குமார் சுரேந்திர சிங் நினைவு துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் டில்லியில், பெண்களுக்கான 10 மீ., ''ஏர் ரைபிள்' பிரிவு தகு திச் சுற்றில் மஹாராஷ் டிராவின் ஷாம்பவி, 633.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித் தார். அடுத்து நடந்த பைனலில் 16 வயது வீராங்கனை ஷாம்பவி, 252.9 புள் ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் பைனல் வரை சென்ற ஹரியானாவின் ரமிதா (252.1 புள்ளி) வெள்ளி வென் றார். உலக சாம்பியன்ஷிப்பில் 'வெண்கலம் வென்ற மேற்கு வங் கத்தின் மெஹுலி கோஷ் (231.0) வெண்கலத்தை கைப்பற்றினார். ஜூனியர் பெண்கள் பிரிவு (10 மீ., 'ஏர் ரைபிள்') பைனலில் ரமிதா தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.ஷாம்பவி வெள்ளி, வெண்கல பதக்கத்தை, மன்யா மிட்டல் (உ.பி.,) வென்றனர்.
இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர விந்த் சிதம்பரம் உட்பட 10 பேர் பங்கேற்றபோலந்தில் கிராண்ட் செஸ் தொடர் நேற்று துவங்கியது. முதலில் 'ரேபிட்' செஸ் நடக்கிறது. முதல் போட்டியில் பிரக்ஞானந்தா, பிரான்சின் மேக் சிம் வாசியர் மோதினர்.இதில் விளையாடிய பிரக்ஞானந்தா, முதலில் பின் தங்கினார். பின் வாசியர் செய்த தவறுகளை சரியாக பயன்படுத்திய பிரக்ஞானந்தா, போட்டியின் 45 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அரவிந்த் சிதம்பத்தை இரண்டாவது போட்டியில் விளையாடிய பிரக்ஞானந்தா, , 59 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.இரண்டு சுற்றிலும் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 4.0 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார். அரவிந்த் சிதம் பரம் (1.0) 8வது இடத்தில் உள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொழும்பில் பங்கேற்றுள்ள இந்தியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் நேற்று தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத,. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை சந்தித்தது. போட்டிக்கு முன் மழை கொட்டி தீர்த்ததால் ஆட்டம் 39 ஓவர் கொண்டதாக குறைக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இந்திய வீராங்கனைகள் கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். தொடர்ந்து ஆடிய இந்திய அணி 29.4 ஓவர் களில் ஒரு விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. பிரதிகா ராவல் 50 ரன்களுடனும், ஹர்லீன் தியோல் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஸ்மிர்தி மந்தனா 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.நாளை நடைபெறும் 2-வது லீக்கில் இந் தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் போட்டி நாளை நடைபெறும்..
டபிள்யு. டி.டி., டேபிள் 'கன்டெண்டர்' டென்னிஸ் தொடர் டுனிசியாவில் ,கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மனுஷ் ஷா, தியா சிட் டாலே ஜோடி, ஜப்பானின் சோரா மட்சுஷிமா, மிவா ஹரிமோடோ ஜோடியை சந்தித்தது. .இந்திய ஜோடி 3-2 (11-9, 5-11, 14-12, 3-11, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. டபிள்யு.டி.டி., 'கன்டெண்டர்' கலப்பு இரட்டையரில் பட்டம் வென்ற 2வது இந்திய ஜோடியானது.இந்தியாவின் மனுஷ் ஷா, மானவ் தாக்கர் ஜோடி, 2-3 (11-8, 7-11, 11-8, 9-11, 10-12) என்ற கணக்கில் ஜெர்மனியின் பெனடிக்ட் டுடா, ஆன்ட்ரி பெர் டெல்ஸ்மியர் ஜோடியி டம் .ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது. குத்து சண்டை 15,17 வயதுக்குட்பட்டோருக் கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்ஜோர்டானில் நடக்கிறது. நேற்று, 17 வயதுக்குட் பட்டோருக்கான காலிறுதி போட்டி நடந்தது.பெண்களுக்கான 60 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர், ஜோர்டானின் அயா அல்ஹாசனாத் மோதினர். சிம்ரன் ஜீத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.பின், 70 கிலோ பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை ஹிமான்ஷி, பாலஸ்தீனத்தின் பராஹ் அபூ லைலாவை வென்றார்.ஆண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் அமன் சிவாச் (63 கிலோ), தேவன்ஷ் (80 கிலோ) வெற்றி பெற்றனர். இந்தியாவுக்குஇத்தொடரில் 43 பதக்கம் உறுதியானது. இதில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 18 பதக்கம்,15 வயதுக்குட்பட் டோர் பிரிவில் 25 பதக்கம் வென்றனர்.
