பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ் டூர் ,பிரக்ஞானந்தா கார்ல்சனை வென்றார்.
5 தொடர்களாக பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ் டூர், நடத்தப்படுகிறது. இதன் நான்காவது தொடர், அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடக்கிறது. நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் உட்பட 16 பேர், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ,போட்டி லீக் முறையில் நடந்தன.
ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-4' வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறலாம், 'ஒயிட்' பிரிவில் இடம் பெற்ற பிரக்ஞானந்தா, முதல் 3 போட்டியில் 2 வெற்றி, ஒரு டிரா செய்தார். 4வது போட்டியில் இந்தியாவின் 'நம்பர்-1' வீரர், பிரக்ஞானந்தா, 'பிரீஸ் டைல்' போட்டியில் சிறப்பாக செயல்படும், உலகின் 'நம்பர்-1', கார்ல்சனை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் கலமிறங்கிய பிரக்ஞானந்தா, 39 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.7 சுற்றில் பிரக்ஞானந்தா (3 வெற்றி, 3 'டிரா', 1 தோல்வி ) 4.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, காலிறுதிக்குள் நுழைந்தார்.
0
Leave a Reply