25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Jan 17, 2026

ஒருநாள் தொடரில் ஆண்கள் கிரிக்கெட்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க  இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வி அடைய, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 'பைனல்' போன்ற மூன்றாவது போட்டி நாளை (ஜன.18) இந்தாரின் (ம.பி.,) ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய பவுலிங் கூட்டணியில்மாற்றம் செய்யப்படலாம் வெற்றி பெற்ற அணி கோப்பை கைப்பற்றலாம்.

Jan 17, 2026

பெங்களூர் அணி பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி. 

 பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் ('14-20') தொடருக்கான லீக் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நேற்று ,குஜராத், பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற குஜராத் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது..பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது. குஜராத் அணி 18.5 கஓவரில், 150 ரன் எடுத்து தோல்வியடைந்தது. 

Jan 17, 2026

இந்தியாவின் ஆர்யன்  வர்ஷ்னே 92வது கிராண்ட் மாஸ்டர் ஆனார் .

சர்வதேசசெஸ்தொடர் ஆர்மேனியாவில் ,இந்தியாசார்பில்சர்வதேசமாஸ்டர்அந்தஸ்து பெற்றஆர்யன்வர்ஷ்னே 21 வயது, உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். ஆர்யன் , ஆர்மேனியானின் டைக்ரானை மோதிய 8வது சுற்று 'டிரா' ஆனது. இதையடுத்து, 8 சுற்றில் 6.5 புள்ளி பெற்ற ஆர்யன், கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான,  மூன்றாவது அந்தஸ்தை எட்டினார். பரிமார்ஜன் நேகி, அபிஜீத் குப்தா, ஸ்ரீராம் ஜா, வைபவ் சூரி, சஹாஜ் குரோவர், ஆர்யன் சோப்ரா, பிரிது குப்தாவை தொடர்ந்து டில்லியின் 8வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் ஆர்யன் வர்ஷ்னே.கடந்த 2024ல் முதலில் சர்வ தேச மாஸ்டர் ஆனார். அடுத்து கிரீஸ், வங்கதேச தொடரில் டில்லியை சேர்ந்த ஆர்யன், இரண்டாவுது அந்தஸ்தை எட்டினார். ஆர்மேனிய தொடரில் சிறப்பாக செயல்பட்ட, இந்தியாவின் ஆர்யன்  வர்ஷ்னே 92வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்..

Jan 17, 2026

வங்கதேசம் செல்லும் ஐ.சி.சி., குழு உலக கோப்பை பிரச்னைக்கு தீர்வு காண...

 இந்தியாவுக்கு எதிரான மனநிலை வங்கதேசத்தில் நிலவுவதால், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், கோல்கட்டா பிரிமியர் லீக் அணியில் இருந்து விடுவிக்கப் பட்டார்.இதற்கு பதிலடியாக 'டி-20' உலக கோப்பை தொடரில் (பிப்.7-மார்ச் 8, 2026) பங்கேற்க, இந்தியா வர முடியாது கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) வங்கதேசம் மறுத்து,போட்டிகளை இலங்கைக்கு வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் மாற்ற (ஐ.சி.சி.,) வேண்டுகோள் விடுத்துள்ளது. பி.சி. பி., முடிவை, வங்கதேச வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். வீரர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் மிதுனுக்கு, முகமது கொலை மிரட்டல்கள் வருகின்றன. இவர், கூறுகையில், "உலக கோப்பை தொடர் என்பதால், வங்கதேச வீரர்கள் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறோம். வீரர்கள் நலனுக்கு ஏற்ப, பி.சி.பி., முடிவெடுக்கும் என நம்புகிறேன்.  கிரிக்கெட், வீரர்கள் நலனுக்காக மட்டுமே பேசினேன்," தேசத்திற்கு எதிராக எதுவும் பேசவில்லை.," என்றார் .