ஆசியயோகாசனபோட்டிசாம்பியன்ஷிப் டில்லியில் நடந்தது.இந்தியா,நேபாளம்,இலங்கை,ஜப்பான்,தாய்லாந்து, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், பூடான் உள்ளிட்ட 21 நாடுகள் பங் கேற்றன. இதில் இந்திய நட்சத்திரங்கள் 83 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என, மொத்தம் 87 பதக்கங்களை அள்ளினர்.
APRIL 24-ம் தேதி சென்னையில், ஐதராபாத் சென்னை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 154/10 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ஐதராபாத் அணி 155/5 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக HARSHAL PATEL தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலக டேபிள் டென்னிஸ் டுனிசியாவில் உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர். பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று நடந்தது. தகுதிச்சுற்றில் இருந்து முன்னேறிய இந்தியாவின் தியா சிட்டாலே, இத் தொடரின் 'நம்பர் -7' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 'நம்பர்-1' வீராங்கனை பத்ராவை சந்தித்தார்.தியா முதல் செட்டை 12-10 என கைப்பற்றினார். அடுத்த இரு செட்டை மணிகா 11–5, 11–9 வசப்படுத்தினார். கடைசி இரு செட்டில் தியா 11-4, 11-4 என ,முடிவில் தியா 3-2 என்ற செட் கணக்கில் மணிகாவை வீழ்த்தினார்.டென்னிஸ் துருக்கியில் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் ஒற்றையர் பிரிவு இந்தியாவின் காலிறுதியில் வைஷ் ணவி, பெல்ஜியத்தின் அமேலி வான் இம்பேமோதினர். வைஷ்ணவி6,1, இதில்6,3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி, அமெரிக்காவின் இண்டியா ஹவுட்டன் ஜோடி, பெல்ஜியத்தின் அமேலி வான் இம்பே, காட் கோபஸ் ஜோடியை கொண்டது. இதில் வைஷ்ணவி ஜோடி 5-7, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.
APRIL 24-ம் தேதி பெங்களூரில், ராஜஸ்தான், பெங்களூர், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 205/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 194/9 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்து, பெங்களூர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக JOSH HAZLEWOOD தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கேரள மாநிலம் கொச்சியில், 28வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள போட்டி நடந்தது. ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப் போட்டியில் ஜே.எஸ். டபிள்யு., அணிக்காக விளையாடிய தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் 23, அதிகபட்சமாக 17.37 மீ., தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார்பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் கோபிகா (1.82 மீ.,) வெள்ளிப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான ஈட்டி எறிதலில் உ.பி.,யின் அன்னு ராணி (56.66 மீ.,) தங்கப்பதக்கம் வென்றார் .பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் இலக்கை 23.91 வினாடி யில் கடந்த தமிழகத்தின் ஏஞ்சல் சில்வியா வெள்ளி வென்றார். ஆண்களுக் கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் பந்தய தூரத்தை 20.85 வினாடியில் அடைந்த தமிழகத்தின் ராகுல் குமார், வெண் கலம் வென்றார்.
ஜெர்மனியில் கிரென்கே செஸ் தொடர் ஓபன் பிரிவில் 875 பேர் கள மிறங்கினர். இந்தியா சார்பில் அஸ்வத், ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் 9வது, கடைசி சுற்றில் இந்தியாவின் அஸ்வத், மங்கோலியாவின் முகமது முராடிலியை எதிர்கொண்டார்.கருப்பு நிற காய்களுடன் விளை யாடிய அஸ்வத், துவக் கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் 69 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.