வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி. அது என்ன? - விளக்குத் திரிஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவர்கள் யார்? - எறும்புக் கூட்டம்
மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன். அவன் யார்? நத்தை.அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான். அவன் யார்? புகை
ராஜா உண்டு, ராணி உண்டு, மந்திரியும் உண்டு. ஆனால் நாடுஇல்லை. அது என்ன? - சீட்டு கட்டு வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும்காட்சிப்படம். அது என்ன? - கனவு
காது பெரியது, ஆனால் கேளாது. வாய் பெரியது, ஆனால் பேசாது. வயிறு பெரியது, ஆனால் உண்ணாது. அது என்ன? - அண்டா மேலே மேலே செல்லும், ஆனால் கீழே வராது. அது என்ன ? - வயது
குட்டையான அழகிக்கு நெட்டையான ஜடை அது என்ன? - கத்தரிக்காய்.அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை. அது என்ன?- தலை வகிடு
கடித்தால் புளிப்பு, தண்ணீர் குடித்தால் இனிப்பு அது என்ன? :- நெல்லிக்காய் விரல் அளவு -உயரம் தான் ஆனால் முத்துக்களை பதுக்கி வைத்து இருப்பாள், அவள் யார்? - வெண்டைக்காய்
கல்லைச் சுமந்தவள், கறிக்கு ருசி அது என்ன? விடை:- புடலங்காய் பச்சைப்பசேல் என்றிருக்கும், வாய் வைத்தால் கசக்கும், குழம்பு வைத்தால் ருசிக்கும் அது என்ன? விடை:- பாகற்காய்
கடலில் கலக்காத நீர், எவரும் குடிக்காத நீர். அது என்ன? கண்ணீர் kneerகத்தி போல் இலை இருக்கும், கவரிமான் பூ பூக்கும், தின்ன பழம் கொடுக்கும், தின்னாத காய் கொடுக்கும். அது என்ன? வேம்பு
கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரைக் கண்டு பதைபதைக்கிறான். அவன் யார்? நெருப்பு மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம் வலதிலும் துவாரம் இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம், வெளியிலும் துவாரம், இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன். நான் யார்? பஞ்சு
வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி. அது என்ன? விளக்குத் திரி .ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவர்கள் யார்? ? எறும்புக் கூட்டம்