பாட்மின்டன்சிங்கப்பூரில் சர்வதேசபாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது.பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, கனடாவின் வென்யு ஜங்கை சந்தித்தார். சிந்து 21-14, 219 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் கால்பந்து சவுதி அரேபியாவில் 'சவுதி புரோ லீக்' கிளப் கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 18 அணி கள் பங்கேற்றன. உலகின் முன்னணி வீரர் போர்ச் சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 40, இடம் பெற்ற அல்நாசர் அணி, தனது கடைசி லீக் போட்டியில் அல்படே அணியை சந்தித்தது. இதில் அல் நாசர் அணி 2-3 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்விய டைந்தது. 70 புள்ளியுடன் (34 போட்டி, 21 வெற்றி,7'டிரா',6 தோல்வி) பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது. இப்போட்டியில் 42வது நிமிடம் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இதையடுத்து கிளப் கால்பந்து அரங்கில் 800 கோல் அடித்த முதல் வீரர் ஆனார்.இந்தசீசனில் 25 கோல் அடித்து 'கோல்டன் பூட்' (தங்க ஷூ) தட்டிச் சென்றார். கிரிக்கெட்'ஆப்பரேஷன் சிந்தார்' வெற்றியை கொண்டாடும் வகையில், ஆமதாபாத்தில் நடக்க உள்ள பிரிமியர் கிரிக்கெட் பைனலை (ஜூன் 3) காண இந்திய முப்படை தளபதிகளுக்கு பி.சி.சி.ஐ., அழைப்பு.பிரிமியர் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்தன. இன்று ஓய்வு நாள். நாளை முதல் 'பிளே ஆப் சுற்று துவங்குகிறது.
MAY 26-ம் தேதி ஜெய்ப்பூரில், மும்பை, பஞ்சாப், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 184/7 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 187/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக JOSH INGLIS தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வில்வித்தை உலக தரவரிசை வெரோனிகா கோப்பை வில்வித்தை போட்டிசுலோவேனியாவில் நடந்தது. ஆண்கள் தனிநபர் காம் பவுண்டு பிரிவில் இந்தியாவின் பிரதமேஷ் பாலசந்திர பியூஜ், முன்னாள் உலக சாம் பியன், ஆஸ்திரியாவின் நிகோ வியனர்(காலிறுதி), சக வீரர் பிரதமேஷ் ஜவஹரை(அரையிறுதி) வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்.இதில் நடப்பு சாம்பியன் ஈரானின் ஷமாய் யம்ரோமை எதிர்கொண்டார். முதலில் பின்தங்கிய பிரதமேஷ், பின் சிறப்பாக செயல்பட போட்டி148,148 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி'ஷூட் ஆப்' முறைக்கு சென்றது. இதில் அசத்திய பிரதமேஷ், தங்கப்பதக்கம் கைப்பற்றினார். பாட்மின்டன்சிங்கப்பூர் ஓபன்'சூப்பர்750' தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் ஒற்றையர் பிரிவில் சிந்து, பிரனாய் முத்திரை பதிக்கலாம். இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் ஜோடி சாதிக்கலாம். குத்துச்சண்டைபாங்காக்கில் நடக்கும் தாய்லாந்து சர்வதேச ஓபன் தொடரின் அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை சஞ்சு (60 கிலோ பிரிவு) முன்னேறினார். அன்ஷுல் கில்லும் (90+) அரையிறுதிக்கு தகுதி. துப்பாக்கிசுடுதல் ஜெர்மனியில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் நடக்கிறது. இதில் பெண்களுக்கான25 மீ., பிஸ்டல் பிரிவில் போட்டி நடந்தது. இந்தியாவின் தேஜஸ்வினி,575 புள்ளி எடுத்து4வது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.அடுத்து துவக்கத்தில் பைனலில் இருந்தே அசத்தினார். முடிவில்31புள்ளியுடன் முதலிடம் பெற்று,தங்கம் கைப்பற்றினார்.இத்தொடரில் இந்தியா வென்ற3வது தங்கம். இதுவரை3 தங்கம்,4 வெள்ளி,4 வெண்கலம் என11 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ஹாக்கி நான்கு நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்களுக்கான சர்வதேச ஹாக்கி தொடர் அர்ஜென்டினாவில்நடக்கிறது.இந்தியா, அர்ஜென்டினா, சிலி, உருகுவே அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இந்தியா, சிலியை வீழ்த்தியது.நேற்று தனது இரண்டாவது போட்டியில் இந்தியா, உருகுவேயை எதிர் கொண்டது.3வது நிமிடம் கிடைத்த பெனால்டி கார்னரில் உருகுவேயின் செய்கல் ஒரு கோல் அடித்தார். இந்தியாவின் சோனம் (21) ஒரு கோல் அடித்தார். மறுபக்கம் அகஸ்டினா (24, உருகுவே ) கோல் அடிக்க, இந்தியா1,2 என பின்தங்கியது.46 வது நிமிடம் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார் கனிகா. தொடர்ந்து அசத்திய இவர், பீல்டு கோல் (50) அடித்து கைகொடுக்க, இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஈட்டி எறிதல்6வது உலக பாரா தடகள கிராண்ட் ப்ரி போட்டி சுவிட்சர்லாந்தில்நடந்தது.ஆண்களுக்கான எப்.42 பிரிவு ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் பங்கேற்றார் மகேந்திர குர்ஜார்27. ராஜஸ்தானை சேர்ந்த இவர், முதல் இரு வாய்ப்பில் 56.11, 55.51 மீ.துாரம் எறிந்தார். மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சம்61.17 மீ., துாரம் எறிந்தார். இது புதிய உலக சாதனை ஆனது. கடைசி3 வாய்ப்பில் மகேந்திர குர்ஜார் (58.54, 57.25, 58.07 மீ.,) ஏமாற்றினார். எனினும் தங்கம் கைப்பற்றி அசத்தினார்.100 மீ., டி 46 பிரிவில் இந்தியாவின் பெருமாள்சாமி சந்தனகுமார், 12.31 வினாடியில் வந்து, வெள்ளி வென்றார்.400 மீ., (டி 11) போட்டியில் இந்தியாவின் மூர்த்தி பிரகதீஷ்வர ராஜா (01 நிமிடம், 01:59 வினாடி) இரண்டாவது இடம் பெற்றார்.ஈட்டி எறிதல் எப் 64 பிரிவில் இந்தியாவின் சுமித் அன்டில் அதிக பட்சம் 72.35 மீ., எறிந்து முதலிடம் பிடித்தார்.
