கடலில் கலக்காத நீர், எவரும் குடிக்காத நீர். அது என்ன? கண்ணீர் kneerகத்தி போல் இலை இருக்கும், கவரிமான் பூ பூக்கும், தின்ன பழம் கொடுக்கும், தின்னாத காய் கொடுக்கும். அது என்ன? வேம்பு
கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரைக் கண்டு பதைபதைக்கிறான். அவன் யார்? நெருப்பு மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம் வலதிலும் துவாரம் இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம், வெளியிலும் துவாரம், இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன். நான் யார்? பஞ்சு
வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி. அது என்ன? விளக்குத் திரி .ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவர்கள் யார்? ? எறும்புக் கூட்டம்
வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம். அது என்ன? - கனவுமென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன். அவன் யார்? - நத்தை
அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான். அவன் யார்? புகை . மேலே மேலே செல்லும், ஆனால் கீழே வராது. அது என்ன ? வயது.
காது பெரியது, ஆனால் கேளாது. வாய் பெரியது, ஆனால் பேசாது. வயிறு பெரியது, ஆனால் உண்ணாது. அது என்ன?----அண்டா .ராஜா உண்டு, ராணி உண்டு, மந்திரியும் உண்டு. ஆனால் நாடு இல்லை. அது என்ன?----சீட்டு கட்டு kattu
அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை. அது என்ன?---தலை வகிடுமுதுகை தொட்டால் மூச்சு விடுவான், பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான். அவன் யார்?-----ஆர்மோனியம்
.நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன். நான் யார்?வெங்காயம்உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?கடல் அலை
இந்த குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனையுண்டு. ஆனால் குற்றத்தை செய்து விட்டால் தண்டிக்க முடியாது. அது என்ன? தற்கொலை தேவைப்படும்போது தூக்கி எறியப்படும். தேவை இல்லாத போது பத்திரமாய் வைக்கப்படும். அது என்ன? நங்கூரம்
அச்சு இல்லாத சக்கரம், அழகை கூட்டும் சக்கரம். அது என்ன?வளையல் .முக்கண்ணன் சந்தைக்கு போகின்றான். அவன் யார்?தேங்காய்