25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


விளையாட்டு (SPORTS)

May 14, 2025

இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தின் கவுரவ 'லெப்டினன்ட் கர்னலாக' நியமிக்கப்பட்டார்.

 இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தின் கவுரவ 'லெப்டினன்ட் கர்னலாக' நியமிக்கப்பட்டார். 2021ல் டோக் கியோவில், ஒலிம்பிக் தடக ளத்தில் ,இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 26. தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். அடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் (2023, புடாபெஸ்ட்) தங்கம் கைப் பற்றினார்.பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) வெள்ளி வென்றார். இதையடுத்து சுதந்திர இந் தியாவில் ஒலிம்பிக் தட களத்தில் தொடர்ச்சியாக 2 பதக்கம் வென்ற முதல் இந்தியரானார். தற்போது ராணுவத்தின் கவுரவ 'லெப்டினன்ட் கர்னல் ' ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு, கடந்த ஏப்ரல் 16 முதல் ,மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வார இதழில் வெளியிடப்பட்டது

May 14, 2025

'  “கேலோ இந் தியா யூத்' விளையாட்டு 7வது சீசன் 200 மீ., ஓட்ட ம்.

“கேலோ இந் தியா யூத்' விளையாட்டு 7வது சீசன் பீஹாரில்,  நேற்று, நடந்த 200 மீ., ஓட்டத்தில் மஹாராஷ் டிராவின் பூமிகா (24.51 வினாடி) தங்கப்பதக்கம் வென்றார். ஹரியானாவின் பிரியா (24.62), ஆர்த்தி (24.94) அடுத்த இரு இடம் பிடித்து வெள்ளி, வெண்கலம் வென்றனர்.ஒட்டுமொத்தமாக 56 தங்கம், 45 வெள்ளி, 48 வெண்கலம் என 149 பதக்கம் வென்ற மஹா ராஷ்டிரா, சாம்பியன் பட் டத்தை தட்டிச் சென்றது.ஹரியானா 106 (35 தங்கம், 26 வெள்ளி, 45 வெண்கலம்), ராஜஸ்தான் 55 பதக்கத்துடன் (22, 11, 22) அடுத்த இரு இடம் பிடித்தன.15 தங்கம், 20 வெள்ளி, 28 வெண்கலம் என 63 பதக்கம் வென்ற தமிழகம், பட்டியலில்  ஐந்தாவது இடம் பிடித்தது.  

May 14, 2025

ஓபன் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர்

தாய்லாந்து ஓபன் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் பாங்காக்கில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், அயர்லாந்தின் நுயென் மோதினர். இதில் லக்சயா சென் F 18-21, 21-9, 17-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத் 13-21, 21-17, 16-21 என இந்தோனேஷியாவின்ஆல்வி பர்ஹானிடம் தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், துருக்கியின் நெஸ்லிஹான் அரின் மோதினர். மாளவிகா 21-12, 13-21, 21-17 கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 21-16, 20-22, 22-20 என ஜப்பா னின் சுகியமாவை தோற் கடித்தார். இந்தியாவின் உன்னதி ஹூடா 21-14, 18-21, 23-21 என தாய்லாந்தின் தமோன்வானை வென்றார்.இந்தியாவின் ரக் ஷிதா ஸ்ரீ 18-21, 7-21 என சிங்கப்பூரின் யோ ஜியா மின்னிடம் வீழ்ந்தார்.பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திரிசா, காயத்ரி கோபிசந்த்  ஜோடி 21-15, 21-13 என மலேசியாவின் கார் மென் டிங், ஆங் ஜின் யீ ஜோடியை வென்றது. 

May 13, 2025

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன்

 19 வயதுக்குட்பட் டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன்  அருணாச்சல பிரதேசத்தில், இந்தியா, 'நடப்பு சாம்பியன்' வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.   பி பிரிவில்இடம் பெற்றுள்ள இந்தியா, நேபாளஅணிகள் நேற்று மோதின. போட்டியின் 28 வது நிமிடத்தில் நேபாள வீரர் தலையில் பட்டு வந்த பந்தை லாவகமாக கொண்டு சென்று, கோலாக மாற்றினார் இந்தியாவின் ரோஹன் சிங். இம்முறை சக வீரர் டேனி மெய்டெய் அடித்த பந்தை பெற்ற ஓமங் டோடம், கோல் அடித்தார். முதல் பாதியில்  இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் ரோஹன் சிங்(75வது நிமிடம்) மற்றொரு கோல் அடித்தார்.முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'பி' பிரிவில் 2 போட்டியிலும் வென்று, 6 புள்ளியுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் மாலத்தீவு அணியை (மே 16) சந்திக்க உள்ளது. 