MAY 24-ம் தேதி ஜெய்ப்பூரில், டெல்லி, பஞ்சாப், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 206/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 208/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SAMEER RIZVI தேர்ந்தெடுக்கப்பட்டார்.
25 TH MAY IPL MATCH CHENNAI - GUJARATMAY 25-ம் தேதி அகமதாபாத்தில், சென்னை, குஜராத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 230/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 147/ 10 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக BREVIS தேர்ந்தெடுக்கப்பட்டார். 25 TH MAY IPL MATCH HYDERABAD - KOLKATTA MAY 25-ம் தேதி டெல்லியில், ஐதராபாத், கொல்கத்தா, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 278/3 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 168/10 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 110 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக HEINRICH KLAASEN தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செஸ் புதுக்கோட்டையை சேர்ந்தவர் அங்கப்பன், 27. ஒன்றரை வயதில் 'மஸ்குலர் டிஸ்டரபி' பாதிப்பு ஏற்பட, நடக்க முடியவில்லை. வீல் சேரில் மனஉறுதியுடன் முன்னேறினார். பி.காம்., பட்டம் பெற்றார். சி.ஏ., படித்து வருகிறார். செஸ் விளையாட்டில் ஆர்வமாக இருந்தார். தற்போது, 'ஆர்' பிட்டர்' அளவுக்கு உச்சம் தொட்டுள்ளார். திருச்சியில் சிறிய அளவிலான செஸ் போட்டிகளில் பங்கேற்றேன். ஆரம்பத்தில் நிதி நெருக்கடி, பயணம் செய்வதில் பிரச்னை இருந்தது. எனக்கு ஆதரவாக அப்பா, அம்மா இருந்தனர்.சென்னை, ஒலிம்பியாட் (2022) போட்டியின் போது, 'பிடே' செஸ் 'ஆர்' பிட்டர்' தேர்வில் வெற்றி பெற்றேன். பின் 'ஆன் லைனில்' சர்வதேச 'ஆர் பிட்டர்' தேர்வில் 'பாஸ்' செய்தேன். இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி'ஆர்பிட்டர்' ஆனேன். 'ஆர்பிட்டர்' என்பது அம்பயர் போன்றது. சர்வதேச போட்டிகளில் 'ரிசல்ட்' அறிவிப்போம். செஸ் போர்டில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம். இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி சர்வதேச 'செஸ் ஆர்பிட்டர்' என சாதனை படைத்திருக்கிறார் அங்கப்பன்.டென்னிஸ் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் ஜார்ஜியாவில் நடக் கிறது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சித்தாந்த் ஜோடி, ஜப்பானின் இமாமுரா, தஜிமா ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை இந்திய ஜோடி 6-1 என எளிதாக கைப்பற்றியது. அடுத்த செட்டை 3-6 என கோட்டை விட்டது. 58 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி. 6-1, 3-6, 5-10 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தது. துப்பாக்கி சுடுதல் ஜெர்மனியில், ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் (ரைபிள்/பிஸ்டல்/ஷாட்கன்) நடக்கிறது. இதன் 10 மீ., 'ஏர் ரைபிள்' கலப்பு அணிகள் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் நரேன் பிரனவ், கியாதி சவுத்ரி ஜோடி 631.0 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தது.மற்றொரு இந்திய ஜோடியான ஷாம் பவி ஷ்ராவன், ஹிமான்ஷு ஜோடி 314.0 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது.அடுத்து நடந்த பைனலில் நரேன்,கியாதி ஜோடி 1416 என சீனாவின் யுடிங், லிவான்லின் ஹுவாங் ஜோடி யிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றது. பின் 3,4வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் ஷாம்பவி, ஹிமான்ஷு ஜோடி 17,9 என அமெரிக்காவின் ஸ்பென்சர், கிரிப்பின் லேக் ஜோடியை வீழ்த்தி வெண்கலத்தை கைப்பற்றியது.இதுவரை 2 தங்கம்,4 வெள்ளி,வெண்கலம் என 10 பதக்கம் கைப்பற்றி இந்தியா, 2வது இடத்தில் உள்ளது. பாட்மின்டன்'சூப்பர் 500' மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின்ஸ்ரீகாந்த், சீனாவின் லி ஷி பெங் மோதினர். முதல் செட்டை 11-21 என இழந்த ஸ்ரீகாந்த், இரண்டாவது செட்டை 9-21 என கோட்டை விட்டார். மொத்தம் 36 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ஸ்ரீகாந்த் 11–21, 9-21 என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைந்து 2வது இடத்தை கைப்பற்றினார்.