Jan 17, 2026

சங்கிலி குண்டு எறிதலில் தன்யா  சவுத்ரி அனைத்து இந்திய பல்கலை, விளையாட்டுக்கான தங்கம் வென்றார்.

அனைத்து இந்திய பல்கலை, 85வது விளையாட்டு சீசன் மங்களூருவில்,  பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதல் பைனலில், சண்டிகர் பல்கலையின் சர்வதேச வீராங்கனை தன்யா சவுத்ரி 22, அதி கபட்சமாக 65.60 மீ., எறிந்து தங்கம் வென்றார். இது, 2017ல் தேசிய சாதனை படைத்த சரிதா சிங் (65.25 மீ.,) எறிந்த துாரத்தை விட 35 செ.மீ., அதிகம். ஆனால் அனைத்து இந்திய பல்கலை., விளையாட்டு, சர்வதேச தடகள கூட்டமைப்பின் அங்கீகாரம் இல்லாததால் தேசிய சாதனையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. தன்யா, தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார்.  கடந்த ஆண்டு நடந்த 'கேலோ இந்தியா' பல்கலை, விளையாட்டில் ஆசிய விளையாட்டில்' (2023, 60.50 மீ,  7 வது இடம்) பங்கேற்ற தன்யா, தங்கம் வென்றிருந்தார்.இப்போட்டியில் வெள்ளி, வெண்கலத்தை முறையே நந்தினி (61.84 5. மீ,),  கிரிமா (56.46 .மீ,) கைப்பற்றினர். 

Jan 17, 2026

பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த பாலமேடு ஜல்லிக்கட்டு.

பாலமேட்டில் கிராமப் பொது மகாலிங்க சுவாமிகள் மடத்துக் கமிட்டி சார்பில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார். மலைக்க வைக்கும் திமில்களை சிலுப்பிக்கொண்டு, மிரட்சி பார்வையில் முரட்டுக் கொம்புகளுடன் 'தொட்டுப்பார்' என சீறிப் பாய்ந்த காளைகளும், விடலைக் கரங்களுடன் தாவிப் பாய்ந்து வந்து பார்' என அடக்கிய வீரர்களும் களம்கண்ட மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு, பார்வையாளர் களை பரவசமாக்கியது.முதலாவதாக ஏழு 'மரியாதை காளைகள்' அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை வீரர்கள் பிடிக்கவில்லை. அந்த மாடுகளுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. முதல் சுற்று  காலை மணிக்கு 9:35 துவங்கியது. 50 வீரர்கள் மஞ்சள் கலர் சீருடை அணிந்து களம் இறங்கினர்.வாடிவாசலில் இருந்து துள்ளிக் குதித்து வெளியேறிய காளைகளை வீரர்கள் சுற்றி வளைத்து அடக்க முயற்சித்தனர். வலுவான திமில் கொண்ட காளைகள் வீரர்களை  முட்டி பந்தாடியதும், தீரம் கொண்ட வீரர்கள் விடாப் பிடியாக, காளைகளை அடக்கி வெற்றி பெற்றதும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. 

Jan 14, 2026

ஓபன் 'சூப்பர் 750' பாட் மின்டன் தொடரில் இந்தியாவின் லக்சயா சென் வெற்றி பெற்றார்.

டில்லியில், நேற்று துவங்கியஓபன் 'சூப்பர் 750' பாட் மின்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் லக்சயா சென், ஆயுஷ்ஷெட்டி மோதினர். லக்சயா முதல் செட்டில் 21-12 என, அடுத்த செட்டை 21-15 என வென்றார். 36 போட்டியின் முடிவில் லக்சயா சென்,21-13, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.இந்தியாவின் காயத்ரி, திரீஷா ஜோடி, பெண்கள்இரட்டையர் முதல் சுற்றில் ,தாய்லாந்தின் ஆர்னிச்சா, சுகிட்டா ஜோடியை சந்தித்தது. இந்திய ஜோடி முதல் செட்டில் 21-15 என ,இரண்டாவது 21-11 செட்டை என வென்றது. இந்திய ஜோடி போட்டியின் முடிவில் 21-15, 21-11 என்ற கணக்கில் வென்றது. இந்தியாவின் ஹரிஹரன் (தமிழகம்)அர்ஜுன் ஜோடி, ஆண்கள் இரட்டை யர் முதல் சுற்றில், 21-15, 21-18 என மலேசியாவின் ஈவ் சின் ஆங், இ தியோ ஏ ஜோடியை வென்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. 

