வாயுவை விரட்டும் பெருங்காயம்.
வாயுத்தொல்லை, அஜீரணக்கோளாறு வந்தா வயிறு புடைச்சிக்கிட்டு மூச்சுவிட முடியாம தவிக்கிற நேரத்துல கால் ஸ்பூன் பெருங்காயப் பொடியை மோர்ல கலந்து குடிச்சா ஏப்பம் வெளியேறும். அதோட வாயு வெளியேறி வயிறும் குறையும்.பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் உள்ளது. சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதச்சத்தை பெறலாம்.
ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுபவர்கள், பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் பிரச்சனை தீரும்.
தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.
0
Leave a Reply