வெந்தயம், பூண்டு கஞ்சி.
தேவையான பொருட்கள்-
அரிசி – 100 கிராம்,வெந்தயம்- 4 ஸ்பூன்,தேங்காய் - அரைமூடி
நாட்டு சர்க்கரை- 4 ஸ்பூன்,உப்பு, பூண்டு- சிறிதளவு.
செய்முறை:
அரிசி மற்றும் வெந்தயத்தை கழுவி, குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஊறவைக்கவும். இது கசப்புத் தன்மையைக் குறைக்கும்.
குக்கரில் ஊறவைத்த அரிசி, வெந்தயம், பூண்டு பற்கள், தேவையான அளவு உப்பு மற்றும் 4- 5 கப் தண்ணீர் சேர்த்து, 3 முதல் 4 விசில் வரை நன்கு குழைய வேகவைக்கவும்.
தேங்காயை அரைத்து, பால் எடுத்துக் கொள்ளவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, கஞ்சியை நன்கு மசித்து, தேங்காய்ப்பால் சர்க்கரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சூடான வெந்தயக்கஞ்சி தயார்.
0
Leave a Reply