Jan 14, 2026

ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் அன்கிதா ரெய்னா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் தாய்லாந்தில் ,இந்தியாவின் அன்கிதா ரெய்னா, தைவானின் யு யுன்-லி ஜோடி இரட்டையர் பிரிவுமுதல் சுற்றில், ஜெர்மனியின் நாஸ்டஸ்ஜா, இத்தாலியின் லிசா ஜோடியை எதிர்கொண்டது. அன்கிதா ஜோடி முதல் செட்டை 4-6 என இழந்து ,இரண்டாவது செட்டை 6-2 என வென்றது.வெற்றியாளரை நிர்ணயிக்க நடந்த 'சூப்பர் டை பிரேக்கரில்' போட்டியின் முடிவில் அன்கிதா ஜோடி 4-6, 6-2, 10-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.இந்தியாவின் ருடுஜா போசாலே, சீனாவின்உஷுவாங்ஜெங்ஜோடி, மற்றொருமுதல்சுற்றில்ஹாங்காங்கின்கோடி வாங், தைவானின் யா-ஹிசின் லீ ஜோடியை சந்தித்தது. போட்டியின் முடிவில் ருடுஜா ஜோடி 6-4, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது. 

Jan 14, 2026

குஜராத் அணிக்கு எதிரான பிரிமியர் போட்டியில் மும்பை அணி வெற்றி .

மும்பை-குஜராத் அணிகள் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர். பீல்டிங் தேர்வு செய்தார்.குஜராத் அணி 20 ஓவரில்  5 விக்கெட்டுக்கு 192 ரன் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய, மும்பை அணி 19.2 ஓவரில் 193/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் (71), நிகோலா (38) அவுட்டாகாமல் இருந்தனர். குஜராத் அணிக்கு எதிரான பிரிமியர் போட்டியில் மும்பை அணி, 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

Jan 14, 2026

விளையாட்டு போட்டிகள் 14 JAN 2026.

குஜராத்தில் (வித்யாநகர்) விஜய் மெர்ச்சன்ட் டிராபி காலிறுதி முதல் இன்னிங்சில் மும்பை 633/8, உ.பி., அணி 135/10 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் மும்பை அணி183/4 ரன் எடுத்து, 681 ரன் முன்னிலை பெற்றிருந்தது.வரும் ஜன. 18ல் மெல்போர்னில் புத்தாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலிய ஓபன் துவங்க உள்ளது. இதற்கான ஆண்கள், பெண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்று போட்டிகள் நேற்று துவங்கின.நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 35,செஸ் வரலாற்றில் ஐந்து முறை உலக சாம்பியன்.பல் வேறு பிரிவுகளில் நடந்த தொடரில் மொத்தம் 20 முறை சாம்பியன் பட்டம்வென்றுள்ளார். வரும் மே 25-ஜூன் 5 வரை நடக்கவுள்ள நார்வே செஸ் தொடரில் மீண்டும் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.நெதர்லாந்து, பெல்ஜியத்தில், வரும் ஆக. 15-30ல் பெண்களுக்கானஉலக கோப்பை ஹாக்கி தொடர்,  நடக்க உள்ளது. ஐதராபாத்தில் வரும் மார்ச் 8-14ல் இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடக்கும். இந்தியா, இத்தாலி உட்பட எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன.முடிவில்,'டாப்-3' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடரில் பங்கேற்கலாம். 

1 2 ... 62 63 64 65 66 67 68 ... 171 172

AD's



More News