தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் டில்லியில், சீனியர் பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் திவ்யா (587 புள்ளி) முதலிடம் பிடித்தார். அடுத்த மூன்று இடங்களை அஞ்சலி சவுத்ரி (582), மனு பாகர் (581), ரிதம் சங்வான் (579) கைப்பற்றினர். மனு பாகர் அடுத்து நடந்த பைனலில் 36 புள்ளிகளுடன் தங்கத்தை வென்றார். வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே திவ்யா (32 புள்ளி), அஞ்சலி (28) வென்றனர். ரிதம் சங்வான் 4வது இடம் பிடித்தார்.மகாராஷ்டிரா சீனியர் பெண்கள் அணிகள் பிரிவில் (25 மீ., 'பிஸ்டல்') தங்கம் வென்றது.சிம்ரன்பிரீத் கவுர் பிரார் ஜூனியர்பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு பைனலில் தங்கம் வென்றார். பிரனவி, பாலக் முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். இந்திய ராணுவ அணி ஜூனியர் பெண்கள் அணிகள் பிரிவில் (25 மீ., 'பிஸ்டல்') தங்கம் வென்றது.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி.) சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படும்.சிறந்த வீராங்கனைக்கான கடந்த நவம்பர் மாதத்தின் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியலில் இந்தியாவின் ஷைபாலி வர்மா, யு.ஏ.இ., அணியின் ஈஷா ஓஜா, தாய்லாந்தின் திபாட்சா இடம் பெற்றனர்.சமீபத்திய உலக கோப்பை தொடரில், இந்தியாவின் பிரதிகா ராவல் காயத்தால் பாதியில் விலகினார். இவருக்கு மாற்றாக கள மிறங்கிய ஷைபாலி வர்மா, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பைனலில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை வெல்ல உதவினார். இவர், ஆட்ட நாயகி விருதையும் (87 ரன், 2 விக்கெட்) தட்டிச் சென்றார். சிறந்தவீரருக்கான விருதை தென் ஆப்ரிக்காவின் சைமன் ஹார்மர் வென்றார்.
உலக கோப்பை ஸ்குவாஷ் 5வது சீசன் சென்னையில், லீக் சுற்றில் சுவிட்சர்லாந்து, பிரேசிலை வீழ்த்திய இந்தியா, காலிறுதியில் தென் ஆப்ரிக்கா, அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய எகிப்தை வென்றது.நேற்று நடந்த பைனலில் இந்திய அணி, ஹாங்காங்கை சந்தித்தது. முதல் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, ஹாங்காங்கின் கா யி லீ மோதினர். இதில் ஜோஷ்னா 3-1 (7-3,2-7, 7-5, 7-1) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.இரண்டாவது போட்டியில் இந்தியாவின் அபே சிங் 3-0 (7-1, 7-4, 7-4) என, ஹாங்காங்கின் டிஸ்குவான்லாவை தோற்கடித்தார்.மூன்றாவது போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங் 3-0 (7-2,7-2, 7-5) என ஹாங்காங்கின் ஹோ டொமாட்டோ டிஸ் லோக்கை வென்றார்.முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது
'டி-20' தொடரில் பங்கேற்க ,இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ,ஐந்து போட்டிகள் கொண்ட ,மூன்றாவது போட்டி இமயமலை தொடரின் தரம்சாலாவில் உள்ள, இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய கேப்டன் சூர்யகுமார்'டாஸ்' வென்று சாமர்த்தியமாக 'பவுலிங்' தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 117 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி 15.5 ஓவரில் 120/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. இந்திய வெற்றியை மூவர்ணக் கொடியுடன் ரசிகர்கள்கொண்டாடினர்.
அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022 'பிபா' உலக கோப்பை வென்றது. 'கோட் இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின்படி, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.முதல் நாளில், கோல்கட்டாவில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத்நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. இரண்டாம் நாளான நேற்று, ஐதராபாத்தில்மும்பை வந்தார் மெஸ்ஸி.விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தாஜ் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பிரபோர்ன் மைதானத்தில், மாலை 4:00 மணியளவில் கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா (சி. சி.ஐ.,) 'கோட் கப்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். வான்கடே மைதானத்திற்கு வந்த மெஸ்ஸிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது..மாலை 5:00 மணிக்கு, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்., மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் , இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின்,உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின் டன் தொடர் ஒடிசாமாநிலம் கட்டாக்கில், பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்தியாவின் உன்னதி ஹூடா 18, இஷாராணி 21, மோதினர்.. 31 நிமிடம் நீடித்த போட்டியில் உன்னதி 21–17, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 25, இந்தோனேஷியாவின் முகமது யூசுப் 19, ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் மோதினர். ஒரு மணி நேரம், 5 நிமிடம் நீடித்த போட்டியில் முதல் செட் 21-14 , , 2வது செட்டை 13-21 , 3வது செட்டில் எழுச்சி கண்ட கிரண், 21-16 ,எனக் கைப்பற்றி சாம்பியன் ஆனார்.
