25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


விளையாட்டு (SPORTS)

May 11, 2025

செஸ்  11th AND 12th may.

 ருமேனியாவில் கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசனில், இரண்டாவது தொடர், மூன்றாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் மோதினர். 33வது நகர்த்தலில் முந்தினார் பிரக்ஞானந்தா. 61வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் பெண்க ளுக்கான 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடர், 6 கட்டமாக நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் தமிழகத்தின் வைஷாலி பங்கேற்கிறார். இதன் 4வது சுற்றில் வைஷாலி, உக்ரைனின் மரியா முசிசுக் மோதினர். வைஷாலி, 35வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.நான்கு சுற்றுகளின் முடிவில் வைஷாலி, 3.0 புள் ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். உக்ரைனின் அனா முசீசுக் (3.5 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் வைஷாலி  இந்தியா சார்பில் பங்கேற்கிறார். இதன் 5வது சுற்றில் வைஷாலி, சீனாவின் ஜினர் ஜு மோதினர். இதில் விளையாடிய வைஷாலி, 59வது நகர்த்தலில் தோல்வி யடைந்தார்.ஐந்து சுற்றுகளின் முடிவில் வைஷாலி, 3.0 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார்.ஐக்கிய அரபு எமி ரேட்சில் (யு.ஏ.இ.,) ஆசிய தனிநபர் 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது.  கார்த்திகேயன் 4 வது இடம் பிடித்தார். 

May 11, 2025

விளையாட்டு போட்டிகள் . 12th MAY

 பாட்மின்டன் ஜப்பான் வீராங்கனை டோமோகா மியாசாகிதைபே ஓபன் ஒற்றையர் பைனலில் 21-12, 20-22, 21-14 என தாய்லாந்தின் பிட்சாமனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பளுதுாக்குதல்  ஆசிய சாம்பியன்ஷிப் 64 கிலோ எடைப் பிரிவில் சீனாவில்  இந்திய வீராங்கனை நிருபமா தேவி (206 கிலோ) 4வது இடம் பிடித்து வெண்கல வாய்ப்பை இழந்தார்

May 11, 2025

கிரிக்கெட்

கொழும்புவில்  நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி,  தென் ஆப்ரிக்கா அணிகள் பங்கேற்றன. நேற்று, கொழும்புவில் நடந்த பைனலில் இந் தியா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 'பேட டிங்' தேர்வு செய்தார். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 342 ரன் எடுத்தது. முத்தரப்பு ஒருநாள் தொடரின் பைனலில் இந்திய பெண்கள் அணி  இலங்கையை வீழ்த்தி, கோப்பை வென்றது.இலங்கை அணி 48.2 ஓவரில் 245 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வி யடைந்தது. 

May 09, 2025

MAY 9th விளையாட்டு போட்டிகள்

 செஸ் ஆசிய 'கான்டினென்டல்' செஸ் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), 2வது சுற்றில் இந்தியாவின் இனியன், சீனாவின் ஷிசூவாங் மோதினர். இனியன் 53வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் முரளி கார்த்திகேயன், சீனாவின் லுலூ யபிங்கை வென்றார். இந்தியாவின் அபிஜீத் குப்தா, சகவீரர் செந்தில் மாறனை தோற்கடித்தார். இந்தியாவின் பிரனேஷ், சீனாவின் ஜியாங்ருய் காங்கை வீழ்த்தினார். இந்தியாவின் நிஹால் சரின், ரஷ்யாவின் நிகிதா மாட்டினியனை வென்றார்.மற்ற 2வது சுற்று போட்டிகளை இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி, சேதுராமன், அஸ்வத், பிரணவ் ஆனந்த் உள்ளிட்டோர் 'டிரா' செய்தனர்.பெண்கள் பிரிவில் நடந்த 2வது சுற்று போட்டியில் இந்தியாவின் வந்திகா அகர்வால், பிரியங்கா, ரக்ஷிதா, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தனர்.   வில்வித்தை உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 சீனாவின் ஷாங்காய் நகரில் ரிகர்வ் ஆண் கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பார்த் சுஷாந்த், காலிறுதியில் தென் கொரியாவின் கிம் ஜேதியோக்கை சந்தித்தார். இதில், சுஷாந்த், 6-2 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அடானு 2-6 என தென் கொரிய வீரர் கிம் ஊஜினி டம் தோல்வியடைந்தார். அரையிறுதியில் சுஷாந்த்-ஊஜின் மோத உள்ளனர் பெண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் தீபிகா குமாரி, சீனாவின் லி ஜியாமனை எதிர் கொண்டார். இதில் தீபிகா குமாரி 6-2 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதில் தென் கொரியாவின் லிம் ஷியோனை சந்திக்க உள்ளார். டென்னிஸ்ஐ.டி.எப்., ஜார்ஜியாவில் நடக்கும் தொடரின், ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா 5-7, 3-6 என்ற கணக்கில் ஜார்ஜியாவின் சோபியாவிடம் தோல்வியடைந்தார். பாட்மின்டன் 'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் சீனதைபேயில்,  ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியா வின் ஆயுஷ் ஷெட்டி, கனடாவின் பிரையன் யாங் மோதினர். இதில், ஆயுஷ் 16-21, 21-19, 21-14 T வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சீனதைபேயின் யி-டிங் ஹுவாங் மோதி னர். உன்னதி 21-8, 19-21, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். 

