கிராண்ட் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முதன் முறையாக சாம்பியன் ஆனார்.
கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசனின், இரண்டாவது ருமேனியாவில் தொடர் சூப்பர் பெட் கிளாசிக்') நடந்தது. எட்டு சுற்று முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, 5.0 புள்ளியுடன் முதலிடத்தில் இருந்தார். 9வது, கடைசி சுற்றில் வென்றால் சாம்பியன் ஆகலாம் என்ற நிலையில் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவான் ஆரோனியனை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக் ஞானந்தா, 43வது நகர்த் தலில் 'டிரா' செய்ய, 5.5 புள்ளி பெற்றார். வெற்றியாளரை முடிவு செய்ய 'பிளே ஆப்' சுற்று நடந்தது.
ஒவ்வொரு வீரரும் மற்ற வீரருடன் தலா ஒரு முறை மோதினர். பிரக்ஞானந்தா- அலிரேசா மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது. வாசியர், அலி ரேசா மோதிய போட்டியும் 'டிரா' ஆனது. அடுத்து பிரக்ஞானந்தா, வாசியர் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து 1.5 புள்ளியுடன் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து, இத்தொடரில் முதன் முறையாக சாம்பியன் ஆனார். 2025ல் பிரக்ஞானந்தா வென்ற இரண்டாவது கோப்பை இது. முன்னதாக 'டாடா ஸ்டீல்' தொடரில் சாம்பியன் ஆகி இருந்தார்.
0
Leave a Reply