அமெரிக்காவை சேர்ந்த டபிள்யு. டபிள்யு.இ., மல்யுத்த வீரர் ஜான் சீனா 48. நடிகரான இவர், 1998ல் கலிபோர்னியாவில் மல்யுத்த பயிற்சி மேற்கொண்டார். பின், 1999ல் தொழில்முறையிலான மல்யுத்த போட்டியில் அறிமுகமானார். கடந்த 2002ல் முதன்முறையாக டபிள்யு.டபிள்யு.இ., போட்டியில் களமிறங்கிய ஜான் சீனா, 14 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். டபிள்யு. டபிள்யு.இ., ஜாம்பவான்களான அண்டர்டேக்கர், ராக், டிரிபிள் எச் உள்ளிட்டோருடன் மோதி யுள்ளார்.வாஷிங்டனில் நடந்த தனது கடைசி போட்டியில் பங்கேற்ற ஜான் சீனா, ஆஸ்திரியாவின் குந்தரை சந்தித்தார். 'டேப் அவுட்' முறையில் தோல்வியை தழுவினார்.இதனையடுத்து தனது 25 ஆண்டுகளுக்கு மேலான மல்யுத்த பயணத்தை தோல்வியுடன் நிறைவு செய்தார். போட்டி முடிந்த பின், தனக்கு ஆதரவு வழங்கிய ரசிகர்களுக்கும், சக வீரர்களுக்கும் நன்றி தெரிவித்தார். ரசிகர்கள் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் சீனாவின் ஹாங்சு நகரில் வரும் 17-21ல் நடக்க உள்ளது. உலகின் 'நம்பர்-3' ஆக உள்ள இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, இதில் களமிறங்குகிறது.உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், ஹாங்காங், சீன மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடம் பிடித்தது. தவிர, மலேசியா ஓபன், இந்தியன் ஓபன் உட்பட 5 தொடர்களில்அரையிறுதிக்குள் நுழைந்தது. 'குரூப் ஆப் டெத்' என்றழைக்கப்படும் 'பி' பிரிவில் , தற்போது வேர்ல்டு, டூர் பைனல்ஸ் தொடரில், இந்திய ஜோடி இடம் பெற்றுள்ளது. ஒலிம்பிக் பதக்கம் வென்ற, மலேசியாவின் ஆரோன்சியா, சோ இக் (2வது இடம்), சீனாவின் லியாங் வெய், வாங் சங் (6), இந்தோனேஷியாவின் பஜர் அல்பியான், சோகிபுல் பிக்ரி (8) என வலுவான ஜோடி, இந்திய ஜோடிக்கு சிக்கல் தரலாம்.
.ஆசிய யூத் பாரா விளையாட்டு துபாயில், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் 99 பேர் (61 வீரர், 38 வீராங்கனை) பங்கேற்கின்றனர்., 13.59 மீ., எறிந்தஇந்தியாவின் பிரவீன் சர்மாஆண்களுக்கான குண்டு எறிதல் ('எப் 11-13') பைனலில் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் தேவிபிரசாத் (8.08 மீ.,) 5வது இடம் பிடித்தார்.'எப் 32-34' பிரிவு குண்டு எறிதல் பைனலில் இந்திய வீரர் வினேஷ் (7.46 5.,) வெண்கலம் வென்றார்.ஆண்களுக்கான ஈட்டி எறிதல் ('எப் 35-38') பைனலில் இந்தியாவின் விக் ஷீத் குமார் (30.87 மீ.,) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.('டி20') பைனலில் பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் இலக்கை, ஒரு நிமிடம், 07.07 வினாடியில் கடந்த இந்தியாவின் புவி அகர்வால் தங்கம் வென்றார். ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் ('442-47, 61-64') பைனலில் இந்தியாவின் நரேஷ் (1 நிமிடம், 00.27 வினாடி) வெள்ளி கைப்பற்றினார். பெண்களுக்கான வட்டு எறிதல் ('எப் 51-57') பைனலில் இந்தியாவின் கோகிலா (15.4 மீ.,) வெண்கலத்தை தட்டிச் சென்றார். ஆண்களுக்கான வட்டு எறிதல் ('எப்11-13') பைனலில் இந்தியாவின் பிரவீன் (34.08 .,),இர்பான் திவான் (28.12 மீ.,) முறையே வெள்ளி, வெண்கலம்கைப்பற்றினர்.இதுவரை 19 தங்கம், 15 வெள்ளி, 21 வெண் கலம் என, 55 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 7வது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில் உஸ்பெகிஸ்தான் (97 தங்கம், 55 வெள்ளி, 35 வெண்கலம்) உள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை (50 ஓவர் ) கிரிக்கெட் 12-வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), நேற்று, துபாயில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, யு.ஏ.இ., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற யு.ஏ.இ., அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. இந்திய அணி 50 ஓவரில், 433/6 ரன் குவித்தது. யு.ஏ.இ., அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 199 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. வைபவ் சூர்யவன்ஷி, யூத் ஒருநாள் போட்டி யில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரரானார்.