25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Dec 18, 2025

லக்னோவில் நிலவிய அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடக்க இருந்த கிரிக்கெட் போட்டி ரத்து.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. நான்காவது போட்டி உ.பி., தலைநகர் லக்னோவில் உள்ள வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடக்க இருந்தது.ஆனால் லக்னோவில் நிலவிய அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக, வேறு வழியில்லாத நிலையில், நான்காவது போட்டியை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர். ஐந்தாவது, கடைசி போட்டி நாளை ஆமதாபாத்தில் நடக்க உள்ளது.   மும்பையில்  இந்திய  கிரிக்கெட்ஜாம்பவான் சச்சினுடன், பார்வையற்றோருக்கான 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய பெண்கள் அணியினர்'குரூப்' போட்டோ எடுத்துக் கொண்டனர்.

Dec 18, 2025

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சிறந்த வீரர் டெம்பெலே ஸ்பெயினின் அய்டனா , சிறந்த வீராங்கனைக்கான, விருதை வென்றனர்.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில், கத்தார் தலைநகர் தோகாவில்,  நடப்பு ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனை உள்ளிட்ட 4 விருதுகள்வழங்கப்பட்டன.இவ்விருதுகளுக்குஉலகெங்கிலும்உள்ளதேசியஅணிகளின்கேப்டன்கள், பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் ஓட்டளித்தனர்.ஸ்பெயினின் அய்டனா 27 சிறந்தவீராங்கனைக்கான, விருதை வென்றார். பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடும் இவர்,சர்வதேச அரங்கில் ஸ்பெயினுக்காக 83 போட்டியில், 31 கோல் அடித்துள்ளார்.பாரிஸ்  பிரான்சின் அவுஸ் மேன் டெம்பெலே 28, சிறந்த வீரருக்கான விருதை பிரான்சின் அவுஸ் மேன் டெம்பெலே 28, கைப்பற்றினார். பாரிஸ் செயின்ட் - ஜெர்மைன் கிளப் அணிக்காக (63 போட்டி, 26 கோல்)விளையாடும் இவர், சர்வதேச அரங்கில் பிரான்ஸ் சார்பில் 57 போட்டியில், 7 கோல் அடித்துள்ளார்., பிரான்ஸ் கால்பந்து பத்திரிகை சார்பில் வழங்கப்படும் 'பாலன் டி ஆர்' விருது சமீபத்தில் இருவரும்,  வென்றிருந்தனர். 

Dec 17, 2025

பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் துவக்கம்.

இன்று பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் சீனாவின் ஹாங்சு நகரில்,  இன்றுதுவங்குகிறது. உலகத் தரவரிசையில் 'டாப்-8' இடம் பிடித்த ஆண்கள் இரட்டையர் ஜோடி 2025ம் ஆண்டில் விளையாடிய பல்வேறு தொடர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப, பங்கேற்கின்றன. உலகின் 'நம்பர்-3', சாத்விக்சாய் ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி  இந்தியா சார்பில் களமிறங்குகிறது. முதல் போட்டியில்சீனாவின் லியாங் வெய், வாங் சங் ஜோடியை சந்திக்கிறது.

Dec 17, 2025

பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் இரண்டாவது ஆண்டாக, சிறந்த வீராங்கனை ஆனார் பெலாரசின் சபலென்கா.

ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் (டபிள்யு. டி. ஏ.) சார்பில் பல்வேறு பிரிவுகளில், உலகின் பல்வேறு மீடியா இணைந்து தேர்வு  செய்துவிருது வழங்கப்படுகிறது.. இதன்படி  80 சதவீத ஓட்டுகள் பெற்ற 2025 சிறந்த வீராங்கனையாக பெலாரசின் சபலென்கா 27, தேர்வு செய்யப்பட்டார். கடந்த 25 ஆண்டில் செரினா வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஸ்வியாடெக்கிற்கு (போலந்து) அடுத்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இவ்விருது பெற்ற வீராங்கனை ஆனார் சபலென்கா. 2025ல் ஆண்டுமுழுவதும், 75 போட்டியில் , 63 ல் வென்று உலகத் தரவரிசையில் 'நம்பர் -1' வீராங்கனையாக நீடித்தார்.4 தொடரில் கோப்பை வென்ற சபாலென்கா, 9ல் பைனலுக்கு முன்னேறினார். கிராண்ட் லாம் அரங்கில் யு.எஸ்., ஓபன் பட்டம் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபனில் பைனலுக்குள் நுழைந்தார்.

