வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம். அது என்ன? - கனவுமென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன். அவன் யார்? - நத்தை
அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான். அவன் யார்? புகை . மேலே மேலே செல்லும், ஆனால் கீழே வராது. அது என்ன ? வயது.
காது பெரியது, ஆனால் கேளாது. வாய் பெரியது, ஆனால் பேசாது. வயிறு பெரியது, ஆனால் உண்ணாது. அது என்ன?----அண்டா .ராஜா உண்டு, ராணி உண்டு, மந்திரியும் உண்டு. ஆனால் நாடு இல்லை. அது என்ன?----சீட்டு கட்டு kattu
அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை. அது என்ன?---தலை வகிடுமுதுகை தொட்டால் மூச்சு விடுவான், பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான். அவன் யார்?-----ஆர்மோனியம்
.நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன். நான் யார்?வெங்காயம்உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?கடல் அலை
இந்த குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனையுண்டு. ஆனால் குற்றத்தை செய்து விட்டால் தண்டிக்க முடியாது. அது என்ன? தற்கொலை தேவைப்படும்போது தூக்கி எறியப்படும். தேவை இல்லாத போது பத்திரமாய் வைக்கப்படும். அது என்ன? நங்கூரம்
அச்சு இல்லாத சக்கரம், அழகை கூட்டும் சக்கரம். அது என்ன?வளையல் .முக்கண்ணன் சந்தைக்கு போகின்றான். அவன் யார்?தேங்காய்
மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும்.அது என்ன?இரயில் என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும்ஆவல். தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை. நான் மறைக்கப்பட வேண்டியவன். நான் யார்?ரகசியம்
அஸ்திவாரம் இல்லாமல் அரண்மனை கட்டினேன். அது என்ன? ---கப்பல்வாங்கும்போது கறுப்பு நிறமாகவும், பயன்படுத்தும் போது சிவப்பு நிறமாகவும், தூக்கி எறியும் போது சாம்பல் நிறமாகவும் இருப்பது எது?---விறகு
தேர் ஓடுது பூ உதிருது .அது என்ன? அரவை இயந்திரம் சங்கீதம் பாடுபவனுக்கு, சாப்பாடு இரத்தம். அது என்ன? கொசு