May 13, 2025

13th MAY விளையாட்டு போட்டிகள் .

ஹாக்கிசிலியில் ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை தொடர் (டிச. 1-13) நடக்க உள்ளது.  இந்திய அணி 6 நட்பு போட்டியில் அர்ஜென்டினா சென், பங்கேற்க உள்ளது. செஸ்ஆசிய சாம்பியன்ஷிப் தொடர்ஐக்கிய அரபு எமிரேட்சில் பெண்களுக்கான பிரிவு 6வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா வெற்றி பெற்றார். 5.5 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார். பாட்மின்டன்  படும் வனில் தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடர். நேற்று இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. ஆண்கள் ஒற்றையர் முதல் தகு திச்சுற்று போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சக வீரர் சங்கர் முத்துசாமியை 21-15, 21-17 என வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் மன் னேபள்ளி, சீன தைபே வீரர் குவான் லினை 17-21, 21-19, 21-17 என போராடி வென்றார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தகு திச்சுற்று இரண்டாவது போட்டியில் இந்தியா வின் இரா சர்மா, தமன் வானிடம் 12-21, 18-21 என தோல்வியடைந்தார். 

May 12, 2025

மீண்டும் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி. சி.சி.ஐ.,) முடிவு செய்துள் ளது.

பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியா, பாகிஸ்தான் போர் பதட்டம் காரணமாக ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது போர் முடிவுக்கு வந்திருப்பதால், மீண்டும் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி. சி.சி.ஐ.,) முடிவு செய்துள் ளது. நேற்று, புதிய அட்ட வணையை வெளியானது.மீதமுள்ள 17 போட்டிகள், பெங்களூரு, ஜெய்ப் பூர், டில்லி, லக்னோ, மும்பை, ஆமதாபாத் என 6 இடங்களில் நடக்கவுள்ளன. வரும் மே 17ல் பெங்களூருவில் நடக்கும் போட்டியில் பெங்களூரு, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. சமீபத்தில் பாதியில் கைவிடப்பட்ட பஞ்சாப், டில்லி அணிகளுக்கு இடையிலான போட்டி, மே 24ல் ஜெய்ப்பூரில் நடக்கவுள்ளது.தகுதிச் சுற்று-1, 'எலிமி னேட்டர்', தகுதிச் சுற்று-2 போட்டிகள் முறையே மே 29, 30, ஜூன் 1ல் நடக்கும். பைனல், ஜூன் 3ல் நடக்கவுள்ளது. இந்த நான்கு போட்டிகளுக்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். 

May 12, 2025

விராத் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் .

 களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும்  இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் கோலி 2016-19 காலக்கட்டத்தில் ரன் மழை பொழிந்தார். சமீபத்திய போட்டிகளில் 'ஆப்-ஸ்டம்ப்பிற்கு' வெளியே வீசும் பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். இவரது பலவீனம் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அம்பலமானது. இதையடுத்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்தார்.வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவரது சேவை, அணிக்கு தேவை என இந்திய கிரிக்கெட் போர்டு கருதியது. இதனால், ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டது.இந்த சமயத்தில் டெஸ்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றார். டெஸ்ட் போட்டியில் இருந்து கோலியும் நேற்று விடைபெற்றார். இது, இந்திய அணியில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.  டெஸ்ட் அரங்கில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் பட்டியலில் கோலி முதலிடம். இதுவரை 68 டெஸ்டில், 5864 ரன் (20 சதம், 18 அரைசதம்) குவித்துள்ளார்.  இந்திய கேப்டன் பட்டியலில் டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றி பெற்றுத் தந்த  விராத் கோலி முதலிடம். இவரது தலைமையிலான இந்திய அணி, 68 டெஸ்டில், 40 வெற்றி (58.82% வெற்றி சதவீதம்), 11 'டிரா', 17 தோல்வியை பதிவு செய்துள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் தோனி (27 வெற்றி, 60 டெஸ்ட்), கங்குலி (21 வெற்றி, 49 டெஸ்ட்) உள்ளனர். * கோலி தலைமையில் இந்திய அணி, 43 மாதம் (2016 அக்., -2020 மே) டெஸ்ட் அணி தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தில் இருந்தது

