25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


ஐ. சி. சி.விருதுக்கு இந்தியாவின் ஷைபாலி வர்மாநவம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐ. சி. சி.விருதுக்கு இந்தியாவின் ஷைபாலி வர்மாநவம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனை.

 ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி.) சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படும்.சிறந்த வீராங்கனைக்கான கடந்த நவம்பர் மாதத்தின் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியலில் இந்தியாவின் ஷைபாலி வர்மா, யு.ஏ.இ., அணியின் ஈஷா ஓஜா, தாய்லாந்தின் திபாட்சா இடம் பெற்றனர்.

சமீபத்திய உலக கோப்பை தொடரில், இந்தியாவின் பிரதிகா ராவல் காயத்தால் பாதியில் விலகினார். இவருக்கு மாற்றாக கள மிறங்கிய ஷைபாலி வர்மா, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பைனலில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை வெல்ல உதவினார். இவர், ஆட்ட நாயகி விருதையும் (87 ரன், 2 விக்கெட்) தட்டிச் சென்றார். சிறந்தவீரருக்கான விருதை தென் ஆப்ரிக்காவின் சைமன் ஹார்மர் வென்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News