டென்னிஸ் ஜார்ஜியாவில் சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சித்தாந்த் ஜோடி, பிரிட்டனின் ஒயிட்ஹவுஸ், டாம் ஹேண்ட்ஸ் ஜோடியை சந்தித்தது.58 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. பாட்மிண்டன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்,'சூப்பர்500' மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரான்சின் டோமா ஜூனியர் போபோவ் மோதினர். முதல் செட்டை 24-22 என போராடி கைப்பற்றினார்., 3வது செட்டில் எழுச்சி கண்ட ஸ்ரீகாந்த்22,20 என போராடி தன்வசப்படுத்தினார். ஒரு மணிநேரம்,14 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஸ்ரீகாந்த் 24-22, 17-21, 22-20 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் ஜெர்மனியில்நடக்கிறது. பெண்களுக்கான ஸ்கீட் பிரிவு போட்டி நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரைசா தில்லான்,116 புள்ளியுடன் இரண்டாவது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். அடுத்து நடந்த பைனலில் ரைசா, 51 புள்ளியுடன், இரண்டாவது இடம் பெற்று. வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ஆண்களுக்கான50 மீ., ரைபிள்3 பொசிசன்ஸ் போட்டி தகுதிச்சுற்றில் இந்தியாவின் அட்ரியன் கர்மாகர்(588)4வது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார். பைனலில் பெரும்பாலான நேரத்தில்4வது இடத்தில் இருந்த அட்ரியன், கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட,446.6 புள்ளியுடன் மூன்றாவது இடம் பெற்று, வெண்கலம் வசப்படுத்தினார். இத்தொடரில் இவர் வென்ற இரண்டாவது பதக்கம் இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கம் வென்ற இந்தியா, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
MAY 23-ம் தேதி லக்னோவில், லக்னோ, பெங்களூர், ஹைதராபாத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 231/6 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணி 189/10 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 42 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ISHAN KISHAN தேர்ந்தெடுக்கப்பட்டார்.
MAY 22-ம் தேதி குஜராத்தில், லக்னோ, குஜராத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 235/2 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 202/9 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக MITCHELL MARSH தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாட்மின்டன் 'சூப்பர் 500' மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், அயர் லாந்தின் நாட் நுயென் மோதினர். ஸ்ரீகாந்த் 23-21, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரனாய் 9-21, 18-21 என ஜப்பானின் யுஷி டனகாவிடம் தோல்வியடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-17, 18-21, 21-15 என பிரான்சின் ஜூலியன் மாயோ, லியா பலேர்மோ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. ஹாக்கி சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், புரோலீக் 6வது சீசன் நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து (16 புள்ளி), பெல்ஜியம் (16), இந்தியா (15) அணிகள் 'டாப்-3' இடத்தில் உள்ளன.அடுத்து நெதர்லாந்து செல்லவுள்ள இந்திய அணி, நெதர்லாந்து (ஜூன் 7, 9), அர்ஜென்டினா (ஜூன் 11, 12) அணிகளுடன் விளையாடுகிறது. அதன்பின் பெல்ஜியம் சென்று ஆஸ்திரேலியா (ஜூன் 14, 15), பெல்ஜியம் (21, 22) அணிகளை எதிர் கொள்கிறது. இதற்கான 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் நீடிக்கிறார். குத்துச்சண்டைதாய்லாந்து ஓபன் தொடருக்கான (மே 24 ஜூன் 1),19 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. நிகில், அமித் குமார், தீபக், யாசிகா, தமன்னா உள்ளிட்டோர் தேர்வாகினர்.