May 12, 2025

பெண்களுக்கான கிராண்ட் ப்ரி செஸ் தொடர்

பெண்களுக்கான கிராண்ட் ப்ரி செஸ் தொடர், சர்வதேச செஸ் கூட் டமைப்பு சார்பில் 6 கட்டமாக நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 'டாப்-2 இடம் பெறுபவர்கள், கேண்டிடேட்ஸ் தொடரில் (உலக கோப்பை தகுதி போட்டி) பங்கேற்க தகுதி பெறலாம். இதன் கடைசி, 6வது தொடர் ஆஸ்திரியா வில் நடக்கிறது.இதன் 6வது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, ஆஸ்திரியாவின் ஆல்கா படேல்கா மோதினர். இதன் 39 வது நகர்த்தலில் வைஷாலி வெற்றி பெற்றார். ஆறு சுற்று முடிவில் உக்ரைனின் அனா முஜிசக் (4.5) முதலிடத்தில் உள்ளார். சீனாவின் ஜு ஜினெர் (4.0), இந்திய வீராங்கனை வைஷாலி (4.0) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்

May 12, 2025

ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர்

ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் இத்தாலியில் ,இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் 'சீனியர்' வீரர் போபண்ணா, செக் குடியரசின் ஆடம் பவ்லாசெக் ஜோடி, குரோஷியாவின் நிகோலா மெக்டிக், நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை போபண்ணா ஜோடி 4-6 என கோட்டை விட்டது. இரண்டாவது செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதை போபண்ணா ஜோடி 7-6 என வசப்படுத்தியது. பின் நடந்த 'சூப்பர் டை பிரேக்கரை' போபண்ணா ஜோடி 10-4 என எளிதாக வசப்படுத்தியது.ஒரு மணி நேரம், 44 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 4-6, 7-6, 10-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது. 

May 11, 2025

வில்வித்தை .may10 th and 11th

 உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 2  சீனாவின் ஷாங்காய் நகரில் , பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர்  பிரிவு, அரையிறுதியில் இந்தியாவின் மதுரா,துருக்கி யின் ஹசல் போருனை 143-141 என வீழ்த்தினார்.பைனலில் மதுரா, அமெரிக்காவின் கார்சனை சந்தித்தார். மதுரா 139-138 என வெற்றி பெற்று, உலக கோப்பை வில்வித்தையில் முதல் தங்கம் கைப்பற்றினார்.  காம்பவுண்டு ஆண்கள் அணிகளுக்கான பைனலில் அபிஷேக் வர்மா, ரிஷாப் யாதவ், ஓஜாஸ் பிரவின் இடம் பெற்ற இந்திய அணி, செபாஸ்டியன், லுாயிஸ், ரோட்ரிகோ அடங்கிய மெக்சிகோ அணியை சந்தித்தது. இதில் இந்திய அணி 232-228 என வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது.பெண்களுக்கான பைனலில் மதுரா, ஜோதி, சிகிதா இடம் பெற்ற இந்திய அணி, 222-234 என மெக்சிகோவிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. கலப்பு அணி போட்டியில் இந்தியாவின் மதுரா, அபிஷேக் ஜோடி, 144– 142 ,வெண்கலம் வசப்படுத்தியது. உலக கோப்பை வில்வித்தை 'ஸ்டேஜ்-2' சீனாவின் ஷாங்காய் நகரில்,பெண்கள் தனிநபர் 'ரிகர்வ்' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் - தீபிகா குமாரி, தென் கொரியாவின் லிம் சிஹியோன் -மோதினர்.  இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என, 7 பதக்கம் கிடைத்தது.  

1 2 ... 62 63 64 65 66 67 68 ... 94 95

AD's



More News