன் ஆனார்.

கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசனின், இரண்டாவது ருமேனியாவில் தொடர் சூப்பர் பெட் கிளாசிக்') நடந்தது. எட்டு சுற்று முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, 5.0 புள்ளியுடன் முதலிடத்தில் இருந்தார். 9வது, கடைசி சுற்றில் வென்றால் சாம்பியன் ஆகலாம் என்ற நிலையில் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவான் ஆரோனியனை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக் ஞானந்தா, 43வது நகர்த் தலில் 'டிரா' செய்ய, 5.5 புள்ளி பெற்றார்.  வெற்றியாளரை  முடிவு செய்ய 'பிளே ஆப்' சுற்று நடந்தது.ஒவ்வொரு வீரரும் மற்ற வீரருடன் தலா ஒரு முறை மோதினர். பிரக்ஞானந்தா- அலிரேசா மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது. வாசியர், அலி ரேசா மோதிய போட்டியும் 'டிரா' ஆனது.  அடுத்து பிரக்ஞானந்தா, வாசியர் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து 1.5 புள்ளியுடன் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து, இத்தொடரில் முதன் முறையாக சாம்பியன் ஆனார். 2025ல் பிரக்ஞானந்தா வென்ற இரண்டாவது கோப்பை இது. முன்னதாக 'டாடா ஸ்டீல்' தொடரில் சாம்பியன் ஆகி இருந்தார். 

May 18, 2025

17 th AND 18 th MAY விளையாட்டு போட்டிகள்

கால்பந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் அருணாச்சல பிரதேசத்தில்நேற்று நடந்த பைனலில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.பின், 'பெனால்டி ஷூட்-அவுட்' முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. இதில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்பு வழங்கப்பட்டன. முதல் நான்கு வாய்ப்பில் இரு அணிகளும் தலா 3 கோல் அடித்து 3-3 என சமநிலையில் இருந்தன. முடிவில் இந்திய அணி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று 4வது முறையாக (2019, 2022, 2023, 2025)சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டேபிள் டென்னிஸ்  உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன் ஷிப் கத்தார் தலைநகர் தோகாவில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, நைஜீரியாவின் பாத்திமோ பெல்லோ மோதினர். மணிகா 4-0 (11-5, 11-6, 11-8, 11-2) என வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார். தடகளம் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் (மே 27-31 ) தென் கொரியாவில் நடக்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் கேரளாவில் இந்தியன் கிராண்ட் ப்ரி 2, தடகளம் நடந்தது.பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர். 100 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் நித்யா, 13.27 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்தார். 400 மீ., தடை ஓட்டத்தில் வித்யா, 57.45 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பெற்றார்.தொடர்ந்து அசத்திய வித்யா, 200 மீ., ஓட்டத்தில் இரண்டாவது இடம் (23.72 வினாடி) பிடித்தார். 400 மீ., (பி பிரிவு) ஓட்டத்தில் சுபா (53.57 வினாடி) முதலிடம் பிடித்தார். 400 மீ., 'ஏ' பிரிவு ஓட்டத்தில் பவித்ராவுக்கு (55.21) மூன்றாவது இடம் கிடைத்தது. ஆண்களுக்கான தடகளத்திலும் தமிழக வீரர்கள் அசத்தினர். 200 மீ., ஓட்டத்தில் (ஏ பிரிவு) வருண் 21.51 வினாடி நேரத்தில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பெற்றார்.400 மீ., 'சி' பிரிவு ஓட்டத்தில் சுராஜ், 47.00 வினாடியில் ஓடி முதலிடம் பிடித்தார். 400 மீ., 'டி' பிரிவில் ராஜேஷ் ரமேஷ் (47.77 வினாடி) முதலிடம் பெற்றார். 

1 2 ... 60 61 62 63 64 65 66 ... 94 95

AD's



More News