May 08, 2025

சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் 6 கட்டமாக நடத்தப்பட்ட பெண்களுக்கான கிராண்ட் ப்ரி செஸ்தொடரில், வைஷாலி 'டாப்-2' இடத்தில் உள்ளார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான கிராண்ட் ப்ரி செஸ்,6வது தொடர் ஆஸ்திரியாவில் நடக்கிறது. இந்தியா சார்பில் வைஷாலி(85 புள்ளி) பங்கேற்கிறார். முதல் சுற்றில் வைஷாலி, பல்கேரியாவின் சலிமோவாவை வென்றார்.இதில் 'டாப்-2' இடம் பெறுபவர்கள், கேண்டி டேட்ஸ் தொடரில் (உலக கோப்பை தகுதி போட்டி) பங்கேற்க தகுதி பெறலாம்.இரண்டாவது சுற்றில் வைஷாலி, ஜார்ஜியாவின் லேலாவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் வைஷாலி. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இவர், போட்டியின் 39 வதுநகர்த்தலில் வெற்றி பெற்றார். இரண்டு சுற்று முடிவில் தலா இரு புள்ளி பெற்ற சீனாவின் டான்ஜோங்கி, வைஷாலி 'டாப்-2' இடத்தில் உள்ளனர். ஆண்கள் கிராண்ட் செஸ் தொடரின் 10வதுசீசன் 6 தொடர் முடிவில், புள்ளிப்பட்டியலில் 'டாப்-4' இடம் பெறும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறலாம்.இதன் இரண்டாவது தொடர் ருமேனியாவில் நடக்கிறது.இந்தியாவின் பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் குகேஷ், அமெரிக்காவின் சோ வெஸ்லே, பேபியானோ காருணா உட்பட 10பேர் பங்கேற்கின்றனர்.முதல் சுற்றில் இந்திய வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா மோதினர். இப்போட்டி முடிவில் 35 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. 

May 08, 2025

MAY 8TH விளையாட்டு போட்டிகள்

பாட்மின்டன் 'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் சீனதைபேயில்நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி மோதினர். இதில் ஆயுஷ் ஷெட்டி 21,16,15,21,21,17 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் 13,21,9,21 என இந்தோனேஷியாவின் முகமது ஜாகி உபைதில்லாவிடம் தோல்வியடைந்தார்.பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சீனதைபேயின் லின் சிஹ்யுன் மோதினர்.உன்னதி 21-12, 21-7 என வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். வில்வித்தை உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 சீனாவின் ஷாங்காய் நகரில்பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு போட்டி காலிறுதியில் இந்தியாவின் மதுரா,ஜோதி மோதினர். இதில் மதுரா 142,141 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.ஆண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் ரிஷாப், டென்மார்க்கின் மதியாஸ் மோதினர். இப்போட்டி 147–147 என சமன் ஆனது. பின்நடந்த 'ஷூட் ஆப்பில்' ரிஷாப் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். பெண்களுக்கான பிரிவில் தீபிகாகுமாரி, அன்கிதா, அன்ஷிகா இடம்பெற்ற இந்திய அணி, நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்றது. இதில் மெக்சிகோவிடம், 'ஷூட் ஆப்' முறையில் 4-5 எனதோற்று வெளியேறியது. கிரிக்கெட் ஐந்து முறை கோப்பை வென்ற சென்னை அணி, இம்முறை சறுக்கியது. அடுத்த ஆண்டுக்கான சிறந்த அணியை தயார் செய்யும் பணியில் இறங்கியுள்ளது. எஞ்சிய போட்டிகளில் இளம்வீரர்களுக்குவாய்ப்பு அளிக்கப்படலாம். அஷ்வின், விஜய் சங்கர்,ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா போன்ற அனுபவ வீரர்கள் ஏமாற்றினர்.இளம் நட்சத்திரங்களான ஆயுஷ் மாத்ரே,டிவால்ட் பிரவிஸ், உர்வில் படேல் நம்பிக்கை தந்தனர். அதிரடியாக பேட் செய்து, சென்னை அணிக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருப்பதை உறுதி செய்தனர். 