Dec 17, 2025

இந்தியா 8 தங்கம் உட்பட 15 பதக்கங்கள்நார்டிக் ஓபன் உஷூ சாம்பியன்ஷிப்பில் கைப்பற்றியது.

7வது நார்டிக் ஓபன் உஷூ சாம்பியன் ஷிப்  சுவீடனின் ஸ்டாக் ஹோமில் ,இந்தியாவின் மெர்சி நகய்மாங், மெபங் லாம்கு என இருவரும் தலா 2 பிரிவுகளில் தங்கப் பதக்கம்  வென்றனர். கைப்பற்றினர். ரஷித் சைப், குசும், ஒனிலு டெகா, கோமல் தங்கள் பிரிவுகளில் தங்கம்,.65 கிலோ பிரிவில் சுஜ்ஜால் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.  இந்தியாவுக்கு 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. ஒட்டு மொத்தமாக இந்தியா 15 பதக்கங்கள் கைப்பற்றியது. 

Dec 17, 2025

அதிக தொகைக்கு ஏலம் போன ,காஸ்ட்லி' வீரர் கேமரான் கிரீன். ரூ.25.20 கோடிக்கு கோல்கட்டா அணி வாங்கியது.

. பிரிமியர் கிரிக்கெட் தொடர் (ஐ.பி.எல்.,) 19வது சீசன் 2026ல் இந்தியாவில்,  நடக்கவுள்ளது. சாம்பியன்' பெங்களூரு, சென்னை, . மும்பை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த சீசனில் பங்கேற்ற 173 பேர் தக்க வைக்கப்பட்டனர். நேற்று, அபுதாபியில் மீதமுள்ள 77 இடங்களுக்கு வீரர்கள் தேர்வு செய்ய 'மினி' ஏலம் நடந்தது. இதில் 369 பேர் (256 இந்தியர், 113 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றனர்.  சென்னை, கோல்கட்டா கேமரான் கிரீனை 26 வாங்க போட்டியிட்டன. சென்னை அணி ஒரு கட்டத்தில் ரூ. 23 கோடி வரை கேட்டது. கடைசியில் ரூ. 25.20 கோடி கொடுத்து கோல்கட்டா அணி தட்டிச் சென்றது. அதிக தொகைக்கு ஏலம் போன அன்னிய வீரர்களில் ஸ்டார்க்கை (ரூ.24.75 கோடி, ஆஸி.,)  முந்தி முதலிடம் பிடித்தார் கிரீன்.'ஆல்-ரவுண்டர்’ பிரஷாந்த் வீர் 20, கீப்பர்-பேட்டர் கார்த்திக் சர்மா 19, என இரு 'அன்கேப்ட்’ இளம் வீரர்களை கடும் போட்டியை சமாளித்து, நேற்றைய 'மினி' ஏலத்தில்தலா ரூ.14.20 கோடிக்கு வாங்கியது. இவர்களது அடிப்படை ஏலத் தொகை . ரூ.30 லட்சம் தான். இதிலிருந்து 47.3 மடங்கு அதிகம் கொடுத்து ஒப்பந்தம் செய்தது. ஏற்கனவே ஆயுஷ் மாத்ரே 18, பிரவிஸ் 22, இருப்பதால், இளம் படையாக 2026-இல். பங்கேற்கின்றனர்.

Dec 17, 2025

விளையாட்டு போட்டிகள்17th DECEMBER 2025

வரும் 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி  அமெரிக்காவில் நடக்க உள்ளது. இதன்பாட்மின்டன் போட்டியில் 86 வீரர், 86 வீராங்கனை என 172 பேர் பங்கேற்கலாம்.இதற்கான தகுதிச்சுற்று 2027, மே 3ல் துவங்குகிறது. 2028, ஏப்ரல் 30 வரை நடக்கும் போட்டிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதில் பெறும் புள்ளிகளுக்கு ஏற்ப ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம். 'ரோல் பால்' உலக கோப்பை தொடர் துபாயில் நடக்கிறது. இந்திய ஆண்கள் அணி 16-1 என சவுதி அரேபியா, 11-2 என பிரேசிலை வென்றது. இந்திய பெண்கள் அணி 25-0 என சவுதி அரேபியாவை வென்றது.