May 07, 2025

7TH MAY  IPL MATCH .GUJARAT - MUMBAI.

 MAY  7-ம் தேதி  கொல்கத்தாவில், சென்னை, கொல்கத்தா, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 179/6, ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 183/8 ரன்கள் எடுத்தது, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக Noor Ahmad தேர்ந்தெடுக்கப்பட்டார். 

May 07, 2025

May 7 th விளையாட்டு போட்டிகள்

 .கிரிக்கெட் பெண்கள்  பெண்களுக்கான முத்தரப்பு ஒரு நாள் தொடர் இலங்கையில்,. இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதுகின்றன.நேற்று இந்திய அணி தனது கடைசி லீக் போட்டி யில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது. தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 314/7 ரன் எடுத்து தோல்வியடைந்தது.முடிவில் 4 போட்டியில் 3 வெற்றியுடன் 6 புள்ளி பெற்ற இந்திய அணி பைனலுக்கு (மே 11) முன் னேறியது.வில்வித்தை சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2  சீனாவின் ஷாங்காய் நகரில் ,காம்பவுண்டு ஆண்கள் பிரிவில் அபிஷேக் வர்மா, ரிஷாப் யாதவ், ஓஜாஸ் பிரவின் இடம் பெற்ற இந்திய அணி நேரடியாக காலிறு தியில் பங்கேற்றது. இதில் பிரிட்டனை 239-232 என வீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் டென்மார்க்கை  எதிர்கொண்டது. முதல் இரு சுற்று முடி வில் 115-118 என பின் தங்கிய இந்தியா, கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட 232-231 என ' வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. பாட்மின்டன் 'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் சீனதைபேயில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சங்கர் முத்து சாமி மோதினர். ஸ்ரீகாந்த் 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-17, 21-18 என சீன தைபேயின் சியா ஹாவோ லீயை வீழ்த் தினார் .இந்தியாவின் தருண் 21-17, 19-21, 21-12 என ஜப்பானின் ஷோகோ ஒகாவாவை தோற்கடித்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, அனுபமா உபத்யயா மோதினர்.உன்னதி 21-13, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார். 

May 06, 2025

6 TH MAY  IPL MATCH .GUJARAT - MUMBAI

MAY 6-ம் தேதி  அகமதாபாத்தில், குஜராத், மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 155/8, ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 147/7 ரன்கள்  எடுத்தது,  கடைசி ஓவரில் மழை காரணமாக  (DLS METHOD) செய்யப்பட்டு குஜராத் அணி 3 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SHUBMAN GILL தேர்ந்தெடுக்கப்பட்டார். 

May 06, 2025

வில்வித்தை

 உலக கோப்பை வில்வித்தை 2 ஸ்டேஜ், சீனாவின் ஷாங்காய் நகரில் காம்பவுண்டு பிரிவில் தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. ஆண்கள் தனி நபர் பிரிவில் இந்திய வீரர்கள் அபிஷேக் வர்மா, 714 புள்ளியுடன் மூன்றாவது இடம் பிடித்தார்.ரிஷாப் யாதவ் (713), 4வது, ஓஜாஸ் பிரவின் (707), 10வது இடம் பெற்றனர். ஒட்டுமொத்தமாக இந்திய அணி 2134 புள்ளியுடன் முதலிடம் பிடித்தது.பெண்கள் தனிநபர்  பிரிவில் இந்தியாவின் மதுரா, 708 புள்ளியுடன் மூன்றாவது இடம்பிடித்தார்.மற்ற இந்திய வீராங்கனைகள் ஜோதி (705) 6, சிகிதா (701), 11, ஆதித்தி (699) 13வது இடம் பெற்றனர்.இந்திய பெண்கள் அணி 2114 புள்ளியுடன்  முதலிடம் பெற்றது. நேரடியாக காலிறுதியில் பங்கேற்க உள்ளது.ஒற்றையர் தகுதிச் சுற்றில் அபிஷேக் வர்மா, மதுரா ஜோடி கலப்பு அணிகள் பிரிவில் 1422 புள்ளியுடன் முதலிடம் பிடித்தது. இரண்டாவது சுற்றில் நேரடியாக களமிறங்குகிறது .

1 2 ... 63 64 65 66 67 68 69 ... 94 95

AD's



More News