Dec 16, 2025

விளையாட்டு போட்டிகள்.DECEMBER 16th 2025

 'வெஸ்டர்ன் இந்தியா' ஸ்குவாஷ், தொடர் வரும் டிச. 17-21ல்  மும்பையில், நடக்கிறது. இதில் வீர் சோட்ரானி, அஞ்சலி செம்வால், சூரஜ் சந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.மாற்றுத்திறனாளிகளுக்கான இந்தியா 'ஏ' அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட 'டி-20' கிரிக்கெட் தொடர் வரும் டிச. 16-18ல் மும்பை, வான்கடே மைதானத்தில்நடக்கவுள்ளது. சீனியர் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப், 'ஆமதாபாத்தில் 'கிரிகோ-ரோமன்'எடைப் பிரிவில் ரயில்வே அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தஅணியின் குல்தீப் மாலிக் (72 கிலோ), ரோகித் (87), நிதேஷ் (97), சேட்டன் (63) தங்கம் வென்றனர்.ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், துபாயில் 19 வயதுக்கு உட்பட்டோருக் கான இலங்கை அணி (238/8) 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை (235/10) வென்றது. 

Dec 16, 2025

மாயா ராஜேஸ்வரன் ரேவதி, செர்பியாவின் அனஸ்டா சியா சிவெட்கோவிச் ஜோடி, சாம்பியன்.

 பெண்களுக்கான போர்ட் லாடர் டேல் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர்  அமெரிக்காவின் புளோரிடாவில், (18 வயதுக்கு உட்பட்டோர்) ,இரட்டையர் பிரிவு பைனலில், 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 16 வயது மாயா ரேவதி, செர்பியாவின் அனஸ்டா சியா சிவெட்கோவிச் ஜோடி, 'நம்பர்-5' அந்தஸ்து கொண்ட அமெரிக்காவின் தியா புரோடின், வெல்லஸ் நியூமன் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 3-6 ,2வது செட்டை 6-2 என கைப்பற்றியது. வெற்றியாளரை முடிவு செய்ய சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது.. முடிவில் மாயா ஜோடி 3-6, 6-2, 10-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை வென்றார்.அமெரிக்காவின் அனிதா டுவிடம் ,ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற மாயா, முதல் சுற்றில் 0-6, 3-6 என   தோல்வியடைந்தார்.சர்வதேச ஜூனியர் டென்னிஸ் தரவரிசையில் மாயா இரட்டையரில் கோப்பை வென்றதை அடுத்து,  38வது இடத்துக்கு முன்னேறினார்.15 வயதான தமிழக டென்னிஸ் வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். டெல்லியில் நடைபெற்று வரும் ஐடிஎப் ஜே 300 டென்னிஸ் போட்டியில் மாயா தற்போது வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை வென்றார்.களத்தில் ஆக்ரோஷமாக ஷாட்களை விளையாடி எதிரணி வீராங்கனைகளை மாயா அபாரமாக வீழ்த்தி வருகிறார். கோவையில் பிறந்து வளர்ந்து தற்போது ஸ்பெயினில் உள்ள ரஃபேல் நடால், டென்னிஸ் அகாடமிவில் மாயா பயிற்சி செய்து வருகிறார்.

Dec 16, 2025

ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரி ல் ,ஜோஷ் டங் தேர்வு  இங்கிலாந்து அணி அறிவிப்பு

ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா சென்று உள்ள இங்கிலாந்து அணி, முதல் இரண்டு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் நாளை அடிலெய்டில் துவங்குகிறது. இப் போட்டிக்கான இங்கிலாந்து 'லெவன்'  அணி  அறிவிக்கப்பட்டது. முதலிரண்டு டெஸ்டில் பெரிய அளவில் சோபிக்காத (3 விக்கெட்) வேகப் பந்துவீச்சாளர் அட்கின் சன் 27, நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் 28,தேர்வானார்.

1 2 ... 61 62 63 64 65 66 67 ... 158 159

AD's



More News